Sunday, May 19, 2024

    Thavani Kudai Pidippaayaa

    குடை 19: மித்ரன் ‘அண்ணன்’ என்று தெரிந்ததில் இருந்து, விகாசிடம் ஒரு ஒதுக்கம் காணப்பட்டது. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் உடனே அவனால் ஒன்ற முடியவில்லை. மறுநாள் காலை, அந்த வீட்டின் முன்பு, நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஜீவ மித்ரன். அப்போது அங்கு வந்த சந்தனம் தாத்தாவிற்கு அவனை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. ஆனால் பார்த்த முகமாக...
      குடை 18: “தாத்தாவை  இன்னமும் காணலை..?” என்றான் விகாஸ். “எஸ்டேட்லயே தங்கிட்டாரு போல..! காலையில வந்திடுவார். நீ போய் ரெஸ்ட் எடு. மித்ரா நீயும் போய் ரெஸ்ட் எடுப்பா..!” என்றார் சிவகாமி. “ஓகே பாட்டி..!” என்றபடி மித்ரன் எழுந்து செல்ல, அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமி. “ஏம்மா, மித்ரனை அப்படிப் பார்க்குறிங்க..?” என்று ரேகா, புரியாமல் கேட்க, “என்னால இன்னமும்...
    குடை 17: “என்னாச்சு ரேகா..? ஏன் தனியா வந்து உட்கார்ந்திருக்க..?” என்றார் சிவகாமி. “இத்தனை வருஷம் கழிச்சு, இவனுக்கு எங்க இருந்து வந்தது பாசம்..? இத்தனை நாள் நாம எங்க இருக்கோம்.. இருக்கோமா, இல்லையா? அப்படின்னு எதையும் கண்டுக்காம, இப்ப ஏன் திடீர்ன்னு வந்திருக்கான்..?” என்றார் ரேகா. “நீ யாரை சொல்ற..?” என்றார். “நடிக்காதிங்கம்மா..! நான் மித்ரனை தான் சொல்றேன்னு,...
      குடை 16: அங்கே மும்பையில், தன்னுடைய வீட்டில் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தார் ராணியம்மாள். அவரின் முன் நேசன் அமைதியாக அமர்த்திருந்தார். “இவனை இத்தனை வருஷம், பாராட்டி,சீராட்டி வளர்த்து என்ன பிரையோஜனம். இன்னைக்கு அந்த கழுதையைத் தேடி போய்ட்டான். நான் பார்த்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்? கல்யாணம் பண்ணி அவகூட ஒழுங்கா இருப்பான்னு நினைச்சேன். ஆனா அந்த ஆசையிலையும்...
    “என்ன ரேகா..? நீயும் இப்படி பிடிவாதமா பேசிகிட்டு..! நான் தான் பிஸ்னஸ்ல நம்பர் ஒன். நீ வேலைக்கு போகணும்ன்னு என்ன அவசியம். ராணி மாதிரி வீட்ல இரு..!” என்றார் காதலுடன். “எனக்கு சுயத்தோட இருக்கனும்ன்னு தான் ஆசை..” என்றார் ரேகா. “அப்போ, உனக்கு குடும்பம் முக்கியம் இல்லை, உன் பிள்ளைங்க முக்கியம் இல்லை..!” என்றார் ராணி. “எல்லாமே முக்கியம்...
    அவனின் சொல்லில் பெற்ற தாயின் மனம் கலங்க, அதை வெளிப்படுத்தத் தெரியாது தவித்தார் ரேகா. அதற்கு காரணம் உண்டு. அவர் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தினால் மித்ரனுக்கு கோபம் வரும். அதனால் அமைதியாக இருந்தார். “பிள்ளைன்னு தெரிஞ்சும் உங்களுக்கு இன்னமும் தயக்கம் போகலை இல்லையா..?” என்றான். “அம்மான்னு தெரிஞ்சும், உனக்கு என்னை அம்மான்னு கூப்பிட மனசு வரலை இல்லையா..?”...
    குடை 15: இயற்கை அன்னை, செழிப்பையும்,அழகையும் அள்ளிக் கொடுத்திருந்தாள் அந்த இடத்திற்கு. மலைகளின் ராணியாய் திகழ்கின்ற ஊட்டியில், அந்த இடத்திற்கு ராணியாய் இருந்தது அந்த அழகிய வீடு. செல்வமும், செல்வாக்கியமும் கொட்டிய வீடு அல்ல. அன்பும், பாசமும் முழுமையாக நிறைந்த வீடு. அந்த வீட்டில் இருந்த மனிதர்களுக்கு அன்பு ஒன்று மட்டுமே பிரதானம். அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதைப்...
      குடை 14: சுபஷ்வினியின் வார்த்தைகள் மழைச்சாரலாய் மித்ரனின் மனதை நனைத்திருந்தது.இப்படி ஆகும் என்று தெரிந்தே தான், அவன் அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருந்தான். “நீங்க இதுக்கு  முன்னாடி ஊட்டி வந்திருக்கிங்களா மித்ரன் சார்..?” என்றான் விகாஸ். அவனின் கேள்வியில் நினைவிற்கு வந்தவன், “தெரியலை..! பட் சின்ன பிள்ளையில் வந்த மாதிரி ஒரு நியாபகம்.!” என்றான் மித்ரன். “என்ன சார் இப்படி சொல்றிங்க..?...
    “நிஜமாவா..? அஸ்வினி ஒரு தடவை கூட சொல்லலையே..?” என்றான் ஆச்சர்யமாய். “நீங்களும் கேட்கலையே..?” என்றாள் தேஜு. “என்ன புத்திசாலித் தனமா பேசுறதா நினைப்பா உனக்கு..?” என்று மித்ரன் கேட்க, சுபஷ்வினியோ நடக்கும் சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாமல் அவளுடைய உலகத்தில் இருந்தாள். “அப்போ, நேத்து நான் பார்த்து பேசுனது...?” என்று மித்ரன் கேள்வி கேட்க, “இதோ இவகிட்ட தான். இவ எனக்கு...
    குடை 13: மறுநாள் கோயம்புத்தூர் வரை பிளைட்டில் சென்று, அங்கிருந்து காரில் செல்வதாக முடிவு செய்திருந்தனர். முடிவு செய்து அதை செயல்படுத்தி, இப்போது கோயம்புத்தூரில் இருந்தனர். சுபஷ்வினி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, தேஜஸ்வினி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கை தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள், “என்ன..?” என்றாள். “ஒண்ணுமில்லை..!” என்ற தேஜு, மனதிற்குள்..., “ரெண்டு பெரும் ஒன்னாதான் பிறந்தோம்.பார்க்க ஒரே மாதிரி...
    குடை 12: அன்று மாலை சுபஷ்வினி வீட்டிற்குள் நுழையும் போதே, ஒரு ஆண் குரல் கேட்டது. “யாரு வந்திருப்பா..?” என்று யோசித்தபடி உள்ளே சென்றாள் அஸ்வினி. “வா அஸ்வினி..!” என்றார் வசந்தா. அங்கே வரவேற்பறையில் விகாஸ் அமர்ந்திருக்க, அவனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. அவனோ அவளைப் பார்த்ததும் என்ன பேசுவதென்று புரியாமல் முழித்தான். “யார் இது..?” என்றாள் பார்வையால் வசந்தாவிடம். “இவனை யாருன்னு...
    “நான் சொன்னேனா..? நான் எங்க இவன் கூட பேசினேன்..!” என்று அவள் யோசிக்க, “ஹேய் என்ன..? இப்படி பார்த்துட்டே இருக்கே..! ட்ரெயின்லயும் இப்படி தான் பார்த்த. நேத்து எத்தனை மணிக்கு வீட்டுக்கு போன..? சாரி நான் அப்படி சடனா போனது உனக்கு ஷாக்கிங்கா தான் இருந்திருக்கும். பட் என்னோட சிச்சுவேஷன் அப்படி..!” என்று அவன் பேசிக்...
      குடை 11: தேஜஸ்வினி தன் அம்மாவிடம்  கேட்ட கேள்வியைத்தான், சுபஷ்வினியும் மனதில் நினைத்துக் கொண்டு சென்றாள். “எனக்கு மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் எங்கே சென்றது..? நான் ஏன் இப்படி மாறிப்போனேன்..?” என்ற பல கேள்விகள் அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது. காரை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு மனதில் இந்த சிந்தனைகள் எல்லாம் தோன்ற, குணம் மாறி வந்த...
      குடை 10: “இது தான் பொண்ணோட போட்டோ..! பொண்ணு பேரு லக்சனா. ரொம்ப அழகா இருக்கா, நல்ல படிப்பு, நல்ல குடும்பம் இப்படி எல்லாமே பொருத்தமா இருக்கு..!” என்று மித்ரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராணியம்மாள். அவளின் புகைப்படத்தை பார்த்த மித்ரனுக்கு பெரிதாக ஒன்றும் தோன்றாவிட்டாலும், பிடிக்காத மாதிரியும் தோன்றவில்லை. ஆனால் அவனின் கொள்கையில் அவன் உறுதியாக இருந்தான்....
    குடை 9: “நாம இப்ப எங்க போறோம்..?” என்றாள் அஸ்வினி. “எங்க போகலாம்..?” என்று யோசித்த சங்கி.. “பர்ஸ்ட் மால் போகலாம், அப்பறம் அப்படியே ஏதாவது லோக்கல் ஷாப்பிங் போகலாம், அப்பறம் லாஸ்ட்டா பீச் போறோம்..! ஓகேவா..?” என்றாள் சங்கி. “ம்ம் ஓகே தான்..! இருந்தாலும் எனக்கு பிடிக்கலை..” என்றாள் அஸ்வினி. “அடிப்பாவி சென்னைல அப்படி ஊர் சுத்துன..? இங்க பிடிக்கலைன்னு...

