Paingili Paarvaiyilae
அத்தியாயம் 08
நாற்காலியில் தலை சாய்த்து சரிவாய் அமர்ந்திருக்க, வலது கரத்தில் நடுவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் சுழன்று கொண்டிருந்தது பேனா ஒன்று. மிகுந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் இளங்கதிர்.
அவனை திருமணத்திற்குச் சம்மதிக்கும் படி ரேவதி வேண்டிச் செல்ல, தனவதியும் அதைத் தான் கேட்டார். அவர்கள் கேட்டு அவன் மறுத்ததுமில்லை, அதேபோல் அவனுக்கு விருப்பமில்லாததை செய்ததுமில்லை. இது ஒன்றும்...
இடிந்து போய் விழுந்த தனவதி பெரும் குரலில் ஒப்பாரி வைத்து அழ, ரேவதியும் மாலதியும் அன்னையின் பின்னே விசும்பிக் கொண்டிருந்தனர். கதிருக்குத் தந்தையோடு அவன் உயிரே போனது போலிருந்தது, அவனின் மொத்த தைரியமும் அவர் தான், அவர் இழப்பை அவன் நம்புவதற்கே நேரம் தேவையாகிப் போக, கண்ணீர் விடக்கூட இயலாது கல்லாய் இறுகிப் போனான்.
தந்தை...
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும் புரியுதா? சொல்லு” என்றவன் மிரட்ட, “நல்ல தான் இருக்காங்க, உடம்புக்கு பிரச்சனை எதுவுமில்லை. தென்னரசு அங்கிளும் தாத்தாவும் திட்டம் போட்டுத் தான் உம்மை எனக்குக் கட்டி வைச்சாங்க” என உண்மையை மறைக்காது உரைத்தவள், துல்லியமாக அவன் முகத்தையும் ஆராய்ந்திருந்தாள். கோபம் கொள்வானோ என்ற எதிர்பார்ப்பு!
“ஹோ..! எனக்கு சந்தேகமிருந்தது அதான்...
சந்திராவை நோக்கியே வந்த கதிர், “நீ என்ன செய்த இங்க?” என்க, அவன் குரலை எதிர்பாராது சட்டெனத் திரும்பினாள் அவள்.
சின்ன நமட்டுச் சிரிப்போடு கையிலிருந்த காகிதத்தை முந்தானைக்குள் மறைத்தவள், “சும்மா தான், ஒரு கொசு, அதை விரட்டி விட்டுட்டு இருந்தேன்” என்றாள்.
அதைக் கவனித்த போதும், அதற்கு மேல் கதிர் எதையும் கேட்கவில்லை. அவளை அழைத்து...
“இடத்துக்கு எல்லாம் இராசி இருக்கா என்ன?” என்றவள், அவர் கலங்குவதைக் கண்டு, “அத்தை உங்க பயம் தேவையில்லாதது, இப்போ எந்த பிரச்சனையும் வராது. என்னை நம்புங்க” என்றாள் ஆறுதலாக.
தனவதியின் கண்ணீர் சந்திராவையும் பதற செய்தது. கதிரின் முகமும் கவலையுற, “அவளுக்குத் தான் தெரியலை, நீயாவது புரியுற மாதிரி எடுத்துச் சொல்லக் கூடாதா ராசா?” என...
அத்தியாயம் 13
சோலை வனத்திலிருந்து ஓர் செடியை வேரோடு பிடுங்கிக் கொள்வதைப் போலே சந்திராவை மட்டும் மொத்தமாக அவள் குடும்பத்திடமிருந்து பறித்துக் கொண்டான் கதிர். அந்த குடும்பத்திலிருந்து வந்த போதும் தற்போது அவள் தன் மனைவி என்பதில் மட்டும் ஓர் உறுதி! இருந்தும் அவளை முழுதாக ஏற்க இயலாது தடுத்தது அவன் மனதிலிருக்கும் குற்றவுணர்வு. தந்தைக்கு...
தனவதி மதிய உணவைக் கட்டி வைக்க, அதை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டவள் கருப்பட்டிக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு, அவளே எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
சந்திரா செல்லும் போதே எதிரே வந்த கருப்பட்டி, கவனித்து விட, அவளோ வண்டியைத் திருப்பும்படி சைகை செய்தாள். திருப்பியவன் அதே பாதையில் அவளுக்கு இணையாக ஓட்டிக்கொண்டு வந்தபடி, “ஏம் மதினி அண்ணனைப் பார்க்கத்...
