Paingili Paarvaiyilae
“அதெப்படி வருவான், அவங்க அப்பா இறந்ததுக்கு நாம தான் காரணமுன்னு நினைக்கிறானே பின்ன எப்படி வருவான்? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை..” என்ற கலைவாணியின் புலம்பலுக்கும் பதில்லாது அமைதியாக இருந்தாள் சந்திரா.
வாசலில் வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர் நாராயணனும், வரதராஜனும். முகூர்த்தத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்க, சரியாகப் பாதுகாப்புப்படை காவலர்கள் சூழ வந்தனர் அமைச்சர்...
அத்தியாயம் 09
பொன் அந்தி மாலைப் பொழுது, இரு வீட்டு உறவுகளாலும் சுற்று வட்ட சொந்தங்களாலும் நிறைந்திருந்தது அந்த திருமண மண்டபம். வண்ண விளக்குகளும் வரவேற்பும் ஆடம்பரமாகக் காட்சியளிக்க, எங்கும் செழுமையே! சற்று முன் தான் அரவிந்தனுக்கும் சந்திரவதனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்திருந்தது.
அனைவரும் உறவினரையும் விருந்தினரையும் கவனிக்க, உடை மாற்றுகிறேனென சந்திராவின் அறையில் அவள் மட்டும்...
அத்தியாயம் 08
நாற்காலியில் தலை சாய்த்து சரிவாய் அமர்ந்திருக்க, வலது கரத்தில் நடுவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் சுழன்று கொண்டிருந்தது பேனா ஒன்று. மிகுந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் இளங்கதிர்.
அவனை திருமணத்திற்குச் சம்மதிக்கும் படி ரேவதி வேண்டிச் செல்ல, தனவதியும் அதைத் தான் கேட்டார். அவர்கள் கேட்டு அவன் மறுத்ததுமில்லை, அதேபோல் அவனுக்கு விருப்பமில்லாததை செய்ததுமில்லை. இது ஒன்றும்...
அத்தியாயம் 07
இளம் பிஞ்சு கைகளை நொறுக்கிவிடுவது போல் அழுத்தப்பிடித்திருந்த மனோ, “சந்திரா என்னோட வா. நான் நீச்சல் சொல்லித் தாரேன், அவன் வேண்டாம்” என அழைக்க, அவளோ “ம்கூம்.. நீ அடிப்பே, நீ வேண்டாம் போ” என மறுத்தாள்.
“நான் உன் அண்ணன்ல அடிக்க மாட்டேன், நல்லா சொல்லித் தருவேன் வா” என கரங்களைப் பற்றி...
அத்தியாயம் 06
காலைப்பொழுதின் பரபரப்புகள் எல்லாம் அடங்கிய நேரம், அரிசி ஆலையை ஒரு முறை சுற்றி வந்து மேற்பார்வை பார்த்த கதிர் பின் தன்னறைக்குச் சென்றிருந்தான். அலுவலக வேலையில் கவனமாய் இருக்க, கதவு தட்டும் ஓசையை உணர்ந்தான். அசுவாரசியமாக நிமிர்ந்தவன் பதில் சொல்லும் முன் கதவைத் திறந்து கொண்டு வந்தாள் சந்திரவதனி.
வந்தவள் நேராக அவன் இருக்கைக்கு...
கோவிலுக்குக் கிளம்பியிருந்த தனவதி கதிரையும் அழைக்க, உடன் சென்றான். முப்பிடாதி அம்மன் கோவில், அதிலும் வெள்ளிக்கிழமை என்பதால் விசேஷ பூஜைகள் உண்டு. பக்தர்கள் நடமாட்டம் அன்று சற்று அதிகமாகவே இருக்க, தனவதியோ முன்னே செல்ல, பின்னே வந்த கதிரின் கண்கள் நாலாபுறமும் சுழன்றது.
சந்திரா வந்திருக்க மாட்டாளா? என்ற சிறு எதிர்பார்ப்பு, அவன் தேகமெங்கும் தேடல்...
அத்தியாயம் 05
வழக்கத்திற்கு மாறாக உச்சியிலேறிய சூரியன் அக்கினி மழையாக வெப்பக்கதிர்களை வீச, ஆற்றக்கரையோரம் அமர்ந்திருந்தான் கதிர். பொதுவாகவே அப்பக்கம் அதிகம் ஆட்கள் நடமாட்டம் கிடையாது, அதிலும் நண்பகல் நேரம் புள்ளினங்கள் கூட புலப்படவில்லை. கண்ணெதிரே கையளவில் வான்தொடும் பச்சை மலை முகடுகள், அதில் ஒற்றை புள்ளியில் தொடங்கி, உருக்கி ஊற்றிய வெள்ளி நீராய் பெருக்கெடுத்து,...
ஒருவேளை இருளில் தான் சரியாகத் தெரியவில்லையோ என நினைத்தவன் அலைபேசியின் முகப்பு விளக்கை இயக்கி உற்று உற்றுப் பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை. ஒரு ஏமாற்ற உணர்வு அவன் முகத்தில் மின்னி மறைந்தது.
மாடிச்சுவற்றின் உட்புறம் மண்டியிட்டுக் குறுக்கி அமர்ந்த நிலையில் தலையை மட்டும் நீட்டி அவனை ஆராய்ந்து பார்த்தவளுக்குச் சிரிப்பு சிதறியது. கை கொண்டு வாயை...
அத்தியாயம் 04
நட்சத்திரங்கள் அரும்பும் மைமல் நேரம், முழுதாய் இருள் சூழ்ந்திருக்க, விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்திருந்தான் இளங்கதிர். கோவிலிலிருந்து வந்த சில மணி நேரங்களாக அவ்வாறு தான் அமர்ந்திருந்தான்.
சட்டைப்பையில் வைத்த தாலி நெஞ்சிலேறிய பாரமாக கனத்தது. அவள் ஏதோ பூப் போலே எளிதாக வைத்து விட, அவனுக்குத் தான் இரும்பாக கனத்தது. சட்டெனத் தூக்கி...
அத்தியாயம் 03
மேற்கு மலைத் தொடர்களை ஊர்ந்து செல்லும் மேகக்கூட்டங்களும் எப்போதும் பன்னீர் தெளிக்கும் குற்றாலச் சாரலும் சிதையாத சிட்டுக்குருவிகளின் ரீங்காரமும் சொர்க்கம் என்றால் அவ்வூர் சுந்தரபாண்டியபுரம் தான்!
தேங்கிய நீரில் இரை வேண்டி வெண் நாரை கூட்டங்கள் கூடி தவமிருக்கும் நீண்ட பசுமை வயல்கள், ஜொலிக்கும் சூரியனுக்கு போட்டியிடும் மஞ்சள் மங்கைகளாக நிற்கும் சூரியகாந்தி தோட்டங்கள்...
அத்தியாயம் 02
தென்றல் தவழும் தென்காசியில் கோடையிலும் இளம் வெயிலுக்கு ஏங்க தான் வேண்டும். பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை, ஆகையால் ஊர் முழுவதும் சிறுவர்கள் நிறைந்திருந்தனர். வயலில் தந்தைக்கு சிறிது நேரம் உதவிவிட்டு, மாலை நேரம் புழுதி பறக்க, களத்தில் கபடி விளையாடினான் இளங்கதிர். மழை வருவது போல் கருமேகங்கள் சூழ்ந்து மண் வாசமும் வீச,...
பைங்கிளி பார்வையில் –மித்ரா
அத்தியாயம் 01
குற்றாலச்சாரலின் தூதாய் வந்த குளிர்காற்று அவன் தேகமெங்கும் ஸ்பரிசித்துச் செல்ல, புள்ளினங்களின் புள்ளுவமும் கறவை பசுக்களின் கதறலொலியும் விடியலின் நிசப்தத்தைக் கலைக்க, அவன் மட்டும் கலையாத உறக்கத்தில் கலைய விரும்பாத கனவோடு அமிழ்ந்திருந்தான்.
இன்னும் முழுதாய் வெண்ணிலவும் விடை பெற்றிருக்கவில்லை, பகலவனும் ஒளிபரப்பவில்லை. மங்கிய இருளொளியும் மார்கழி நிகர் குளிரும் தாலாட்டவே,...