Advertisement

“நிஜமாவா..? அஸ்வினி ஒரு தடவை கூட சொல்லலையே..? என்றான் ஆச்சர்யமாய்.
“நீங்களும் கேட்கலையே..? என்றாள் தேஜு.
“என்ன புத்திசாலித் தனமா பேசுறதா நினைப்பா உனக்கு..? என்று மித்ரன் கேட்க, சுபஷ்வினியோ நடக்கும் சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாமல் அவளுடைய உலகத்தில் இருந்தாள்.
“அப்போ, நேத்து நான் பார்த்து பேசுனது…? என்று மித்ரன் கேள்வி கேட்க,
“இதோ இவகிட்ட தான். இவ எனக்கு அக்கா, அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி பிறந்ததுனால..! என்றாள் தேஜு.
“எனக்கும் லேசா ஒரு டவுட். என்னடா நம்ம வழிய போய் பேசுறோம், ஆனா அமைதியா இருக்காளேன்னு..இப்போ கிளியர் ஆகிடுச்சு.. என்றான் மித்ரன்.
“ஹாய் சுபஷ்வினி..! ஐயாம் ஜீவ மித்ரன்…! என்று அவளை நோக்கி கையை நீட்ட, அவனின் கையையும், முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் சுபஷ்வினி.
“சுபா, கையை குடு. பாவம் அவரு எவ்வளவு நேரம் தான் திரும்பி கையை நீட்டிட்டே இருப்பாரு. இந்த இடஞ்சல்லையும் சார்க்கு கையைக் குடுத்தே ஆகணும்… என்று தேஜு கிண்டல் அடிக்க,
“ஹா..ஹாய்..! என்றபடி அவளும் கையை நீட்டினாள். அவனின் வலிய கரங்களுக்குள், சுபஷ்வினியின் மெல்லிய கைகள் சிக்கிக் கொள்ள, அந்த தீண்டல், அந்த கை குலுக்கல் அவளுக்குள் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியது.
“சுபஷ்வினி..! அவன் கல்யாணம் ஆனவன்..! என்று மனசாட்சி, மறந்திருந்த விஷயத்தை  நியாபகப் படுத்த, பட்டென்று கையை உருவிக் கொண்டாள் சுபஷ்வினி.
“என்னாச்சு..? என்றான் மித்ரன்.
“ஒ..ஒண்ணுமில்லை..! என்றாள் லேசாக பிசிர் தட்ட.
“உனக்கு இப்படி ஒரு அமைதியான சிஸ்டரா..? என்று தேஜுவைப் பார்த்து மித்ரன் சிரிக்க,
“சார் வேண்டாம். நான் பேசாம இருக்கேன். மறுபடியும் என்னை வம்புக்கு இழுக்காதிங்க..? என்றாள்.
“ஆமா..! எப்படி உங்கம்மா உங்களை விட்டாங்க..! அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு சொன்னியே..? என்றான்.
“எங்க சார்..! விகாஸ் வீட்டுக்கு வந்தப்ப, அவங்கம்மா தான் எங்கம்மா கிட்ட பர்மிசன் வாங்குனாங்க. எங்கம்மாவும் ரெண்டு நாள்ல கிளம்பி வருவாங்க..! நாங்க கொஞ்சம் முன்னாடியே போறோம். ஆண்ட்டியை சின்ன வயசுல பார்த்தது. இன்னைக்கு பார்க்க போறோம்..! என்றாள் தேஜு.
“எப்படியோ பிரண்ட்ஸ் எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டிங்க..! என்றான்.
“ஆமா சார்..! என்றவள்,
“உங்க பிரச்சனை என்னாச்சு சார்..? என்றாள்.
“எனக்கு என்ன பிரச்சனை..? அதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை.. என்றான் சர்வ சாதரணமாக.
“என்ன சார்..? டைவேர்ஸ் பண்றது உங்களுக்கு சாதரணமா..? என்றாள் வியப்பாய் தேஜு.
“யா..! என்னோட நியாயம் எனக்கு. தென் அது என்னோட பெர்சனல் என்றான் கொஞ்சம் கோபமாய்.
“என்னாச்சு..? யாருக்கு டைவேர்ஸ்..? என்றாள் சுபஷ்வினி புரியாமல்.
“சார்க்கு தான்.ஆல்ரெடி டைவேர்ஸ் பண்ணிட்டார். பட் இன்னமும் ஏதோ பிராப்ளம் போல, அதான் இப்படி ஒளிஞ்சு ஒளிஞ்சு வரார்..! என்றாள் தேஜு.
“ஷட்அப் அஸ்வினி..! திஸ் ஸ் த லிமிட். விகாஸ் ட்ராப் த கார்..! என்றான் கோபமாய்.
“அவ ஏதோ தெரியாம பேசிட்டா சார்..! அவளுக்காக நான் சாரி கேட்டுக்கறேன்..! என்ற விகாஸ் தேஜுவை முறைக்க,
“சாரி மித்ரன் சார்..! நீங்க தான் ட்ரெயின்ல சொன்னிங்க..! அதான் கேட்டேன்..! என்றாள்.
இருந்தும் அவன் பதில் பேசவில்லை. அவள் மீது கோபம் என்றாலும், அவள் சொன்னது என்னவோ உண்மைதானே. அவன் ஒளிந்து தானே வருகிறான்.
அதுவும் ஒரு பெண்ணிற்கு பயந்து, ஒளிந்து வருகிறான். அவளின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு வருகிறான். கண்களை மூடி அவன் சிந்தனையில் ஆழ்ந்திருக்க,
அவனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்ற அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் சுபஷ்வினி. கொஞ்சம் கூட அவளின் மனம் சுயநலமாக யோசிக்கவில்லை. அவனுக்காகத் தவித்தாள். அவனின் கஷ்ட்டங்களுக்காகத் தவித்தாள்.
சிறிது நேரத்திற்கு பின்,
“சாரி தேஜஸ்வினி..! என்றான் மித்ரன்.
அவனை ஆச்சர்யமாய் பார்த்தவள்,எதுக்கு சார்..? என்றாள்.
“நீ சொன்னது உண்மை தான். ஒளிஞ்சு தான் வரேன். என்றான் வேதனையுடன்.
“சார், நான் ஏதோ விளையாட்டா சொல்லிட்டேன். நீங்க அதுக்காக வருத்தப்டுற மாதிரி இருக்கு. அதை மறந்திடுங்க சார்..! என்றாள் தேஜுவும்.
ஏனோ தேஜுவும், அவனும் அப்படி எதார்த்தமாக பேசிக் கொண்டு வருவதைப் பார்த்த சுபஷ்வினிக்கு கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது. அவன் அறியாமல் அவனைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.
“ஊட்டில நீங்க எங்க போகணும் சார்..? என்றான் விகாஸ்.
அவனைப் பார்த்து சிரித்த மித்ரன்.. உங்க வீட்டுக்கு தான்..! என்றான்.
“நிஜமாவா சார் சொல்றிங்க..? நீங்க எங்க வீட்டுக்கு வரிங்களா…? என்னால நம்பவே முடியலை சார்..! என்றான் விகாஸ்.
“ஏன்..? என்றான் மித்ரன்.
“சார்..! நீங்க எவ்வளவு பெரிய ஆள். நீங்க எங்க வீட்டுக்கு வருவிங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை..! என்றான் விகாஸ்.
“எவ்வளவு பெரிய ஆள்..? என்றாள் சுபஷ்வினி புரியாமல்.
“உனக்கு தெரியாது சுபா..! சார் மும்பைல பெரிய பணக்காரர்..! என்றார் தேஜஸ்வினி சிரிப்புடன்.
“பணக்காரரா…? என்றாள் புரியாமல்.
“நீயெல்லாம் மும்பைல இருந்து என்னத்த சாதிச்ச..? என்று தேஜு விளையாட்டாய் கேட்க, நொடியில் சுபஷ்வினியின் முகம் சுருங்கியது.
அதைக் கவனித்த தேஜு…சாரி சுபா..! இன்னைக்கு எனக்கு வாய் சரியில்லை. சாரி, சாரி.. என்றாள்.
“ஹோ..! அப்ப சுபஷ்வினியும் மும்பை வந்திருக்காங்களா..? என்றான் மித்ரன் வியப்பாய்.
“ஆமா சார்.! அவளும் அங்க ஒரு வருஷம் வேலை பார்த்தா..! என்றாள்.
“எந்த கம்பெனி..? என்றான்.
“உங்க வொய்ப் கம்பெனி தான் சார்..! என்றாள் சுபஷ்வினி.
