Advertisement

அஞ்சு மாசம் கழிச்சு தான், அவ நாலு மாசம் ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சுது.. குழந்தையை அழிக்கப் போறேன்னு சண்டை போட்டா.. நான் முடியாதுனு ஒரே காலில் நின்னேன்.. அப்போ தான், எங்க பிரச்சனை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்தது..
வீட்டுக்கு வரப் போற வாரிசை பத்தி மகிழ்வதா! எங்க வாழ்க்கை இப்படி போர்க்களமா இருக்குதேன்னு வருந்துவதானே அவங்களுக்குத் தெரியலை..
அவ யாருக்கும் தெரியாம, தனியா டாக்டர் கிட்ட போய் குழந்தையை அழிக்கப் போனப்ப, டாக்டர் இனி ஒன்னும் செய்ய முடியாதுனும், அழிச்சா அவளோட உயிருக்கே ஆபத்துன்னும் சொல்லிட்டாங்க.. அதுக்கு அப்புறம் ரொம்ப வயலென்ட்டா மாறிட்டா..! எல்லார் கூடயும் அவளே சண்டையை இழுத்துப்பா.. அதுவும் என் கூட சொல்லவே வேணாம்.. ஏன்டா வீட்டுக்கு வரோம்னு யோசிக்க வச்சா.. ஒரு கட்டத்தில் என்னை நானே அன்பிட்(unfit)னு யோசிக்கக் கூட வச்சா..!
அவ என் கிட்ட அடிக்கடி சொல்றது ‘எப்போதும் அமைதியாவே இருக்கிற நீ ஒரு ஜடம்.. உனக்கு எப்படி ஜாலியா இருக்கிறதுனே தெரியாது..” என்றவனின் பேச்சை இடையிட்டவள் சற்று கோபத்துடன்,
உங்களை பத்தி தெரிஞ்சு தானே கல்யாணம் செய்தா! அப்புறம் என்ன?” என்றாள்.
அவன் விரக்தியான சிரிப்புடன் தொடர்ந்தான், அவ படிக்கறப்பவே யாரையோ விரும்பி இருக்கா.. ஆச்சி தான், ஏதேதோ சொல்லி அவளை மூளை சலவை செஞ்சு என் தலையில் கட்டிட்டாங்க.. அத்தையும் அதுக்கு கூட்டு தான்.. அவங்க அப்படி செஞ்சதோட பலனை, நான் மட்டும் தான் அனுபவிக்கிறேன்.. அவ என்னை விட்டுப் போனாலும் அவ ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் என்னை துரத்திட்டே தான் இருக்குது..” என்றவன் ஒரு நொடி இடைவேளையின் பின் தொடர்ந்தான்,
என்னையும் அவனையும் எல்லாத்துக்கும் கம்பேர் செய்து பார்த்து, அவளும் கஷ்டப்பட்டு என்னையும் படுத்தி எடுத்துட்டா.. எல்லாத்தையும் விட உச்சம்.. டைவர்ஸ் வாங்கின அன்னைக்கு அவ சொன்னது தான்..” என்றவன் வார்த்தைகள் வராமல் மேலும் இறுகினான்.
கைகளை கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றபடி, அவன் கூறுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள் சற்று நகர்ந்து வந்து, அவனது கை மேல் தனது கையை ஆதரவாக வைத்தாள்.
இத்தனை நாட்கள் மனதில் அடைந்து கிடந்ததை வெளியேற்றிட நினைத்தானோ? இல்லை, அவனையும் அறியாமல் செந்தமிழினியிடம் சொல்ல நினைத்தானோ! அவளது கையை இறுக்கமாகப் பற்றியவன் கண்களை மூடியபடி, அன்னைக்கு அவ என்னை ஒரு கேவலமான பார்வை பார்த்தபடி, ‘என் கூட வாழ்ந்த அந்த ஒரு மாச வாழ்க்கையில் அவனை நினைச்சு தான், என் கூட இருந்ததாவும்.. அப்படியும் என்னை ஒரு மாசத்துக்கு மேல சகிச்சுக்க முடியலைனும்.’ சொல்லித் தான் என் முகத்தில் தாலியைத் தூக்கி எரிஞ்சா.” என்றான்.
அவன்  கொடுத்த   அழுத்தத்தில்,  செந்தமிழினிக்கு கை நொறுங்கி விடுவது போல் வலித்தது, இருந்தும் பொறுத்துக் கொண்டாள். அதில் இருந்தே அவன் மனது வலியும் வேதனையும், கொதிப்பின் அளவும் புரிந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் வலியைப் பொறுக்க முடியாமல் மறு கையால் அமர்ந்து இருந்த அவனை நின்ற படியே தனது வயிற்றோடு சேர்த்து அணைத்தாள். அவள் அவ்வாறு அணைத்ததும், அவளது கையை விடுத்து, இரு கரங்கள் கொண்டு அவளது இடையை சுற்றி வளைத்தபடி அமைதியாக இருந்தான். அந்த அணைப்பில் தாயின் பாசத்தை உணர்ந்தவனுக்கு, தனது மனதின் பாரம் குறைவது போல் இருந்தது.
