புயல் காற்றில் விளக்காகவே
மொய்தீன் எண்ணுக்கு எண்ணிலடங்கா முறை ஆர்யன் முயற்சி செய்துக்கொண்டே இருக்க ரஷீத் அவனை அழைத்தான். “ஹலோ ஆர்யன்! ஒரு சிக்கல். நீங்க கொடுத்த தொலைபேசி எண்ணை வச்சி மொய்தீனை கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். ஆனா அதுக்கு உதவி செய்ற நமக்கு தெரிந்த காவல் அதிகாரியை பிடிக்க முடியல. வெளிநாடு எங்கயோ போயிருக்கார் போல. இப்போ...
இவானுக்கு காலைஉணவு கொடுத்து அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ருஹானாவிற்கு நேற்றிரவு உணவு மேசையில் ஆர்யன் அவளை முதுகில் குத்தும் துரோகி என்று சொன்னது அப்போதும் வலித்தது. ‘நான் அத்தனை கேவலமானவளா? அப்படியா என்னை நினைச்சீங்க?’
பின் அதை துடைத்து எறிந்தவள் ‘அல்லாஹ்! இவானை மட்டும் என்கிட்டே இருந்து பிரிச்சிடாதீங்க! நீங்க தான் எல்லாத்துக்கும் சாட்சி! நீங்களே...
“என்ன சல்மா? பிரமாதமா டிரஸ் செய்திருக்கே! எங்கயாவது வெளியே போறியா?”
“இல்ல அக்கா! மகாராணியை வழியனுப்ப தான்!”
“இத்தனை சீக்கிரம் நாம இதை கொண்டாடக்கூடாதுன்னு எனக்கு தோணுது. ஆனா என்னாலயும் மகிழ்ச்சியை அடக்க முடியல!”
“ஆமா அக்கா! அந்த குப்பை தன் தலையில தானே குப்பையை அள்ளிப் போட்டுக்கிட்டா. நமக்கும் தொல்லை விட்டது.”
“நீ சொன்னபடி பார்த்தா ஆர்யன் மொய்தீனை...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 129
கட்டிலில் அமர்ந்திருந்த ருஹானா அவர்களது திருமணப் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு “நான் எப்படியும் உங்ககிட்டே சொல்லித்தான் ஆகணும்” என்று போலி அடையாள அட்டையைப் பற்றி ஆர்யனிடம் பேச தைரியத்தை திரட்டிக்கொண்டு காத்திருந்தாள்.
அவள் எதிர்பாராத நேரத்தில் ஆர்யன் கதவை திறந்துகொண்டு உள்ளே வரவும், அவள் வேகமாக எழுந்துகொள்ள...
அவன் சென்ற சிலநிமிடங்களில் அங்கே இருந்த இருவருக்குள் வாக்குவாதம் முற்றி அடிதடி ரகளையானது. அதைக் கண்ட அம்ஜத் அவன் அமைதியை இழந்துவிட்டான். “சண்டை போடாதீங்க!” என்று பலமுறை சொன்னபடியே அங்கிருந்து எழுந்து வேறு திசையில் நடந்தான்.
“என்னோட அமைதி தொலைந்தது! ஆர்யன்! ருஹானா! நான் போறேன்” என அவன் புலம்பியபடியே நடக்க, அவனின் குரல் நல்லவேளையாக...
மாளிகைக்கு வந்து ஜாஃபரிடம் விவரம் சொன்ன ஆர்யன் “மொய்தீனும் கிடைக்கல. மிஷாலும் தப்பிச்சிட்டான். உண்மை என்கைல இருந்து நழுவிட்டே இருக்கு. என்ன செய்யன்னு எனக்கு புரியல” என்று வருத்தப்பட்டான்.
“விடை உங்ககிட்டேயே இருக்கு. ஏன் நீங்க ருஹானா மேடமை கேட்கக்கூடாது?” என அவன் சொல்ல, இரகசியம் காக்கும் ருஹானாவை தேடி சென்றான்.
பர்வீன் சொன்ன ஆர்யனின் கண்ணில்...
“பர்வீன் அம்மா உடம்பு சரியில்லாத பெரியம்மாவை பார்த்துக்க ஊருக்கு போறாங்க. சிலமாதம் அங்க தங்கியிருந்து அவங்களை பார்த்துக்குவாங்க” என்று தன்வீர் வந்து சொல்ல, ருஹானா கண்களில் கண்ணீர். “என்ன! மடாபாக்கு போறாங்களா?”
“ருஹானா! தயவுசெய்து அழாதே! நீ அழுதா நானும் அழுதுடுவேன்” என்று தன்வீர் ருஹானா அன்பாக அணைத்துக்கொண்டான்.
“நீங்க தான் என் குடும்பம். இப்போ பர்வீன்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 128
திகிலோடும் மரண பயத்தோடும் ஒருவருக்கொருவர் ஆதரவாக கைகளை பிடித்திருந்த சகோதரிகள் இருவரும் அலைபேசி அழைக்கும் ஓசையில் அதிர்ந்தனர்.
“ஹல்லோ! என்ன ஆச்சு? மொய்தீனை கண்டுபிடிச்சிட்டீங்களா? இல்லன்னு மட்டும் சொல்லிடாதே!”
“அப்படி சொல்ல மாட்டேன். கண்டுபிடிச்சிட்டோம் மேடம். சந்திப்பு நடக்கல.”
அடக்கமுடியாமல் சல்மா “அவனை பிடிச்சிட்டாங்களா?” என்று இடையில் கேட்டாள்.
“எங்க இருக்கான்...
ஜாஃபரிடமிருந்து சங்கிலியை பெற்றுக்கொண்ட ருஹானா அதன் விடுபட்ட கண்ணிகள் கோர்க்கப்பட்டிருப்பதை கவனித்தாள். அது யார் செய்திருப்பார்கள் என்பது அவளுக்கு புரிந்து போனது. அவன் எதிரே வந்தும், அவனுக்கு நன்றி உரைக்கவும் அவளுக்கு மனதில்லை.
“டாக்டர் கொடுத்த மருந்து சீட்டு வேணுமே! இந்த மாத்திரை உணவுக்கு முன்னாடியா, பின்னாடியா?” என அவள் கேட்க, ஆர்யன் பதில் சொல்லாமல்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 127
“உங்க வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்றதுக்கு மன்னிச்சிடுங்க, சையத் பாபா! இவான் உங்களோட மீட்பால் சாப்பிடணும்னு ஆசைப்பட்டான்.”
“சையத் அங்கிள்! உங்களுக்கு தெரியுமா? எனக்கு உடம்பு சரியாகிடுச்சி. நான் நல்லா சாப்பிட்டு மாத்திரையும் போட்டுக்கிட்டேன்னா சித்தப்பாவை போல வலுவா இருப்பேன்.”
“ஆமா, சிங்க மகனே! இந்த மீட்பால்ஸ் இன்னும் உன்னை...
காலையில் எழுந்த ஆர்யன் ருஹானாவை சோபாவில் காணாமல் தேட, அவள் தோட்டத்தில் கடுங்குளிரில் சிரமப்பட்டு குழியை வெட்டிக் கொண்டிருந்தாள். அருகில் தோட்டக்காரன் நின்றும் அவன் உதவியை அவள் ஏற்கவில்லை.
வேகமாக கீழே சென்ற ஆர்யன் அவளிடமிருந்து கடப்பாரையை வாங்கி குழியை பெரிதாக்கி கொடுக்க, இருவரும் சேர்ந்து எலுமிச்சை செடியை நட்டனர். அதை அழுத்தி ஊனி பலப்படுத்தி...
“அக்கா! அவன் அழிச்சிட்டேன்னு சத்தியம் செய்தான், அக்கா!”
“அதை நீ நம்பிட்டே! முட்டாள்! அதை சரிபார்க்கல!” என்று அவளை கட்டிலில் தள்ளிவிட்ட கரீமா தலையில் அடித்துக் கொண்டாள்.
“இல்ல, இல்ல, இது உன் தப்பு இல்ல! உன்னை நம்பினேன் பார், என் தப்பு! உன்னால நம்ம கதையே முடிஞ்சி போச்சி.”
“அக்கா! நாம அவன் கேட்ட பணத்தை கொடுத்து....”
“இல்ல,...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 126
இவான் கனவுபயம் கொண்டு இருவரின் இடையே தூங்க, மூவரும் சேர்ந்து பாதுகாப்பாக தூங்கினாலும் ருஹானா கெட்டகனவு கண்டு திடுக்கிட்டு எழுந்துகொண்டாள். அவளுடைய வேகத்தில் தானும் எழுந்துகொண்ட ஆர்யன் அவளைப் பார்க்க, அவள் அசையாமல் தூங்கும் இவானை பார்த்து பயந்தாள்.
அவன் தலையை தடவி “இவான் செல்லம்!” என...
“நான் இவனோட கால்பந்து விளையாடுவேன். நாங்க மீன் பிடிக்க போவோம். பூக்கள் வளர்ப்போம்” என்று திரையில் அம்ஜத் சொல்ல, இங்கே “இன்ஷா அல்லாஹ்!” என்றாள் ருஹானா, கண்ணீரை துடைத்தபடி.
“கேட்டியா இவான்? இதெல்லாம் நீ பெரியவனா வளர்ந்ததும் என்கூட செய்யணும்” என அம்ஜத் சொல்ல, இவான் வேகமாக தலையசைக்க, ருஹானாவும் ஆர்யனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
இப்போது காட்சிகள்...
“நான் போக மாட்டேன். எப்பவும் விட இப்போ தான் நீங்க இவானுக்கு அதிக தேவை.” ருஹானா பிடிவாதம் பிடித்தாள்.
“எனக்கும் அவன் மட்டும் தான் தேவை. என் கையை விட்டு எல்லாம் நழுவி போகுது. எனக்கு என்ன செய்ய, எப்படி செய்யறதுன்னு தெரியல. என்னால முடியல!” ஆர்யன் தளர்ந்துவிட்டான்.
“உங்களுக்கு தெரியலங்கறதால இவானை விட்டுக் கொடுக்கப் போறீங்களா?...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 125
இவானின் பரிசோதனை முடிவுகளை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தத்தளிப்போடு வந்த ஆர்யன், அணைத்த இவானை விடாமல் வைத்துக்கொண்டான்.
“சித்தப்பா! என்னோட விமானத்தில இன்னும் ஸ்டிக்கர்ஸ் ஒட்டல. நாம இப்போ ஒட்டலாமா?” என இவான் கேட்க, அவனை விடுவித்த ஆர்யன், விமானத்தை நீட்டிய இவானின் கையை பார்த்தான். அங்கே தடிப்புகள் அதிகமாக...
மருத்துவர் வெளியே வரவும் இருவரும் அவரிடம் விரைந்தனர். “அவன் தானாவே கண்ணு முழிச்சிட்டான். சில பரிசோதனைகள் எடுக்கணும். முடிவு வந்ததும் தான் என்னன்னு சொல்ல முடியும். இப்போ சந்தேகமா தான் இருக்கு.”
“என்ன சந்தேகம் டாக்டர்? தெளிவா சொல்லுங்க.”
“பரிசோதனை முடிவுகள் வரட்டும், பார்த்துடலாம். டெஸ்ட் எடுத்ததும் நீங்க பையனை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்” என்று மருத்துவர்...
ருஹானாவை காரில் அமர வைத்து தண்ணீரை கொடுத்த ஆர்யன் “இதை குடி” என்றான். அவள் குடித்ததும் இரு மோதிர விரல்களிலும் இருந்த இரத்த காயத்தை அவன் கழுவ முற்பட, “இது ஒன்னும் முக்கியமில்ல” என்று அவள் கைகளை இழுத்துக் கொண்டாள்.
ஆத்திரமான ஆர்யன் “வேற எது தான் முக்கியம் உனக்கு? நான் வரலனா என்ன ஆகியிருக்கும்?...
“நாம ஏன் உங்க கல்யாண வீடியோவை இன்னும் பார்க்கல? எனக்கு பார்க்க ஆசையா இருக்கு. எப்போ கேட்டாலும் நீ அப்புறம்னு சொல்றே! இப்போ சேர்ந்து பார்க்கலாமா?”
“நிச்சயமா அம்ஜத் அண்ணா! அவர் வேலைல பிசியா இருந்தார். எங்களுக்கும் பார்க்க ஆசையா தான் இருக்கு” என்று ருஹானா சொல்ல, வேறுவழியின்றி ஆர்யனும் “ஆமா, நாம் ஹால்ல உட்கார்ந்து...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 124
காதலை பற்றி இளம்யுவதிகள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஆர்யன் உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் மரியாதையாக எழுந்த நஸ்ரியா “நான் போய் என் வேலையை செய்றேன்” என்று வெளியே சென்றுவிட்டாள்.
மிஷாலுடனான தன் காதலை பற்றித்தான் இதுவரை ருஹானா விவரித்துக்கொண்டிருந்தாள் என எண்ணிய ஆர்யன், சோபாவில் இருந்த...