Thursday, May 9, 2024

    'மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!'

    ஆறுமுகம் சட்டை பையில் இருந்து கைபேசியை எடுக்கவும், அவன், “நான் தான்ப்பா.. எடுங்க” என்றான். அவர் யோசனையுடன் அழைப்பை எடுத்ததும், “இப்போ அப்படியே போன் டிஸ்ப்ளே வெளிய தெரியாத மாதிரி உங்க சட்டை பையில் வைங்க.. நீங்க பேசி முடிச்சு வெளியே வர வரைக்கும், இந்த கால் கட் ஆகக் கூடாது.. கைத் தவறி கட்...
    அன்று மாலை நாலரை மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்த அத்வைத்தைப் பார்த்த மங்களம், “என்னாச்சு ராசா? சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்க! உடம்பு எதுவும் சரி இல்லையா? பார்த்தியா, அந்தச் சிறுக்கியை பொண்ணு கேட்கப் போகணும்னு சொன்னதுக்கே உனக்கு உடம்பு நோவு வந்திருச்சு” என்று ஒப்பாரி வைத்தார். அத்வைத் சற்று குரலை உயர்த்தி, “கொஞ்சம் நிறுத்துறீங்களா! நான் நல்லா...
    “ஹாப்பி மார்னிங், அத்தான்” என்று புன்சிரிப்புடன் கூறியபடி வண்டியில் இருந்து இறங்கியவளைப் பார்த்தவனின் மனம் தாளம் தப்பத் தொடங்கியது. ஒரு நொடி இமைக்க மறந்து அவளையே பார்த்தவன், அவள் அவனது முகத்திற்கு முன் கையை அசைக்கவும் சுதாரித்துக் கொண்டு, “பூ வைச்சிக்கலையா?” என்று கேட்டான். “அப்புறம் நீங்க வாங்கித் தரதை வைக்க இடம் இருக்காதே!” என்று கூறி...
    அடுத்த நாள் காலையில் அழகான கிளிப் பச்சை நிற ‘சில்க் காட்டன்’ புடவையில் தயாராகி வந்த மகளைப் பார்த்த மரகதம், “என்ன அதிசயமா இருக்குது! சேலை கட்டச் சொன்னாக் கூட கட்ட மாட்ட! அதுவும் சீக்கிரம் கிளம்பி வந்திருக்க!” என்றார். செந்தமிழினி குறும்புப் புன்னகையுடன் மேடை ரகசிய குரலில், “அலைபாயுதே ஷாலினி மாதிரி திருட்டுத் தனமா...
    அருள்மொழி, “சொத்தை வச்சு தான் பிரச்சனையை ஆரம்பிச்சாங்க.. ஆனா, வேற மாதிரி” என்றான். துருவ், “என்ன தான் நடந்துது?” என்று கேட்க, அத்வைத், “அமைதியா இரு.. அவனை சொல்ல விடு” என்றான். அருள்மொழி, “ஹ்ம்ம்.. அன்னைக்கு எங்க வீட்டுக்கு அத்தை மாமா கூட வந்த உங்க ஆச்சி சாதாரணமா பேசின பேச்சை, வேணும்னே சண்டையா மாத்திட்டாங்க.. அத்தைக்கு பிடிக்குமேனு...
    தங்கையிடம் பேசி முடித்த சிறிது நேரத்தில் கைபேசியில் அத்வைத்தை அழைத்த அருள்மொழி அவன் அழைப்பை எடுக்கவில்லை என்றதும், துருவை அழைத்தான். துருவ் அழைப்பை எடுத்ததும், அருள்மொழி, “உடனே அத்வைத் கிட்ட போனைக் கொடுடா” என்றான். “அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?” என்று துருவ் கேட்க, “தமிழ் எப்போ உனக்கு போன் செய்து அத்வைத் கிட்ட கொடுக்கச்...
    அருள்மொழி, “இது விளையாட்டு இல்லை, தமிழ்” என்றான் சற்று கோபக் குரலில். “விளையாட்டாச் சொன்னாலும், நான் தெளிவா, உறுதியா தான் இருக்கிறேன்.” என்று தீவிர குரலில் கூறினாள். “தமிழ் உண்மையைச் சொல்லு.. என்ன நடந்தது?” “நான் ஏன்டா பொய் சொல்லப் போறேன்?” “அத்வைத் நிச்சயம் உன் கிட்ட கல்யாணம் செய்துக்கலாமானு கேட்டு இருக்க மாட்டான்.” “ஏன்? நான்   அவ்ளோ  வொர்த் இல்லை...
    வேணுகோபால் அமைதியாக இருக்க, மரகதம், “இவ தான் பின் விளைவுகளைப் புரியாம பேசுறானா, நீங்களும் சிரிக்கிறீங்க! அவங்களை விட்டு விலகி இருக்கிறதால் தானே நிம்மதியா இருக்கிறோம்.” என்றார். வேணுகோபால் அமைதியான வருத்தம் நிறைந்த குரலில், “நிம்மதியா இருக்கிறோம். ஆனா, முழு மனசோட சந்தோஷமா நிறைவா இருக்கிறோமா? என் தங்கச்சியை நினைத்து நான் வருந்துறதைப் பார்த்து, நீயும்...
    அன்று இரவு உணவிற்குப் பிறகு, செந்தமிழினி, “அப்பா,  சரோ அத்தை பாமிலி பத்தி ஏதாவது தெரியுமா? அதாவது.. தேனுமா எப்படி இருக்கிறாங்க? அத்தான், துருவ் எல்லாம் எப்படி இருக்கிறாங்க? அத்தானுக்கு எத்தனை பிள்ளைங்க? இப்படி தெரியுமானு கேட்டேன்.” என்றாள். பதில் கூறாமல் வேணுகோபால் அமைதியாக இருந்தார், ஆனால், அவரது நெஞ்சமோ தங்கையின் நினைவில் ஏக்கத்துடன் கூடிய...
    யாதவ் மேல் அவள் கொண்டுள்ள அன்பும் பாசமும் கலந்த உரிமையைக் கண்டு பெரிதும் ஆச்சரியம் கொண்டவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்தே அவள் எழுந்து சென்றது மூளையில் உரைக்க, அவன் என்ன செய்வது என்று திகைத்தான். துருவின், “என்னாச்சு?” என்ற கேள்வியை கவனிக்காதவள் அத்வைத்தை முறைத்த படி, வேகமாக மேசை மீது இருந்த...
    கண்ணன் அத்வைத்திடம் கை குலுக்கியபடி, “கங்க்ராட்ஸ் சார்” என்றான். அத்வைத், “தேங்க்ஸ்” என்றதும், கண்ணன், “உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும் சார்” என்றான். செந்தமிழினி அவனை முறைக்க, அத்வைத் உதட்டோர மென்னகையுடன், “தேங்க்ஸ் அகேன்” என்றான். இப்பொழுது அவள் அத்வைத்தை முறைத்தாள். துருவ், “தப்பா சொல்றடா.. இந்த நல்லவனை கட்டிக்கிற இவளோட மன தைரியத்தை தான் பாராட்டனும்” என்றான். அத்வைத்தை பார்த்து...
    மதிய உணவு இடைவேளைக்கு சற்று நேரம் முன் செந்தமிழினி, “கண்ணா” என்று அழைத்தாள். அவளது குரலில் தெரிந்த சிறு தயக்கத்தை உணர்ந்து கொண்டவன், அதை வெளிக்காட்டாமல் இயல்பான குரலிலேயே, “என்ன?” என்று கேட்டான். “ஒரு ஹெல்ப்” “என்ன! சில் பீர் ஒன்னு வாங்கித் தரணுமா?” அவள் தயக்கம் நீங்கி சட்டென்று சிரித்தபடி, “இல்லை லூசு.” என்றாள். “ஓ! நிஜமாவே குவாட்டர்...
    “அஞ்சு மாசம் கழிச்சு தான், அவ நாலு மாசம் ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சுது.. குழந்தையை அழிக்கப் போறேன்னு சண்டை போட்டா.. நான் முடியாதுனு ஒரே காலில் நின்னேன்.. அப்போ தான், எங்க பிரச்சனை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்தது.. வீட்டுக்கு வரப் போற வாரிசை பத்தி மகிழ்வதா! எங்க வாழ்க்கை இப்படி போர்க்களமா இருக்குதேன்னு வருந்துவதானே அவங்களுக்குத்...
    கதவை திறந்து சரோஜினியிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டு, “யது கண்ணாக்கு பால் கொடுங்க, தேனுமா” என்றவள், எதிரே இருந்த துருவிடம், “கொஞ்ச நேரம் பார்த்துக்கோ” என்றாள். பின் யாதவிடம் திரும்பி, “யது கண்ணா.. டாடா கிட்ட ஆபீஸ் வொர்க் பத்தி, முக்கியமாப் பேசப் போறேன்.. ஸோ, நீங்க சித்தா கூட போய் விளையாடுங்க.. ஓகே?”...
    யோசித்துப் பார்த்த அத்வைத் யோசனையுடன், “இல்லை” என்றான். “நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன்.. எனக்காகக் காத்திருக்கிறீங்க” என்று அழுத்தமான குரலில் கூறி, அழைப்பைத் துண்டித்து இருந்தாள். கைபேசியை துருவிடம் நீட்டியபடி, “நீ போ.. நான் பார்த்துக்கிறேன்.” என்றவனின் மனம் யோசனையில் சுழன்றது. துருவ், “அத்வைத்” என்று அழைத்து ஏதோ கேட்க வர, அவனோ, “அப்புறம் பேசலாம்.....
    ‘தமிழ்.. இது நீ தெளிவா யோசிக்க வேண்டிய நேரம்.. யோசி யோசி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டபடி அவள் சற்று இயல்பிற்குத் திரும்பியதும், அவளது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியது. அந்த நொடியில் அனைத்து குழப்பங்களையும் ஓரம் கட்டி வைத்து விட்டு தற்போது உடனடியாக செய்ய வேண்டியது எது என்று யோசித்தாள். பொன் தாலியை...
    “ப்ச்.. வீடு இப்போ இருக்கிற நிலைமைக்கு..” என்று அவன் இழுத்து நிறுத்த, அவள், “ஏன்? அப்படி என்ன நிலைமை?” என்று சாதாரணமாகக் கேட்டாள். “ஏன் உனக்குத் தெரியாதா?” “எனக்குத் தெரிந்து கப்பல் மூழ்குற நிலைமையில் இல்லை” “அத்வைத்தை இன்னொரு கல்யாணம் செய்யச் சொல்லி அம்மாவும் அப்பாவும் போராடிப் பார்த்துட்டாங்க.. நானும் முயற்சி செய்றேன்.. ஒன்னும் வேலைக்கு ஆகலை..” “கிழவி, சும்மா இருக்காதே!” “கிழவி...
    முன்தினம் விழாவில் பாடி முடித்து கீழே வந்த செந்தமிழினி லட்சுமியிடம், “அத்தான் எங்கடி?” என்று கேட்டாள். திரும்பிப் பார்த்த லட்சுமி அத்வைத் இல்லை என்றதும் முறைப்புடன், “எந்த அத்தான்?” என்று கேட்டாள். செந்தமிழினி, “ப்ச்.. விளையாடாமச் சொல்லுடி” என்றாள். லட்சுமி அதற்கும் முறைக்க, கண்ணன், “என்ன லட்சு!” என்றான். அவனையும் முறைத்தபடி, “அப்போ உனக்கு முன்னாடியே தெரியும்.. நான்..” என்றவளின்...
    அத்வைத் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அவனது கைபேசிக்கு நேகா அழைத்தாள். ‘இவ எதுக்கு கூப்பிடுறா! ஆச்சி வேலையா தான் இருக்கும்!’ என்று எரிச்சலுடன் நினைத்தவன்,  அவளது அழைப்பை எடுக்கவில்லை. ஆம்! அது மங்களத்தின் வேலை தான். வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பும் முன் மங்களத்திடம், “நாங்க கிளம்பினதுக்கு அப்புறம் அம்மாவை எதுவும் சொன்னீங்கனு தெரிந்தது!” என்று...
    மங்களமோ யாரின் குரலுக்கும் அடங்காமல், “பார்த்தியா! இதுக்கு தான் சொல்றேன்.. அந்த வீட்டு பொண்ணுங்க ஆம்பளைங்களை முடிஞ்சு முந்தானையில் வச்சுப்பாளுக..” என்றார். துருவ், “அந்த திறமை எங்க அம்மாக்கு இருந்து இருந்தா, ஏன் இத்தனை வருஷம் கஷ்டப்படப் போறாங்க? தப்பே செய்யாத தன்னோட அண்ணன் அண்ணிக்காகப் பேச தெரியாத வாயில்லா பூச்சி அவங்க.. நீங்க சொன்ன...
    error: Content is protected !!