Thaalathil Seraatha Thani Paadal
ஓம் நமச்சிவாய
தாளம் 7
இரவு ஜெய் மாடிக்கு வந்தாலும் அவனுக்குள் நிலையில்லாத தன்மை தான். அவன் வெளியில் வந்ததே மற்றொன்றை தேடி. வீட்டில் அவன் குடிப்பது இல்லை. மற்றவர்களுக்கு தன் பலவீனத்தை அவன் எப்போதும் காட்டுவது இல்லை.
இதுவரை அவன் தனிமைக்கு துணை மது தான். அடிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் அது இல்லாமல் இத்தனை நாள்...
ஓம் நமச்சிவாய
தாளம் 11
ஜெய் சொன்ன “பயம்” இருவருக்கும் ஆச்சர்யம் தான். “என்னாடா பயமா… உனக்கா!!??” அமீர் கேட்க.
“ஏன்டா… எனக்கு பயம் இருக்க கூடாதா?? அப்பாவோட கட்டாயத்துல தான் இந்த கல்யாணம் அவ எப்படி இருப்பான்னு கூட தெரியாது?? தாலிகட்டின பின்னாடி தான் முகத்தையே பாத்தேன். பதினாறு, பதினேழு வயசு தான் இருக்கும். புடவை கூட ...
ஓம் நமச்சிவாய
தாளம் 3
கார்களில் இருந்து நாராயணன், அவர் மனைவி, மகன் சிவா வர, அடுத்த காரில் சாந்தி, அவர் கணவர், மகள் வித்யா மூன்றாவதாக வள்ளி மகள் மற்றும் மகனுடன் வந்தனர்.
சாந்தியையும் வள்ளியையும் ஒரே குடும்பத்தில் தான் திருமணம் செய்து தந்து இருந்தனர் ஆனாலும்…. ஒன்றாக வருவது இல்லை தனி தனி கார்தான்.
இந்த படையெடுப்பு...
ஓம் நமச்சிவாய
தாளம் 9
சாந்தியும் வள்ளியும் முன்னால் வாசலில் நின்று இருந்த இருவரையும் பார்த்தவர்கள் “என்ன நம்ம வீட்டுக்கு வராம இங்க இருக்குற??” என்றார் சாந்தி ஜெய்யை பார்த்து.
“அவன் தான் பொண்ணுக்கு அண்ணன் அப்ப இங்க தான இருக்கனும் சாந்தி” நல்லசிவம் சொல்ல “என்ன சித்தப்பா??” என்றார் சாந்தி அன்னத்தை பார்த்த படி.
“சாந்தி முகூர்த்த நேரம்...
ஓம் நமச்சிவாய
தாளம் 14
அன்னத்தை ஜெய் வீட்டுக்கு போக சொன்னதும், அன்னம் அவனை தான் பார்த்தாள் “என்ன... என்னை போக சொல்வாயா நீ…??” என. ஜெய் அவளை பார்த்தால் தானே அவளின் பார்வையின் அர்த்தம் புரிய.
கவி அன்னத்தின் முகம் பார்க்க “இல்ல, நான் அப்பா கூட இருக்குறேன் நீங்க போங்க” என்றாள் வீம்பான குரலில்.
அன்னத்தின் குரல்...
ஓம் நமச்சிவாய
தாளம் 4
மணி பத்து என்று கடிகாரம் சத்தம் போட, அன்னம் வாசலுக்கு வந்தாள். ஜெய் இன்னும் வரவில்லை. வாசலுக்கும் கூடத்திற்கும் நடந்த படி இருந்தவள் கால் வலி எடுக்க வாசல் படியில் அமர்ந்தாள்.
ஜெய்யை பற்றி எந்த முடிவுக்கும் வர முடியவில்லை அவளால். ஆரம்பித்தால் தானே முடிவு தெரிய… இங்கு ஆரம்பமும் இல்லை முடிவும்...
“நான் என்ன செஞ்சேன் என்னைய முறைக்குற…??” என்றாள் அன்னம் சிரித்தபடி.
“அடுத்தவங்களுக்காக நான் புடவை கட்ட முடியாது… அங்க வர்றவங்க பசங்க நான் இருப்பேன், பாப்பேன்னு வேஷ்டியா கட்டிக்கிட்டு வர போறான்?? இல்லதான… அப்பறம் நான் மட்டும் எதுக்கு அடுத்தவங்களுக்காக புடவை கட்டனும்?? நான் இந்த சேலை எல்லாம் கட்ட மாட்டேன் போங்க…” என்றவள் மைக்...
