Tuesday, May 7, 2024

    PP 23

    PP 22

    PP 21 2

    PP 21 1

    PP 20 2

    Paingili Paarvaiyilae

    PP 20 1

    அத்தியாயம் 20 இளங்கதிர் பள்ளிப் பருவத்தின் மேல்நிலை முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். சந்திராவின் தாத்தா முதல் அனைவருமே சென்னையில் குடியேறி விட்டனர். பெரியவர்கள் கிளம்பும் நேரம் வரதராஜனும் நாராயணனும் வீட்டையும் நிலத்தையும் கவனித்துக் கொள்ளும் படி குலசேகரனிடம் வேண்டினர். அவர்கள் செல்லாவிடினும் அவர் பாதுகாப்பார் தான், பெரியவரே கேட்டுவிட, அது அவருக்கு தெய்வத்திற்கு ஆற்றும்...

    PP 19 2

    காலையிலே வேலையாட்கள் வேலை செய்ய, கதிர் மேற்பார்வை பார்த்து கொண்டிருக்க, சேர்மமூர்த்தி, அவர் உதவியாளர் மற்றும் இருவரோடு வந்தார்.  “கதிரு உடனடியா வேலையை நிறுத்து” என்றவர் அதிகாரமாகச் சொல்ல, “ஏன்? என் இடம் நான் செய்றேன், இதுல உங்களுக்கு என்ன இடைஞ்சல்?” என விஷயம் அறிந்தும் அறியாதவன் போலே கேட்டான்.  முகம் இறுகியவர், “ஏதா இருந்தாலும் உன்...

    PP 19 1

    அத்தியாயம் 19  சந்திராவின் வீட்டிற்குள் வருகையிலே கண்கள் வழக்கம் போலே எதிர்வீட்டைப் பார்வையிட, கதிரின் இருசக்கர வாகனம் இல்லை. ஆலைக்குக் கிளம்பியிருப்பான் போலும் என நினைத்தபடியே சென்றாள். வீட்டிற்குள் வந்தவள் நேராகத் தாத்தாவின் அறைக்குள் தான் சென்றாள். அவர் பீரோவைத் திறந்தவள் தனக்கு எழுதிக் கொடுத்த பத்திரங்களை தேடி எடுத்தாள். அதை தன் அலைபேசியில் ஸ்கேன்...

    PP 18 2

    “இடத்துக்கு எல்லாம் இராசி இருக்கா என்ன?” என்றவள், அவர் கலங்குவதைக் கண்டு, “அத்தை உங்க பயம் தேவையில்லாதது, இப்போ எந்த பிரச்சனையும் வராது. என்னை நம்புங்க” என்றாள் ஆறுதலாக.  தனவதியின் கண்ணீர் சந்திராவையும் பதற செய்தது. கதிரின் முகமும் கவலையுற, “அவளுக்குத் தான் தெரியலை, நீயாவது புரியுற மாதிரி எடுத்துச் சொல்லக் கூடாதா ராசா?” என...

    PP 18 1

    அத்தியாயம் 18 சந்திராவின் முகத்தில் புது பொழிவு, கதிரின் நடத்தையில் துள்ளும் உற்சாகம்! அனைத்தும் தனவதியின் கண்களுக்குத் தப்பவில்லை. திடீர் திருமணம் என்றே நினைத்திருந்த தனவதிக்கு தற்போது நம்ப இயலாது, சந்தேகம்!  சந்திராவின் மீது கதிருக்கு ஒரு வெறுப்புணர்வு வரும் என்றே எதிர்பார்த்திருக்க, அதை அவன் பொய்யாக்கி இருந்தான். தாங்கள் காட்டும் ஒதுக்கத்தில் தன்மானம் பார்த்து சந்திராவே...

    PP 17 2

    தனவதி மதிய உணவைக் கட்டி வைக்க, அதை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டவள் கருப்பட்டிக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு, அவளே எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.  சந்திரா செல்லும் போதே எதிரே வந்த கருப்பட்டி, கவனித்து விட, அவளோ வண்டியைத் திருப்பும்படி சைகை செய்தாள். திருப்பியவன் அதே பாதையில் அவளுக்கு இணையாக ஓட்டிக்கொண்டு வந்தபடி, “ஏம் மதினி அண்ணனைப் பார்க்கத்...

