Viral Theendidu Uyirae
தீண்டல் – 32
“வசீகரனின் சந்நிதி, இந்த வார்த்தை இது குடுக்கற அர்த்தம் எனக்கு எப்படி ஒரு உணர்வை தரும்னு நான் யாருக்கும் சொல்லி புரியவைக்க முடியாது. அது என்னால மட்டுமே புரியக்கூடிய அனுபவிக்க கூடிய ஒன்னு. ஆனா வெறும் வார்த்தையில் மட்டும் இது இருக்குதோன்னு தோணுது...”
சந்நிதியின் குழப்பமான மனநிலை இன்னும் தெளியாமல் இருக்க அவளின்...
ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. தனியே இருக்க இருக்க இதன் நினைவுகள் அதிகமாக கனம் தாளமாட்டாது இறங்கி கீழே வந்து தோட்டத்தில் நின்றுகொண்டாள். தூறல் ஓய்ந்து மெல்லிய காற்று வீசிக்கொண்டிருக்க அந்த குளுமையை ரசித்து அனுபவித்தபடி நின்றிருக்க சத்தமில்லாமல் அவளின் பின்னால் வந்து நின்றான் வசீகரன்.
கேட்டிற்கு வெளியேயே பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வர முல்லைக்கொடி...
தீண்டல் – 30 (1)
“மத்தபடி உங்க சம்பாத்தியத்துக்காக இல்லை. ஏன் தினக்கூலி வாங்கற ஆளுங்க வீட்டுல இருக்கற சந்தோஷமும், நிம்மதியும், சிரிப்பும் இந்த வீட்டுல இருக்க சொல்லுங்க? அதிகமா பேசிட கூடாது, சத்தமா சிரிச்சுட்ட கூடாது. எங்கயும் யாரையும் பார்த்திட கூடாது. எல்லாத்துக்கும் அடக்குமுறை. அதை நாங்களே எங்க மேல உள்ள அக்கறைன்னு சாயம்...
தீண்டல் – 30 (1)
பார்கவி அம்பிகாவிடம் பேசிவிட்டு அழுதுகொண்டிருக்க புகழ் தான் அவரை சமாதானம் செய்து தண்ணீர் கொடுத்து அமரவைத்தான்.
“என்ன சித்தி இதெல்லாம்?...”
“என்னை என்ன செய்ய சொல்லற புகழ்? என் பொண்ணு இங்க எப்படி இருக்கா தெரியுமா? அவருக்கிட்ட கெஞ்சி கூட பார்த்துட்டேன். கேட்கவே இல்லை...”
“நிதியை கூட்டிட்டு போகலாம்ன்னா மாப்பிள்ளை வந்து கூப்பிடாம...
“இப்போதைக்கு எதுவும் முடிவு பண்ணலை. கொஞ்சம் டைம் குடுங்க...” என்றவன் சிறிது நேரம் அவர்களுடனே இருந்துவிட்டு தன் அலுவலகம் வந்தவன் பிற்பகல் தாண்டியிருக்க புகழுக்கு அழைத்தான்.
“வசீ...” தயக்கமாய் வருத்தத்துடன் வந்தது அவனின் குரல்.
“உன் சித்தப்பா என்ன சொன்னார் என் அப்பாக்கிட்ட? ஒரு வார்த்தை குறையாம எனக்கு தெரியனும்...” அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கேட்க வேறு...
“அப்ப நேரா அங்க தான வந்திருக்கனும்? ஏன் இங்க வந்தாராம்?...”
“அதான் நீங்களே சொன்னீங்களே, ஆடி அழைப்புக்கு சேர்ந்து வந்த தான் மதிப்புன்னு. சேர்ந்து போக நான் ப்ளான் பண்ணியிருந்தா உங்க பொண்ணு வாயே திறக்காம என்னை விட்டுட்டு வந்துட்டா. நான் மட்டும் தனியா வந்தா அது எனக்கும் மதிப்பில்லையே. எனக்கும் கோபம் வரும் தானே?...”
அவனின்...
தீண்டல் – 28
“இங்க பாருங்கண்ணே இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். நீங்களே கேட்டு சொல்லுங்க. அதுக்காக தான் நான் இங்க வந்தேன்...”
முனீஸ்வரன் வசீகரனை முறைத்துக்கொண்டு பேசிய தொனியில் இருந்தே அனைவருக்குள்ளும் சர்வமும் நடுங்கியது. வெகு நாட்களுக்கு பின்னர் அவரின் பழைய கடுமையை மீட்டிருந்தார்.
அவரின் முகபாவனையே இன்று பெரும் பிரளயம் நடக்கப்போவதின் அறிகுறியை உணர்த்த...
தீண்டல் – 27
அம்பிகா கோபமாக இருந்தார். அதை அறிந்தாலும் வசீகரன் வாய் திறக்கவில்லை. அவன் கிளம்புவதிலேயே குறியாய் இருக்க சந்நிதி அவனின் பின்னே ஓடிக்கொண்டே இருந்தாள்.
“இப்ப எதுக்கு அவன் கைக்குள்ளையும் கால்க்குள்ளையுமா சுத்திட்டு இருக்க? பேசாம உட்கார். உன் புருஷன் என்னவோ இப்பத்தான் இந்த வீட்டு வாசப்படியை தாண்டற மாதிரி இந்த பயம் பயப்படற?...”...
“நீ இப்படி சொல்லுவன்னு தான் அம்பிகாம்மா குடுத்துவிட்டுட்டாங்க. இரு எடுத்துட்டு வரேன்...” என்றவன் கேரியரை கொண்டுவந்து டேபிளில் வைக்க,
“அனுவையும் கூப்பிடு, சேர்ந்து சாப்பிடுவோம்...”
“அவ ஒரு போன் கால்ல இருக்கா...”
“ஹ்ம்ம்...” என சொல்லிவிட்டு எழுந்து சென்று கையை கழுவிக்கொண்டு வர அவனுக்கும் எடுத்துவைத்து தனக்கும் வைத்துகொண்ட சூர்யா,
“என்னடா நிதிட்ட பேசினியா?...” என்று ஆரம்பிக்க,
“இல்லையே...” சாப்பிட்டுக்கொண்டே அவனும்...
தீண்டல் – 26(2)
“மகாபிரபு, இங்கயே வந்துட்டீங்களா? செல்லம்மே...” என அவரின் தோளை பற்ற முனீஸ்வரனுக்கு பேரதிர்ச்சியாக போனது. மருமகன்கள் முன்னாள் குடித்துவிட்டு இவன் என்ன செய்கிறான் என்கிற அதிர்ச்சியும், ஒரு வெளிய மருமக்க பிள்ளைகளும் இந்த பழக்கத்தை வைத்திருக்கின்றனரோ என்கிற கவலையும் அவரை அப்படியே நிற்க வைக்க,
“டார்லிங் சனீஸ்,
உன் கண்ணுல இருக்கு பனீஸ்,
அதை என்...
தீண்டல் – 26(1)
அந்த மயக்கமும் நெருக்கமும் அந்த சில நொடிகள் தான். கூச்சமாய் உணர்ந்தவள் அவனின் கைகளை விலக்க பார்க்க,
“ப்ச் நிதி...”
“விடுங்க நான் எழுந்துக்கனும்...” அவளின் பார்வையில் ஒரு அவஸ்தை தெரிய அவனின் கண்களில் குளுமை.
“ப்ச், இப்ப எதுக்கு என்னை டிஸ்டர்ப் பன்ற மாதிரி பார்க்கற?...”
“நானா? எப்போ?...” அவனிடமிருந்து எழுந்தே ஆகவேண்டும் என...
தீண்டல் – 25
அம்பிகாவிடம் சொல்லிகொண்டு மாடிக்கு வந்தவன் படுக்கையில் ஒருபக்கமாய் படுத்திருந்தவளை கண்டவனின் முகம் மென்மையுற்றது.
“வந்ததுல இருந்து கொஞ்சம் கூட ஒரு டீப் ஸ்லீப் இல்லை...” என சொல்லிக்கொண்டவன் புடவையில் உடலை குறுக்கி கையை கட்டி அவள் படுத்திருக்க அருகில் போய் எழுப்பினான்.
“நிதி...” என்று இரண்டு தடவைக்கு மேல் அழைத்தபின்னர் தான் மெதுவாய் அசைந்தாள்...
தந்தைக்கும் அவனுக்குமான ஒற்றுமைகள் அவளை கூறுபோட்டுக்கொண்டு இருந்தது. இன்னொரு பார்கவியாக தன்னால் வாழ முடியுமா? இல்லை அவனின் இந்த காதல் எத்தனை நாள்?
முனீஸ்வரனின் குணம் கொண்ட ஒருவன். ஆம் சந்நிதியின் மனம் முழுவதும் இந்த எண்ணம் தான் அவளை ஆட்டிப்படைத்தது.
அதனால் தான் அப்படியாப்பட்ட ஒருவனுடன் தன் வாழ்வு ஒத்துவராது, அது அவனுக்குமே சுகிக்காது என...
தீண்டல் – 24
சண்டைக்கு வரிந்துகட்டி நிற்பதை போல தஸ்ஸு புஸ்ஸுவென மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு சந்நிதி நின்ற விதம் கவலையாகவும் சிரிப்பாகவும் இருந்தது. பதில் சொல்ல முடியாமல் அசதியாக இருக்க அவள் பேசிய தோரணை கடுப்பையும் உண்டாக்க,
“நைட் ஆனா உன்னை எந்த பேய் பிடிச்சு ஆட்டுதுன்னே தெரியலை நிதி. பகல்ல நல்ல இருக்க. நைட் ஆக...
தீண்டல் – 23
ரிசப்ஷன் எதிர்பார்த்ததை விட வெகு சிறப்பாகவே நடந்து முடிந்தது. இரவு உறங்குவதற்கு வசீகரன் சந்நிதியை தவிர அவளின் குடும்பத்தினர் அனைவரும் ராதாவின் வீட்டிற்கு சென்றுவிட சந்தியா, விஷ்வாவை மட்டும் கிட்டத்தட்ட மிரட்டி தன்னுடன் தன் வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டான் வசீகரன்.
மற்றவர்கள் படுக்க சென்றுவிட சந்நிதியுடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன் அவளின் முகத்தை...
தீண்டல் – 23
மறுநாள் காலை உணவிற்கு அனைவரும் வந்து அமரும் வரை சந்நிதி வசீகரனை பார்க்கவே இல்லை.
காலை இவள் எழும்பொழுது அமர்ந்திருந்தவன் மொபைலில் கவனமாக இருக்க சந்நிதி எழுந்து குளித்துவிட்டு வெளியேறிவிட்டாள். மீண்டும் அவனை இப்பொழுதுதான் காண்கிறாள்.
புதுமணமக்களை சேர்ந்து அமரசெய்து உண்ண வைக்க தன்னருகில் அமர்ந்திருந்தாலும் விஷ்வேஸ்வரனிடமும் புகழ், புவனிடமும் கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தான்.
தூரத்தில் அமர்ந்து...
பாட்டு சத்தத்தில் சந்நிதியும் எழுந்துகொள்ள வசீகரனின் தோளில் இருந்தே அவனை நிமிர்ந்து பார்த்தவள் பட்டென விலகி அமர்ந்தாள்.
சூர்யாவை பார்த்த முனீஸ்வரன் பாட்டை நிறுத்துமாறு கண்ணால் எரிக்க,
“ஆத்தி சனி பார்வை நம்ம மேல பட்டுடுச்சே? நண்பன் கோர்த்துவிட்டுட்டான்...” என்ற அலறலுடன்,
“இந்தா மாத்திட்டேன்...” என முனீஸ்வரனிடம் சொல்லி பார்வையால் கெஞ்சிக்கொண்டே ரிமோட்டில் அடுத்த பாட்டை போட அதுவும்...
தீண்டல் – 21
அந்த அறைக்குள் நுழைந்தவன் அவளிடம் குறைந்தபட்சம் முகத்திருப்புதலையோ அவளிடமிருந்து விலகலையோ தான் எதிர்பார்த்திருந்தான்.
இந்த அளவிற்கு கோபத்தில் சிவந்த முகத்துடன் தன்னை குற்றம் சாட்டும் பார்வையை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“நிதி...” தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் அழைக்க,
“நான் தான். சொல்லுங்க...” என்று அவனை நன்றாக பார்த்து நின்றாள்.
“பார்ரா என்கிட்டையேவா?” என்னும் பார்வையை கொடுத்தவன்,
“உனக்கு...
வந்திருந்தவர்கள் அனைவருக்கும் இரவு உணவும் கோவிலிலேயே மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிளம்பும் வரை சந்நிதி வசீகரனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அலங்கரிக்கப்பட்ட பொம்மையென வந்து சபையில் நின்றவள் அவர்கள் சொல்லியதை செய்து சென்றாள்.
புகழ் கூட வசீகரனிடம் தனியாக பேசுகிறாயா என்றதற்கு மறுத்துவிட்டான் வசீகரன். ஆனால் அவனின் பார்வை மட்டும் மௌனமாக அவளை தொட்டுக்கொண்டே இருந்தது.
“ரொம்பத்தான் பீல் பன்றடா...
தீண்டல் – 20
இன்னமும் புகழ் சொல்லியதை வசீகரனால் நம்பமுடியவில்லை. எப்படி அதற்குள் சம்மதித்தார் என்று ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும் ஒரு நிம்மதி எழுந்தது அவனுள்.
புகழ் அதற்கு மேலும் தாமதிக்காமல் நீதிமாணிக்கத்தை வைத்தே அனைத்தையும் நடத்தினான். முனீஸ்வரனுக்கு நேரடியாக மீண்டும் குகன், அம்பிகாவிடம் சென்று பேச தயக்கமாக இருக்க அவரின் அண்ணனின் பொறுப்பில் விட்டுவிட்டார்.
தரகரை வைத்தே...