மீண்டும் சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு அவள் அவனது தலையை வருடவும், மெல்ல இயல்பிற்குத் திரும்பியவன், அவளை விட்டு சட்டென்று விலகிய படி,சாரி” என்றான்.
நான் உங்க நெஞ்சில் சாஞ்சப்ப சாரி கேட்கலையே!” என்றவள், சொல்லி முடிச்சிடுங்க.. இன்னையோட எல்லாத்தையும் மறந்திடலாம்.” என்றாள்.
அவ குழந்தையை அழிக்காம இருக்க போட்ட கண்டிஷன், டைவர்ஸ்.. அப்போ அவ மனசில் வேற ஒருத்தன் இருந்தது எனக்குத் தெரியாததால அப்போதைக்கு டைவர்ஸ்கு சரினு சொன்னேன்.. அவளோட மனசை மாத்திடலாம்னு தான் நினைத்தேன்.. அதுனாலயே அவ செய்தது, பேசினது எல்லாத்தையும் பொறுத்துப் போனேன்.. ஆனா, என் நிம்மதி கெட்டது தான் மிச்சம்..
அவ தெளிவா தான் இருந்து இருக்கா.. மன்த்லி செக்-அப் ஆச்சி கூட இல்லை. அவ அம்மா கூட தான் போவா.. அப்போ அவளோட காதலனோட திரும்ப பழக்கம் ஏற்பட்டு, அவனோட உதவியோட தான் டைவர்ஸ் அப்ளை செய்தது எல்லாமே..! அதுவும் வீட்டில் யாருக்கும் தெரியாம அப்ளை செய்து நோட்டீஸை என்னோட ஆபீஸ்க்கு அனுப்பிட்டா.. அப்படி தான், ஸ்டெர்லிங் ரோட்  ஆபீஸ்ஸில் என்னோட விஷயம் தெரிய வந்தது..
யது பிறந்ததுக்கு அப்புறமும் எதுவும் மாறலை.. யதுவை ஒழுங்கா பார்க்க மாட்டா.. தாய் பால் கொடுக்கிற வேலையை மட்டும் தான் செய்வா.. அது கூட யதுவை அழ விட்டு தான் கொடுப்பா.. கேட்டா ‘நீ தானே குழந்தை கேட்ட!’ னு கத்தி சண்டை போட்டு ஊரை கூட்டுவா.. ஒரு பெண்ணால, அதுவும் ஒரு தாயால எப்படி இப்படி இருக்க முடியும்னு நினைச்சு இருக்கிறேன்.. அதுக்கு அப்புறம் அவ முகத்தை பார்க்கிறதுக்கே வெறுப்பா இருக்கும்..
அதுக்கு அப்புறம் நான் அவ கூட பேசுறதையே நிறுத்திட்டேன்.. யதுக்கு மூணாவது மாசம் பாதில தாய்பாலை குறைச்சு பௌடர் பால் கொடுக்க வைச்சா.. மூணாவது மாசம் முடியிறப்ப தாய்பால் கொடுக்கிறதையே நிறுத்திட்டா..! அதுக்கு அப்புறம் முழு நேரமும், அம்மா தான் யதுவை பார்த்துக் கிட்டாங்க.. ஆபீஸ்ஸில் இருந்து வந்ததுக்கு அப்புறம் நான் பார்த்துப்பேன்..
அப்புறம் யது நாலு மாசக் குழந்தையா இருந்த அப்ப, ஒரு நாள் லெட்டர் எழுதி வச்சிட்டு அவளோட நகையையும், கொஞ்ச பணத்தையும் எடுத்துட்டு அவ காதலன் கிட்ட போயிட்டா..!
அப்புறம் கேஸ் ஹியரிங் முந்தின நாள் போன் செய்து கோர்ட்டுக்கு மறக்காம வந்து டைவர்ஸ் கொடுத்திடச் சொன்னா.. அவ எங்க இருக்கா, எப்படி இருக்கானு நான் கேட்டுகவே இல்லை..
அப்புறம் டைவர்ஸ் கிடைச்சுது.. அத்தோட அவளை மொத்தமா தலை முழுகிட்டேன்..  பெருங்குடி ஆபீஸ் வந்துட்டேன்.
வீட்டில் டைவர்ஸ் பத்தி சொன்னா.. அவளை திரும்பப் பார்த்ததைப் பத்திச் சொல்லணும்.. ஆச்சி திரும்ப அவளை என் கூட சேர்த்து வைக்க நினைப்பாங்க.. வீட்டில் இருக்கிறவங்க கூட நினைக்கலாம்.. அந்த டார்ச்சர் வேணாம்னு தான் சொல்லலை.”
