Advertisement

                              அறிவன் தான் அறிந்த விஷயங்களை மொத்தமாக கூற, “அவனே அடிச்சு வச்சிருக்கான். இதுல லவ் எங்கேடா வந்தது.” என்று மீண்டும் அவள் முறைக்க 

                                “அதெல்லாம் இப்போ செட்டாகி படமே ஓடிட்டு இருக்கு… டெய்லி ரெக்கார்டிங் தியேட்டர்ல ஒரே ரொமான்ஸ் ஹிட்ஸ் தானாம்.. ஹீரோ இன்ட்ரோ எல்லாம் இனி மியூசிக் பண்ணமாட்டேன். ஒன்லி லவ் சாங்ஸ் தான் ன்னு சொல்லிட்டு இருக்கானாம்” என்று அறிவன் சிரிக்க, அவனை நம்பாமல் பார்த்தாள் ஸ்ரீகா.

                            இதற்குள் இருவரும் துருவனின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்திருக்க, காரை வாசலில் நிறுத்தினான் அவன். ஸ்ரீகா “இங்கே ஏன்டா கூட்டிட்டு வந்த.” என்று கேட்க 

                              “உன் சந்தேகத்தை தீர்த்திட்டு போவோம் வா.” என்று அவளை அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் அறிவன். 

                                வரவேற்பில் இருந்த ரஞ்சனி இவர்களை கண்டதும் சற்றே பரபரப்பாக, புதிதாக தெரிந்தாள் ஸ்ரீகாவுக்கு. ஏன் இத்தனை பதட்டம். விழிகளிலும் மெல்லிய தடுமாற்றம். என்று அவளை கணக்கிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் ஸ்ரீகா.

                               எப்போதும் நேராக உள்ளே செல்பவள் இன்று வேண்டுமென்றே வரவேற்பில் நின்று, “சார் இருக்காரா..” என்று அவளிடம் கேள்வி எழுப்ப 

                                “உள்ளே இருக்காங்க மேம்..” என்றாள் ரஞ்சனி.

                               “போகலாமா.. இல்ல, அனுமதி  எதுவும் வாங்கணுமா..” என்றவள் முகத்தை சற்றே இறுக்கமாக வைத்துக் கொண்டாள்.

                 

                                அதற்கே ரஞ்சனி “மேம்..” என்று எழுந்துவிட, “அட.. உட்காருங்க ரஞ்சனி.. “என்று அவள் தோளில் தட்டியவள்  “உங்க சார்கிட்ட பேசிட்டு வரேன்… ” என்று பீதியை கிளப்பிவிட்டே உள்ளே நுழைந்தாள். 

                               துருவன் அவன் அறையில் இருக்க, ஸ்ரீகா சென்று அவன் முன்னால் அமர்ந்தாள் சட்டமாக. துருவ் “ஹேய் என்ன திடிர்னு வந்தாச்சு. ஷூட் எல்லாம் முடிஞ்சதா..” என்று அவளை மட்டுமே பார்த்து பேச, எதுவும் கூறாமல் அவனை பார்த்திருந்தாள் ஸ்ரீகா.

                             அவளின் சோர்வை உணர்ந்தவன் அங்கிருந்த தொலைபேசியில் ஜூஸ் எடுத்து வருமாறு கூறி வைத்தான். அந்த அறையில் இருந்த அறிவினை இன்னமும் அவன் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், அவனும் அதற்கெல்லாம் அசராமல் சட்டமாக கால்மேல் காலிட்டு ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தான்.

                              ஜூஸ் வந்த பின்னும் அதைக் குடிக்காமல் ஸ்ரீகா, துருவனை பார்த்து வைக்க “என்ன ஸ்ரீ.. ஏதாவது கேட்கணுமா.. என்னடா..” என்று பாசமாக வினவ 

                               “நீ ஏதாவது சொல்லனுமா என்கிட்டே..” என்று அவனை ஆழம் பார்த்தாள் தங்கை.

                               “என்ன சொல்லணும்..” என்று துருவன் புரியாமல் பார்க்க 

                                “நீ சொல்லு.. என்ன சொல்லணும் என்கிட்டே.. என்றாள் மீண்டும்.

                       துருவன் அறிவனை அடித்ததைக் கேட்கிறாளோ என்று தான் நினைத்தான். “சகுனி போட்டுக் கொடுத்திட்டானா..” என்று அவனை திட்டிக் கொண்டே துருவன் ஸ்ரீகாவைப் பார்த்தான்.

                        “அவனை அடிச்சது தப்புதான் ஸ்ரீ. ஆனா, அவன் செஞ்சது தப்பு. அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா உனக்கு..” என்று அவன் தொடங்க

                        “அவனை அடிச்சது தப்பே இல்ல. வேணும்ன்னா இன்னும் ரெண்டு அடி சேர்த்து போடு… நான் கேட்கவே மாட்டேன். ” என்றாள் கடுப்பாக 

                        அறிவன் அதிர்ந்து அவளை பார்க்க, “என்னை தூக்கவா பிளான் போட்டுக் கொடுக்கிற..” என்று அங்கே கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அறிவன் மீது வீசினாள் ஸ்ரீ.

 

                         துருவன் ஸ்ரீகாவின் செயலில் சிரித்துக் கொண்டே அறிவனை முறைக்க, அதை தொடர விடாமல், “நீ சொல்லுடா..” என்று மீண்டும் அவனிடமே திரும்பினாள் ஸ்ரீ.

                        “என்னடி சொல்லணும்..புரியல ஸ்ரீ எனக்கு.” என்று அவன் பாவமாக விழித்தான்.

                      சரியாக அப்போது தான் ரஞ்சனி ஜூஸ் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைய, “அம்மா உன் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்திருக்காங்க தெரியுமா..” என்றாள் திடிரென்று.

                        ரஞ்சனி அவள் பேச்சில் துல்லியமாக அதிர்ந்து போக, பார்வை அனிச்சையாக ஸ்ரீகாவை ஏறிட்டது. ஸ்ரீகா அவளை கண்டு கொள்ளாமல் “பொண்ணு ரொம்ப அழகா இருக்கா துருவ். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அம்மாக்கும் ஓகே தான். நீ பார்த்துட்டு ஓகே வா சொல்லு..” என்று தன் அலைபேசியை துருவனிடம் காண்பிக்க, கையில் இருந்த பழச்சாறை ஸ்ரீகாவின் அருகில் வைத்துவிட்டு குனிந்த தலை நிமிராமல் வெளியேறி விட்டாள் ரஞ்சனி.

                        துருவனுக்கு ஸ்ரீகாவின் விளையாட்டு புரிய, “இதெல்லாம் அநியாயம் ஸ்ரீ.. எதுக்கு அவளை அழ வைக்கிற..” என்று அவள் மண்டையில் கொட்ட 

                       “நீ என்ன சொன்ன என்கிட்ட.. உனக்கு கல்யாணம் ன்னா அவ ஏன் அழணும்.” என்று அவள் அப்பாவியாக கேட்க 

                       “அதான் உனக்கே எல்லாம் தெரிஞ்சு இருக்கே. ஆனா, நான் சர்வாகிட்ட கூட சொல்லல இன்னும். நீ ஊர்லயே இல்ல, உனக்கெப்படி தெரியும்.” என்றவன் சந்தேகமாக அறிவனை பார்க்க

                      “அவன்தான் சொன்னான்.. கூடவே உன்னையும், ரஞ்சனியையும் கொஞ்சம் அழ விடவும் ஐடியா கொடுத்தான்..” என்று அப்பாவியாக ஸ்ரீகா கூறிவிட, துருவன் உக்கிரமாக அறிவினிடம் திரும்பினான்.

                     “அடிப்பாவி..  ராட்சசி.. நியாயமாடி இது..” என்று அவன் எழுந்து ஓட, அவனை விரட்டிக் கொண்டு ஓடினான் துருவன். வரவேற்பில் அருகில் சென்றிருந்த ரஞ்சனியிடம் “அண்ணி… அவ சும்மா விளையாட்டுக்கு சொன்னா.. அழாதீங்க..” என்று கத்திக் கொண்டே அறிவன் வெளியே ஓடிவிட, அவன் அழைப்பில் திகைத்து நின்றாள் ரஞ்சனி.

                          துருவன் பின்னால் வந்தவன் ரஞ்சனியின் அருகில் வரவும் நின்றுவிட, அழுத அவள் கண்கள் அப்படி ஒரு கோபத்தை கொடுத்தது அவனுக்கு. “அதென்ன எதுக்கெடுத்தாலும் அழறது.” என்று கடுப்பானவன் “இப்போ என்ன கல்யாணமா பண்ணிட்டேன்.. எதுக்குடி இப்படி அழுது வைக்கிற..” என்று அவளை அதட்டினான் துருவன்.

                         “கல்யாணம் வேற பண்ணுவிங்களா..” என்று அவள் சினுங்க, 

                        “இப்படி எல்லாம் கேட்டா, அவன் எங்கே பயப்படுவான்… கொஞ்சம் முறைப்பா, கண்ல நெருப்போட கேளும்மா..” என்று அவன் பின்னாலிருந்து குரல் கொடுத்தாள் ஸ்ரீகா..

                       ரஞ்சனி விழிக்க, “அச்சோ பாவம்.. பிள்ளை ரொம்ப அப்பாவியா இருக்கே.. உன் வரலாறு, புவியியல் தெரியாம உன்கிட்ட மாட்டிடுச்சு போல…” என்று பரிதாபப்பட்டவள் “நீ வா நான் உனக்கு கிளாஸ் எடுக்கிறேன்..” என்று  ரஞ்சனியின் கையை பிடித்து இழுக்க, அலறினான் துருவன்.

                       “தாயே… நீ ஒருத்தி போதும்..அடுத்து அவளை ட்ரெயின் பண்ண பார்க்காத…”என்று கையெடுத்து அவன் கும்பிட, சிரித்து விட்டாள் ரஞ்சனி.

                      “ஒய் என்ன.. அவன் என்னை ஓட்டினா நீ சிரிப்பியா.. நான் உனக்கு நாத்தனார் நியாபகம் இருக்கா.. “என்று லேசாக ஸ்ரீகா மிரட்ட, 

                        “நான் நல்லாவே பயப்படுவேன் அண்ணி..” என்று அப்பாவியாக சிரித்தாள் ரஞ்சனி…

                       “நீ பிழைத்து கொள்வ..” என்று சிரித்தவள் “அதென்ன.. உன்னை அடிச்சானாம்… அதெப்படி அடிக்கலாம்.. அதையெல்லாம் கேட்டு சரி பண்ணாமல் இவன் லவ்வை அக்செப்ட் பண்ணிட்டியா.. ” என்று லேசாக கொளுத்திப் போட்டாள் கூடவே.

                        துருவன் பயந்து ரஞ்சனியைப் பார்க்க, அவன் பயந்தது போலவே முறைத்து நின்றாள் அவள். “கேளும்மா.. கேளு.. எப்படி அடிக்கலாம்.. “என்று மேலும் அவள் ஏற்றிவிட, 

                      துருவன் அவள் தலையில் கொட்டியவன் “குரங்கே..ஓடி போடி..” என்று ஸ்ரீகாவை துரத்திவிட, சிரித்துக் கொண்டே வெளியே ஓடினாள் அவள்.

                      எதிரில் வருபவனை கவனிக்காமல் ஓடியவன் அவன் மீதே மோதி நிற்க, வந்திருந்தது சாட்சாத் ஜெயராம் கிருஷ்ணா தான். அவனை அங்கே எதிர்பார்க்காமல் அவள் சிலையாகி நிற்க, 

                      “அப்படி என்ன அவசரம் உனக்கு..” என்று லேசாக கடிந்து கொண்டான் ஜெய். “இருந்தாலும் வசதியா தான் இருக்கு.” என்றும் சேர்த்து சொல்ல, சட்டென அவனை விட்டு விலகி நின்றாள் ஸ்ரீகா.

                         கூடவே அவனை முறைத்து வைத்தவள் “நான் இங்கே இருக்கேன் ன்னு எப்படி தெரியும்.. “என்று கேள்வி கேட்க 

 

                          “என் மாப்பிளை எதுக்கு இருக்கான்..”என்று வெளியில் நின்ற அறிவனை பெருமையாக கைகாட்டினான் ஜெய். 

 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

Advertisement