Advertisement

சந்துமா’ என்று மனதினுள் சொல்லிப் பார்த்த குழந்தை, “சந்து-னு கூப்பிடவா?” என்று கேட்டான்.
ஓ! கூப்பிடுங்களேன்”
அவள் வாங்கிக் கொடுத்த பொம்மையில் பெரிய பாண்டா கரடியை காட்டி, இது நான்..” என்றவள், குட்டியை காட்டி, இது யது கண்ணா” என்றாள்.
யாதவும் மழலை சிரிப்புடன், இது சந்து.. இது யது” என்றான்.
சூப்பர்” என்றவள், யது கண்ணாக்கு ஐஸ்-கிரீம் பிடிக்குமா?” என்று கேட்டாள்.
ஹ்ம்ம்” என்று வேகமாக குழந்தை தலை ஆட்டினான்.
என்ன ப்ளேவர் பிடிக்கும்?”
ஸ்ட்ராபெரி”
ஹே! எனக்கும் ஸ்ட்ராபெரி தான் பிடிக்கும்” என்று குதூகலத்துடன் கத்தியபடி கையைத் தூக்கிக் காட்டினாள்.
அவன் புன்னகையுடன் அப்படியே நிற்கவும், அவள், ஹை-பை தெரியாதா?” என்று கேட்டாள்.
அவன் தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்கினான்.
குழந்தையின் பாவனையில் கவரப்பட்டவள் அப்படியே அவனை அள்ளியெடுத்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டபடி, யது கண்ணா செம கியூட்” என்றாள்.
பின், அது ஸோ சிம்பிள்.. நாம ஹப்பியா இருக்கும் போது அதை மத்தவங்க கிட்ட ஷேர் செய்துக்க, அவங்க கையை தட்டனும்.. இதோ இப்படி” என்றவள் தனது இரு கரங்களையும் எதிரெதிரே வைத்து தட்டி காட்டினாள்.
இப்போ நானு.. நானு” என்று உற்சாகத்துடன் கூறிய குழந்தை அவளது கையில் தட்டி, ஹை-பை” என்று கூறி சிரித்தான்.
பின் சரோஜினியை பார்த்து, ஆச்சி.. யது ஹை-பை” என்றவன் துருவைப் பார்த்து, சித்தா யது ஹை-பை” என்று குதூகலித்தான்.
பேரனின் பேரின்பத்தில் சரோஜினியின் முகமும் மலர்ந்தது.
துருவ் புன்னகையுடன் கையை நீட்டி, சித்தாக்கு ஹை-பை” என்றான்.
யாதவும் துருவின் கையை தட்டி, ஹை-பை” என்று கூறிக் குதித்தான்.
துருவைப் பார்த்து, இதைக் கூட சொல்லித் தராம என்னடா செய்துட்டு இருந்த?” என்று கேட்டவள் யாதவிடம், நாம இப்போ ஐஸ்-கிரீம் சாப்பிடப் போகலாமா?” என்று கேட்டாள்.
ஹ்ம்ம்” என்று வேக வேகமாக தலையை ஆட்டினான்.
ஆச்சிக்கு ஐஸ்-கிரீம் ஒத்துக்காது.. சித்தா, உனக்கு ஹை-பை சொல்லி தரலை.. ஸோ நாம ரெண்டு பேர் மட்டும் போகலாம்.. ஓகே?” என்று கேட்டபடி கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.
குழந்தையும் அவ்வாறே காட்டியபடி, ஓகே” என்றான் புன்னகையுடன்.
தேனுமா, ஒரு பிளஸ்க்கில் லேசா சூடான தண்ணி தாங்க” என்றாள்.
சரோஜினி சமைலறைக்கு செல்ல, துருவ், நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்று கூறி தனது அறைக்குச் சென்றான்.
யாதவ், உனக்கு பீவரா?” என்று கேட்டபடி அவளது நெற்றியில் கைவைக்க முயற்சிக்க,
அவனுக்கு வாக்காக குனிந்தபடி, இல்லையே கண்ணா.. ஏன் கேட்கிறீங்க?” என்று கேட்டாள்.
அவளது நெற்றியை தொட்டுப் பார்த்து சூடு இல்லை என்ற பிறகே இயல்பான யாதவ், டாடா.. பீவர் இருந்தா பிளஸ் ஹாட் வாட்டர் தருவாங்க” என்றான்.
குழந்தைக்கு இரு கரத்தினால் திருஷ்டி கழிப்பது போல் செய்து புன்னகையுடன், அறிவுடா கண்ணா..” என்றவள், இது ரொம்ப ஹாட் வாட்டர் இல்லை.. கொஞ்சம் சூடா இருக்கும்.. ஐஸ்-கிரீம் சாப்பிட்டதும் கொஞ்சம் சூடான தண்ணியை குடிச்சா, சளி பிடிக்காது, த்ரோட் இன்பெக்சன் ஆகாது.. அதுக்குத் தான் கேட்டேன்”
ஓ” என்ற குழந்தை, உனக்கு எப்படித் தெரியும்? நீ டாக்டரா?” என்று கேட்டான்.