ஓம் நமச்சிவாயா
தாளம் 15
அன்னம் அவர்களின் அறையின் உள்ளே வர குளியல் அறையில் சத்தம் கேட்டது. கட்டிலில் இருந்த போர்வையை மாற்றியவள் அவன் தூங்க ஏசியை அதிகபடுத்தினாள். ஜெய் குளியல் முடித்து வந்தவன் அப்போது தான் அறையினை பார்த்தான். அவனுக்காவே தயர் செய்ய பட்டது போல் இருந்தது அந்த அறை.
எதுவும் பேசாமல் படுத்து கொண்டவனை பார்த்த...
அன்னம் வர, முகதிருப்பலுடன் காரை எடுத்தவன் கடைக்கு போகும் வரையில் எதுவும் பேசவில்லை. அவனின் அமைதியே அவனின் கோபத்தின் அளவை சொல்ல ‘மக்கு சும்மா இருந்தவரை கோப படுத்தி பாக்குறதே உனக்கு வேலையா போச்சு. நேத்து ஆரம்பிச்சது இன்னிக்கு முடிஞ்சதுன்னு பார்த்தா திரும்பி ஆரம்பிச்சு வைச்சுட்ட’ அன்னம் ஜெய்யை பார்க்க கடு கடுவென்று இருந்தது...
அதுவரை அடக்கி வைத்திருந்த அன்னதின் கண்ணீர் அவனை பார்த்தும் உடைபெடுக்க “கவி!!” என்றவள் அவன் மீது விழுந்து குழுங்க அவனுக்கும் புரியவில்லை என்னவென்று.
கவி அப்போது தான் வந்தான் அன்னத்தையும் ஜெய்யையும் பார்க்க. வீட்டினுள் சத்தம் கேட்க உள்ளே போவதா… வேண்டாமா என்று நின்று இருக்க… சில நிமிடங்களில் வெளியில் அன்னம் வர இருவருக்கும் முகம்...
ஓம் நமச்சிவாய
தாளம் 1
மும்பை நகரம், டீஜெயின் இசை கலப்பில் அரங்கம் அதிர ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் ஆடிய படி இருக்க, அந்த பார்ட்டி கலைகட்டி கொண்டு இருந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய சினிமாவின் முக்கிய நபர்கள் நட்சத்திரங்கள் என அனைவரும் இருந்தனர்.
அனைவரும் வந்த வேலையை பார்த்துகொண்டு இருக்க, அந்த பார்ட்டி ஹாலின் ஓர்...
ஓம் நமச்சிவாய
தாளம் 8
ஜெய் ஆயின்மென்டை தடவ அவள் புடவையை விலக்க “ஐயோ…!!” என்று கத்திவிட்டால் அன்னம்.
“ஏய்… எதுக்கு கத்துற??”
அவன் கை மீது கை வைத்தவள் “புடவை…” என்று இழுக்க, “ஆமா, புடவை தான். அதுக்கு என்ன?? புடவை மேலயா போட முடியும்” என்றவன் கை மீண்டும் புடவையை தூக்க “நானே போட்டுக்குறேன் நீங்க குடுங்க”...
ஓம் நமச்சிவாயா
தாளம் 6
அமர்ந்து இருந்தவர்கள் அவனை பார்த்தும் எழுந்து “எப்படி இருக்கீங்க மப்பிள்ளை??” என்றிட “நீங்க யாரு??” என்றான் ஜெய்.
அவன் கேட்டதும் தேவகிக்கும் ஈஸ்வரனுக்கும் முகம் சுருங்கி விட்டது.
அன்னம் வந்தவள் “இது எங்க அப்பா… இது அம்மா” என்றிட அதிர்ந்து விட்டான் ஜெய்.
‘டேய் சொந்த மாமனார் மாமியார தெரியலை!! நீ எல்லாம் நல்லா வருவடா…’...
அன்னம் அவன் முகம் பார்த்து நிற்க “அக்கா… அது தான் மாமா சொல்லுறார்ல நீங்க கிளம்புங்க” என்றாள் அன்பு
ஜெய் மணிக்கு ஃபோன் செய்தவன் “மணிண்ணா நீங்க வாங்க” என்று அழைத்தான். மணி வர கார் சாவியை வாங்கியவன் “நீங்க இங்க இருங்க ஏதாவது வேணுன்னா ஃபோன் செய்ங்க” என்றவன் அவர் சாப்பிட பணம் தர...
ஓம் நமச்சிவாயா
தாளம் 5
கோவிலில் அர்ச்சனை தட்டு வாங்க போக, அன்னத்துடன் வந்த ஜெய்யை தான் பார்த்திருந்தார் கடைகாரர்
இங்கு தான் இவர்களின் திருமணம் நடந்தது. கோவிலுக்கு இதுவரை அவள் யாருடனும் வந்தது இல்லை. இங்கு தான் அர்ச்சனை பொருட்கள் வாங்குவாள் என்பதால் கடைகாரர் பழக்கம் தான்.
“யாரும்மா இது… உன் வீட்டுகாரரா?? நல்லா ராசாவாட்டம் தான் இருக்காரு”...
வீராசாமி கையில் பேப்பருடன் ஹாலில் அமர்ந்து இருக்க சத்தியன் தான் வந்தான் பெட்டியுடன். “என்ன சத்தியா கிளம்பிட்டியா… என்று கேட்க “ம்ம் கிளம்பிட்டோன் பா… நீங்க நாளைக்கு மறு நாள் வாங்க… இப்ப இருந்து அங்க வந்து என்ன செய்ய??” என்னும் போதே தன் ஜாக்கிங்கை முடித்து வந்தான் ஜெய்…
“என்னடா இந்த நேரத்தில கிளம்பி...
அவர் வீராசாமி.. மனைவி மங்களம்… தம்பி நாராயணசாமி, தங்கைகள் சாந்தி, வள்ளி என்று பெரியது தான் அவர்களின் குடும்பம். தம்பி தங்கைகளுக்கு திருமணம் செய்து பக்கதிலேயே வைத்துக்கொண்டார் வீராசாமி.
அதனால் மாதத்தின் பாதி நாட்கள் இவர்கள் வீட்டில் தான் அவர்களின் வாசம். வீராசாமிக்கு இருமகன்கள் ஜெய்தேவ், சத்தியன். மகள் ரூபிணி.
அன்னம் கிட்சனுக்குள் போக “என்னம்மா இன்னிக்கும்...
ஓம் நமச்சிவாய
தாளம் 12
விருந்துக்கான ஏற்பாடு ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க ஜெய்யை அழைத்து வர சத்தியன் ஏர்போர்ட் சென்று இருந்தான்.
வீராசாமியும் சொன்னார் தான் “அவனே வந்துடுவான்டா… நீ இரு… ராகவ் வர்றப்ப நீ இருக்கனும்” என்று.
“இல்லப்பா ராகவ் வர நேரம் இருக்கு. அதுக்குள்ள ஜெய்யை அழைச்சுகிட்டு வந்துடுறேன்” என்றவன் சென்றுவிட்டான்.
உள்ளே இருந்து கேட்டுக்கொண்டு...
மங்களம் “ஜெய்” என்று அழைக்க ஜெய் அவனைவரையும் பார்த்தவன் “இது வரை எங்க வாழ்க்கைய விமர்சனம் செஞ்சது போதும். அதனால தான் நான் அங்க எதுவும் பேசல.. நான் பேசி இருந்தா அது அவங்களுக்கு இன்னும் பேச வாய்ப்பா தான் இருந்து இருக்கும். அதுவும் இல்லாம நாம போனது விசேசத்துக்கு சண்டை போட இல்ல”...
மங்களத்திற்கு இந்த ஊர் அத்தனை பிடித்தம் இல்லை. இருந்தாலும் அன்னதிற்காக ஜெய் சொல்லுவதை எல்லாம் கேட்டு அமைதியாக இருந்தார். இந்த ஆறு மாத காலமாக அவனின் அலம்பல் சொல்ல முடியாது. அன்னத்தை சாப்பிட வைத்தே அவளுக்கு உணவின் மீதான ஆசையே வெறுத்து போனது.
“டேய் இப்படியா அவளுக்கு சாப்பிட கொடுப்ப… ஜீரணம் ஆகாதுடா...அவளுக்கும் அது நல்லதில்ல..”...