    PP 17 1

    அத்தியாயம் 17 காலையில் சந்திரா விழிக்கும் முன் ஆலைக்கு கிளம்பியிருந்தான் இளங்கதிர். விழித்தாள்  என்றால் விடமாட்டாள் என நன்கு அறிவான். கருப்பட்டி உணவு பார்சல் வாங்கி வந்திருக்க, அவளுக்கானதை படுக்கைக்கு அருகில் மேசையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். ஒருநாள் முழுவதுமே ஆலைப் பக்கம் சொல்லாதது என்னவோ போலிருந்தது. எழுந்ததுமே அதே எண்ணத்தில் கிளம்பி விட்டான்.  கருப்பட்டி, “என்ன முதலாளி நீங்க...
    அவர் தலையில் பாரத்தை ஏற்றியதை போன்றிருந்தது. அவர் திகைத்து நிற்க, “எந்த நிலம்னு நினைக்குறீங்களா? என் கைக்குள்ள வரக்கூடாதுன்னு கதிர் அப்பா கடைசி வரைக்கும் போறாடுனாரே அதே நிலம் தான். நீங்க நல்லவங்க, நியாயமானவங்க, ஏற்கனவே அனுபவப்பட்டவங்க, பிரச்சனை வேண்டாம்னு நினைக்கிறவுங்க புரிஞ்சிப்பீங்க. பார்த்துச் செய்யுங்க” என்றார்.  ஏற்கனவே உயிர்ப் பலி கொண்ட நிகழ்வு மீண்டும்...
    அத்தியாயம் 16 ஒளி தராது மறைந்து போன சூரியன், மேக மூட்டமான வானம், இளம் சாரல் காலைப்பொழுதை மந்தமாக்கியது. அருவிக் குளியல் அடித்துப் போட்டது போன்ற அப்படியொரு உடல் வலியை கொடுத்திருக்க, இளங்கதிர், சந்திரா இருவருமே அசந்து தூங்கிவிட்டனர்.   மெல்லக் கண் விழித்த கதிர் கைகளைத் துழாவி கைப்பேசியைத் தேடி எடுத்து மணியைப் பார்த்தான், காலை ஒன்பது...

    Paingili Paarvaiyil 15 1

    அத்தியாயம் 15 மஞ்சள் ஒளி மங்கும் முன் மாலை நேரம். தனவதியின் அலைபேசிக்கு செந்திலிடமிருந்து அழைப்பு வந்தது. ரேவதி குறைவான இரத்த அழுத்தால் மயங்கி விட்டதாகவும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தான்.  உடன் யாரும் பெரியவர்கள் இல்லாததால் தனவதியை உதவிக்கு வரும்படியும் வேண்டினான். சந்திரா வீட்டை விட்டுச் சென்று விட்டதும் நினைவிற்கு வர, உடனே கிளம்பினார் தனவதி.  கதிரின்...

    Paingili Paarvaiyilae 14 2

    சந்திராவை நோக்கியே வந்த கதிர், “நீ என்ன செய்த இங்க?” என்க, அவன் குரலை எதிர்பாராது சட்டெனத் திரும்பினாள் அவள்.  சின்ன நமட்டுச் சிரிப்போடு கையிலிருந்த காகிதத்தை முந்தானைக்குள் மறைத்தவள், “சும்மா தான், ஒரு கொசு, அதை விரட்டி விட்டுட்டு இருந்தேன்” என்றாள்.  அதைக் கவனித்த போதும், அதற்கு மேல் கதிர் எதையும் கேட்கவில்லை. அவளை அழைத்து...

    Paingili Paarvaiyilae 14 1

    பைங்கிளி பார்வையில் அத்தியாயம் 14 பகல் பொழுதில் பண்ணையையும் நெல் வயல்களையும் கவனித்துவிட்டு வந்த சேர்மமூர்த்தி, வீட்டில் தளர்வாக அமர்ந்திருந்தார். அப்போது தான் கார் ஒன்று வந்து நிற்க, நெற்றி, கைகளில் கட்டுக்களோடு, முகத்தில் சற்றே வடிந்த இரத்தக்காயங்களோடு இறங்கி வந்தான் அரவிந்தன்.  நிமிர்ந்து பார்த்தவர், “வாலே மாப்பிள்ளை..” என்றழைக்க, சற்றே தாங்கி நடந்து வந்தவன், அவர் முன்னிருக்கும்...

    Paingili Paarvaiyilae 13 2

    சந்திரவதனி இதை நன்கு கவனித்திருந்தாள். இருந்தும் இவ்வெண்ணம் கதிரின் மனதில் எவ்வளவு ஆழம் பதிந்துள்ளது என்பதை அவள் அறிய முயல, அவன் ஒத்துழைக்காது நழுவியிருந்தான். குலசேகரனின் இழப்பு ஒரு எதிர்பாராத இழப்பு தான் எனினும் அதற்கு முழு முதற்காரணம் என அவள் குடும்பத்தைச் சொல்வதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கதிரிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை எனினும் மனதில்...

    Paingili Paarvaiyilae 13 1

    அத்தியாயம் 13  சோலை வனத்திலிருந்து ஓர் செடியை வேரோடு பிடுங்கிக் கொள்வதைப் போலே சந்திராவை மட்டும் மொத்தமாக அவள் குடும்பத்திடமிருந்து பறித்துக் கொண்டான் கதிர். அந்த குடும்பத்திலிருந்து வந்த போதும் தற்போது அவள் தன் மனைவி என்பதில் மட்டும் ஓர் உறுதி! இருந்தும் அவளை முழுதாக ஏற்க இயலாது தடுத்தது அவன் மனதிலிருக்கும் குற்றவுணர்வு. தந்தைக்கு...

    Paingili Paarvaiyilae 12 2

    அதற்குள் அடுப்படியிலிருந்து தோசை வார்த்து எடுத்து வந்து அவன் இலையில் வைத்தார் தனவதி. பார்த்திருந்த சந்திரா சட்னியையும் ஊற்ற, இடையில் கதிரின் அலைபேசி அலற, அதில் திடுக்கிட்டு அரண்டவள் சாம்பாரை கதரின் சட்டையில் ஊற்றியிருந்தாள்.  “ஏய்..” கத்தியபடியே எழுந்தவன், “கொஞ்சமாது அறிவிருக்காட்டி உனக்கு? உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா? அவசரமா கிளம்பும் போது தான் இப்படி...

    Paingili Paarvaiyilae 12 1

    அத்தியாயம் 12  நள்ளிரவை நெருங்கும் நேரம் வீடு திரும்பினான் கதிர். வீட்டிற்குள் வர தனவதி இன்னும் உறங்காது கூடத்துத் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருக்க கண்டவன், அருகே செல்ல, அந்த சத்தத்தில் விழித்து எழுந்துவிட்டார்.  “வந்துட்டியா ராசா.. கை,கால் கழுவிட்டு வா, சாப்பாடு எடுத்து வைக்கிதேன்” என்க, “நீங்க ஏன் சின்னம்மா காத்திருக்கீங்க, எப்பவும் போல எடுத்து வைச்சிட்டு...

    Paingili Paarvaiyil 11 2

    “கேள்வி கேட்டா பதில் சொல்லணும் புரியுதா? சொல்லு” என்றவன் மிரட்ட, “நல்ல தான் இருக்காங்க, உடம்புக்கு பிரச்சனை எதுவுமில்லை. தென்னரசு அங்கிளும் தாத்தாவும் திட்டம் போட்டுத் தான் உம்மை எனக்குக் கட்டி வைச்சாங்க” என உண்மையை மறைக்காது உரைத்தவள், துல்லியமாக அவன் முகத்தையும் ஆராய்ந்திருந்தாள். கோபம் கொள்வானோ என்ற எதிர்பார்ப்பு!  “ஹோ..! எனக்கு சந்தேகமிருந்தது அதான்...

    Paingili Paarvaiyil 11

    அத்தியாயம் 11 முத்தாலம்மன் கோவில், அவ்வூரின் மேற்கு வயல்வெளிகளின் ஓரமிருந்தது. முன்பே வந்து விட்ட மாலதியும் தனவதியும் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க, கேசவன் வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தான். நெருங்கிய சொந்தம், பங்காளி மக்கள் என அருகிலிருக்கும் தங்கள் வகையறாக்கள் சிலரை மட்டும் அழைத்திருந்தாள் மாலதி.  கதிரோடு வருமாறு சொல்லி சந்திராவை விட்டு வந்திருக்க, அவளும்...

    Paingili Paarvaiyil 10 2

    அந்த நம்பிக்கையிலே இன்று கதிரின் முன் மகளுக்காக நிற்க, அப்போதும் சந்திராவை அழைக்காது கதிர் மௌனமாகவே இருந்தான். மனோவிற்கு ஆத்திரம் எல்லை கடந்தது, ஒன்றுமில்லாதவனிடம் தன் தந்தை வேண்டி நிற்பதா? என்ற கோபம்!  “வாங்கப்பா கிளம்புவோம்..” என்றவன் துள்ள, “அப்பா பேசுறார்ல கொஞ்சம் அமைதியா இரு. உள்ளப் போய் உக்காரு” என அதட்டி அடக்கினார் கலைவாணி. அது...

    Paingili Paarvaiyil 10 1

    அத்தியாயம் 10 புலராத காலை பொழுதில் வரும் புது ஒளியும் வேண்டாமென்பதை போல் இமைகளை இறுக மூடியபடி அரிசியாலையில் ஒரு மரப்பெஞ்சில் படுத்திருந்தான் இளங்கதிர். சந்திராவின் கழுத்தில் தாலி கட்டி முழுதாக ஒருநாள் முடித்து விட, இன்னும் அவன் வீடு செல்லவில்லை. தனக்காகச் சந்திரா இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க இயலாது!...
    error: Content is protected !!