அவள் வாடாத புன்னகையுடன், எனக்கு என்னோட அம்மா சொல்லி தந்தாங்க.. நானும் உங்க டாடா மாதிரி தான் வேலை பார்க்கிறேன்” என்றாள்.
அம்மா’ என்ற வார்த்தையில் குழந்தையின் முகம் சற்று சுருங்கவும், அதை உணர்ந்துக் கொண்ட செந்தமிழினி தன்னையே கடிந்துக் கொண்டு வரவழைத்த உற்சாக குரலில்,
யது கண்ணாக்கு ஹை-பை சொல்லி கொடுக்காததுக்கு சித்தாக்கு பனிஷ்மென்ட் கொடுக்கலாமா?” என்று கேட்டாள்.
அவளது உற்சாகத்தில் குழந்தையின் முகம் சற்று மலர்ந்தாலும், அவளது கூற்றைக் கேட்டு  அவளை புதிதாகப் பார்த்தான்.
யாதவ் துருதுரு குழந்தை தான் என்றாலும், இதுவரை அவன் குறும்பு செய்தது இல்லை. அத்வைத் சிரித்து பேசும் ஒரே ஆள் யாதவ் தான் என்ற போதிலும், அவனது சிரிப்பில் உற்சாகத்தை கண்டதில்லை என்பதாலோ என்னவோ யாதவும் பெரிதாக உற்சாகத்துடன் காணப்பட்டது இல்லை.
என்ன?” என்று புன்னகையுடன் கேட்டு செந்தமிழினி புருவம் உயர்த்த, அவளது உற்சாகம் அவனிடமும் தொற்றிக் கொண்டது.
குழந்தை ஆர்வத்துடன், ஹ்ம்ம்” என்று தலை அசைத்தான்.
சமையலறைக்குச் சென்று ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வந்தவள், தனக்குப் பின்னால் வால் பிடித்து வந்து கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து, உதட்டின் மீது விரலை வைத்து, ஷ்” என்றாள்.
யாதவும் கண்ணில் ஆர்வத்துடன் அமைதியாக, சரி என்பது போல் தலையை ஆட்டினான்.
அவள் பூனை போல் சத்தமின்றி நடந்து துருவ் அறைக்குச் செல்ல, யாதவும் அவ்வாறே அவளைப் பின் தொடர்ந்தான்.
இருவரும் மூடிய குளியலறைக் கதவின் அருகே நின்று கொண்டனர்.
துருவ் வெளியே வரவும் அவன் முகத்தில் தண்ணீரை வேகமாக ஊற்றியவள், புன்னகைத்தபடி யாதவுடன் கை தட்டிக் கொண்டாள்.
யாதவ் துருவைப் பார்த்து சத்தமாக சிரித்தான்.
‘இதை விடவே மாட்டியா பிசாசு’ என்று கோபமாக கேட்க வந்த துருவ், அண்ணன் மகனின் பூரிப்பை தன்னை மறந்து கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான் என்றால், அறை வாயிலில் நின்று கொண்டிருந்த சரோஜினியின் கண்கள் பணித்தது.
இருவரின் எதிர்வினையைக் கண்டே விஷயத்தை யூகித்த செந்தமிழினி சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொண்டு, யது கண்ணா, ஆச்சி கூட போய், வேற ட்ரெஸ் போட்டு கிளம்பிட்டு வாங்க” என்றாள்.
அவன் சரோஜினியுடன் அத்வைத் அறைக்குச் செல்ல,
செல்லும் யாதவை பார்த்தபடி துருவ் மெல்லிய குரலில், இது தான் பஸ்ட் டைம் இவன் இப்படி சத்தமா மனம் விட்டுச் சிரிக்கிறது.. தேங்க்ஸ்.” என்றான்.
துருவின் தலையில் கொட்டியவள், பிச்சிடுவேன்” என்று ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டினாள்.
அவன் புன்னகையுடன், சீக்கிரம் வந்துருங்க.” என்றான்.
கண்டிப்பா.. விசுவாமித்திரர் வரதுக்கு முன்னாடி நான் கிளம்பி ஆகணுமே!” என்றாள்.
அவன் யோசனையுடன் பார்க்க, அவருக்கு நாளைக்கு ஒரு நாள் டைம் கொடுத்து இருக்கிறேன். என்னை கண்டு பிடிக்க.” என்றாள்.
அது என்னஒரு நாள் கணக்கு?” என்று கேட்டவன், உன்னோட பெயரை வச்சே கண்டு பிடிச்சிடலாமே!” என்றான்.
