Advertisement

யாதவ் மேல் அவள் கொண்டுள்ள அன்பும் பாசமும் கலந்த உரிமையைக் கண்டு பெரிதும் ஆச்சரியம் கொண்டவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்தே அவள் எழுந்து சென்றது மூளையில் உரைக்க, அவன் என்ன செய்வது என்று திகைத்தான்.
துருவின், என்னாச்சு?” என்ற கேள்வியை கவனிக்காதவள் அத்வைத்தை முறைத்த படி, வேகமாக மேசை மீது இருந்த நீரை பருகினாள்.
அத்வைத்தும் இவளைத் தான் பார்த்துக் கொண்டே இருந்தான். எப்படி சமாதானம் செய்வது என்று சிறு தவிப்புடன் அவளைப் பார்த்தான்.
சட்டென்று எழுந்தவள் மீண்டும் அத்வைத் இருந்த மேசைக்கே வந்து அமர்ந்தாள். அத்வைத்தின் உதட்டோரம் மெல்லிய புன்னகை அரும்பியது.
துருவ், இப்போ எதுக்குடா வந்துட்டுப் போனா!” என்று வினவ,
கண்ணனோ அலட்டிக் கொள்ளாமல், தண்ணி குடிக்க வந்திருப்பா.. அவங்களைக் கண்டுக்காம நீ சாப்பிடு” என்றான்.
எப்படிடா இப்படி!”
கண்ணன் புன்னகை மட்டும் பதிலாகத் தர, துருவ் தலையை அசைத்துக் கொண்டு உணவில் கவனமானான்.
அமைதியாக உதட்டோர இளநகையுடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அத்வைத்தை பார்த்தவள், ஏன் நீங்க மட்டும் தான் கோபத்தை தத்தெடுப்பீங்களா! எங்களுக்கும் கோபம் வரும்.. உங்களை மாதிரி நாங்களும் அந்நியன் பெர்பார்மென்ஸ் கொடுப்போம்.” என்றாள்.
அந்நியன்னா!’ என்று ஒரு நொடி யோசித்தவன் அவள் தான் முதலில் இனிமையாகப் பேசி, உடனே கோபத்துடன் அவளைக் காயப்படுத்துவது போல் பேசியதைத் தான் கூறுகிறாள் என்பதை புரிந்து கொண்டான்.
அவன் புன்னகையுடன், நீ ஒரு ஒரிஜினல் பீஸ்” என்றான்.
ஈ” என்று பல்லைக் காட்டியவள், இவ்ளோ சிரிச்சா போதுமா?” என்றாள்.
அவன் முகத்தில் புன்னகை நன்றாக விரிந்தது.
அவன் முகத்தையே பார்த்தவள், சிரிக்கும் போது நீங்க அழகா இருக்கிறீங்க, அத்து” என்றாள்.
பதிலுக்கு நீ எப்போதுமே அழகா இருக்கனு நான் சொல்லணுமா?” என்று கேட்டான்.
லேசாக வாய் விட்டுச் சிரித்தவள், அதான் சொல்லிட்டீங்களே!” என்றாள்.
அவன் இயல்பான வசீகரப் புன்னகையுடன் தலை முடியைக் கோத, அவள், ஒன்ஸ் மோர், அத்தான்” என்று கேட்டாள்.
ஏய்!” என்று அவன் கூற,
அவள், ப்ளீஸ் அத்து.. என் செல்ல அத்துல.. ப்ளீஸ்.. ப்ளீஸ்” என்று மீண்டும் கொஞ்சலுடன் கெஞ்சினாள்.
இந்த முறை அவளது கொஞ்சலுடன் கூடிய கெஞ்சலை அவன் ரசித்தான்.
அவள் கண்ணைச் சுருக்கியபடி கெஞ்சலாகப் பார்க்கவும், அவன் இன்னும் வசீகரித்த புன்னகையுடன் தலையைக் கோத, அதை தனது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.
அவன் சிறு வெட்கத்துடன், ஏய் வாலு! என்ன செய்ற!” என்றான்.
அதையும் புகைப்படம் எடுத்தபடி விரிந்த புன்னகையுடன், இப்போ ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறீங்க, அத்து” என்றவள், கண்ணடித்து உதட்டை அசைத்து முத்தம் கொடுத்தாள்.
சட்டென்று அவன் அவளைக் கடுமையாக முறைக்க,
அவள் மென்னகையுடன், அந்நியன் இஸ் பேக்(back)” என்றாள்.