யது?”
யது என்னோடவே இருக்கட்டும்னு எழுதிக் கொடுத்துட்டா.. ஸோ பிரச்சனை வராது”
மாமாவை எங்க வீட்டில் பொண்ணு கேட்கச் சொல்லுங்க”
அவன் ‘என்னது! எதுக்கு?’ என்பது போல் புரியாமல் பார்த்தான்.
காரணமாத் தான் சொல்றேன்.” என்றவள், “மூனு காரணங்கள் இருக்குது..” என்றாள்.
அவன் ‘என்ன?’ என்பது போல் பார்க்கவும், அவள் காரணங்களைக் கூறினாள்.
முதல் காரணம், எனக்கு இந்தத் தாலி வேண்டாம்.. அவளோட தாலி அப்படிங்கிறதை விட, உங்களை கேவலப்படுத்தின தாலி எனக்கு வேணவே வேணாம்..
ரெண்டாவது காரணம்.. உங்களை யாரும் தப்பா நினைக்கிறதை நான் விரும்பலை..
மூணாவது காரணம்.. உங்க ஆச்சி.. முறைப்படி பொண்ணு கேட்டு, ஊரறிய நீங்க என் கழுத்தில் தாலி கட்டினா தான், நான் நிம்மதியா இருக்க முடியும்.. அதுக்கே அவங்க பேசத் தான் செய்வாங்க.. அதை நான் சமாளிச்சுப்பேன்.. ஆனா, நம்ம பக்கம் எதுவும் குறையா இருக்கக் கூடாதுனு நினைக்கிறேன்..” என்றாள்.
அப்போ, நேத்து நடந்ததை யார் கிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்றியா?”
நம்ம குடும்பத்துக்கு மட்டும் தெரிந்தா போதும்.. அதாவது, நீங்க நான் யது கண்ணா.. நமக்கு மட்டும் தெரிந்தால் போதும்.” என்று அவள் உறுதியான குரலில் கூறினாள்.
அவள் கூறிய காரணங்களில் முதல் இரண்டு காரணங்கள் அவனது மனதை அமைதிப் படுத்தியது. அந்த நொடியில் அவளை தனது மனைவியாக ஏற்க அவனது மனம் தயாரானதை அவன் உணரவில்லை.
அவன் அமைதியாக இருக்க, என்ன?” என்றாள்.
அவன், சரி.. நான் வீட்டில் பேசுறேன்..” என்றதும்,
சரி.. நான் யது கிட்ட சொல்லிட்டுக் கிளம்புறேன்.” என்று கூறி அறையை விட்டு வெளியேறினாள்.
என்ன தான் அவனது மனம் அவளை மனைவியாக ஏற்கத் தயார் ஆனாலும், அதை அவன் உணராத நிலையில் இருப்பதோடு, ‘அவளின் வாழ்வை தான் பாழ் ஆக்குகிறோமோ?’ என்ற குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொண்டதாலேயே அறைக்கு வெளியே சென்றதும், அவன் ‘கடைசியா ஒரு முறை யோசிச்சுக்கோ’ என்று கூறியது.
இவை அனைத்தையும் யோசித்துக் கொண்டு இருந்த செந்தமிழினியை உலுக்கிய கண்ணன், என்ன மேடம்! அப்படி என்ன தீவிர யோசனை?” என்று கேட்டான்.
ஒரு முறை தண்ணி அடிக்கலாமானு யோசிக்கிறேன்.” என்று அவள் அலட்டிக் கொள்ளாமல் கூற, கண்ணன் தான் ஒரு நொடி அதிர்ந்தான்.
பின், எதுக்கு இந்த விஷப்பரிட்சை?” என்று கேட்டான்.
தண்ணி அடிச்சதுக்கு அப்புறம் பேசுறது, நடந்துக்கிறது எல்லாமே போதை தெளிஞ்சதும் மறந்துடுவாங்கனு சொல்றதை எக்ஸ்பரிமென்ட் செய்யத் தான்”
அவளை ஒரு மாதிரி மேலும் கீழும் பார்த்தவன், இன்னைக்கு காலையில் இருந்து நீ ஒரு மார்க்கமா தான் இருக்கிற” என்றான்.
அப்பொழுது அவளது கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்ததிற்கான ஒலி கேட்டது.
கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.
அத்வைத் தான் அனுப்பி இருந்தான்.
ஆராய்ச்சி செய்றேன்னு எதையாவது செஞ்ச! பிச்சிடுவேன்” என்று அனுப்பி இருந்தான்.
அதைப் படித்ததும், அவளது இதழில் இளநகை பூத்தது.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement