Natchathira Vizhigalil Vanavil
நட்சத்திர விழிகள் – 15
குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த நந்தினியை பார்த்தவன் போதும் அவளை குழப்பியது என்று நினைத்தான்.
“என்னோட நான்கு வயதில் தான் கௌரியை என் அம்மா கர்ப்பமா இருந்தாங்க. அப்போ இருந்தே அவளை நல்லா பார்த்துக்கணும். பிறக்கப்போற பாப்பாதான் நம்ம வீட்டோட இளவரசி அப்டின்னு சொல்லி சொல்லியே என் மனசுல பதியவச்சுட்டாங்க...”
“அப்போவே 5...
NVV 14(2)
“ஒவ்வொரு நொடியும் என் மனசுக்குள்ளயே அணுஅணுவா சித்ரவதை அனுபவிச்சேன். நீயும் சரி எங்கப்பாவும் சரி என்னை பத்தி கொஞ்சமாவது யோசிச்சீங்களா? இல்லையே. என்னோட விருப்பம் இல்லாமலே, நான் சுயநினைவிலேயே இல்லாதப்போ என்னை உன் மனைவியாக்கின....”
“கல்யாணம் எப்டி வேணும்னானும் நடந்திருக்கட்டும். ஆனா கட்டின பொண்டாட்டியை கடைசி வரைக்கும் காப்பாத்தனும்னு தோணலையே உனக்கு. உடனே எங்கப்பா...
நட்சத்திர விழிகள் – 14
மாலை தன் இல்லத்திற்கு சாகவாசமாக வந்த பிரசாத் தனத்தின் மூலமாக பெரிய களேபரத்தை எதிர்பார்க்க அவரோ அவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தார்.
“என்னம்மா உங்க பிள்ளையும் அவன் பொண்டாட்டியும் நல்லா கொட்டிக்கிட்டு கிளம்பிட்டாங்களா?...” என்று நக்கலாக கேட்டவனை பதில் எதுவும் பேசாது கொலைவெறியோடு பார்த்தார் தனம். அவரது பார்வையின்...
நட்சத்திர விழிகள் – 13
உதயா வந்த கோலத்தை பார்த்த நாச்சியும், பாக்கியமும் பதறிவிட்டனர். வேணிக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறே அவர்களை பின் தொடர்ந்து மாடிக்கு சென்றார்.
மேலே தன் அறைக்கு சென்று படுக்கையில் நந்தினியை கிடத்தியவன் பெருமாளுக்கு வழிவிட்டு தன்னவளின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டான்.
“பிரபா நந்தினிக்கு என்னாச்சு?...” ஏன் இப்படி மயக்கமாக...
நட்சத்திர விழிகள் – 12
விஷ்ணுவின் திடீர் செய்கையில் அவனுக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் விழித்தாள் கௌரி.
“உங்களுக்கென்ன ஆச்சு?...” என உள்ளூர உருவான படபடப்பை மறைக்க படாதபாடுபட்டவாறே கேட்கவும்,
“அதான் சொன்னேனே காதலிக்கலாம் அப்டின்னு...” என்றான் கூலாக.
“என்ன விளையாடுறீங்களா? அதான் கல்யாணம் முடிவு பண்ணியிருக்காங்கள்ள. அப்றம் என்னவாம்?...” என்று கூறினாள்.
இன்னும் அவன் மண்டியிட்டு பூவை கௌரியை...
நட்சத்திர விழிகள் – 11
நந்தினியால் தானே உதயா தன்னை அவமதித்து பேசினான் என்ற எண்ணம் மேலோங்க அவள் மேல் கொண்ட வன்மம் இன்னும் அதிகரித்தது.
தனது செயலால் தான் இந்நிலைக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதை உணராமலேயே உணரவிரும்பாமலேயே தான் என்ற அகம்பாவத்தால் தன் சொந்தங்களை இழந்துகொண்டிருப்பதை அறியாமல் தன்னை தனிமைக்கு தாரைவார்க்க தயாரானார்.
நந்தினியை பகையாளியாக ஜென்ம...
அர்ச்சனை அபிஷேகம் அனைத்தும் முடிந்து நகைப்பெட்டி நாச்சி கைக்கு வந்தது. வேணிக்கு மனதின் ஓரத்தில் ஒரு நட்பாசை. தான் நினைப்பது அபத்தம் தான். நடக்காதுதான், ஆனால் நடந்தால் நன்றாக இருக்குமென எண்ணினார்.
திருமணம் கைகூடிவந்த சந்தோஷத்தில் அதை கௌரிக்கு பரிசாக கொடுப்பார்களா என ஆவலோடு எதிர்பார்த்தவரது எண்ணத்தில் மண் விழுந்தது.
அனைவரின் முன்னிலையில் பாக்கியம் கைகளால் அம்மாலை...
நட்சத்திர விழிகள் – 10
இவன் தன்னை இந்த பாடு படுத்துறானே, தான் வாங்கி வந்த வரம் என்னவாயிருக்கும் என உள்ளுக்குள் புகைந்தபடி உதயாவை துவம்சம் செய்துவிடும் வெறியோடு நோக்கினான்.
“ஒரு கிண்ணம் க்லோப்ஜாமூனை குடுத்துட்டு இவனுக்கு எம்மா ஏத்தம் பாரேன்,” என அவனது மனம் முரண்டியது.
“நான் உள்ள போய் ஸ்வீட் வாங்கிக்கறேன். அதுவரைக்கும் யாரும் அடுப்படிக்குள்ள...
நட்சத்திர விழிகள் – 9
நந்தினியிடம் பேசிவிட்டு போனை வைத்த விஜி வந்து நின்றதோ ஏழுமலையின் முன்னால் தான்.
“என்ன மாமா? நான் பேசினதை கேட்டேங்க தானே? மித்து அங்க அழுதுட்டு இருக்கா, உங்களை நினச்சு. நீங்க பேசாம இருக்கிறதால....” என குற்றம் சாட்டவும் பதிலின்றி அவனது முகம் காண்பதை தவிர்த்தவாறே துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு...
நட்சத்திர விழிகள் – 8
வேணி என்னதான் அரும்பெரும்பாடுபட்டு கோவத்தை அடக்கிய குரலில் சொன்னாலும் அனைவருக்குமே அதிர்ச்சியாகிவிட்டது அவரது செய்கை.
பாக்கியம் உடனே சுதாரித்து கோவமாக ஏதோ சொல்ல வாயெடுத்த உதயாவை ஒரே பார்வையில் அடக்கிவிட்டு நாச்சியை பார்க்க அவரது இறுகிய முகமே கடுமையாக ஏதோ பேசப்போகிறார் என்பதை காட்டியது.
அவரை அமைதியாக இருக்கும் படி இறைஞ்சியது பாக்கியத்தின்...
நட்சத்திர விழிகள் 7
“இங்க வாம்மா நந்தினி!...” அழைத்த பாக்கியம் அங்கே கர்ப்பகிரகத்தின் பக்கத்தில் இருந்த மூவரின் முன் நிறுத்தியவர்,
“இவங்க தான் நம்ம குலதெய்வத்தை இங்க கவனிக்கிறவங்க, நம்ம கோயிலுக்கு தலைமுறை தலைமுறையா காவலுக்கு இருக்கிறவங்க தாயி. இந்த மலைகிராமத்துக்கு மக்களுக்கு ஊர் பெரியவங்கம்மா!...” என சொல்லிவிட்டு,
அங்கே விஷ்ணுவோடு வாயாடிகொண்டிருந்தவனை,
“பிரபா, இங்க வாப்பா!...” என...
நட்சத்திர விழிகள் – 6
6 மணிக்கு கண்விழித்தவன் குளித்து முடித்து கிளம்பி வந்தான். அசையாமல் படுத்திருந்த நந்தினியை கண்டு நிதானமாக அவளது முகவடிவை ஆராய்ந்தவன், “முதல் முதல்ல பார்த்தப்போ எப்படி இருந்தா?... தக்காளிக்கு வால் முளைச்சதாட்டம் ரெட்டை ஜடை போட்டுட்டு இருந்தவ. ம்ம் இவ்வளோ நாள்ல எவ்வளோ மாற்றம் இவ கிட்ட?...” என...
நட்சத்திர விழிகள் – 5
“என்னாச்சு டார்லிங்? இவன் ஏன் இப்டி கத்துறான்?...” என வினவிய விஷ்ணுவை பார்த்து,
“ஒண்ணுமில்லையா நீ போய் தூங்கு. அவனுக்கு கொஞ்சம் வேப்பிலை அடிக்கணும். அதான்!...” என அவனை உள்ளே அனுப்பிவிட்டு திரும்பியவரை மீண்டும் அழைத்தவன்,
“டார்லிங் அவல்கேசரி இருக்குதானே?...” என்றான் முக்கியமான சந்தேகத்தை கேட்க, நாச்சி திரும்பி முறைத்த முறைப்பில்...
நட்சத்திர விழிகள் - 4
மண்டபத்தின் வாயிலுக்கு வந்த உறவினர்கள் கைகளில் பூச்செண்டோடு ஊர்வல காரிலிருந்து இறங்கிய மணமக்களை வரவேற்த்தனர்.
மண்டபத்தை பார்த்தவளின் மனதில் துக்கபந்தொன்று எழுந்து தொண்டையடைக்க கரையுடைத்த கண்ணீருக்கு அணைபோட முடியாமல் அரற்றினாள்.
அவளது நிலையறிந்தோ உதயா, “நீங்க எல்லோரும் முன்னால போங்க நாங்க இதோ வந்திடறோம்!...” என அனைவரையும் அனுப்பிவிட்டு அவள் புறம் திரும்பினான்.
சற்று...
நட்சத்திர விழிகள் 3
வீட்டின் முன்பாக கார் நின்றதும் மேளச்சத்தம் முழங்கவும் சரியாக இருந்தது. கண்ணை திறந்து பார்த்தவள் மிரண்டு பின்வாங்கினாள்.
“ஐயோ எவ்வளோ பேர் இருக்காங்க?....” என்றெண்ணியபடி உதயாவை பார்த்தவள் அவனது இறங்கு என்ற கட்டளையை ஏற்று இறங்க முற்பட்டவளது கால்கள் அவளுக்கு ஒத்துழைக்க மறுத்தது.
காரின் மறுபுறம் வந்தவன் கைபிடித்து “ம்ம், இறங்கு!...” என்றான் மீண்டும்.
தள்ளாடியபடி...
நட்சத்திர விழிகள் – 2
“திடீர்னு வந்து கல்யாணத்தை நிறுத்துவான்னு நாங்க நினைச்சுகூட பார்க்கலை பிரசாத் சார்....” என கல்யாண மண்டபத்தில் உதயா ஆடிய ருத்ரதாண்டவத்தை பார்த்து அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோமென ஓடிவந்த மாப்பிளை குணா மற்றும் அவனோடு திருமணத்தில் கலந்துகொள்ள வந்த நான்கைந்து பேர் பிரசாத் முன் கூறிகொண்டிருந்தனர்.
“என்ன சார் நீங்க தானா வந்து...
நட்சத்திர விழிகளிலே வானவில்
நட்சத்திர விழிகள் 1
“என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்த நீ யார்?.....” என்று கேட்டுவிட்டு அவசரப்பட்டு சீண்டிட்டோமே என்ன சொல்ல போறானோ? என்று அவனையே பார்த்தபடி பரிதவித்து நின்றார் ஏழுமலை.
“சாரி மிஸ்டர் ஏழுமலை உங்க பொண்ணுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறதை நான் தவறென்று சொல்லவே மாட்டேன். ஆனா என்னோட பொண்டாட்டிக்கு...