அவன் முறைப்புடனே, பொது இடத்தில் இப்படி செய்யாத” என்று கண்டிப்புடன் கூற,
அவளோ வாடாத புன்னகையுடன், ஓகே அத்து.. இதெல்லாம் நம்ம ரூமில் வச்சிக்கிறேன்.” என்றாள்.
உங்க ரூம்’ ‘நம்ம ரூம்’ என்று மாறியதை கவனித்தவன், அதை காட்டிக் கொள்ளாமல் சற்று கடின குரலிலேயே, சீக்கிரம் சாப்பிடு.. கிளம்பணும்.. டைம் ஆச்சு.” என்றான்.
அவள் உணவை உண்டபடி, இன்னொரு விஷயம் அத்தான்.. மாமா பொண்ணு கேட்டு வரதைப் பத்தி, நான் அம்மா கிட்ட பேசப் போறது இல்லை.. முதல்ல இன்னைக்கு வீட்டுக்கு போனதும் பேசணும் நினைத்தேன். ஆனா வேணாம்னு முடிவு செய்துட்டேன்..” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
அத்தை திட்டுவாங்கனு பயப்படுறியா?” என்று சற்று கனிவுடன் கேட்டான்.
பயமா! அப்படினா என்ன?”
அவனது உதட்டோரம் மீண்டும் மென்னகை அரும்பியது.
அம்மாவை எப்படி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும்..”
அதான் எனக்குத் தெரியுமே!”
இருந்தாலும் ஒரு குட்டி சம்பிள் சொல்றேன்.. கேளுங்க..” என்று கூறி கல்யாணப் பேச்சை ஒரு வருடத்திற்கு தள்ளிப் போட்ட கதையைக் கூறினாள்.
மென்னகையுடன், கேடி!” என்றவன், இனி நம்ம பையன் கிட்ட நான் ஜாக்கிரதையா இருந்துக்கணும் போல!” என்றான்.
மறைமுகமாக தனது தவறை அவன் திருத்தியதை புரிந்து கொண்ட அவள், அதை காட்டிக் கொள்ளாமல் புன்னகையுடன், கண்டிப்பா” என்றாள்.
திடீர்னு ஏன் முடிவை மாத்தின?” என்று கேட்டான்.
அவள் சிறு கோபத்துடன், கிழவி அதிகமாப் பேசுது.. மாமா பொண்ணு கேட்கணும், அம்மா மறுக்கனும்.. கிழவியோட மூக்கு அறுபடனும்.” என்றாள் தீவிர குரலில்.
அவன் அவளை முறைக்கவும், அவள், நோ நோ அத்து.. நோ ஹார்டு(hard) பீலிங்க்ஸ்.. நான் சொல்ல வரது.. அம்மா மறுக்கப் போறது உங்களை இல்லை.. கிழவியோட பேரனைத் தான்.. அதைத் தான் நான் மீன் பண்ணேன்.” என்றாள்.
அது புரியுது.. நீ வீட்டில் பேச வேணாம்.. அப்பா பேசட்டும்.. அப்புறம் நான் அத்தை கிட்ட வந்து பேசி சம்மதிக்க வைக்கிறேன்.” என்றவன், இனி யார் நினைத்தாலும் நம்மை பிரிக்க முடியாது.. நாளைக்கு கோவிலில் உன் கழுத்தில் நான் தாலி கட்டுறதையோ, ஊரறிய,   உன் கழுத்தில்  நான் தாலி கட்டப் போறதையோ யாரும் தடுக்க முடியாது.” என்றான் உறுதியான குரலில்.
அவனது கூற்றைக் கேட்டு அவளது முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி தெரிந்தது. அதைக் கனிவுடன் பார்த்தவன், அவளது கையை தட்டிக் கொண்டுத்தான்.
சில நொடிகள் அந்த மோன நிலை தொடர, மேசை பணியாளர் வந்து, வேற எதுவும் வேணுமா சார்?” என்று கேட்டதும், சட்டென்று தனது கையை எடுத்தான்.
அவரைப் பார்த்து, பில்” என்றவன் துருவ் மற்றும் கண்ணன் இருந்த மேசையைக் காட்டி, அந்த டேபிள் பில்லையும் சேர்த்திடுங்க.” என்றான்.
ஓகே சார்” என்று கூறி அவர் அகன்றதும்,
கடைசி வாய் உணவை வாயில் போட்டபடி, அப்போ எதுக்கு முறைச்சீங்க?” என்று கேட்டாள்.
அவன் சின்ன முறைப்புடன், பெரியவங்களை மரியாதை கொடுத்துப் பேசு” என்றான்.