அத்தியாயம் 07
இளம் பிஞ்சு கைகளை நொறுக்கிவிடுவது போல் அழுத்தப்பிடித்திருந்த மனோ, “சந்திரா என்னோட வா. நான் நீச்சல் சொல்லித் தாரேன், அவன் வேண்டாம்” என அழைக்க, அவளோ “ம்கூம்.. நீ அடிப்பே, நீ வேண்டாம் போ” என மறுத்தாள்.
“நான் உன் அண்ணன்ல அடிக்க மாட்டேன், நல்லா சொல்லித் தருவேன் வா” என கரங்களைப் பற்றி...
அத்தியாயம் 21.2
தூத்துக்குடியில் மாமனார் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தார் சேர்மமூர்த்தி. சரியா வெளியே சென்றிருந்த மாமனார் பழனிச்சாமியும் அரவிந்தனும் வந்தனர்.
“வாங்க மாப்பிள்ளை..” என்றவர் வரவேற்க, “நான் ஒன்னும் விருந்து கொண்டாட வரலை மாமா. பிரச்சனையில வந்திருக்கேன்” என்றார் இழுத்துப் பிடித்த மூச்சோடு.
அவர் என்னவென்று விசாரிக்க, ஊரில் நேற்று நடந்த அனைத்தையும் தெரிவித்தவர், “இப்போ...
அந்த நம்பிக்கையிலே இன்று கதிரின் முன் மகளுக்காக நிற்க, அப்போதும் சந்திராவை அழைக்காது கதிர் மௌனமாகவே இருந்தான். மனோவிற்கு ஆத்திரம் எல்லை கடந்தது, ஒன்றுமில்லாதவனிடம் தன் தந்தை வேண்டி நிற்பதா? என்ற கோபம்!
“வாங்கப்பா கிளம்புவோம்..” என்றவன் துள்ள, “அப்பா பேசுறார்ல கொஞ்சம் அமைதியா இரு. உள்ளப் போய் உக்காரு” என அதட்டி அடக்கினார் கலைவாணி.
அது...
அத்தியாயம் 18
சந்திராவின் முகத்தில் புது பொழிவு, கதிரின் நடத்தையில் துள்ளும் உற்சாகம்! அனைத்தும் தனவதியின் கண்களுக்குத் தப்பவில்லை. திடீர் திருமணம் என்றே நினைத்திருந்த தனவதிக்கு தற்போது நம்ப இயலாது, சந்தேகம்!
சந்திராவின் மீது கதிருக்கு ஒரு வெறுப்புணர்வு வரும் என்றே எதிர்பார்த்திருக்க, அதை அவன் பொய்யாக்கி இருந்தான். தாங்கள் காட்டும் ஒதுக்கத்தில் தன்மானம் பார்த்து சந்திராவே...
அத்தியாயம் 15
மஞ்சள் ஒளி மங்கும் முன் மாலை நேரம். தனவதியின் அலைபேசிக்கு செந்திலிடமிருந்து அழைப்பு வந்தது. ரேவதி குறைவான இரத்த அழுத்தால் மயங்கி விட்டதாகவும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தான். உடன் யாரும் பெரியவர்கள் இல்லாததால் தனவதியை உதவிக்கு வரும்படியும் வேண்டினான். சந்திரா வீட்டை விட்டுச் சென்று விட்டதும் நினைவிற்கு வர, உடனே கிளம்பினார் தனவதி.
கதிரின்...
அத்தியாயம் 16
ஒளி தராது மறைந்து போன சூரியன், மேக மூட்டமான வானம், இளம் சாரல் காலைப்பொழுதை மந்தமாக்கியது. அருவிக் குளியல் அடித்துப் போட்டது போன்ற அப்படியொரு உடல் வலியை கொடுத்திருக்க, இளங்கதிர், சந்திரா இருவருமே அசந்து தூங்கிவிட்டனர்.
மெல்லக் கண் விழித்த கதிர் கைகளைத் துழாவி கைப்பேசியைத் தேடி எடுத்து மணியைப் பார்த்தான், காலை ஒன்பது...
அதற்குள் அடுப்படியிலிருந்து தோசை வார்த்து எடுத்து வந்து அவன் இலையில் வைத்தார் தனவதி. பார்த்திருந்த சந்திரா சட்னியையும் ஊற்ற, இடையில் கதிரின் அலைபேசி அலற, அதில் திடுக்கிட்டு அரண்டவள் சாம்பாரை கதரின் சட்டையில் ஊற்றியிருந்தாள்.
“ஏய்..” கத்தியபடியே எழுந்தவன், “கொஞ்சமாது அறிவிருக்காட்டி உனக்கு? உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா? அவசரமா கிளம்பும் போது தான் இப்படி...
கோவிலுக்குக் கிளம்பியிருந்த தனவதி கதிரையும் அழைக்க, உடன் சென்றான். முப்பிடாதி அம்மன் கோவில், அதிலும் வெள்ளிக்கிழமை என்பதால் விசேஷ பூஜைகள் உண்டு. பக்தர்கள் நடமாட்டம் அன்று சற்று அதிகமாகவே இருக்க, தனவதியோ முன்னே செல்ல, பின்னே வந்த கதிரின் கண்கள் நாலாபுறமும் சுழன்றது.
சந்திரா வந்திருக்க மாட்டாளா? என்ற சிறு எதிர்பார்ப்பு, அவன் தேகமெங்கும் தேடல்...
பைங்கிளி பார்வையில்
அத்தியாயம் 14
பகல் பொழுதில் பண்ணையையும் நெல் வயல்களையும் கவனித்துவிட்டு வந்த சேர்மமூர்த்தி, வீட்டில் தளர்வாக அமர்ந்திருந்தார். அப்போது தான் கார் ஒன்று வந்து நிற்க, நெற்றி, கைகளில் கட்டுக்களோடு, முகத்தில் சற்றே வடிந்த இரத்தக்காயங்களோடு இறங்கி வந்தான் அரவிந்தன்.
நிமிர்ந்து பார்த்தவர், “வாலே மாப்பிள்ளை..” என்றழைக்க, சற்றே தாங்கி நடந்து வந்தவன், அவர் முன்னிருக்கும்...
அத்தியாயம் 02
தென்றல் தவழும் தென்காசியில் கோடையிலும் இளம் வெயிலுக்கு ஏங்க தான் வேண்டும். பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை, ஆகையால் ஊர் முழுவதும் சிறுவர்கள் நிறைந்திருந்தனர். வயலில் தந்தைக்கு சிறிது நேரம் உதவிவிட்டு, மாலை நேரம் புழுதி பறக்க, களத்தில் கபடி விளையாடினான் இளங்கதிர். மழை வருவது போல் கருமேகங்கள் சூழ்ந்து மண் வாசமும் வீச,...
அத்தியாயம் 17
காலையில் சந்திரா விழிக்கும் முன் ஆலைக்கு கிளம்பியிருந்தான் இளங்கதிர். விழித்தாள் என்றால் விடமாட்டாள் என நன்கு அறிவான். கருப்பட்டி உணவு பார்சல் வாங்கி வந்திருக்க, அவளுக்கானதை படுக்கைக்கு அருகில் மேசையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். ஒருநாள் முழுவதுமே ஆலைப் பக்கம் சொல்லாதது என்னவோ போலிருந்தது. எழுந்ததுமே அதே எண்ணத்தில் கிளம்பி விட்டான்.
கருப்பட்டி, “என்ன முதலாளி நீங்க...
அத்தியாயம் 11
முத்தாலம்மன் கோவில், அவ்வூரின் மேற்கு வயல்வெளிகளின் ஓரமிருந்தது. முன்பே வந்து விட்ட மாலதியும் தனவதியும் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க, கேசவன் வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தான். நெருங்கிய சொந்தம், பங்காளி மக்கள் என அருகிலிருக்கும் தங்கள் வகையறாக்கள் சிலரை மட்டும் அழைத்திருந்தாள் மாலதி.
கதிரோடு வருமாறு சொல்லி சந்திராவை விட்டு வந்திருக்க, அவளும்...
“அதெப்படி வருவான், அவங்க அப்பா இறந்ததுக்கு நாம தான் காரணமுன்னு நினைக்கிறானே பின்ன எப்படி வருவான்? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை..” என்ற கலைவாணியின் புலம்பலுக்கும் பதில்லாது அமைதியாக இருந்தாள் சந்திரா.
வாசலில் வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர் நாராயணனும், வரதராஜனும். முகூர்த்தத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்க, சரியாகப் பாதுகாப்புப்படை காவலர்கள் சூழ வந்தனர் அமைச்சர்...