Viral Theendidu Uyirae
பாட்டு சத்தத்தில் சந்நிதியும் எழுந்துகொள்ள வசீகரனின் தோளில் இருந்தே அவனை நிமிர்ந்து பார்த்தவள் பட்டென விலகி அமர்ந்தாள்.
சூர்யாவை பார்த்த முனீஸ்வரன் பாட்டை நிறுத்துமாறு கண்ணால் எரிக்க,
“ஆத்தி சனி பார்வை நம்ம மேல பட்டுடுச்சே? நண்பன் கோர்த்துவிட்டுட்டான்...” என்ற அலறலுடன்,
“இந்தா மாத்திட்டேன்...” என முனீஸ்வரனிடம் சொல்லி பார்வையால் கெஞ்சிக்கொண்டே ரிமோட்டில் அடுத்த பாட்டை போட அதுவும்...
தீண்டல் – 14(2)
“இதெல்லாம் தப்பு, அப்பா பாவம்...” அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த சந்நிதி அவனிடம் பேச்சை ஆரம்பிக்க திரும்பி பார்த்தவன்,
“ஓஹ், நீ இங்க தான் இருக்கியா? கவனிக்கலை...” என்றான் சாதாரணம் போல.
“பொய் சொல்றீங்க, நீங்க என்னை பார்த்துட்டே வந்ததை நானும் பார்த்தேன். ஏமாத்தாதீங்க...” சந்நிதி இறைஞ்சுதலாய் பேச,
“உன்னுடன் சேர்த்து என்னையே நான் ஏமாற்றிகொண்டிருக்கிறேன் பெண்ணே” என...
தந்தைக்கும் அவனுக்குமான ஒற்றுமைகள் அவளை கூறுபோட்டுக்கொண்டு இருந்தது. இன்னொரு பார்கவியாக தன்னால் வாழ முடியுமா? இல்லை அவனின் இந்த காதல் எத்தனை நாள்?
முனீஸ்வரனின் குணம் கொண்ட ஒருவன். ஆம் சந்நிதியின் மனம் முழுவதும் இந்த எண்ணம் தான் அவளை ஆட்டிப்படைத்தது.
அதனால் தான் அப்படியாப்பட்ட ஒருவனுடன் தன் வாழ்வு ஒத்துவராது, அது அவனுக்குமே சுகிக்காது என...
“என்னம்மா இந்த நேரம் வந்திருக்காங்க அப்பா? தறிக்கு போனா நேரா கடைக்கு தான போவாங்க?...” சந்நிதி மெதுவாய் கேட்க,
“சும்மா, கொஞ்சம் அலுப்பா இருக்குன்னு வந்தாங்களாம்...” சமாளிப்பாக சொல்ல,
“உங்ககிட்ட விளக்கமா சொல்லிட்டாங்களாக்கும்? நம்பிட்டேன்ம்மா...” என்று கேலி பேச,
“அப்படித்தான் இருக்கும். நான் சொல்றேன்ல...” என்று பார்கவியும் புன்னகைத்தார்.
மனதிற்குள் பார்க்கும் இடம் நல்ல இடமாக சந்நிதியை நல்லவிதமாக பார்த்துக்கொள்பவனாக...
“இன்னும் கொஞ்சம் கொண்டுவரட்டுமா அத்தான்?...” என்ற ராதாவிடம் மறுத்துவிட்டார்.
“சரி நான் கிளம்பறேன். இப்ப போனா தான் வேலையாகும்...” என்று எழுந்துகொள்ள,
“ஒருநிமிஷம் அத்தான்...” என உள்ளே ஓடிய ராதா பெரிய டிபன்கேரியரில் பார்கவிக்கு சாப்பாட்டை கட்டி தர அவரை முறைத்தார் முனீஸ்வரன்.
“அவங்க ஒத்தையில தானா சமைச்சு என்னத்தை சாப்பிட போறாங்க அத்தான். இது எல்லாமே நானும்...
தீண்டல் – 30 (1)
பார்கவி அம்பிகாவிடம் பேசிவிட்டு அழுதுகொண்டிருக்க புகழ் தான் அவரை சமாதானம் செய்து தண்ணீர் கொடுத்து அமரவைத்தான்.
“என்ன சித்தி இதெல்லாம்?...”
“என்னை என்ன செய்ய சொல்லற புகழ்? என் பொண்ணு இங்க எப்படி இருக்கா தெரியுமா? அவருக்கிட்ட கெஞ்சி கூட பார்த்துட்டேன். கேட்கவே இல்லை...”
“நிதியை கூட்டிட்டு போகலாம்ன்னா மாப்பிள்ளை வந்து கூப்பிடாம...
தீண்டல் – 7
“ம்மா கிளம்பியாச்சா? இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே கிளம்பிட்டு இருப்பீங்க?...” வசீ கீழே வந்து தாயின் அறை வாசலில் நின்று கத்தினான்.
“உங்கம்மா கிட்சன்ல இருக்கா. இங்க வந்து எதுக்கு சத்தம் போடற?...” சட்டையின் பட்டன்களை போட்டுக்கொண்டே குகன் வெளியே வர,
“இந்நேரம் கிட்சன்ல என்ன பன்றாங்க? சூர்யா வேற போன் மேல...
தீண்டல் – 26(1)
அந்த மயக்கமும் நெருக்கமும் அந்த சில நொடிகள் தான். கூச்சமாய் உணர்ந்தவள் அவனின் கைகளை விலக்க பார்க்க,
“ப்ச் நிதி...”
“விடுங்க நான் எழுந்துக்கனும்...” அவளின் பார்வையில் ஒரு அவஸ்தை தெரிய அவனின் கண்களில் குளுமை.
“ப்ச், இப்ப எதுக்கு என்னை டிஸ்டர்ப் பன்ற மாதிரி பார்க்கற?...”
“நானா? எப்போ?...” அவனிடமிருந்து எழுந்தே ஆகவேண்டும் என...
தீண்டல் – 16
“வாட்?...” சந்நிதி அவன் சொல்ல வருவது என்னவென புரியாமல் பார்க்க,
“இதுவரை உனக்கும் எனக்குமா இருந்த இந்த கண்ணாமூச்சி விளையாட்டு இன்னையோட முடிஞ்சதுன்னு சொல்றேன்...” என்ற வசீகரன் சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவன் அவளின் கையை பற்றி கூட்டிக்கொண்டு தனதறைக்குள் சென்றான்.
“கையை விடுங்க, விட போறீங்களா இல்லையா? என் பர்மிஷன் இல்லாம என்னை...
தீண்டல் – 27
அம்பிகா கோபமாக இருந்தார். அதை அறிந்தாலும் வசீகரன் வாய் திறக்கவில்லை. அவன் கிளம்புவதிலேயே குறியாய் இருக்க சந்நிதி அவனின் பின்னே ஓடிக்கொண்டே இருந்தாள்.
“இப்ப எதுக்கு அவன் கைக்குள்ளையும் கால்க்குள்ளையுமா சுத்திட்டு இருக்க? பேசாம உட்கார். உன் புருஷன் என்னவோ இப்பத்தான் இந்த வீட்டு வாசப்படியை தாண்டற மாதிரி இந்த பயம் பயப்படற?...”...
தீண்டல் – 11
புகழ் நீதிமாணிக்கத்துடன் அமர்ந்திருந்தது எத்தனை நேரமென்றே தெரியவில்லை. ஆனால் அவரிடம் அவனோ, அவனிடம் அவரோ எதுவும் பேசவில்லை.
வேறு ஒருவராக இருந்தால் எப்படியோ போ என்று வெறுத்து சென்றுவிடலாம். ஆனால் இத்தனை பேசியும் சந்நிதியின் தவிப்பு நீதிமாணிக்கத்தை கட்டிப்போட்டது.
பெற்றவர்கள் இருந்து எங்களை அநாதையாக விட்டுவிட்டீர்களே என்கிற அந்த வார்த்தை அவரை அங்கிருந்து செல்லவிடவில்லை....
தீண்டல் – 15
முனீஸ்வரன் எப்படி உள்ளே வந்தார்? அடுத்த நிகழ்வுகள் எப்படி நடந்தேறின? என்றெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அனைத்தும் சிறப்பாகவே நடந்தது.
“அப்பா முகமே சரியில்லையே...” என சந்தியா புகழிடம் கேட்க,
“என்னைக்கு தான் அவர் முகம் சரியா இருந்திருக்கு?...” என்றதும் அவளின் முறைப்பில்,
“சரி விடு, ஏதாவது டென்ஷன்ல இருப்பார். வசீகரன் வந்துட்டு போன டென்ஷனா...
தீண்டல் – 21
அந்த அறைக்குள் நுழைந்தவன் அவளிடம் குறைந்தபட்சம் முகத்திருப்புதலையோ அவளிடமிருந்து விலகலையோ தான் எதிர்பார்த்திருந்தான்.
இந்த அளவிற்கு கோபத்தில் சிவந்த முகத்துடன் தன்னை குற்றம் சாட்டும் பார்வையை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“நிதி...” தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் அழைக்க,
“நான் தான். சொல்லுங்க...” என்று அவனை நன்றாக பார்த்து நின்றாள்.
“பார்ரா என்கிட்டையேவா?” என்னும் பார்வையை கொடுத்தவன்,
“உனக்கு...
தீண்டல் – 25
அம்பிகாவிடம் சொல்லிகொண்டு மாடிக்கு வந்தவன் படுக்கையில் ஒருபக்கமாய் படுத்திருந்தவளை கண்டவனின் முகம் மென்மையுற்றது.
“வந்ததுல இருந்து கொஞ்சம் கூட ஒரு டீப் ஸ்லீப் இல்லை...” என சொல்லிக்கொண்டவன் புடவையில் உடலை குறுக்கி கையை கட்டி அவள் படுத்திருக்க அருகில் போய் எழுப்பினான்.
“நிதி...” என்று இரண்டு தடவைக்கு மேல் அழைத்தபின்னர் தான் மெதுவாய் அசைந்தாள்...
தீண்டல் – 28
“இங்க பாருங்கண்ணே இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். நீங்களே கேட்டு சொல்லுங்க. அதுக்காக தான் நான் இங்க வந்தேன்...”
முனீஸ்வரன் வசீகரனை முறைத்துக்கொண்டு பேசிய தொனியில் இருந்தே அனைவருக்குள்ளும் சர்வமும் நடுங்கியது. வெகு நாட்களுக்கு பின்னர் அவரின் பழைய கடுமையை மீட்டிருந்தார்.
அவரின் முகபாவனையே இன்று பெரும் பிரளயம் நடக்கப்போவதின் அறிகுறியை உணர்த்த...
தீண்டல் – 12
ஆகிற்று ஒரு மாதம். நாட்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை. ஆனால் நடந்தவை அனைத்தும் நன்மையாகவே நடந்தது என்று தான் பார்கவி நினைத்துகொண்டார்.
இத்தனை வேதனைகளையும், வலியையும் கொடுத்தது, தன்னுடைய இழப்பு எல்லாம் இந்த சொந்தங்கள் இணைவதற்காகவே என்று அதையும் ஏற்றுகொண்டார் அவர்.
இந்தமட்டிலும் முனீஸ்வரன் மனம் மாறியதே என்ற ஆனந்த கண்ணீர் அவ்வப்போது...
தீண்டல் – 20
இன்னமும் புகழ் சொல்லியதை வசீகரனால் நம்பமுடியவில்லை. எப்படி அதற்குள் சம்மதித்தார் என்று ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும் ஒரு நிம்மதி எழுந்தது அவனுள்.
புகழ் அதற்கு மேலும் தாமதிக்காமல் நீதிமாணிக்கத்தை வைத்தே அனைத்தையும் நடத்தினான். முனீஸ்வரனுக்கு நேரடியாக மீண்டும் குகன், அம்பிகாவிடம் சென்று பேச தயக்கமாக இருக்க அவரின் அண்ணனின் பொறுப்பில் விட்டுவிட்டார்.
தரகரை வைத்தே...
தீண்டல் – 14(1)
ரவி வந்து வசீகரனை அவனின் இல்லத்தில் விட்டுவிட்டு மறுநாள் காலை வந்து அழைத்துக்கொள்வதாக சொல்லி நான்கு திட்டுக்களையும் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
வசீகரன் வந்ததுமே அவனை உடை மாற்ற கூட விடாமல் உண்டுவிட்டு செல்லும்படி சொல்லி இரவு உணவை எடுத்துவைத்த அம்பிகா வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்க குகன் மகனை பார்ப்பதும் மனைவியை...
தீண்டல் – 17
“வசீ?...” என்று குகன் வரும் வரை வசீகரன் அந்த அறையிலேயே தான் அமர்ந்திருந்தான். சந்நிதி கிளம்பும் பொழுது கூட எழுந்து செல்லாமல் அங்கிருந்தே அவள் செல்வதை கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.
அவளிடம் பேசி முடித்ததும் தன் மனதினை சொல்லிவிட்ட நிம்மதியை விட இனி அவள் என்ன செய்துவைக்க போகிறாளோ என்கிற படபடப்பு...
தீண்டல் – 13
நாகர்கோவில் சிறைச்சாலை
“ஸார் ஸார் இனிமே இந்த தப்பை பண்ணமாட்டேன் ஸார். சத்தியமா பண்ணமாட்டேன். விட்டுடுங்க. ஐயோ..... வலிக்குதே,,, ஸார் ஸார்..” என அவன் அலற அலற கொஞ்சமும் இரக்கமின்றி அவனை நீண்ட மர கம்பால் வெளுத்துக்கொண்டிருந்தான் விஷ்வேஷ்வரன்.
“வலி வலி உனக்கு மட்டும் தானாடா வலி? தேர்ட் ரேட் நாயே, செஞ்சுட்டு வந்தது...