Monday, May 20, 2024

    'மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!'

    இரவு ஏழு மணிக்கு அத்வைத் மற்றும் செந்தமிழினி அவர்கள் தங்க இருக்கும் உல்லாச விடுதிக்கு வந்தனர். சிறு சிறு குன்றுகளின் மீது ஒவ்வொரு குடிலும் மற்றவரின் தனிமையை கெடுக்காத வகையில் அமைந்து இருந்தது. இவர்களின் குடில் மற்ற குடில்களை விட சற்று உயரத்தில் வண்ணப்பூக்களின் நடுவே, அழகாக அமைந்து இருந்தது. ஓட்டுக் கூரையின் மீது வித்யாசமான...
    அருள்மொழியை அழைத்த செந்தமிழினி அவன் அழைப்பை எடுத்ததும், “அண்ணனாடா நீ? அத்தான் விஷயத்தைத் தவிர வேற எதையாவது உன் கிட்ட மறைச்சு இருப்பேனா! அது கூட நீ நேரிடையா கேட்டு இருந்தா சொல்லி இருப்பேன்.. ஆனா நீ! நான் எவ்ளோ முறை கேட்டேன்! பெரிய அன்னை சொல் தட்டாத தவப்புதல்வன் இவரு..” என்று ஆரம்பித்து...
    மூன்றாவது முறையாக ‘யாருடா இந்த சந்து?’ என்று அத்வைத் கூறிக் கொண்டான். ஆனால் இந்த முறை ஆச்சரியத்துடன். யாரும் சட்டென்று நெருங்கிவிட முடியாத தனது மகனின் மனதை முதல் சந்திப்பிலேயே கவர்ந்த அந்தப் பெண் யார் என்று ஆச்சரியத்துடன் நினைத்தான். இருந்தாலும் அதை மகனிடம் காட்டிக் கொள்ளாமல், “பேட் பீப்பிள் தான் இப்படி செய்வாங்க” என்றான்...
    அடுத்த நாள் காலையில் துருவ் தனது அறையில் மடிக்கணினியை இயக்கியபடி யாதவிடம், “யது குட்டி சித்தா லேப்டாப்பில் மாஷா அண்ட் தி பியர்(Bear) பார்ப்பியாம்.. சித்தா கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்.” என்று கூற, யாதவ், “டாடா மார்னிங் எழுந்ததும் நோ டிவி சொல்லியிருக்கா.” “நீ லேப்டாப் தானே பார்க்கிற?” யாதவ் முறைப்புடன், “லேப்டாப் டிவி எல்லாம் ஒன்னு தான்.”...
    ‘தமிழ்.. இது நீ தெளிவா யோசிக்க வேண்டிய நேரம்.. யோசி யோசி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டபடி அவள் சற்று இயல்பிற்குத் திரும்பியதும், அவளது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியது. அந்த நொடியில் அனைத்து குழப்பங்களையும் ஓரம் கட்டி வைத்து விட்டு தற்போது உடனடியாக செய்ய வேண்டியது எது என்று யோசித்தாள். பொன் தாலியை...
    அருள்மொழி, “சொத்தை வச்சு தான் பிரச்சனையை ஆரம்பிச்சாங்க.. ஆனா, வேற மாதிரி” என்றான். துருவ், “என்ன தான் நடந்துது?” என்று கேட்க, அத்வைத், “அமைதியா இரு.. அவனை சொல்ல விடு” என்றான். அருள்மொழி, “ஹ்ம்ம்.. அன்னைக்கு எங்க வீட்டுக்கு அத்தை மாமா கூட வந்த உங்க ஆச்சி சாதாரணமா பேசின பேச்சை, வேணும்னே சண்டையா மாத்திட்டாங்க.. அத்தைக்கு பிடிக்குமேனு...
    அடுத்த நாள் காலையில் அழகான கிளிப் பச்சை நிற ‘சில்க் காட்டன்’ புடவையில் தயாராகி வந்த மகளைப் பார்த்த மரகதம், “என்ன அதிசயமா இருக்குது! சேலை கட்டச் சொன்னாக் கூட கட்ட மாட்ட! அதுவும் சீக்கிரம் கிளம்பி வந்திருக்க!” என்றார். செந்தமிழினி குறும்புப் புன்னகையுடன் மேடை ரகசிய குரலில், “அலைபாயுதே ஷாலினி மாதிரி திருட்டுத் தனமா...
    பிறகு, “வாங்க பாஸ்.. இப்போ தான் வந்தீங்களா?” என்று கேட்டாள். “அந்த லேடி பேச ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன்.” என்றான் முறைப்புடன். “அந்த லேடி பேசினதுக்கு என்னை ஏன் பாஸ் முறைக்கிறீங்க?” “நீ சொன்னேன்னு வந்ததால தானே காது குளிர இந்த பேச்சுக்களை கேட்டேன்” என்று முறைப்புடனேயே கூறினான். அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், “நீங்க இப்படி பயந்து ஓடிட்டே இருக்கிறதால தான்...
    அன்று இரவு அத்வைத் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பொழுது, வீட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்த நேகாவைப் பார்த்ததும் மனதினுள் சிறிது ஆயாசமாக உணர்ந்தாலும், வெளியே அதை சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. நேகா புன்னகையுடன், “ஹாய் அத்தான்” என்றாள். மெல்லிய உதட்டோர மென்னகையுடன் தலை அசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்து விட்டு, தனது அறை நோக்கிச் சென்றான். நேகா அருகே...
    “ப்ச்.. வீடு இப்போ இருக்கிற நிலைமைக்கு..” என்று அவன் இழுத்து நிறுத்த, அவள், “ஏன்? அப்படி என்ன நிலைமை?” என்று சாதாரணமாகக் கேட்டாள். “ஏன் உனக்குத் தெரியாதா?” “எனக்குத் தெரிந்து கப்பல் மூழ்குற நிலைமையில் இல்லை” “அத்வைத்தை இன்னொரு கல்யாணம் செய்யச் சொல்லி அம்மாவும் அப்பாவும் போராடிப் பார்த்துட்டாங்க.. நானும் முயற்சி செய்றேன்.. ஒன்னும் வேலைக்கு ஆகலை..” “கிழவி, சும்மா இருக்காதே!” “கிழவி...
    துருவ் சிரிப்புடன், “சைஸ் தான் மாறி இருக்குது.. மத்தபடி அதே பம்கின் தான்.” என்றான். கண்ணன், “கண்ண செக் பண்ணுங்க பாஸ்.. இவளைப் போய் சூப்பர் பிகர்னு சொல்றீங்க!” என்றான். அவள் இப்பொழுது கண்ணனை முறைக்க, துருவ் புன்னகையுடன், “நீங்க?” என்று கேட்டான். “நீ போதும் பாஸ்.. நான் கண்ணன்.. நண்பன் என்ற பெயரில் இருக்கும் இவளோட அடிமை.”...
    மதிய உணவு இடைவேளைக்கு சற்று நேரம் முன் செந்தமிழினி, “கண்ணா” என்று அழைத்தாள். அவளது குரலில் தெரிந்த சிறு தயக்கத்தை உணர்ந்து கொண்டவன், அதை வெளிக்காட்டாமல் இயல்பான குரலிலேயே, “என்ன?” என்று கேட்டான். “ஒரு ஹெல்ப்” “என்ன! சில் பீர் ஒன்னு வாங்கித் தரணுமா?” அவள் தயக்கம் நீங்கி சட்டென்று சிரித்தபடி, “இல்லை லூசு.” என்றாள். “ஓ! நிஜமாவே குவாட்டர்...
    அன்று இரவு உணவிற்குப் பிறகு, செந்தமிழினி, “அப்பா,  சரோ அத்தை பாமிலி பத்தி ஏதாவது தெரியுமா? அதாவது.. தேனுமா எப்படி இருக்கிறாங்க? அத்தான், துருவ் எல்லாம் எப்படி இருக்கிறாங்க? அத்தானுக்கு எத்தனை பிள்ளைங்க? இப்படி தெரியுமானு கேட்டேன்.” என்றாள். பதில் கூறாமல் வேணுகோபால் அமைதியாக இருந்தார், ஆனால், அவரது நெஞ்சமோ தங்கையின் நினைவில் ஏக்கத்துடன் கூடிய...
    முன்தினம் விழாவில் பாடி முடித்து கீழே வந்த செந்தமிழினி லட்சுமியிடம், “அத்தான் எங்கடி?” என்று கேட்டாள். திரும்பிப் பார்த்த லட்சுமி அத்வைத் இல்லை என்றதும் முறைப்புடன், “எந்த அத்தான்?” என்று கேட்டாள். செந்தமிழினி, “ப்ச்.. விளையாடாமச் சொல்லுடி” என்றாள். லட்சுமி அதற்கும் முறைக்க, கண்ணன், “என்ன லட்சு!” என்றான். அவனையும் முறைத்தபடி, “அப்போ உனக்கு முன்னாடியே தெரியும்.. நான்..” என்றவளின்...
    மங்களமோ யாரின் குரலுக்கும் அடங்காமல், “பார்த்தியா! இதுக்கு தான் சொல்றேன்.. அந்த வீட்டு பொண்ணுங்க ஆம்பளைங்களை முடிஞ்சு முந்தானையில் வச்சுப்பாளுக..” என்றார். துருவ், “அந்த திறமை எங்க அம்மாக்கு இருந்து இருந்தா, ஏன் இத்தனை வருஷம் கஷ்டப்படப் போறாங்க? தப்பே செய்யாத தன்னோட அண்ணன் அண்ணிக்காகப் பேச தெரியாத வாயில்லா பூச்சி அவங்க.. நீங்க சொன்ன...
    அவளிடம் ஓடி வந்த யாதவ், “நீ என் கூட விளையாடவே இல்லை.” என்று குறை பட்டான். அவன் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் கன்னத்தில் கை வைத்தபடி, “இப்போ சந்துமா ஆபீஸ் போகணும்.. யது கண்ணாவை பார்த்துட்டு டாடா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத் தான் வந்தேன்.. இப்போ ஆபீஸ் லேட் ஆகிடுச்சு.. நான்...
    நான்கு மாதங்கள் கடந்திருந்தது... வீடே போர்க்களமாகக் காட்சியளிக்க, சொற்போரிட்டுக் கொண்டிருந்த மரகதத்தையும் செந்தமிழினியையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார், வேணுகோபால். அப்பொழுது அவரது கைபேசி அலற, அதை எடுத்து காதுக்குக் கொடுத்தவர், “சொல்லுப்பா” என, எதிர்முனையில் இருந்த அருள்மொழி, “இன்னைக்கு சத்தம் அதிகமா இருக்கே! என்னாச்சுபா?” என்று கேட்டான். அப்பொழுது, “நீ என்ன சொன்னாலும் என் முடிவில் இருந்து நான்...
    அடுத்த நாள் காலையில் கைகளை கட்டிக் கொண்டு அத்வைத் துருவை முறைத்துக் கொண்டிருக்க, துருவ் மனதினுள், ‘ஒரே ஒரு மணி நேரத்தில் என்னை இப்படி குற்றவாளிக் கூண்டில் நிக்க வச்சிட்டியே, பிசாசு!’ என்று செந்தமிழினியை பாசமாகத் திட்டிக் கொண்டிருந்தான். முன்தினம் வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே ‘யாருடா இந்த சந்து!’ என்று அலறும் நிலைக்குத்...
    செந்தமிழினி அங்கே சென்ற போது வாசலிலேயே துருவ் அவளுக்காகக் காத்திருந்தான். இருவரும் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கண்ணனும் லட்சுமியும் அடுத்தடுத்து வந்தனர். இருக்கும் இடம் அதிரும் அளவிற்கு நால்வரும் கூத்தடித்தனர். ஒரு இடத்தில் சிலர் ஆட்களை அமரச் செய்து அப்படியே வரைந்து கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் செந்தமிழினி துருவிடம், “நீயும் உட்காருடா.. நான் வரையுறேன்” என்றாள். துருவ்,...
    நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த வீட்டில் குறிப்பிட்ட அறையின் ஜன்னல் கதவு மட்டும் ‘படார்.. படார்’ என்று இருமுறை அடித்துக் கொண்டது. அந்தச் சத்தத்தில் உறக்கம் கலைந்து விழித்த அருள்மொழி, குழப்பத்துடன் ஜன்னலையும் ஓடிக் கொண்டிருந்த காற்பதனியையும்(AC), மூடியிருந்த அறைக் கதவையும் பார்த்தான். ‘ஜன்னலை மூடிட்டு தானே AC போட்டேன்!’ என்று மனதினுள் ஆராய்ந்து கொண்டிருந்த...
    error: Content is protected !!