Sunday, May 19, 2024

    Paingili Paarvaiyilae 1

    PP 23

    Paingili Paarvaiyilae 2

    PP 18 2

    Paingili Paarvaiyil 3

    Paingili Paarvaiyilae

    அவர் தலையில் பாரத்தை ஏற்றியதை போன்றிருந்தது. அவர் திகைத்து நிற்க, “எந்த நிலம்னு நினைக்குறீங்களா? என் கைக்குள்ள வரக்கூடாதுன்னு கதிர் அப்பா கடைசி வரைக்கும் போறாடுனாரே அதே நிலம் தான். நீங்க நல்லவங்க, நியாயமானவங்க, ஏற்கனவே அனுபவப்பட்டவங்க, பிரச்சனை வேண்டாம்னு நினைக்கிறவுங்க புரிஞ்சிப்பீங்க. பார்த்துச் செய்யுங்க” என்றார்.  ஏற்கனவே உயிர்ப் பலி கொண்ட நிகழ்வு மீண்டும்...

    PP 17 2

    தனவதி மதிய உணவைக் கட்டி வைக்க, அதை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டவள் கருப்பட்டிக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு, அவளே எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.  சந்திரா செல்லும் போதே எதிரே வந்த கருப்பட்டி, கவனித்து விட, அவளோ வண்டியைத் திருப்பும்படி சைகை செய்தாள். திருப்பியவன் அதே பாதையில் அவளுக்கு இணையாக ஓட்டிக்கொண்டு வந்தபடி, “ஏம் மதினி அண்ணனைப் பார்க்கத்...

    Paingili Paarvaiyil 10 1

    அத்தியாயம் 10 புலராத காலை பொழுதில் வரும் புது ஒளியும் வேண்டாமென்பதை போல் இமைகளை இறுக மூடியபடி அரிசியாலையில் ஒரு மரப்பெஞ்சில் படுத்திருந்தான் இளங்கதிர். சந்திராவின் கழுத்தில் தாலி கட்டி முழுதாக ஒருநாள் முடித்து விட, இன்னும் அவன் வீடு செல்லவில்லை. தனக்காகச் சந்திரா இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க இயலாது!...

    Paingili Paarvaiyilae 14 2

    சந்திராவை நோக்கியே வந்த கதிர், “நீ என்ன செய்த இங்க?” என்க, அவன் குரலை எதிர்பாராது சட்டெனத் திரும்பினாள் அவள்.  சின்ன நமட்டுச் சிரிப்போடு கையிலிருந்த காகிதத்தை முந்தானைக்குள் மறைத்தவள், “சும்மா தான், ஒரு கொசு, அதை விரட்டி விட்டுட்டு இருந்தேன்” என்றாள்.  அதைக் கவனித்த போதும், அதற்கு மேல் கதிர் எதையும் கேட்கவில்லை. அவளை அழைத்து...

    Paingili Paarvaiyilae 13 2

    சந்திரவதனி இதை நன்கு கவனித்திருந்தாள். இருந்தும் இவ்வெண்ணம் கதிரின் மனதில் எவ்வளவு ஆழம் பதிந்துள்ளது என்பதை அவள் அறிய முயல, அவன் ஒத்துழைக்காது நழுவியிருந்தான். குலசேகரனின் இழப்பு ஒரு எதிர்பாராத இழப்பு தான் எனினும் அதற்கு முழு முதற்காரணம் என அவள் குடும்பத்தைச் சொல்வதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கதிரிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை எனினும் மனதில்...

    PP 19 2

    காலையிலே வேலையாட்கள் வேலை செய்ய, கதிர் மேற்பார்வை பார்த்து கொண்டிருக்க, சேர்மமூர்த்தி, அவர் உதவியாளர் மற்றும் இருவரோடு வந்தார்.  “கதிரு உடனடியா வேலையை நிறுத்து” என்றவர் அதிகாரமாகச் சொல்ல, “ஏன்? என் இடம் நான் செய்றேன், இதுல உங்களுக்கு என்ன இடைஞ்சல்?” என விஷயம் அறிந்தும் அறியாதவன் போலே கேட்டான்.  முகம் இறுகியவர், “ஏதா இருந்தாலும் உன்...

    Paingili Paarvaiyil 11 2

    “கேள்வி கேட்டா பதில் சொல்லணும் புரியுதா? சொல்லு” என்றவன் மிரட்ட, “நல்ல தான் இருக்காங்க, உடம்புக்கு பிரச்சனை எதுவுமில்லை. தென்னரசு அங்கிளும் தாத்தாவும் திட்டம் போட்டுத் தான் உம்மை எனக்குக் கட்டி வைச்சாங்க” என உண்மையை மறைக்காது உரைத்தவள், துல்லியமாக அவன் முகத்தையும் ஆராய்ந்திருந்தாள். கோபம் கொள்வானோ என்ற எதிர்பார்ப்பு!  “ஹோ..! எனக்கு சந்தேகமிருந்தது அதான்...

    Paingili Paarvaiyil 10 2

    அந்த நம்பிக்கையிலே இன்று கதிரின் முன் மகளுக்காக நிற்க, அப்போதும் சந்திராவை அழைக்காது கதிர் மௌனமாகவே இருந்தான். மனோவிற்கு ஆத்திரம் எல்லை கடந்தது, ஒன்றுமில்லாதவனிடம் தன் தந்தை வேண்டி நிற்பதா? என்ற கோபம்!  “வாங்கப்பா கிளம்புவோம்..” என்றவன் துள்ள, “அப்பா பேசுறார்ல கொஞ்சம் அமைதியா இரு. உள்ளப் போய் உக்காரு” என அதட்டி அடக்கினார் கலைவாணி. அது...

    Paingili Paarvaiyilae 4 1

    அத்தியாயம் 04 நட்சத்திரங்கள் அரும்பும் மைமல் நேரம், முழுதாய் இருள் சூழ்ந்திருக்க, விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்திருந்தான் இளங்கதிர். கோவிலிலிருந்து வந்த சில மணி நேரங்களாக அவ்வாறு தான் அமர்ந்திருந்தான்.  சட்டைப்பையில் வைத்த தாலி நெஞ்சிலேறிய பாரமாக கனத்தது. அவள் ஏதோ பூப் போலே எளிதாக வைத்து விட, அவனுக்குத் தான் இரும்பாக கனத்தது. சட்டெனத் தூக்கி...

    Paingili Paarvaiyilae 12 2

    அதற்குள் அடுப்படியிலிருந்து தோசை வார்த்து எடுத்து வந்து அவன் இலையில் வைத்தார் தனவதி. பார்த்திருந்த சந்திரா சட்னியையும் ஊற்ற, இடையில் கதிரின் அலைபேசி அலற, அதில் திடுக்கிட்டு அரண்டவள் சாம்பாரை கதரின் சட்டையில் ஊற்றியிருந்தாள்.  “ஏய்..” கத்தியபடியே எழுந்தவன், “கொஞ்சமாது அறிவிருக்காட்டி உனக்கு? உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா? அவசரமா கிளம்பும் போது தான் இப்படி...

    PP 17 1

    அத்தியாயம் 17 காலையில் சந்திரா விழிக்கும் முன் ஆலைக்கு கிளம்பியிருந்தான் இளங்கதிர். விழித்தாள்  என்றால் விடமாட்டாள் என நன்கு அறிவான். கருப்பட்டி உணவு பார்சல் வாங்கி வந்திருக்க, அவளுக்கானதை படுக்கைக்கு அருகில் மேசையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். ஒருநாள் முழுவதுமே ஆலைப் பக்கம் சொல்லாதது என்னவோ போலிருந்தது. எழுந்ததுமே அதே எண்ணத்தில் கிளம்பி விட்டான்.  கருப்பட்டி, “என்ன முதலாளி நீங்க...

    PP 22

    அத்தியாயம் 22 இருவரும் உள்ளே வர, வீட்டில் யாருமே உறங்கவில்லை. முன் வாசலில் நுழைகையிலே மனோ சிறிது தடுமாற, சட்டென கதிர் கையை பற்றி நிலையாக நிறுத்தினான்.  “மலை ஏறத் தான் மச்சான் தயவு வேணும்னு சொல்லுவாக, எனக்கு வாசல் படி ஏறவே உன் தயவு வேண்டியதா இருக்கு பாரு. எல்லாம் என் நேரம்ல!” என்ற புலம்பலோடு...

    PP 19 1

    அத்தியாயம் 19  சந்திராவின் வீட்டிற்குள் வருகையிலே கண்கள் வழக்கம் போலே எதிர்வீட்டைப் பார்வையிட, கதிரின் இருசக்கர வாகனம் இல்லை. ஆலைக்குக் கிளம்பியிருப்பான் போலும் என நினைத்தபடியே சென்றாள். வீட்டிற்குள் வந்தவள் நேராகத் தாத்தாவின் அறைக்குள் தான் சென்றாள். அவர் பீரோவைத் திறந்தவள் தனக்கு எழுதிக் கொடுத்த பத்திரங்களை தேடி எடுத்தாள். அதை தன் அலைபேசியில் ஸ்கேன்...

    PP 18 1

    அத்தியாயம் 18 சந்திராவின் முகத்தில் புது பொழிவு, கதிரின் நடத்தையில் துள்ளும் உற்சாகம்! அனைத்தும் தனவதியின் கண்களுக்குத் தப்பவில்லை. திடீர் திருமணம் என்றே நினைத்திருந்த தனவதிக்கு தற்போது நம்ப இயலாது, சந்தேகம்!  சந்திராவின் மீது கதிருக்கு ஒரு வெறுப்புணர்வு வரும் என்றே எதிர்பார்த்திருக்க, அதை அவன் பொய்யாக்கி இருந்தான். தாங்கள் காட்டும் ஒதுக்கத்தில் தன்மானம் பார்த்து சந்திராவே...

    Paingili Paarvaiyil 9 2

    “அதெப்படி வருவான், அவங்க அப்பா இறந்ததுக்கு நாம தான் காரணமுன்னு நினைக்கிறானே பின்ன எப்படி வருவான்? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை..” என்ற கலைவாணியின் புலம்பலுக்கும் பதில்லாது அமைதியாக இருந்தாள் சந்திரா.  வாசலில் வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர் நாராயணனும், வரதராஜனும். முகூர்த்தத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்க, சரியாகப் பாதுகாப்புப்படை காவலர்கள் சூழ வந்தனர் அமைச்சர்...
    அத்தியாயம் 16 ஒளி தராது மறைந்து போன சூரியன், மேக மூட்டமான வானம், இளம் சாரல் காலைப்பொழுதை மந்தமாக்கியது. அருவிக் குளியல் அடித்துப் போட்டது போன்ற அப்படியொரு உடல் வலியை கொடுத்திருக்க, இளங்கதிர், சந்திரா இருவருமே அசந்து தூங்கிவிட்டனர்.   மெல்லக் கண் விழித்த கதிர் கைகளைத் துழாவி கைப்பேசியைத் தேடி எடுத்து மணியைப் பார்த்தான், காலை ஒன்பது...

    Paingili Paarvaiyilae 5 1

    அத்தியாயம் 05 வழக்கத்திற்கு மாறாக உச்சியிலேறிய சூரியன் அக்கினி மழையாக வெப்பக்கதிர்களை வீச, ஆற்றக்கரையோரம் அமர்ந்திருந்தான் கதிர். பொதுவாகவே அப்பக்கம் அதிகம் ஆட்கள் நடமாட்டம் கிடையாது, அதிலும் நண்பகல் நேரம் புள்ளினங்கள் கூட புலப்படவில்லை. கண்ணெதிரே கையளவில் வான்தொடும் பச்சை மலை முகடுகள், அதில் ஒற்றை புள்ளியில் தொடங்கி, உருக்கி ஊற்றிய வெள்ளி நீராய் பெருக்கெடுத்து,...

    PP 20 2

    இடிந்து போய் விழுந்த தனவதி பெரும் குரலில் ஒப்பாரி வைத்து அழ, ரேவதியும் மாலதியும் அன்னையின் பின்னே விசும்பிக் கொண்டிருந்தனர். கதிருக்குத் தந்தையோடு அவன் உயிரே போனது போலிருந்தது, அவனின் மொத்த தைரியமும் அவர் தான், அவர் இழப்பை அவன் நம்புவதற்கே நேரம் தேவையாகிப் போக, கண்ணீர் விடக்கூட இயலாது கல்லாய் இறுகிப் போனான்.  தந்தை...

    PP 20 1

    அத்தியாயம் 20 இளங்கதிர் பள்ளிப் பருவத்தின் மேல்நிலை முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். சந்திராவின் தாத்தா முதல் அனைவருமே சென்னையில் குடியேறி விட்டனர். பெரியவர்கள் கிளம்பும் நேரம் வரதராஜனும் நாராயணனும் வீட்டையும் நிலத்தையும் கவனித்துக் கொள்ளும் படி குலசேகரனிடம் வேண்டினர். அவர்கள் செல்லாவிடினும் அவர் பாதுகாப்பார் தான், பெரியவரே கேட்டுவிட, அது அவருக்கு தெய்வத்திற்கு ஆற்றும்...

    Paingili Paarvaiyilae 4 2

    ஒருவேளை இருளில் தான் சரியாகத் தெரியவில்லையோ என நினைத்தவன் அலைபேசியின் முகப்பு விளக்கை இயக்கி உற்று உற்றுப் பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை. ஒரு ஏமாற்ற உணர்வு அவன் முகத்தில் மின்னி மறைந்தது.  மாடிச்சுவற்றின் உட்புறம் மண்டியிட்டுக் குறுக்கி அமர்ந்த நிலையில் தலையை மட்டும் நீட்டி அவனை ஆராய்ந்து பார்த்தவளுக்குச் சிரிப்பு சிதறியது. கை கொண்டு வாயை...
    error: Content is protected !!