Monday, May 27, 2024

    Smrithiyin Manu

    Smrithiyin Manu 14 2

    அதில் எழுதப்பட்டிருந்த தொகையைப் பார்த்து அதிர்ந்த தல்ஜித், “என்னது இது?” “எங்கப்பா என் கல்யாணத்துக்காக மாப்பிள்ளைக்கு கொடுக்க ஒத்துகிட்ட ரொக்கம்..அவனைக் கல்யாணம் செய்துகிட்டு அவன் வாழ்க்கைய ஒலிமயமாக்க நான் விரும்பல..அனில் மாதிரி பசங்களோட வாழ்க்கைல வெளிச்சத்தைக் கொண்டு வர விரும்பறேன்… இந்தமுறை என்னோட சுய உதவிக் குழுவிலிருந்து பத்து பசங்க இங்க படிக்க வருவாங்க..இதே போல ஒவ்வொரு வருஷமும்...

    Smrithiyin Manu 14 1

    ஸ்மிரிதியின் மனு - 14 “மனு.” என்று கத்தினாள் ஸ்மிரிதி. “லெட்ஸ் ஸ்டாப் திஸ்..உன்னால என்னவெல்லாம் செய்ய முடியும்..என்னவெல்லாம் இதுவரைக்கும் நீ செய்திருக்கேனு எனக்கு ஐடியா இருக்கு அதனால எனக்கு அதிர்ச்சி கொடுக்கணும்னு நீ அசிங்கமா பேசறத நிறுத்திக்கோ..நீ என்னைப் பற்றியும், நான் உன்னைப் பற்றியும் ஸீரியஸா இருக்கோம்னா நாம அதைப் பற்றி மேல யோசிக்கணும்..அப்படி இல்லைனா...

    Smrithiyin Manu 13

    ஸ்மிரிதியின் மனு - 13 “என்ன மா இது? குளிர்ல காலத்தில டிரஸ்ஸ ஈரம் செய்யறீங்க? என்று கேட்டான் மனு. மனுவிற்குப் பதில் சொல்லாமல்,”திரேன்..ரோட்டி கொண்டு வா.” என்று சிவகாமி குரல் கொடுக்க, கிட்சனிலிருந்து ஃபூல்காவுடன் வெளியே வந்தான் திரேன்.  அவன் கொண்டு வந்த தட்டிலிருந்தது இரண்டே இரண்டு ஃபூல்கா. அதை பெரியவர்கள் இருவரும் ஆளுக்குவொன்றாக எடுத்து கொள்ள,...

    Smrithiyin Manu 12

    ஸ்மிரிதியின் மனு - 12 மனு அருகில் அமர்திருந்த சிவகாமியோ ஸ்தம்பித்து போயிருந்தார்.  ஸ்மிரிதியின் இந்தப் பரிமாணம் அவர் அறியாதது.  ஆடம்பரமில்லாமல் அதே சமயம் அழகானப் புடவையில் அவள் ஆடியதும், பாடியதும் அவர் மனதை கொள்ளைக் கொண்டிருந்தது.  அவள் எப்போது, எந்த வயதில், யாரிடம் இந்த மாதிரி பஞ்சாபி பாட்டைப் பாடவும் அதற்கேற்ப ஆடவும் கற்று...

    Smrithiyin Manu 11 2

    ஸ்மிரிதியின் மனு - 11_2 “அம்மா, நான் உங்கள அழைச்சுகிட்டு வந்தேனாம்... இவள பார்க்கணுமுனு நீங்கதான் என்னைக் கட்டாயப்படுத்தி அழைச்சுகிட்டு வந்தீங்க..இன்னிக்காவது நேரத்துக்கு வீட்டுக்குப் போயி நான் தூங்கணும்.” என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் உண்மையைப் போட்டு உடைத்தான். ஆனால் மனு அப்போது அறிந்திருக்கவில்லை அவன் எந்த நேரத்திற்கு வீட்டிற்குப் போனாலும் அன்றிரவு அவன் தூங்கப்...

    Smrithiyin Manu 11 1

    ஸ்மிரிதியின் மனு - 11_1  “அவரோட அந்த ஆரம்பம் எத்தனை பேருக்குத் தெரியும்? இங்க வந்த அப்பறம் என்ன செய்தாருனு தெரில....பிரேமாவோட விவகாரத்துக்குப் பிறகு அவளுக்கு ஏதாவது உதவி செய்யணுமுனு உங்கம்மாக்குத் தோணிச்சு ..அவளோட குடும்பத்தைப் பற்றி விசாரிச்சோம் ஆனா அவங்க யாரும் அவ மேல இண்ட் ரெஸ்ட் காட்டல.... அதை பிரேமாகிட்ட சொன்ன போது...

    Smrithiyin Manu 10

    ஸ்மிரிதியின் மனு - 10 “உன்னோட ஸ்பெஷல்னா உனக்கும் ரொம்ப பிடிக்கும்தானே..ஃபைன் லேட்ஸ் ஹவ்…ஆரன் ஜ் அண்ட் லைம் ஃபார் மீ.” என்று கார்மேகம் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் அவர் மகளுடன் போர் களத்தில் இறங்கினான் மன்னன் மனு வளவன். அவன் தாக்குதலில் தடுமாற்றமடைந்த ஸ்மிரிதி அவளைச் சுதாரித்துக் கொள்ளுமுன், “மனு தம்பி..ஸ்மிரிதிமா தெரியாமப் பேசிட்டாங்க..தப்பா நினைச்சுக்காதீங்க.” என்று...

    Smrithiyin Manu 9 2

    ஸ்மிரிதியின் மனு - 9_2 பைக்கை நிதானமாக ஓட்ட ஆரம்பித்தான் மனு.  அந்த நிதானமான வேகத்திலும் குளிரினால் ஸ்மிரிதியின் உள்ளங்கை இரண்டும் சில்லிட்டுப் போயின. இரண்டு புறமும் கால்களைப் போட்டு அமர்ந்திருந்ததால் அவள் கைப்பையினை அவர்கள் இருவருக்கிடையே வைத்து அதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தாள்.  சிறிது நேர பயணத்திற்குப் பின், “மனு.” என்று அவன் காதருகே கிசுகிசுத்தாள்....

    Smirithiyin Manu 9 1

    ஸ்மிரிதியின் மனு - 9_1 அறையிலிருந்து மற்றவர்களுடன் வெளியே சென்ற ஸ்மிரிதி அறைக்குளிருந்த மனுவைப் பார்த்து,”நான் இவங்களோட கார்வரைக்கும் போயிட்டு வரேன்.” என்று சொன்ன விதம் மற்றவர்களுக்கு சாதாரணத் தகவலாகத் தெரிந்தது ஆனால் மனுவிற்கும் மட்டும் அதன் அர்த்தம் புரிந்தது. “திரும்பி மேல வரும்போது என் பைக் சாவியோட வா.” என்று கட்டளையிட்டான் மனு. “சரி” என்று பதில்...

    Smrithiyin Manu 8 2

    ஸ்மிரிதியின் மனு - 8_2 “கார்மேகம்.” என்று மனுவிற்கு முன் பதில் அளித்தான் மாறன். “நான் கேள்விபட்டது இல்லையே அண்ணா.” என்று அவள் சொல்ல, “கேள்விபட்டவங்க யாரும் மேல கேள்வி கேட்கமாட்டாங்க.” என்றான் மனு. “அவ்வளவு பெரிய ஆளா அவரு?’ என்று மறுபடியும் ஜனனி கேட்க, “பெரிய ஆளா இருந்தா இதுக்குள்ள பிரபலமானவங்க பட்டியல்ல வந்திருப்பாரே..அவரு பெரிய விஷயத்தை முடிச்சு கொடுக்கற...

    Smrithiyin Manu 8 1

    ஸ்மிரிதியின் மனு - 8_1 அந்த மாலை நேரத்தில் மலை மந்திர் வாசலில் டாக்ஸியிலிருந்து இறங்கி கொண்டாள் ஸ்மிரிதி. கோவில் வாயிலில் ராம், ஜனனி, மனு, மாறன் நால்வரும் அவளுக்காகக் காத்திருந்தனர். ஸ்மிரிதி வாயிலை அடைந்தவுடன், “ஸ்மிரிதி அக்கா, நீங்க வரமாட்டீங்கனு மாறன் அண்ணன் சொல்லிக்கிட்டிருந்தாரு.” என்றாள் ஜனனி. “வரேனு சொன்னா வந்திடுவேன்..இங்க பக்கத்திலதான் ஒரு இடத்தில வேலை செய்துகிட்டிருந்தேன்..விண்டர்ல...

    Smrithiyin Manu 7 2

    ஸ்மிரிதியின் மனு - 7_2 “நீ எனக்காக ஹோட்டல் வாங்கறேனு தெரிஞ்சா உன் அண்ணங்க என்னை ஆள் வைச்சு தூக்கிடுவாங்க.” என்றாள் ஸ்மிரிதி.  “அப்படி செய்தாங்கன்னா அவங்க தம்பி நான்..என்னாலையும் என்ன செய்ய முடியுமுனு காட்டுவேன்.” என்றான் ஸீரியஸாக கபீர். “ஏய்..நான் சும்மா சொன்னேன்..எங்கப்பாவைத் தெரிஞ்சவங்க என் மேல கை வைப்பாங்களா?” என்று விளையாட்டாக கேட்டாள் ஸ்மிரிதி. “உங்கப்பாவைப் பற்றி...

    Smrithiyin Manu 7 1

    ஸ்மிரிதியின் மனு - 7_1 ஸ்மிரிதியை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கலாம் என்ற நாதனின் ஆலோசனையை  அமைதியாக ஏற்று கொண்டான் மனு. அவர்கள் வீட்டை அடைந்தபின் அவனறைக்கு செல்லுமுன் மனுவிடம் நாதன் சில கேள்விகள் கேட்டு கலெக்டர் வக்கீலாகவும் அவரின் கேள்விகளுக்குப் பதில் கொடுத்த வக்கீல் குற்றவாளியாகவும் மாறிப் போனார்கள். ஏர்போர்ட் சிடியில் இருந்த அந்த பிரம்மாண்டமான்...

    Smrithiyin Manu 6 2

    ஸ்மிரிதியின் மனு - 6_2 கடந்த போன நிகழ்வுகளால் அவள் வாழ்க்கைத் தடம் புரண்டதை நினைத்தப் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதிக்கு அந்த நினைவுகளில்  நுனியில் அவளின் வாழ்க்கைக்கு சற்றும் சம்மந்தமில்லாத வக்கீல் மனு நீதி வந்து நின்று கொண்டான்.  மனு நினைத்தது போல் அவள் வாழ்க்கையில் நடக்கவில்லை. அவள் உடைத்ததை அவளைத் தவிர யாரும் பொறுக்கியதில்லை.  அவளின்...

    Smrithiyin Manu 6 1

    ஸ்மிரிதியின் மனு - 6_1 “மனு, உனக்கு தேவையில்லாத விஷயத்தில தலையிடாத.” என்று கடுமையாகப் பதில் சொன்ன ஸ்மிரிதி அவனருகிலிருந்து எழுந்து கொண்டு ஜானுவிடம் போயி, “நான் வாஷ் ரூம் போக போறேன்..நீ வரியா என்கூட.” என்று கேட்டாள். பெண்கள் இருவரும் பாத் ரூம் சென்று வந்த பின் ராமின் அருகில் அமர்ந்து கொண்டாள் ஜானு.  அதே இடத்தில்...

    Smrithiyin Manu 5 2

    ஸ்மிரிதியின் மனு - 5_2 “ஓ..நம்ம ஆளுமை அக்காவா தெரியுதோ.” என்று சந்தேகம் கொண்ட ஸ்மிரிதி, ஜானுவைப் பார்த்து, “என்னை ஸ்மிரிதினேக் கூப்பிடு…இப்ப இந்த ஃபோடோஸப் பார்த்து உனக்கு எது பிடிக்குதுனு சொல்லு.” என்று அவளுடைய போனை ஜனனியிடம் கொடுத்தாள். அதற்கு பின் பெண்கள் இருவரும் ஏர்போர்ட்டில் ஃபிளைட்டிற்காகக காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து போனில் முழ்கிப் போயினர்.  அடுத்த...

    Smrithiyin Manu 5 1

    ஸ்மிரிதியின் மனு - 5_1 “மனு.” என்று அதிர்ச்சியாக விளித்தார் சிவகாமி.  பிரேமாவோ வாயேத் திறக்கவில்லை. அவர் பெண்ணிடம் அவர் கேட்க தயங்கியதைத் தயக்கமே இல்லாமல்  ஸ்மிரிதியிடம் மனு சொன்னதைக் கேட்டவுடன் அவன் மீது அவருக்கு மரியாதை ஏற்பட்டது. அதே சமயம் ஸ்மிரிதியின் வாழ்க்கையின் அபாயகரமான நாட்களையும்  அவருக்கு நினைவுப்படுத்தியது. மனு சொன்னதைக் கேட்டு அவளுடையப் பதிலை...

    Smrithiyin Manu 4 2

    ஸ்மிரிதியின் மனு - 4_2 “உங்கப்பாகிட்ட சொல்லு இதெல்லாம்.” என்றார் பிரேமா. “அவருக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியதில்ல…ஆனா உங்களுக்கு ஒண்ணு சொல்ல விரும்பறேன்..அம்மா, யாருமில்லாத அனாதைதான் இன்னிக்கு அவருக்குனு ஒரு இடம் பண்ணிகிட்டிருக்காரு..அவரோட எந்தச் செய்கையும் இனி விமர்சனம் செய்யாதீங்க.” என்று காலையிலிருந்து அன்பாக அவள் அம்மாவிற்கு புரிய வைக்க முயன்று தோற்று போன ஸ்மிரிதி...

    Smrithiyin Manu 4 1

    ஸ்மிரிதியின் மனு - 4_1 “அம்மா, வீட்ல நடக்கற பேச்சை நான் உங்கிட்ட ஷேர் செய்துகிட்டேன்..அந்தக் கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா போகணும், போவேன்... மெஹக் டான்ஸ் இருக்கு.” என்றாள் ஸ்மிரிதி. “மெஹக்கு சினிமால சம்பாதிக்கறது பத்தலையா?..அவதான் இந்தக் கல்யாணத்துக்கு வந்து டான்ஸ் ஆடணுமா? ..எல்லாரையும் அப்பவே விடச் சொன்னேன்..இன்னும் பிடிச்சு வைச்சுகிட்டிருக்க.” என்றார் பிரேமா. “எத்தனை முறை சொல்லிட்டேன்...

    Smrithiyin Manu 3 2

    ஸ்மிரிதியின் மனு - 3_2 பக்கத்து அறைக்குச் சென்று பிரேமாவிடம் சிவகாமியின் வரவைப் பற்றி தகவல் சொல்லிவிட்டு அவள் அறைக்கு வந்து மறுபடியும் தூங்கிப் போனாள் ஸ்மிரிதி. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவளை அறையின் அழைப்புமணி எழுப்ப, தூக்க கலக்கத்துடன் போயி கதவைத் திறந்தவளைப் பார்த்து,”சாப்பிட வா..பிரேமாவும், நானும் ஆர்டர் செய்தாச்சு.” என்றார் சிவகாமி. பாத் ரூமிற்கு சென்று முகத்தை...
    error: Content is protected !!