அவளும் லேசான முறைப்புடன், அது செஞ்ச, செய்ற வேலைக்கு இந்த மரியாதையே அதிகம்” என்றாள்.
அவன்   அவளை    நன்றாகவே    முறைக்க, அவளோ அலட்டிக் கொள்ளாமல், நான் என்ன சூனியக்கார கிழவி, கூனி கிழவினா சொன்னேன்!” என்றாள்.
அவன் மறுப்பாக தலையை அசைக்க, அவள், தெரிந்தா சரி” என்றாள்.
அப்பொழுது மேசைப் பணியாளர் வரவும், உணவிற்கான கட்டணத்தைக் கட்டி, அவரை அனுப்பினான்.
என்ன தெரிந்தா சரி?” என்று அவன் கேட்க,
இப்போ ‘உன்னை மாத்த முடியாது!’னு நினைச்சு தானே தலையை ஆட்டினீங்க.. அதைச் சொன்னேன்” என்றாள்.
அவளை சிறு ஆச்சரியத்துடன் பார்த்தவன், வேற எதுவும் சொல்லனுமா?” என்று கேட்டான்.
அவள் குறும்புப் பார்வையுடனும் புன்னகையுடனும், வேற எதுவும்னா! எதையாவது எதிர் பார்க்கிறீங்களா, அத்தான்?” என்று கேட்டாள்.
அவன் புரியாமல் பார்க்க, அவள், அதான்.. இந்த ஐ லவ் யூ.” என்று இழுத்து நிறுத்த,
ஒரு நொடி அதிர்ந்தவன், பின் சிரித்தான்.
அவள் புருவம் உயர்த்த, அவன் சிரிப்புடன் எழுந்த படி, நீ என்னை அதிகம் சிரிக்க வைக்கிற.. தேங்க்ஸ்.” என்றான் மனதில் இருந்து.
அவளும் எழுந்த படி, அவனைச் செல்லமாக முறைத்தாள்.
அவன் அதே சிரிப்புடன், சில வருஷம் கழிச்சு மனம் விட்டுச் சிரிக்கிறேன்.. உன் கூட இருக்கிறப்ப மனசே லேசா இருக்கிற பீல்.. அதான் சொல்லனும்னு தோணுச்சு, சொன்னேன்.. இனி தேங்க்ஸ்  சொல்லலை” என்றான்.
ஒரு ரொமன்ஸ் ஸீனைஇப்படி சென்ட்டிமென்ட் ஸீனா மாத்திட்டீங்களே அத்தான்!” என்று அவள் கூற,
அவன் விரிந்த புன்னகையுடன், வாலு” என்ற படி, அவளது தலையில் லேசாகத் தட்டினான்.
பொது இடத்தில் இவர் மட்டும் இப்படி விளையாடுவாராம்.” என்று அவள் அவனுக்குக் கேட்கும் படி முணுமுணுக்க,
அவன், என்ன முணுமுணுப்பு?” என்றான்.
அவனைப் பார்த்து, வெவ்வ..வ..வ” என்று அழகு காட்டியவள், துருவ் மற்றும் கண்ணன் இருந்த மேசைக்குச் சென்று, கிளம்பலாமா கண்ணா?” என்று கேட்டாள்.
சிரிப்புடனே அங்கே வந்து, ஓகே கய்ஸ்.. நான் கிளம்புறேன்.” என்ற அத்வைத் செந்தமிழினியைப் பார்த்து விழியசைவில் விடைபெற்றுக் கிளம்பினான்.
பார்டா! கண்கள் இரண்டால்னு பேசிக்கிறதை!” என்று துருவ் கிண்டல் செய்ய,
செந்தமிழினி சிறு வெட்கத்துடன் அவனை அடித்தபடி, சும்மா இருடா” என்றாள்.
துருவ் நெஞ்சில் கை வைத்தபடி, இப்படி வெட்கப்பட்டு அதிர்ச்சி மேல அதிர்ச்சி தராத, பம்கின்” என்று அதிர்ந்த குரலில் கூற,
அவள் முறைப்புடன், ஓவராப் பேசின! அந்த நேகாவை உன் கூட கோர்த்து விட்டுடுவேன்.” என்று மிரட்டினாள்.
இப்பொழுது அவன் முறைப்புடன், அண்ணியா நீ! சரியான வில்லி.” என்றான்.
இனி பார்த்துப் பேசு தம்பி” என்று அவனது தோளை தட்டியவள்,
வா பாடிசோடா.. நாம கிளம்பலாம்” என்று கூறி நண்பனுடன் கிளம்பினாள்.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement