Thursday, May 9, 2024

    'மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!'

    செந்தமிழினி நிமிர்வுடன், “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று கேட்டாள். செந்தமிழினியின் நிமிர்வில் மேனகா சற்று அதிர்ந்து தான் போனாள். தான் யார் என்று தெரிந்ததும் செந்தமிழினி கலக்கமாகவோ கவலையாகவோ பார்ப்பாள், குறைந்தது அதிர்ச்சியாவது அடைவாள் என்று எண்ணி இருக்க, அவளது முதல் எண்ணத்தையே தகர்த்து இருந்தாள், நம் செந்தமிழினி. செந்தமிழினியை அதிர வைக்க நினைத்த மேனகா...
    இரவு ஏழு மணிக்கு அத்வைத் மற்றும் செந்தமிழினி அவர்கள் தங்க இருக்கும் உல்லாச விடுதிக்கு வந்தனர். சிறு சிறு குன்றுகளின் மீது ஒவ்வொரு குடிலும் மற்றவரின் தனிமையை கெடுக்காத வகையில் அமைந்து இருந்தது. இவர்களின் குடில் மற்ற குடில்களை விட சற்று உயரத்தில் வண்ணப்பூக்களின் நடுவே, அழகாக அமைந்து இருந்தது. ஓட்டுக் கூரையின் மீது வித்யாசமான...
    இதில் அவள் சொல்லாமல் விட்டது அவன் முதலேயே அவளை அழைத்துக் கொண்டு பெங்களூர் செல்லவில்லை. விவாகரத்து வாங்கிய பிறகு தான் அழைத்துச் சென்றான். முதலில் சென்னையில் அவளைத் தனியாக ஒரு விட்டில் இருக்க வைத்திருந்தவன் விவாகரத்து கிடைத்து பெங்களூர் வீட்டிற்கு செல்லும் வரையுமே காதல் நாடகம் ஆடினான் தான். அவள் கல்யாணம் செய்துக்க கூறிய போது...
    அதே நேரத்தில், தனது அறையில் உறக்கம் இன்றிப் படுத்திருந்த அத்வைத் தன் மீது படுத்திருந்த தனது இரண்டரை வயது மகன் யாதவை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். கை அனிச்சை செயலாக, தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க, பார்வையோ விட்டதை வெறித்தபடி இருந்தது. யாதவ், “டாடா யது தூக்கம் வர்ல.. லைட் போடு.. விளையாது” என்றான் தனது மழலையில். சட்டென்று சுயம்...
    அனைவரின் மனமும் சற்றே நெகிழ்ந்த நிலையில் இருக்க, பேரன் ஊட்டிவிட ஆறுமுகம் உண்டார். சில வாய் உணவை வாங்கிய பின் அவர், “போதும் சாமி.. நீங்க சாப்பிடுங்க” என்றார் கரகரத்த குரலில். குழந்தை தட்டை காட்டி, “சப்பாத்தி இல்லையே!” என்றான். “இதோ தாத்தா தரேன்” என்றவர் தனது தட்டில் இருந்து ஊட்ட, அவன், “அம்மா யது பிக் பாய்..” என்று...
    நான்கு மாதங்கள் கடந்திருந்தது... வீடே போர்க்களமாகக் காட்சியளிக்க, சொற்போரிட்டுக் கொண்டிருந்த மரகதத்தையும் செந்தமிழினியையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார், வேணுகோபால். அப்பொழுது அவரது கைபேசி அலற, அதை எடுத்து காதுக்குக் கொடுத்தவர், “சொல்லுப்பா” என, எதிர்முனையில் இருந்த அருள்மொழி, “இன்னைக்கு சத்தம் அதிகமா இருக்கே! என்னாச்சுபா?” என்று கேட்டான். அப்பொழுது, “நீ என்ன சொன்னாலும் என் முடிவில் இருந்து நான்...
    மெல்லிய மென்னகையுடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அத்வைத்தின் சிந்தனை முழுவதும், செந்தமிழினியே இருந்தாள். ‘இன்னைக்கு தான் அந்தப் பொண்ணோட முகத்தை நேருக்கு நேர் முழுசா பார்க்கிறேன்.. ஆனா பழக்கப்பட்ட முகமா தோணுதே! ஒருவேளை, முன்னாடியே நாம எங்கேயாவது பார்த்து இருப்போமோ?’ என்று யோசித்தவன், ‘கடந்த மூனு நாலு வருஷத்தில் ஒரு பொண்ணை நாம கவனித்துப் பார்க்கிறது நடக்கிற...
    மங்களமோ யாரின் குரலுக்கும் அடங்காமல், “பார்த்தியா! இதுக்கு தான் சொல்றேன்.. அந்த வீட்டு பொண்ணுங்க ஆம்பளைங்களை முடிஞ்சு முந்தானையில் வச்சுப்பாளுக..” என்றார். துருவ், “அந்த திறமை எங்க அம்மாக்கு இருந்து இருந்தா, ஏன் இத்தனை வருஷம் கஷ்டப்படப் போறாங்க? தப்பே செய்யாத தன்னோட அண்ணன் அண்ணிக்காகப் பேச தெரியாத வாயில்லா பூச்சி அவங்க.. நீங்க சொன்ன...
    அன்று இரவு அத்வைத் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பொழுது, வீட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்த நேகாவைப் பார்த்ததும் மனதினுள் சிறிது ஆயாசமாக உணர்ந்தாலும், வெளியே அதை சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. நேகா புன்னகையுடன், “ஹாய் அத்தான்” என்றாள். மெல்லிய உதட்டோர மென்னகையுடன் தலை அசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்து விட்டு, தனது அறை நோக்கிச் சென்றான். நேகா அருகே...
    அம்பிக்கா  கோபத்துடன், “என்ன  இல்லை! அதான் எங்க உறவே வேணாம்னு முடிவு செய்து விட்டீங்களே!” என்றவர் அப்பொழுது அங்கே வந்த ஆறுமுகத்தைப் பார்த்து முறைத்தார். சரோஜினி, “அய்யோ! அப்படி எல்லாம் இல்லை மச்சினி” என்று பதற, அம்பிகா அண்ணனையும் அண்ணன் மனைவியையும் முறைத்தபடி, “இனி எங்க உறவு தேவை இல்லைன்னு முடிவு செய்து தானே வெளியே பொண்ணு...
    அடுத்த நாள் காலையில் செந்தமிழினி கண் விழித்ததும் கண்டது, தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த அருள்மொழியைத் தான். உற்சாகத்துடன் எழுந்து அமர்ந்த படி, “டேய் அண்ணா!” என்றாள். அவளைப் பார்த்து புன்னகைத்தாலும் வருத்தமான குரலில், “சாரிடா..” என்று ஆரம்பிக்க, அவனது பேச்சை இடையிட்டு, “காலையிலேயே வயலின் வாசிக்காதடா” என்றவள், “இது பாட்டெடு கொண்டாடு மொமென்ட்” என்றாள். எழுந்து சென்று, கைபேசியை ஒலி...
    அவளிடம் ஓடி வந்த யாதவ், “நீ என் கூட விளையாடவே இல்லை.” என்று குறை பட்டான். அவன் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் கன்னத்தில் கை வைத்தபடி, “இப்போ சந்துமா ஆபீஸ் போகணும்.. யது கண்ணாவை பார்த்துட்டு டாடா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத் தான் வந்தேன்.. இப்போ ஆபீஸ் லேட் ஆகிடுச்சு.. நான்...
    அருள்மொழி, “இது விளையாட்டு இல்லை, தமிழ்” என்றான் சற்று கோபக் குரலில். “விளையாட்டாச் சொன்னாலும், நான் தெளிவா, உறுதியா தான் இருக்கிறேன்.” என்று தீவிர குரலில் கூறினாள். “தமிழ் உண்மையைச் சொல்லு.. என்ன நடந்தது?” “நான் ஏன்டா பொய் சொல்லப் போறேன்?” “அத்வைத் நிச்சயம் உன் கிட்ட கல்யாணம் செய்துக்கலாமானு கேட்டு இருக்க மாட்டான்.” “ஏன்? நான்   அவ்ளோ  வொர்த் இல்லை...
    அன்று காலையில் அலுவலகம் செல்ல கிளம்பி வந்த செந்தமிழினியை பார்த்த மரகதம், “என்னடி இது! வெள்ளிக்கிழமை அதுவுமா ஒரு புடவையைக் கட்டினோம்னு இல்லாம, ஜீன்ஸ் பேண்ட் டிஷர்ட்னு வந்து நிக்கிற! முதல்ல போய் ட்ரெஸ் மாத்திட்டு வா.” என்றார். “இன்னைக்கு ஆபீஸ்ல, இதைத் தான்   போட்டுட்டு வரச் சொல்லி இருக்கிறாங்கமா” “யாரு காதுல பூ சுத்துற?” “தலையில் வேணா...
    செந்தமிழினி அங்கே சென்ற போது வாசலிலேயே துருவ் அவளுக்காகக் காத்திருந்தான். இருவரும் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கண்ணனும் லட்சுமியும் அடுத்தடுத்து வந்தனர். இருக்கும் இடம் அதிரும் அளவிற்கு நால்வரும் கூத்தடித்தனர். ஒரு இடத்தில் சிலர் ஆட்களை அமரச் செய்து அப்படியே வரைந்து கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் செந்தமிழினி துருவிடம், “நீயும் உட்காருடா.. நான் வரையுறேன்” என்றாள். துருவ்,...
    அன்று காலை தேநீர் இடைவேளையில் செந்தமிழினி லட்சுமியின்  இடத்திற்குச் சென்ற போது, லட்சுமி வேலைப் பழுவைப் பற்றி மீண்டும் புலம்பவும், செந்தமிழினி, “இப்படி புலம்புறதுக்கு அவரிடமே போய் சொல்ல வேண்டியது தானே!” என்றாள். “அவரைப் பார்த்தாலே பேச்சு வர மாட்டிக்குதுடி.” “நீயும் இந்தப் பத்து நாளா புலி வருது புலி வருதுனு எப்பெக்ட் கொடுக்கிற.. ஆனா, நான் அந்தப்...
    நான்கு சக்கர வண்டியின் முன் பக்கம் கைகளை கட்டியபடி, முறைப்புடன் செந்தமிழினி அமர்ந்து இருக்க, புன்னகையுடன் அத்வைத் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். செந்தமிழினி கோபத்துடன், “இப்போ எங்க போறோம்னு சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று கேட்க, அத்வைத் புன்னகையுடன் கண்ணடித்தபடி, “உன்னை கடத்திட்டுப் போறேன்” என்றான். முறைப்புடன், “நிஜமாவே அதைத் தான் செய்துட்டு இருக்கிறீங்க” என்றாள். “நானும் அதைத் தானே...
    மரகதம் கணவரிடம், “இன்னைக்கு மாமா நம்ம கூட இல்லைனா, அதுக்கு இவங்க பேசின அந்தப் பேச்சு தானே காரணம்! கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, மாமா இறந்ததைச் சொன்னப்பவும், திரும்பவும் இப்படித் தானே பேசினாங்க.. போதாதுக்கு மாமா இறந்ததுக்கு மச்சினியை அனுப்பக் கூட இல்லையே! இப்படி ஒரு வாய்ப்பு, எனக்குக் கிடைக்கும்னு நான் நினைக்கவே...
    “அஞ்சு மாசம் கழிச்சு தான், அவ நாலு மாசம் ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சுது.. குழந்தையை அழிக்கப் போறேன்னு சண்டை போட்டா.. நான் முடியாதுனு ஒரே காலில் நின்னேன்.. அப்போ தான், எங்க பிரச்சனை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்தது.. வீட்டுக்கு வரப் போற வாரிசை பத்தி மகிழ்வதா! எங்க வாழ்க்கை இப்படி போர்க்களமா இருக்குதேன்னு வருந்துவதானே அவங்களுக்குத்...
    வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்த அத்வைத்திடம் துருவ், “அன்னைக்கு ரெஸ்டாரென்ட்டில் சொன்னதை தமிழ் நிஜமாவே செஞ்சி விடுவாளோடா!” என்று சிறு கலவரத்துடன் கேட்டான். அத்வைத் புரியாமல் பார்க்க, துருவ், “இல்லை.. முதல் இரவில் உனக்கே இந்த நிலைமைனா.. அதான்..” என்று இழுத்து நிறுத்த, அத்வைத் கொலை வெறியுடன் அவனை முறைக்கவும், “ஆல் தி பெஸ்ட்டா.” என்ற படி, ஓடி...
    error: Content is protected !!