கண்டு பிடிக்கலாம் தான்.. அதுக்கு என்னோட பெயர் தெரியணுமே! என்னோட பெயர் என்னனு தெரிஞ்சுக்கிற ஆர்வமாது இருக்கணுமே! அவர் தான் முழுசா முனிவரா மாறின விசுவாமித்திரரா இருக்காரே!” என்றவள், நாளான்னைக்கு எங்க கம்பெனியில் பாமிலி-டே.. அதில் நான் பாட்டு பாடப் போறேன்.. அதுல நான் யாருன்னு சொல்றேன்னு சொல்லி இருக்கிறேன்.”
அப்போ உன்னோட கம்பெனி மக்கள் எல்லோரும் முதல் முறையா சென்னையில் கழுதையை பார்க்கப் போறாங்கனு சொல்லு”
எஸ்.. அதான் உன்னைக் கூட்டிட்டு போகப் போறேனே!” என்று கூறி அவள் கண்சிமிட்ட,
அவன் தனது சுட்டுவிரலை தன்னை நோக்கி வைத்து, இந்த அவமானம் உனக்கு தேவையா?” என்று கேட்டுக் கொண்டான்.
செந்தமிழினி சிரிக்கவும், தானும் அதில் இணைந்து கொண்ட துருவ், அத்வைத் இப்பலாம் பாமிலி-டே போறதே இல்லையே!” என்றான்.
தெரியும்.. நான் யாருன்னு தெரிஞ்சுக்கிற எண்ணம் இருந்தால் வருவார்..”
அவன் வரலைனா?”
வருவார்னு நம்பிக்கை இருக்குது.. பார்க்கலாம்.”
வரலைனா?”
அவரோட ரிங்-டோன், காளர்-டோன், அலாரம்னு எல்லாத்துலையும் என்னோட பாட்டு தான் இருக்கும்.”
இந்தக் கொடுமைக்கு, அவன் வந்திடுறது பெட்டர்”
உனக்குத் தெரியுது.. அவருக்குத் தெரியணுமே!” என்றவள் யாதவ் வரவும்,
வாவ்.. யது கண்ணா இந்த டிரெஸ்ஸில் ஹன்ட்சம்-ஆ இருக்கிறீங்களே” என்றாள்.
ஹன்சம்னா என்ன?”
அது ஹன்ட்..சம் கண்ணா..” என்று சற்று அழுத்தம் கொடுத்து கூறியவள் பின், அப்படினா, நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்கனு அர்த்தம்” என்றாள்.
ஓ.. நீயும் ஹன்ட்..சம்”
தேங்க் யூ கண்ணா” என்று கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், எனக்கு ஹன்ட்சம் சொல்லக் கூடாது.. ப்ரிட்டி சொல்லணும்.. பாய்ஸ்க்கு ஹன்ட்சம், கேர்ள்ஸ்க்கு ப்ரிட்டி.. எங்க சொல்லுங்க பார்ப்போம்.” என்றாள்.
பிட்டி”
ஹ்ம்ஹும்.. பிட்டினா, அய்யோ பாவம்னு அர்த்தம்.. நான்  சொல்றது ப்ரிட்டி.. ப்ரி..ட்டி.. சொல்லுங்க.” என்று அத்வைத் போலவே சொல்லிக் கொடுத்தாள்.
ப்ரிட்டி”
எஸ்.. வெரி குட்” என்று கூறி மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
நானும் முத்தம் குடுக்கலாமா?”
தராளமா.. யதுவோட சந்து அதுக்கு தான் வெயிட்ங்” என்றபடி மண்டியிட்டு அமர்ந்தவள், தனது கன்னத்தை அவன் அருகே கொண்டு சென்றாள்.
அவளை இறுக்கமாக அணைத்த யாதவ், அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
இந்தக் கன்னம்?” என்று அவள் மறு கன்னத்தைக் காட்ட, அதிலும் மகிழ்ச்சியுடன் அழுத்தமாக முத்தமிட்டான்.
அவள் புன்னகையுடன், இப்போ கிளம்பலாமா?” என்று கேட்க, யாதவ் புன்னகையுடன் சரி என்பது போல் தலை ஆட்டினான்.
ஓகே.. ஆச்சி, சித்தா கிட்ட சொல்லிட்டு வாங்க.. நாம கிளம்பலாம்.” என்றாள்.
ஆச்சி பை.. சித்தா பை.” என்று கூறி அவன் கிளம்ப,
செந்தமிழினி, போயிட்டு வரோம்.” என்று கூறிக் கிளம்பினாள்.
செல்லும் அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்த சரோஜினி மற்றும் துருவிற்கு யாதவின் மனம் செல்லும் பாதை புரிந்தாலும், அது நடக்கிற விஷயம் இல்லையே என்று நினைத்து பெருமூச்சை வெளியிட்டனர்.
சரோஜினி மனமோ, முதலிலேயே ராஜாத்தி மருமகளாக வந்திருந்தால்!’ என்று நினைத்து ஏங்கியது.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement