என் இதய துடிப்பின் ஓசையானா(ளே)னே
அத்தியாயம்.22
சிறு வயதிலிருந்தே வெள்ளனவே எழுந்து வயலுக்குச் சென்று வயல் வேலையை பார்த்து பழகிய ராமகிருஷ்ணன் அந்த பழக்கத்தை இன்று வரை கைவிடவே இல்லை.
தன் தாத்தா சிறுவயதில் சொல்லிக் குடுத்த பாடம் எவ்வளவுதான் உயரத்திற்கு சென்றாலும் தனது நிலையை மறக்காமல் இருக்க வேண்டும். அன்று தாத்தா சொல்லிக் குடுத்ததை இன்று வரை கடைபிடிப்பதாலையே ராமகிருஷ்ணன் உயர்ந்து...
அத்தியாயம்.21
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துக் கொண்டிந்த ரகுநந்தனின் நினைவெல்லாம் தன் தந்தையிடம் தான் இருந்தது. கார் ஓட்டியவாறே அப்பாவின் போனுக்கு அழைத்துக்கொண்டே வந்தான். மற்றவர்களெல்லாம் இரு குடும்பமும் இணைந்த மகிழ்ச்சியில் வந்து கொண்டிருந்தனர்.
வீட்டு வாசலில் காரை கொண்டு வந்து நிறுத்தியவன் பொன்னுதாயிடம் "அப்பத்தா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா போயிட்டு வந்துடறேன்., நீங்க...
அத்தியாயம்.17
ராம் வண்டிக்கு கிளம்பிப்போய் இரண்டு மாதம் ஆகபோகிறது. இன்னும் வீட்டுக்கு வரவே இல்லை.
மகன் இத்தனை நாள் வாராமல் இருந்ததுமே பொன்னுதாயிக்கு புரிந்துவிட்டது. மகன் மருமகளுக்கிடையில் ஏதோ பிரச்சனை என்று. அது என்னவென்றுதான் தெரியாமல் குழம்பி நின்றார். மருமகளிடமும் எப்படி எப்படியோ கேட்டு விட்டார் ம்கூம்... வாயை திறந்தாளில்லை வெறித்த பார்வை மட்டுமே…
மகன் மருமகளின் மேல்...
அத்தியாயம்.4
ஷர்மியால் ரொம்ப நேரத்துக்கு கோபத்தை இழுத்து வைக்க முடியாது. அவன் தன்னுடைய குடும்பத்தை இழுத்து பேசியதும் கோபத்தில் அவளும் பதிலுக்கு பதில் பேசி விட்டாள். சிறிது நேரத்திலே கோபம் குறைந்ததும் எதுவுமே நடக்காததை போல அவனிடம் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டாள்.
"உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் மாமா… அத ஏன் மாமா நீ புரிஞ்சிக்க மாட்ற?"
அவளிடம்...
அத்தியாயம்.13
அப்பாவிடம் தலையாட்டிவிட்டு வீட்டின் கொல்லைப்புறம் ஓடிவந்தவள் அங்கிருந்த கல்லில் அமர்ந்து கால்களை குறுக்கி அதில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவள் எழுந்து வரவும் லஷ்மியும் அங்கிருந்து அவளின் பின்னால் வந்தவள் லலிதா அமர்ந்திருப்பதை பார்த்ததும் அருகில் வந்து அவளின் தலையை மெல்ல கோதிவிட்டாள்.
அதில் தலை நிமிர்ந்தவள் தன் எதிரில் நின்றிருந்த அண்ணியை பார்த்தாள்.
லலிதாவின் கண்கள் கலங்கிருப்பதை...
"ஏன்டி உனக்கெல்லாம் ரோசமே வராதா? நா இங்க என்ன பேசிட்டு இருக்கேன் நீ கறி போடுங்ற?"அவன் திட்டவும்,
"அது என்னதுக்கு மாமா., அத வச்சிட்டு ஒரு கிலோ கறிக்கூட வாங்க முடியாது., நீ கறிய போடு மாமா…"
அவளின் பதிலில் அங்கிருந்த மூவருமே சிரித்துவிட்டனர்.
"உன்னெல்லாம் திருத்தவே முடியாதுடி…"
"தேங்கி யூ மாமா…" என்றவள் அப்போது தான் ரகுவின் கையில்...
அத்தியாயம்.19
தன் தாயின் இறப்பு செய்தி கேட்டதுமே அவரின் இறப்புக்கு தான் மட்டுமே காரணம் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழ பதிந்து விட்டது. தான் ஒரு சிசுவை சுமந்துக்கொண்டிக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் பெற்றவளின் முகத்தை பார்க்க வயல் வரப்பில் கூட அத்தனை வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
அவள் பின்னால் வந்தவனுக்கோ லலிதாவின் வேகத்தை பார்த்து...
அவர் கூட வந்த அரவிந்த் தன் மாமியாரின் வேகத்தை பார்த்து வியந்தவாறே முகத்தில் உறைந்த புன்னகையுடன் அவரை முன்னால் விட்டு பின்னால் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
மகளை பார்த்ததும் பொன்னுதாயி பத்து வயது குறைந்ததை போல மகளுக்கு முன்னால் மகளின் அருகில் சென்று அவளின் கைகளை பிடித்துக் கொண்டு "வந்துட்டியா கண்ணு?., உன்ற அம்மாவ பாக்க...
அத்தியாயம்.1
நாமக்கல் டூ திருச்செங்கோடு இடையில் கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர் மாணிக்கம்பாளையம்.
அவ்வூரில் உள்ள வேம்பரசு(வேப்பமரம்,அரசமரம்) நிழலில் குடிகொண்டிருந்த பிள்ளையாருக்கு ஆறு வருடங்களாக வெள்ளிக்கிழமை தோறும் வேண்டுதல் நிறைவேறுவதற்காக நூற்றியெட்டு குடம் ஊற்றிக்கொண்டிருக்கிறாள் அலமேலு மங்கை என்கிற ஷர்மி. அலமேலுமங்கை அவளின் தாத்தா வைத்த பெயர். ஷர்மி வீட்டினர் அவளை அழைப்பதற்காக வைத்தப்பெயர்.
இன்று வெள்ளிக்கிழமை...
அத்தியாயம்.8
மருத்துவமனை வந்த மொத்த குடும்பமும் அங்கு கண்ட காட்சியின் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே ஒருசில நிமிடங்கள் பிடித்தது.
முதலில் அதிர்சியிருந்து மீண்டது ஷர்மி தான்.., பக்கத்தில் நின்றிருந்த தாத்தாவை பார்த்தவள், "இது உனக்கு முன்னமே தெரியுமா மூர்த்தி? அதனாலதான் உன்ற மருமகனை நா கோபமா திட்டும்போதெல்லாம் ஒருத்தர பத்தி முழுசா தெரிஞ்சிக்காம மத்தவங்க சொல்றத வச்சி அவங்க...
அத்தியாயம்.6
கொடைக்கானலின் குளுமையை அனுபவித்தவாறே இருள்பிரியும் காலை வேலையில் பால்கனியில் நின்றுகொண்டு தந்தையும் மகனும் காபி குடித்துக்கொண்டிருந்தனர்.
"அடுத்து என்ன ப்ளான் கண்ணா...?"
"ப்ளான் எதுவும் இல்லைப்பா. வீட்டுக்கு போலாம்ப்பா…"
"சரிகண்ணா போலாம்…"
"அப்பா உங்களுக்கு ஏங்கிட்ட எதுவும் கேக்கணும்னு தோனலையா?"
"அப்பாகிட்ட சொல்ற விஷயமா இருந்தா நீயே சொல்லிருப்ப கண்ணா…"
வெளியே வேடிக்கை பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தவன் தந்தையின் பதிலில் வியப்புடனே திரும்பி அவரை...
அத்தியாயம்.20
காலம் ஆருக்காகவும் காத்திருக்காமல் அதன் வேலையை செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தது.
ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் ராம் லலிதாவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வரவில்லை. கணவன் மனைவி இருவரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து தன் கூட இருப்பவர்களையும் கஷ்ட படுத்திக்கொண்டு எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமலே வாழ்கின்றனர்.
பொன்னுதாயி இப்போதெல்லாம் மகன் மருமகளை...
அத்தியாயம்.15
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் வரையிலுமே ஒத்த வார்த்தை பேசினாள் இல்லை.
வீட்டிற்கு வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு கைதாங்கலாக மனைவியை அணைத்து வந்தவனை கோபமும், ஆத்திரமும் விழிகளில் தேக்கி இருவரையும் முறைத்து கொண்டிருந்தான் கோதையின் கணவன் விஸ்வநாதன்., அவனுக்கு மட்டும் சக்தி இருந்தால் லலிதாவை எரித்திருப்பான் அந்த அளவிற்கு மனதிற்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
விஸ்வநாதன் அப்பவே...
அத்தியாயம்.5
வீட்டிற்கு வந்த ஷர்மி செருப்பை வாசலில் ஒழுங்காகக்கூட கழட்டிபோடாமல் மூலைக்கு ஒன்னு எறிந்துவிட்டு உள்ளே வந்தவள் பேக்கை கழட்டி கட்டிலில் போட்டவாறே மூஞ்சியை தூக்கிவைத்துக்கொண்டு அமர்ந்தவள் தன் அம்மாவிடம் "லச்சுமா சாப்ட எதாவதுக்குடு ரொம்ப பசிக்குது..." என்றாள்.
"முதல்ல போய் கைகால் கழுவிட்டு வாடி…"
"அதலாம் அப்பறம் பண்ணிக்குறேன் லச்சுமா... நீ சாப்ட எதாவது குடு பசில...
"அது எனக்கு தெரியாதுப்பா ஆனா, பேத்தி ஆசைபட்ட வாழ்க்கைய அமைச்சி குடுக்கனும்ங்றதுல தெளிவா இருக்கார். நா இந்த ஜென்மத்துல அந்த வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ங்றது பாவம் அவர்க்கு தெரியலைப்பா… பேத்திக்கு புடிச்ச வாழ்க்கைய அமைச்சிக்குடுக்க முடியலைனு அவரும், நீங்க அனுபவிச்ச வலிய அந்த குடும்பமும் அனுபவிப்பாங்கப்பா… கண்டிப்பா அனுபவிப்பாங்க…"
"கண்ணா என்ன பேசற...
அத்தியாயம்.11
மருத்துவமனை விட்டு பைக்கில் சென்ற ராமின் மனநிலை திக்குத் தெரியாத காட்டில் தொலைந்ததை போல் தான் இருந்தது. அடுத்து என்ன? என்கிறதை யோசிக்கக் கூட தோன்றாமல் எங்கு செல்கிறோம் என்ற நினைவே இல்லாமலும் சுயம் மறந்து பயணிக்க ஆரம்பித்தார்.
அவரையறியாமலே அவரின் பைக் வந்து நின்ற இடம் தோட்டத்தில் உள்ள அவர்களின் பழைய ஓட்டு வீடு.,...
அவளின் கையை பிடித்துக்கொண்டு ஊரின் மத்தியில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு வந்தவன் அவளின் கையை விட்டு விட்டு கருவறைக்குள் சென்றவன் மாரியம்மனை கும்பிட்டுவிட்டு அதன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து வந்து வெளியே நின்றிருந்தவளின் கழுத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னவளாக மாற்றிக்கொண்டான்.
தோட்டத்திலிருந்து அவளை இழுத்துக்கொண்டு வந்தவனை பார்த்தவர்கள் அவர்களின்...
லலிதாவை காயபடுத்தி வீட்டைவிட்டு போகவைக்க அவன் பேசியதெல்லாம் அவள் நம்பினால் தானே… அவளுக்குதான் தெரியுமே கணவன் தன்னை எப்படியெல்லாம் காதலித்தானென்று. விஸ்வநாதன் பேசும்போது அசையாமல் நின்று கொண்டிருப்பாள். அவள் முகத்தில் சிறு வலியாவது தெரிகிறதா என எதிர்பார்த்து ஏமாந்து போய் ஒவ்வொருமுறையும் தோத்துபோன முகத்துடன் ஊருக்கு செல்ல ஆரம்பித்தான். ஆனால், மனதில் அவளை வீட்டை...
வினோதினி, "என்ன ஷர்மி என்ன தெரியுமானு கேக்கற?" என்றாள்.
"அது வந்து வினோ.., சொன்னா நீ கோவப்பட கூடாது."
"அதலாம் கோவப்பட மாட்டேன் நீ சொல்லு ஷர்மி."
"உன்ற புருசன் நா எழாவது படிக்கும்போது என்றகிட்ட லவ் லெட்டர் குடுத்தான் வினோ., அததான் உன்றகிட்ட சொன்னானானு கேக்க வந்தேன் வினோ…" சிறு தீயை கொழுத்திப் போட்டு விட்டாள்.
அதை கேட்டதுமே...
அத்தியாயம். 28
அன்றைய விடியல் ராமிற்கு அழகாக விடிந்தது. இரவு முழுவதும் தூங்காமல் தன்னவளின் மதிமுகத்தை பார்த்தவாறு விழித்துக்கிடந்தவர் விடியற்காலை நான்கு மணி ஆகவும் எழ நினைத்தார்.
கணவனை நெருங்கி படுத்தவாறு அவனின் கையை தலையணையாக்கி அதில் தலை வைத்து, மற்றொரு கையை அவனின் மார்பிலே போட்டுக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் லலிதா.
உறங்கிக்கொண்டிருந்தவளை மெல்ல தூக்கம் கலையாமல் தன்...