பேரன்பு பிரவாகம்
அத்தியாயம் -37(3)
பேராசியர்கள் மாணவர்கள் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுக்குள் சுமூக உறவு ஏற்படும் படி செய்து விட்டான் விஷ்ணு.
மருத்துவமனை ஊழியர்களுக்குள் நிலவி வந்த பிரிவினை வாதத்தை சரி செய்ய அனைவரிடமும் பிரவாகனே பேச்சு வார்த்தை நடத்தினான். அவர்களின் பிரச்சனைகளுக்கு மருத்துவமனை டீன் மற்றும் மூத்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம்...
அத்தியாயம் -37(2)
குறைந்த கால இடைவெளியில் ட்ரஸ்ட்டீ மாற்ற பட்டது ஏன் என கேட்டார்.
எனது வேலைப் பளு காரணமாக என் மனைவிக்கு பொறுப்பு கொடுத்தேன், அவள் கர்ப்பமாகவும் அவளது உடல் நிலை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஆகவே மீண்டும் நானே பொறுப்புக்கு வந்து விட்டேன் என்றான் பிரவா.
“அப்படியா… உங்க சித்தப்பா வேற மாதிரி...
பேரன்பு பிரவாகம் -37
அத்தியாயம் -37(1)
வளைகாப்பு முடிந்து உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு வந்த விஷ்ணு அரை மணி நேரத்தில் எல்லாம் மீண்டும் கல்லூரிக்கு கிளம்பி விட்டான். குகனின் வருகைக்காக காத்திருந்த பிரவாகன் அவன் வந்ததும் புறப்பட தயாரானான்.
“சாப்பிட்டு கிளம்புங்க” என்றாள் மலர்.
“வந்த உடனே என்னவோ கொழ கொழன்னு சாப்பிட...
அத்தியாயம் -36(3)
கோவை வந்தடைந்த மிருணா அக்காவிடமிருந்து வந்த குறுஞ்செய்தி பார்த்து விட்டு கவலை கொண்டாள். வேறு சமயம் என்றால் அவள் அண்ணன் சமாளிப்பான் என தெரியும். ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்க, இன்று வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி வேறு இருக்க இப்போதா இப்படி ஆக வேண்டும் என நினைத்தாள்.
மிருணாவை அழைப்பதற்காக...
அத்தியாயம் -36(2)
என்னதான் சரியாக இருந்தாலும் பணம் இல்லாமல் எந்த காரியமும் எளிதில் நிறைவேறாதே. தமனை அர்த்தமாக அவன் பார்க்க, “ஒருத்தர் தவிர மத்தவங்கள கவனிச்சாச்சுங்க ஸார்” என்றான் அவன்.
அந்த ஒருவர் நேர்மையானவர். ஆகவே பணத்தை கொண்டு அவரிடம் காரியம் சாதிக்க முடியாது.
“நல்லா தெரியுமா? ஃப்ரீ பிளாக் கை விட்டு போனா...
பேரன்பு பிரவாகம் -36
அத்தியாயம் -36(1)
அகிலா தன் மகளை பள்ளியில் சேர்த்து விட்ட கையோடு தனக்கென ஒரு வேலை தேடிக் கொண்டாள். பிரவாகன் அவன் சொன்னது போலவே அகிலாவின் பெயரில் பெரிய பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்து விட்டான். அங்குதான் வசிக்கிறார்கள்.
முன்பெல்லாம் மாமனார் மாமியார் எதற்காகவும் பேசினால் கொஞ்சம் பொறுத்து போவாள்...
பேரன்பு பிரவாகம் -35
அத்தியாயம் -35
“ரிலேட்டிவ்ங்கிறதால தப்பான ஆளுக்கு பெரிய பொறுப்ப கொடுத்து உட்கார வைப்பீங்களா?” பிரவாகனிடம் தன் அதிருப்தியை வெளியிட்டான் விஷ்ணு.
“நீங்க சரியான ஆளுதானே? நீங்க வாங்க” என்றான் பிரவா.
“இன்ட்ரெஸ்ட் இல்லைனு முன்னாடியே சொன்னேன். மலரை பார்த்துக்கோங்க, நான் வரேன்” என சொல்லி கிளம்பி விட்டான் விஷ்ணு.