    வெளியே சங்கி களைப்பாக நிற்கவும், “எரும.. எங்கடி போன..?” என்று மீண்டும் ஆரம்பித்தாள். “கொஞ்சம் நிறுத்து வினி..! நானே டயர்டா வந்திருக்கேன்..! ஊரா இது..? பாஷையும் புரியலை ஒன்னும் புரியலை. நாம அப்பவே ஒழுங்கா ஹிந்தி கிளாஸ கட்டடிக்காம இருந்திருந்தா இப்ப இந்த தொல்லை இல்லை. ஒரு வழியா ஷாப்பிங் முடுச்சுட்டேன்..!” என்றாள். “எரும உன்னோட நம்பருக்கு போன்...
    குடை 8: “இதுக்கு முன்னாடி என்னை எங்கையாவது பார்த்திருக்கியா..?” என்றான் அஸ்வினியைப் பார்த்து. “என்ன சார் விளையாடுறிங்களா..? இவ்வளவு நேரம் ட்ராவல் பண்ணியே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சது நீங்க யாருன்னு..! அது கூட நீங்களா சொல்லலை.அப்பறம் எப்படி உங்களைப் பார்த்திருப்பேன்..?” என்றாள். “கரெக்ட்டு தான் இல்ல..!” என்றவன் யோசிக்க, “ஆனா உங்களைப் பார்க்கனும்ன்னு எங்க ஆபீஸ்லையே நிறையே...
      குடை 7: தொழில் உலகில் ஜேஎம் கம்பெனியின் ஷேர்ஸ் பற்றிய பேச்சு தான் தீவிரமாய் அலசி ஆராயப்பட்டுக் கொண்டிருந்தது.அது நாளிதழ், நேரடி செய்தி, இணையம் என அனைத்திலும் சில நிமிடங்களில் பரவியிருந்தது. “இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜேஎம் குழுமத்தின் வாரீசு ஜீவ மித்ரன் மாயாமாகி உள்ளார்..” என்று பல செய்தி சேனல்கள் செய்தி பரப்பியது. இணையத்தின் உதவியால்,...
    குடை 6: அஸ்வினியும், விகாசும் பேசிக்கொண்டே வர, மித்ரன் தனிமையாய் உணர்ந்தான். அவன் தேடி வந்த தனிமைதான். ஆனால் இப்போது வேப்பங்காயாய் கசந்தது. அவ்வளவு திடமானவன், பாட்டியின் மீது வைத்த பாசத்தின் பயனாக பைத்தியமாக திரிகின்றான். அதை அவன் உணர்ந்து கொண்ட தருணம் தான் மிகவும் கொடுமையானது. அவனின் நினைவுகளில்... அவன் அலுவலகத்தில் புயலென நுழைந்தாள் ஜெனிபர். அவன் ஒரு...

    Thavani Kudai Pidippaayaa 5

    குடை 5: இருக்கையில் வந்து அமர்ந்த அஸ்வினிக்கு மனதில் ஏனோ நியாபகச் சுவடுகள்.மித்ரனின் காதல் தோல்வியைப் போல அவளுக்கும் ஒரு தோல்வி இருந்தது. எதிலிருந்து தப்பிக்க இவ்வளவு தூரம் ஓடிக் கொண்டிருக்கிறாளோ....அதற்கான காரணம். மனதில் ஏறிய சுமைகளின் நினைவுகளில் அவள் மூழ்கியிருக்க, வேறு எந்த சிந்தனையும் தோன்றவில்லை அவளுக்கு. அவளின் நினைவில்.... சென்னையில் பிரபல மாலில்....அன்று வெளியான ஒரு படத்தைப்...
    error: Content is protected !!