Nin Mel Kaathalaagi Nindraen
மாப்பிள்ளையின் தங்கையான பாரிஜாதத்தையும் வேலை என்று உருப்படியாக எதுவும் இல்லாத மச்சக்காளையையும் அழைத்துவிட்டிருந்தார். பாரிஜாதத்திடம் பக்குவமாக விஷயத்தை எடுத்து கூறி, லிங்கத்திற்குச் சம்மதமா என்று கேட்க, பாரிஜாதம் மறுநாளே வந்து, "அண்ணனுக்குப் பரி பூரணச் சம்மதம். அண்ணி வயித்துல இருக்குற குழந்த எங்க குடும்பத்தோட மூத்த வாரிசு" எனச் சத்தியம் செய்து கூற, ராஜன்...
குரோதம்- 33
அதிர்ச்சியுடன் விழி பார்த்துக்கொண்டிருக்க, "நல்லா கணக்கு போட்ட மருமக பொண்ணே. ஆனா உன்னோட கணக்கு என்னோட பொண்டாட்டிகிட்டவேணும்னா சரியா இருக்கலாம். என்கிட்ட தப்புக் கணக்கா போய்டுச்சே. பாவம்தான்... இனி உங்க இரெண்டுபேரோட குடுமியும் என்னோட கைல. இப்பவே அந்த லிங்கத்துட்ட போறேன்.
அட எதுக்குன்னு பாக்குறீங்களா ? இப்பவே சொல்லிட்டா சப்புன்னு போய்டும். அங்க...
விழியின் புகுந்த வீடு – 23
கதிரவனும் கனல்விழியும் அவனின் பூர்வீக வீட்டின் முன்னால் அதாவது தற்போது லிங்கம் இருக்கின்ற பெரிய வீட்டின் முன்னால் மனமக்களாக நின்றிருந்தனர். உடன் மாறனும் சாந்தினியும் மாலையும் கழுத்துமாக.
புகுந்த வீட்டிற்கு முதன் முதலாய் அடியெடுத்து வைக்கிறாள். முற்றிலும் அந்நியர்கள்; இஃது எல்லாப் பெண்களும் சந்திக்க வேண்டிய ஒன்றுதான் என்றாலும்...
காணுமிடமெல்லாம் நீ - 14
தனக்கு அண்ணியாய் வர போவது யாரென்று நச்சரித்துக் கொண்டே வந்தவளை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தன தேவியின் வார்த்தைகள். முல்லை கொடி என்ற பெயர் விழியன் செவிகளில் இன்பமான இசையை மீட்டியது. அன்னையிடம் கிடைக்கவேண்டிய செய்தி கிடைத்தாயிற்று, இனி தமையனை சீண்ட போக, அவனோ முதன் முதலாக வெக்கப்பட்டான்.
"அட அண்ணா, உனக்கு...
விதியின் மாய சூழல் – 19
"அம்மா…என்னமா சொல்லுறீங்க? மாப்பிள்ளை மாறன் இல்லையா ? கதிரவ மாமாவா ? நீங்க போன்ல கதிர் மாமாதா மாப்பிளைனு சொல்லவே இல்லையேமா. அவரதா காதலிக்கிரியானும் கேட்கவே இல்லையே..." என அதிர்ச்சியுடன் ஏறக்குறைய கோபத்தின் உச்சியிலும் அச்சத்தின் விளிம்பிலும் நின்றிருந்தபடி ஏமாற்றம் அடைந்ததனாலோ ஏமாற்றப்பட்டதாலோ அதிகமான உணர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்த...
நின்மேல் காதலாகி நின்றேன் கனலியே -30
சார் என்ற அழைப்புடன் நெய்தல் பன்னைக்கு வந்து நின்றான் மாரிமுத்துவின் வாக்குமூலத்தைப் படம்பிடித்த காமெரா மேன்.
"என்னையா சார்னு சொன்ன? மேல சொல்லு?" என்ற படி பாண்டி பந்தாவாகக் கேட்க,
"கதிர் சார்கிட்ட இத கொடுக்க வந்தேன். அவரு இல்லைங்களா ?"
"இல்லை! வெளில போயிருக்காரு. என்கிட்ட கொடு. கொடுத்திடறேன்"
"அதுவந்து சார். அவருகிட்டத்தான்...