மலர்...
அத்தியாயம் -34(2)
எது சொன்னாலும் இது இப்படித்தான் என இவன் சொல்வதை கேட்டு கேட்டு அவனுக்கு பழகி விட்டாள் மலர். குணம் மாறுகிறதோ என்னவோ, சில விஷயங்களில் செய், செய்யாதே என தான் சொன்னால் கேட்கிறான்தானே? அந்த மட்டிலும் திருப்தி பட்டுக் கொள்வதுதான் என்ற நிலைக்கு வந்து விட்டாள்.
அரசியும் கீர்த்தியும் அப்போதுதான் தேவகியை...
பேரன்பு பிரவாகம் -34
அத்தியாயம் -34(1)
விமலின் பெற்றோர் பேராசை கொண்டவர்கள்தான். திருமணத்தின் போதே எக்கசக்கமாக கேட்டு வாங்கியிருந்தனர். இப்போது இடம் பற்றி தெரிய வரவும் அகிலாவுக்கு ஒன்றுமே செய்யாமல் சின்ன மாப்பிள்ளைக்கு கொடுத்து விட்டார் சம்பந்தி என குற்றம் சொல்ல விமலும் வேடிக்கை பார்த்தான்.
தானமாக கொடுத்த இடத்தில் இப்போது ஏதோ பத்திர...
அத்தியாயம் -33(3)
“அவ்ளோ சீரியஸ் இல்நெஸ் இல்லையே. சிக்ஸ் மன்த்ஸ்ல திரும்ப இங்க வந்திட போறாங்க. உங்க ஃப்ளாட், மிருணா ஃப்ளாட் எதுவும் வசதி படாதுன்னா சென்னைல மிருணா பேர்ல அஞ்சு ஏக்கர்ல பெரிய வில்லா இருக்கு. அங்க போயிட்டீங்கன்னா அத்தைக்கு போர் அடிக்காது. அவங்கள எங்கேஜ்டா வச்சுக்க என்ன செய்யணுமோ செய்திடலாம்”
“நான்...
அத்தியாயம் -33(2)
“என் அண்ணன் எவ்ளோ பெரிய ஆள்… அவர் இடம் இது. அவர் ஒரு பார்வை பார்த்தாலே என்னவோ ஏதோன்னு அலறுவாங்க எல்லாரும். ஆனா என்னால அவமான பட்டுட்டார். ஆபரேஷன் லேட் பண்ணிட்டார்ங்கிறது தப்புதான். அதுக்கு முன்னாடி அவர் செஞ்சு கொடுத்த ஃபெஸிலிட்டி எல்லாம் ஒண்ணும் இல்லாம போயிடுச்சுல்ல? எனக்காக பொறுத்து போற...
பேரன்பு பிரவாகம் -33
அத்தியாயம் -33(1)
“என்னை எதுக்கு அழைச்சிட்டு வந்த? மிருணா தனியா நிக்குறா? அந்த லேடி என்ன அவ்ளோ திமிரா பேசுது? பொண்டாட்டிய பேச விட்டு வேடிக்கை பார்க்கிற விஷ்ணுவோட அண்ணன் ஒரு இர்ரெஸ்பான்ஸிபில் ஸ்பெசிமன்” தனது அலுவலக அறையிலிருந்த பிரவாகன் எரிச்சலாக சொன்னான்.
“அண்ணியை அண்ணா பார்த்துக்குவார். அவங்க ஃபேமிலி...
அத்தியாயம் -32(2)
தயங்கி தயங்கி, “சாரி விஷ்ணு, எனக்கு அத்தை கூடத்தான் இருக்கணும்னு தோணாம போய்டுச்சு. நீங்களும் எதுவும் சொல்லலை… சாரி” என்றாள்.
“என்ன மிருணா… நாலு வயசு பாப்பாவா நீ? பேஸிக் விஷயம் கூட உனக்கு நான் சொல்லி தரணுமா? நீ எதுவும் பேசாம கொஞ்ச நேரம் என்கிட்டேருந்து தள்ளி நில்லு, தட்ஸ்...
பேரன்பு பிரவாகம் -32
அத்தியாயம் -32(1)
அன்றைய இரவில் விஷ்ணுவும் மிருணாளினியும் அவசரமாக கோவை வந்தடைந்தனர். மாலையில் கோயிலுக்கு சென்று விட்டு தேவகி திரும்பி வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார்.
தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதாக சொல்லி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்...
அத்தியாயம் -31(3)
விஷயத்தை சொன்னான் தமன்.
“இவ்ளோ சீக்கிரம் எழுந்து நடமாடுறானா? என்னத்தய்யா கவனிச்சீங்க அவனை? கேம்பஸ் உள்ள எப்படி வந்தான்?” என சீறினான் பிரவாகன்.
ஆள் அடையாளம் தெரியாமல் உள்ளே விட்டு விட்டனர், மேடம் பாதுகாப்பு வட்டத்தில்தான் இருந்தார் என தமன் சமாதானம் செய்ய, “என்ன கேட்டாலும் ஏதாவது ஒரு ஸ்டோரி சொல்லு,...
அத்தியாயம் -31(2)
“என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேட்க கூட பொறுமை இல்லை”
“என்ன புதுசா சொல்லிட போறீங்க? ஹாஸ்பிடலே போகக் கூடாது, ஜெயில்ல இருக்க மாதிரி வீட்லேயே இரு, இதானே?”
“ஓஹோ… எந்த நாட்டுல இவ்ளோ ஸோஃபெஸ்டிகேட்டடா ஜெயில் இருக்கு?”
“உலகத்துல இல்லாத ஒண்ணை உங்களாலதான் உருவாக்க முடியுமே… இதோ எனக்கு உருவாக்கி...
பேரன்பு பிரவாகம் -31
அத்தியாயம் -31(1)
மலரும் பிரவாகனும் ஒரு வீட்டில்தான் இருக்கிறார்கள், ஒரே அறையைத்தான் பயன் படுத்திக் கொள்கிறார்கள். அவளுக்கு எந்த உடல் உபாதை என்றாலும் அவன்தான் கவனித்துக் கொள்கிறான். அவளை அணைத்துக் கொண்டுதான் உறங்குகிறான். மலர்தான் அவனுக்கு உணவு பரிமாறுகிறாள்.
ஆனால் மலரின் பேச்சு வெகுவாக குறைந்து விட்டது. அது அவனுக்கு...
அத்தியாயம் -30(3)
செல்வம் நம்பவில்லை, நேரம் அப்போதே இரண்டை தாண்டி இருந்தது. நன்றாக இருப்பதாகத்தான் சொல்லி விட்டேனே, உறக்கத்தை கெடுத்து கொண்டு வருவாரா? வேண்டுமானால் காலையில் சீக்கிரமாக வந்து பார்ப்பார் என்றார்.
ஆனால் மலர் சொன்னது போலதான் நடந்தது. சில நிமிடங்களில் அங்கு வந்து நின்றான் பிரவாகன். ஆப்பிள் துண்டுகள் இருந்த தட்டை ஓரமாக...
அத்தியாயம் -30(2)
கணவரை விமலா கடிந்து கொள்ள, “மலருக்கு கஷ்டமா இருக்காதா? நீ என்ன அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க? லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு நான் நினைச்சிட்டு இருந்தேன், எனக்கே அதிர்ச்சியா இருக்கும் போது மலருக்கு இருக்காதா?” எனக் கேட்டார்.
“லவ் பண்ணி கல்யாணம் நடக்கலன்னு அவ்ளோ வருத்தமா உங்களுக்கு? அப்படி...
பேரன்பு பிரவாகம் -30
அத்தியாயம் -30(1)
சென்னைக்கு அழைத்து செல்லுங்கள் என்ற மலரை அதிர்ச்சியாக பார்த்திருந்தனர் அவளது பெற்றோர்.
அவர்கள் எதுவும் சொல்வதற்கு முன் பிரவாகனின் கார் வருவது தெரிய, “நான் தூங்கிட்டேன்னு சொல்லிடுங்க” என சொல்லி உள்ளே சென்று விட்டாள் மலர்.
மாப்பிள்ளையை வரவேற்று உபசரித்தனர் செல்வமும் விமலாவும். சம்பிராதயமாக அவர்களிடம் இரண்டு...