“என்னோட வொய்ப்..? என்று யோசிக்க,
“உங்க எக்ஸ் வொய்ப் லக்சனா சார்..! என்று தேஜு எடுத்துக் கொடுத்தாள்.
“அவங்க என்னோட வொய்ப்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்..? என்றான் மித்ரன் புரியாமல்.
“மாட்டிக்கிட்டியே பரட்டை.. என்று தனக்குள் நொந்து கொண்டவள்,
“அது, வந்து உங்க மேரேஜ்க்கு வந்திருந்தோம் சார்..! என்றாள் அமைதியாய்.
“ஹோ..ஓகே என்றவனின் முகம் யோசனையில் ஆழ்ந்தது.அதே நேரத்தில் தேஜஸ்வினியும் யோசனையில் ஆழ்ந்தாள்.
“நேத்து கூட நீ இதை என்கிட்டே சொல்லலையே..? என்ற தேஜு அவளை சந்தேகமாய் பார்க்க,
“இ..இல்ல..பார்த்து ரொம்ப நாள் ஆச்சா…! அதான் சடனா நியாபகம் வரலை..! என்றாள் திக்கித் திணறி.
“இப்ப மட்டும் பத்து மீட்டருக்கு முன்னாடியே சொன்னியே, நிக்குறது இவர் தான்னு..! என்று தேஜு விடாமல் குடைந்தாள்.
“யப்பா சாமி..! தெரியாம சொல்லிட்டேன்..! ஆளை விடுங்க.. என்று சுபா கும்பிடு போட, அப்போதைக்கு விட்டு விட்டாள் தேஜு. ஆனால் அவளின் சந்தேக வட்டத்திற்குள் வந்து விட்டிருந்தாள் சுபஷ்வினி.
“என்ன பண்ணிட்டு இருக்க சுபஷ்வினி? எதுக்காக இவனோட விஷயத்துல மட்டும் கண்ட்ரோல் இலக்குற. நீயா வாயைக் குடுத்து வேற மாட்டிக்கிற..? தேஜுக்கு ஏற்கனவே டவுட் இருக்கு. நீயே எல்லாத்தையும் கிளியர் பண்ணிக் குடுத்திடாத.. என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டாள்.
விகாஸ் காரை ஓட்டிக் கொண்டிருக்க, அவனையே பார்த்துக் கொண்டு வந்தான் ஜீவ மித்ரன். ஏனோ மனதிற்குள் ஒரு தயக்கம். இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு வந்தவனால் இப்போது பேசமுடியவில்லை.
என்னாச்சு மித்ரன் சார்..? விகாஸையே பார்த்துட்டு வரீங்க..? என்று தேஜு கேட்க, அவளை முறைத்தவன்….
“நீ எதுக்கு என்னையவே பார்த்துட்டு வர..? என்றான்.
“இது கூட தெரியலையா சார்..! அவ உங்களை சைட் அடிச்சுட்டே வரா..! என்றான் விகாஸ்.
“நிஜமாவ அஸ்வினி..? என்றான் மித்ரன்.
“ஹெலோ சார்..! ஓவரா கற்பனை பண்ணாதிங்க. ட்ரெயின்ல உங்களை சைட் அடிச்சேன் தான். உங்களுக்கு மேரேஜ் ஆகி டிவேர்ஸ் ஆகிடுச்சுன்னு தெரியாத வரைக்கும்..! என்றாள் அசால்ட்டாய்.
“சோ வாட்..? என்றான் மித்ரன்.
“சோ..வாட்டா..? என்ன சார்..? நான் பிரஷ் பீசை தான் மேரேஜ் பண்ணுவேன்… என்றாள் சிலுப்பிக் கொண்டு.
அந்த வார்த்தையில் மித்ரனின் முகம் லேசாய் சுருங்கியது. அதை தேஜு கவனிக்கவில்லை. ஆனால் சுபா கவனித்து விட்டாள்.
“தேஜு..! கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு வா..! அவங்க அவங்களுக்கான வாழ்க்கை எப்பவும் அவங்களுக்காக இருக்கும்..! என்றாள்.
அவளின் வார்த்தையில் அவளை ஆச்சர்யமாய் திரும்பிப் பார்த்தான் மித்ரன். ஆனால் சுபாவோ, சொன்னதோடு கடமை முடிந்ததென, வெளியில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.
தேஜுவும் கூட அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகிக் கொண்டிருந்தது.

Advertisement