காதல் சங்கமம் - 32
வீட்டை திறந்தவுடன், சரிவர ஆட்கள் போய் வந்து இல்லாததால் தூசியாக இருக்க, விழி கொஞ்சமும் யோசிக்காமல் சுத்தம் செய்து ராஜனின் படத்திற்கு விளக்கை ஏற்றினாள். மனைவியின் ஒவ்வொரு செய்கையையும் கண்ணெடுக்காமல் கதிரவன் பார்த்துக்கொண்டிருக்க, விழிக்கு பார்வையை ஏறெடுத்து பார்க்க முடியாத அளவிற்கு நாணம் ஒட்டிக்கொண்டது.
இருவரும் ராஜனிடம் மனதார ஆசி வேண்டிய...
யாரிவனோ- 4
என் மரியாதை நிலைக்க
உன் சுயமிழந்து
செல்கிறாயே
நீ சுயமிழந்தாலும்
சுயம்பாய் மாறினாய் என்னுள்
உன் நினைவுகளை
என் நினைவில்
விட்டுச் செல்கிறாய்
இனி என்றும் பாதுகாப்பாக
உன் செயல் என் இருதயத்தில்
நன்றியுடன்
---------- கதிரவனைக் கண்ட கனல்விழி
வீட்டிற்கு வந்த கனல்விழியினுள் கனலை போலவே கோபம் தகித்துக்கொண்டிருந்தது. "எவ்ளோ தைரியமிருந்திருந்தா லவ் பன்றேன்னு சொல்ல சொல்லிருப்பான். பொம்பள பிள்ளைங்கனா அம்புட்டு லேசா போய்டுச்சா. அவன…. இன்னு நாலு...
தாயும் மகனும், தந்தையும் மகளும் - 18
பார்வதி போட்டதைப் போட்டபடி கிளம்ப, பாரிஜாதம் பார்வதியின் வழியை மறித்து நின்றிருந்தார்.
"அண்ணி, கதிரவண்ட பேச போறீங்களா?"
"ஆமா அண்ணி"
"சந்தோசம். ஆனா அவனை நான் பண்ணின கொடும கொஞ்சமா நஞ்சமா, இப்ப கூட அண்ணனுக்காத்தான் ஒத்துக்கிட்டேன். நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா சத்தியமா சொல்லுறே, கல்யாணம் கட்டிகிட்ட புறவு...
கல்யாணவீட்டின் கலாட்டாக்கள் -8
"நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு? எதுக்கு இந்தக் கொலவெறி" எனப் பாண்டி கேட்க,
சக்கரையும் அதையே ஆமோதித்தான்.
"இப்ப ரெண்டுபேரும் ஏன் பேய உளவு பாக்க சொன்னமாரி பதறுறீங்க?" எனக் கேட்க,
"பேய கூடப் பாத்துடலம்மா. ஆனா இந்தச் சாமியார பாக்குறது ரொம்பக் கஷ்டம். அதுவும் அவன் கூட இருந்துகிட்டே அவன் போறவர...
நின்மேல் காதலாகி நின்றேன்!...
கதிரவனும் கனல்விழியும் - 1
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்......
தனித்திருக்கும் நிலவும்
தாகம் தனிக்காத கடலும்
வான் நிறைந்த காற்றும்
சலசலக்கும் தென்னங்கீற்றுகளும்
என் தனிமையை விரட்டுவதால்
என்னுடைய சொந்தங்களாயினவோ ?
இரண்டு தென்னம் பாலைகளுக்கு நடுவே, நிலவின் ஒளி ஊடுருவி கதிரவன் அமர்ந்திருந்த கயிற்றுக் கட்டிலில் வெளிச்சத்தைத் தெளித்திருந்தது. அனைத்தும் இருந்தும் இல்லாதவனாய் அமர்ந்திருந்தான். அருகிலே சிறு ஓட்டுவீடு. நீளமான ஒரே...
சாந்தினி - 11
அடுத்தடுத்து வந்த நாட்கள் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தது. விழி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு சென்றிருந்தாள். தேவியின் உடல் நலமும் தேறியிருந்தது. கதிரவனின் இறால் பண்ணை வேலை ஐம்பது சதவீத நிறைவு பெற்றிருந்தது.
இப்படியே நாட்கள் தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்க, கனல் விழியன் நெஞ்சில் கதிரவனின் மீதான காதல் பிறந்து...
"அவரு இங்கையா? இருக்கவே இருக்காது. ஒரு நிமிஷம் இங்க இருக்காரோன்னு யோசுச்சிட்டேன்..." என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
அப்பொழுது சட்டென்று படகு வெட்டி இழுத்தது போலப் பிரம்மை அவளுள். மூழ்கியிருந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள், சிலுவையிடம், "தாத்தா...என்ன ஆச்சு ?'' எனக் கேட்க,
"தெரியல தாயீ. மக்கர் பண்ணுது. செத்த பொறுமா. என்னனு பாக்குறே. ஒத்தாசைக்குக் கூட...
சாந்தினியின் சம்மதம் - 17
அடுத்து வந்த நாட்கள் பாரிஜாதத்தின் நரி தந்திரத்தில் காய்கள் நகர்த்தப்பட்டது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்லியது பொய்யில்லை என்பது போல, பணத்திற்காகப் பாரிஜாதம் பத்தாயிரம் கூடச் செய்யும் நிலையில் இருந்தார்.
மச்சக்காளை கதிரவனிடம் தொழிலில் சிறிது ஒதுங்கியதோடு இல்லாமல் முன்பை போல எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்ளாமல் இருந்தார்....
பாரிஜாதத்தின் திட்டம் -25
"யாரு இப்படிக் கதவை தட்றது?" எனப் பார்வதி கேள்வியாகக் கேட்க, விழி, "தட்டல அத்த. உடைக்கிறாங்க. வேற யாரா இருக்கும் எல்லாம் என்னோட சின்னமாவா தான் இருக்கும்" என நக்கலாகக் கூறியபடி சென்று கதவை திறக்க, அங்கே பாரிஜாதமே. விஷம பார்வையுடன் நின்றிருந்தார்.
"நான் சொல்லல. இந்த அம்மாவத்தான் இருக்கும்னு" என வார்த்தையாக...
உடனடியாக மறுநிமிடமே, "இப்போ மட்டும் என்ன அதே தைரியம் இப்பவும் இருக்கே. என்ன கல்யாணம் பண்ணிகிட்டத்தலையும் சரி. இப்ப இவனுங்கள மறுபடியும் அடி பிண்ணியத்திலையும் சரி" என அவனது மனம் மெச்சுதலாக எண்ண, அவனது மதியோ, "ஓ அதுனாலதான் பொண்டாட்டின்னு உரிமையா சொன்னியா ?" என இடையில் புகுந்து கேள்வி எழுப்ப. அதற்கு அவனிடம்...
"நீ யாருனு சொன்ன ?"
"லிங்கம் அய்யா. குவாரி வச்சிருக்காருல. "
"உன்ன இப்படிப் பண்ண சொன்னது யாரு ?"
"அதோ நிக்கிறாரே! அவருதான்" என மச்சக்காளையைக் கை காட்ட, அங்கோ மச்சக்காளை லிங்கத்துடன் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
"டேய் பொய்ச் சொல்லாதடா!" எனக் கதிரவன் கூற,
"இல்ல சார்! சாமி சாத்தியமா நிசந்தே சொல்றேன். அவரு தான் சொந்த மச்சானுக்கு...
இருமனமும் திருமணமும் – 22
"ஒரு நிமிஷம்" எனக் கனத்த அமைதியில் ஊடுருவிய குரல் பார்வதியுடையது. கந்தசாமி என்ன என்பதாய் நின்றிருக்க, அவரது தோரணையே எதையும் கேட்கவோ பேசவோ விருப்பம் இல்லாததைக் காட்டவே,
அதைப் புரிந்துகொண்ட பார்வதி, "அண்ணே! உங்கள நிப்பாட்டுனது விளக்கம் சொல்லவோ விளக்கம் கேட்கவோ இல்ல" என ஆரம்பிக்க,
பாரிஜாதம் இடை புகுந்து,...
யாரிவளோ-2
கண்ணீராலே பூக்கின்றவள் தான்
பெண்ணென்ற எண்ணத்தை
கையோடு கொய்து செல்கிறாள்
பெண்ணவளின் தைரியத்தாலே - கனல்விழியை முதன் முதலில் பார்த்த கதிரவன்.
அனைத்து பள்ளிகளிலிருந்து மாணவர்களும் மாணவிகளும் தம் தம் பள்ளியின் சார்பாகவும் வகுப்பின் சார்பாகவும் கூடியிருக்க, பெண்கள் கூட்டத்தை அரும்பு மீசை கொண்ட காளை கூட்டங்கள் அந்தந்த வயதிற்கே உரிய ஆர்வ பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
வரிசை வரிசையாக மரப்பலகை...
விழியின் பார்வையில் காதல் – 26
"மாமா" என ஓசைவராமல் உதடைசித்து மெல்ல முணுமுணுத்துக்கொண்டவள், வேகமாகக் கைபேசியின் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்து, "மாமா... மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா. அப்பா எப்படி இருக்காங்க மாமா ? ஹெலோ மாமா இருக்கீங்களா ?" என எதிர்முனையில் முருகேசன் பேசும் முன்பாகப் படபடவென்று பேச, "பாப்பா ஏன்மா...