முறைப்புடன், “நிஜமாவே அதைத் தான் செய்துட்டு இருக்கிறீங்க” என்றாள்.
“நானும் அதைத் தானே சொன்னேன்”
“அத்தான்!”
“என்ன?”
“ஏன் இப்படி செய்றீங்க?”
“இப்போ செய்யாம வேற எப்போ செய்ய?”
“சரி எங்க போறோம்னாவது சொல்லுங்க”
“கொடைக்கானல்”
“என்ன!”
“எஸ்.. ஹனிமூனுக்கு மனைவியை கடத்திட்டு போற ஒரே ஆள், நானா தான் இருப்பேன்.. அதுவும் மூனு முறை கல்யாணம் செய்த காதல் மனைவியை.”
“ஆமா ஆமா.. ரொம்ப தான் காதல்”
“அதை நிரூபிக்கத் தானே கூட்டிட்டு போயிட்டு இருக்கிறேன்!”
உதட்டைச் சுளித்தவள், “முதல்ல நடந்த கல்யாணம் உங்க மூளையில் ரெஜிஸ்டரே ஆகலை.” என்றாள்.
“கல்யாணம் ரெஜிஸ்டர் ஆகித் தான் இருக்குது.. நடந்த முறை தான் ரெஜிஸ்டர் ஆகலை!”
முறைப்புடன், “நான் தான் இப்போ எதுவும் கிடையாதுனு சொன்னேனே!” என்றாள்.
“இப்போ போனா தான், அதுக்குப் பேர் ஹனிமூன்”
“என் கோபத்தை போக்கிட்டு ஹனிமூன் கூட்டிட்டு போறேன்னு தானே சொன்னீங்க!”
“மிர்ச்சி மிளகாவை செர்ரி பழமா மாத்தத் தானே குளுமையான இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன்!” என்றபடி அவளது இதழை வருடியபடி, கன்னத்தில் முத்தமிட்டான்.
எதிர்பாராத தொடுகையிலும் முத்தத்திலும் மனம் மயங்கினாலும் கோபத்தை இழுத்து பிடித்தபடி முறைப்புடன் அவனது கையை தட்டிவிட்டு, “யது கண்ணா..” என்று ஆரம்பிக்க,
அவன், “அவன் சேஃபா உங்க வீட்டில் தான் இருக்கிறான்.. அத்தை மாமா கூட நல்லாவே ஒட்டிக்கிட்டான்.. அருள் வேற இருக்கிறான்.. இதுக்கு முன்னாடி, நான் பெங்களூர் போனப்ப எல்லாம் அம்மா கூட தனியா தானே இருந்தான்.. இப்பவும் இருந்துப்பான்.. மூனு நாள் தானே.. அப்படியே அவன் அம்மாவைத் தேடினாலும், அம்மா உங்க வீட்டுக்குப் போவாங்களே தவிர, யது கண்ணா நம்ம வீட்டுக்கு வர மாட்டான்.. ஸோ, கவலை இல்லாம உன்னோட அத்துவை மட்டும் கவனி.” என்ற படி அவளது இடையை வளைத்தபடி கண்சிமிட்டினான்.
“கார் ஓட்டும் போது என்ன விளையாட்டு இது?” என்றபடி அவனது கையை அவள் விலக்க,
அவனும் கையை எடுத்தபடி தலையை மட்டும் அவள் பக்கம் சரித்து, “அப்போ ரிசார்ட் போய் விளையாட்டை வச்சிக்கலாமா?” என்று மையல் பார்வையுடன் கேட்டான்.
“முதல்ல ஒழுங்கா உட்கார்ந்து, ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டுங்க.” என்றவள், “யது கண்ணா கிட்ட பேசக் கூட விடாம.. ஏன் இப்படி செய்றீங்க!” என்றாள் வருத்தம் கலந்த முறைப்புடன்.
“கொடைக்கானல் போய் வீடியோ கால் செய்துக்கோ”
“என்னோட ட்ரெஸ்?”
“எல்லாம் பேக் செய்து காலையிலேயே காரில் வச்சிட்டேன்.. யது கண்ணாவை, உங்க வீட்டில் விட்டுட்டு தான் ஆபீஸ்கே வந்தேன்.”
“இதுக்காக தான் என்னை முன்னாடியே கிளம்பச் சொல்லிட்டு, நீங்க லேட்டா கிளம்பினீங்களா!”
அவன் புன்னகையுடன் கண் சிமிட்டலை மட்டும் பதிலாகத் தர,
அவள், “யது கண்ணா கிட்ட எப்போ பேசினீங்க?” என்று கேட்டாள்.
“நேத்து தான்.. உனக்கு சர்ப்ரைஸ்.. நீ ரொம்ப ஹாப்பி ஆகிடுவனு சொல்லி, அவனை உன் கிட்ட சொல்லக் கூடாதுனு சொல்லிட்டேன்.”
“பிளான் எல்லாம் பக்காவா தான் போட்டு இருக்கிறீங்க.. ஆனா, இந்த மூன்று நாட்கள் அந்த மூனு நாட்களா இருந்தா என்ன செய்வீங்க?” என்று கேட்டாள்.
அவன் புரியாமல், “எந்த மூனு நாட்கள்?” என்று வினவ,
அவள் கண்ணால் மட்டும் சிரித்தபடி, “இந்த வீட்டுக்கு தூரம்னு சொல்லுவாங்களே! பெண்களுக்கு மாதா மாதம் வருமே, அந்த மூனு நாட்கள்.” என்றாள்.
அவன் சட்டென்று வண்டியை நிறுத்த, அவளோ இருக்கையை பின்னால் சாய்த்து நன்றாக சாய்ந்து படுத்த படி கண்களை மூடிக் கொண்டாள்.
பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியதை மீறி அவளது இதழோரம் துடிக்க, அதைப் பார்த்தவன் புன்னகையுடன், “கேடி!” என்றபடி வண்டியை எடுத்தான்.
அவள் கண்களை திறவாமல், “அதுக்கு வாய்ப்பு இல்லைன்னு சொல்லிட முடியாது.” என்றாள்.
“அப்போ அது முடிந்ததும் முதல்ல இருந்து கோட்டை போட்ட பிறகு தான், ஊருக்கு ரிடர்ன்”
“முதல்ல என் கோபத்தை போக்குற வழியை பாருங்க ஆபீஸர்.. அதுக்கு அப்புறம் கோட்டை போடலாம்”
அன்று மங்களம் யாதவ் மனதை கலைக்க முயற்சித்த நாளைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் செந்தமிழினி அத்வைத் வீட்டிற்குச் செல்லவில்லை. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை என்பதால் அவள் செல்லவில்லை.
அவள் காணொளி அழைப்பின் மூலம் பேசியும், யாதவை சமாளிக்க முடியாமல் ஞாயிறு மாலை அத்வைத் அவனை அழைத்துக் கொண்டு வேணுகோபால் வீட்டிற்கு வந்து விட்டான்.
அருள்மொழி கதவை திறந்ததும் “அம்மா” என்று கத்தியபடி யாதவ் உள்ளே ஓடி விட,
அத்வைத் அருள்மொழியை முறைத்துக் கொண்டு நின்றான்.
யாதவின் குரல் கேட்டதும் அவசரமாக தனது அறையில் இருந்து வெளியே ஓடி வந்த செந்தமிழினி, “யது கண்ணா” என்றபடி மண்டியிட்டு அமர்ந்த நிலையில் குழந்தையை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளது கழுத்தை கட்டிக்கொண்டு அவளது கன்னங்களில் முத்தமிட்ட குழந்தை, பின் அவளை விட்டு விலகி, கைகளை கட்டிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.
அந்த கொள்ளை அழகை ரசித்தவள் மண்டியிட்ட நிலையிலேயே அவன் முன் வந்து காதில் கை வைத்தபடி, “அம்மா பாவம் இல்லையா! யது கண்ணாவோட செல்ல அம்மா தானே!” என்று கெஞ்சியபடி கொஞ்சினாள்.
குழந்தை அப்பொழுதும் சமாதானம் ஆகாமல் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டான், “எம்மு ஆச்சி தான் அம்மாவை விடலை கண்ணா” என்று சோகமாக கூறினாள்.
இவர்களின் பாசப் பிணைப்பை இவ்வளவு நேரம் ரசித்து பார்த்துக் கொண்டிருந்த மரகதம் மகளை முறைக்க, அதை அவள் கொண்டு கொண்டால் தானே.
‘தனது கண்களுக்கும் மனதிற்கும் இன்னமும் சிறு குழந்தையாகத் தோன்றும் தன் மகளா இது!’ என்ற பிரம்மிப்பு கலந்த ரசனையுடன் வேணுகோபால் பார்த்துக் கொண்டிருந்தார்.
கோபம் மறந்து யாதவ், “எம்மு ஆச்சி, யார்?” என்று கேட்க,
செந்தமிழினி, “அம்மாவோட அம்மா” என்றாள்.
“அம்மாச்சியா?”
அவள் குழந்தைக்காக, “ஹே! உங்களுக்கு தெரியுமா?” என்று கண்களை விரித்து ஆச்சரியம் கலந்த குதூகலத்துடன் கேட்டாள்.
கோபத்தை முற்றிலும் மறந்த குழந்தை, “ஓ! தெய்யுமே.. டாடா சொன்னா” என்றான்.
“டாடா வேற என்ன சொல்லித் தந்தாங்க?”
“அம்மாவோட அம்மா அம்மாச்சி.. அம்மாவோட டாடா வேணு தாத்தா.. அம்மாவோட அண்ணா அருள் மாமா”
“வாவ்.. சூப்பர் பேபி” என்று அவள் புன்னகையுடன் கை தட்ட,
குழந்தை மகிழ்ச்சியுடன் சிரித்தான்.
பின், “அம்மாச்சி பேர் எம்முவா?” என்று கேட்டான்.
அவள் புன்னகையுடன், “அம்மாச்சி பெயர் மரகதம்.. ஆனா, அம்மா எமரல்ட் தான் சொல்வேன்.. அதான் எம்மு ஆச்சி” என்றவள், “மரகதம் என்றால் இங்கிலீஸில் எமரல்டு” என்றும் சேர்த்துக் கூறினாள்.
“ஓ” என்ற குழந்தை, “எம்மு ஆச்சி ஏன் உன்ன விடலை? யது அம்மா ரொம்ப தேடினான்.” என்று உதட்டை பிதுக்கி அழுவது போல் கூற,
கண்கள் லேசாகக் கலங்கியபடி அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, “சாரி கண்ணா.. அம்மா இனி டெய்லி யது கண்ணா பார்க்க வந்திடுவேன்.. ஓகே.” என்றாள்.
“நீ எப்போ நம்ம வீட்டுக்கு வருவ?”
“நாளைக்கு வரேன், கண்ணா.”
“அப்போ இனி யது கூடவே இர்(ரு)பியா?”
“அதுக்கு கொஞ்ச நாள் ஆகும்னு அம்மா சொன்னேனே கண்ணா”
“இப்தி தான் சொல்லிட்டே இருக்க” என்று மீண்டும் அழுவது போல் கூற,