Narungkavithai Avalo
அத்தியாயம் 20
வைகறை பொழுதில் பட்சிகள் படபடக்கும் ஒலியும் கீச்சொலியும், ஜன்னல் தாண்டி செவிகளில் நுழைந்த போதும் அசதியில் அயர்ந்திருக்கும் உடலை அசைத்து எழ முடியவில்லை அவளால். இன்னும் விழி திறக்காது சோம்பலில் இருந்தவளுக்கு எழும் எண்ணம் கூட இல்லை. யாரேனும் எழுப்பி, தூக்கிவிட்டால் கூட சுகமாக இருக்கும்.
கன்னத்தில் அழுத்தத் தீண்டும் கலாபம் போன்று ஏதோ...
அத்தியாயம் 19
ஒரு சுப நாளில் ரவியோடு அவன் குடும்பம் மொத்தமும் சுபத்ரா வீட்டிற்கு வந்திருந்தனர். விஜய்க்கு திருமணம் என்பதால் பவானிக்கு மகிழ்ச்சி, பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீக்கு மகிழ்ச்சி.
சுபத்ராவின் குடும்பத்தோடு அனைவருமே நல்ல நேரம் பார்த்து ஆராவின் வீட்டிற்குச் செல்ல, ஆராவின் பெற்றோர்கள் இன்முகமாக வரவேற்றனர். சுபத்ரா தன் வீட்டினரை அறிமுகப்படுத்த பொதுவாக பேசிக்...
“அதுங்க, இரண்டு பேரும் விரும்புனது உண்மை தான். நீங்க சம்பந்தம் வேண்டாம்னு சொன்னதால எங்க அண்ணனுக்கு பிடிக்கலை அதனால காதல் வேண்டாம்னு இவன் சொல்ல, அவளும் போடான்னு கோபப்பட்டு கத்திட்டு போயிட்டா. பெண் பாவம் பொல்லாதது சும்மா விடுமா? அதான் இப்போ இவன் தவிக்கிறான்” என அசராது வெடியைக் கொளுத்திப் போட்டாள்.
ரவி அதிர்ந்தே விட்டான்!...
அத்தியாயம் 18
நள்ளிரவை நெருங்கும் நேரம், விஜய் இன்னும் வீடு வரவில்லை. விஜய் வரத் தாமதமாகும் எனச் சொல்லி விட்டதால் பவானியும் ஸ்ரீயும் உறங்கியிருந்தனர். கௌஷிகா வாசலை வெறித்தபடி ஹாலில் அமர்ந்திருந்தாள்.
ரவி பல முறை முயன்று பார்த்தும் அழைப்புகள் ஏற்கப்படவில்லை. பொறுப்பற்றவன் இல்லை வந்துவிடுவான் தான், இருந்தாலும் சிறு பயம். இன்று தான் ஆராவோடு சண்டையிடுவதை...
“என்ன கௌஷி நீ இங்க?” எனக் கேட்க, “ஒரு விசாரணை அண்ணி, நீங்களும் உள்ள வாங்க” என அழைத்தாள்.
உள்ளே வந்த சுபத்ராவிடம் கௌஷி நடந்த கதையை விவரிக்க, “ஏன் கௌஷி நேத்தே சொல்லலை?” எனக் கேட்டாள் சுபத்ரா.
“விசாரிச்சிட்டு சொல்லாம்னு இருந்தேன் அண்ணி, நீங்களும் வந்துட்டீங்க வாங்க சேர்ந்தே விசாரிப்போம்” என அழைத்தாள்.
விஜயின் மீது விருப்பம்,...
அத்தியாயம் 17
இரவு நேரம் மேசையின் மீதிருந்த கௌஷியின் அலைபேசி அதிர்ந்தது. யாரெனப் பார்த்தவள் ரவிக்குச் சிறு சத்தமும் கெட்டுவிடாதபடி எழுந்து முன் வாசலுக்கு வந்தாள். சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு ஆசுவாசமான மூச்சோடு அட்டென் செய்தாள்.
“ஹலோ... ஆரா.. “
“ம்ம், அக்கா தனியா தானே இருக்கீங்க? இல்லை உங்க கொழுந்து பக்கத்துல இருக்காரா?”...
அத்தியாயம் 16
ரவியிடம் தேவைக்கென சுருக்கமாக இருவார்த்தைகளில் பேசுவாள் அதுவும் பவானி, விஜய் முன் மட்டும் தான் தனிமையில் எனில் ஸ்ரீயிடம் தான் சொல்லிவிடுவாள். வாரத்திற்கு ஒன்று அல்லது இரு முறை தந்தையிடம் பேசுபவள் தற்போது அடிக்கடி பேசினாள்.
பேசும் போதெல்லாம் எப்போது வருவீர்கள் அப்பா? என அடிக்கடி கௌஷி கேட்க, எதார்த்தமாக அது ரவியின் காதுகளில்...
அத்தியாயம் 15
நான் இல்லாத போது என்ன வேலை செய்திருக்கிறாள் இவள்? என் அன்னையிடம் அனுசரணையை பெரும் முயற்சியா? என்ன தைரியம் அவளுக்கு? பயமற்ற இவள் விளையாட்டுத்தனங்களுக்கு எல்லையே இல்லாது போயிற்று! எனக் கொதித்துக் கொண்டிருந்தவன் அவளைக் காணும் வேகத்தில் அலுவலகம் வந்திருந்தான்.
ஆராதனாவும் அவனை காணும் எண்ணத்தில் தான் இருந்தாள். பிடிக்கவில்லை என நேரடியாகச் சொல்லிவிடின்...
“ஷ்..தெரியாத மாதிரி நடிக்கணும் புரியுதா..?”
“எதுக்கு..?”
“ம்ம், நான் உன் ஆக்டிங் ஸ்கில் எப்படின்னு செக் பண்ணப் போறேன்”
“ஹே..! ஆக்டிங்ல ஹையஸ்ட் அவார்ட் என்ன ஆரா?”
“ம்ம்..ஆஸ்கர்..”
“அப்போ எனக்கு நீ அது வங்கித் தரணும்..” என்க, இரு கட்டை விரல்களையும் உயர்த்தி சம்மதம் தெரிவித்தவள், பவானி வருவதைக் கவனித்ததும் வேகமாக எழுந்து சோஃபாவில் அமர்ந்தாள்.
“பாட்டி யார் இந்த ஆன்ட்டி?”...
அத்தியாயம் 14
தெரு முக்கில் இருக்கும் சிறு அம்மன் கோவில். வெள்ளிக்கிழமை மாலை என்பதால் மங்களகரமான இசையாலும் சுகந்தத்தாலும் நிறைந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள், அதில் பெரும்பாலும் நடுத்தர வயது பெண்கள் தான் நெய் விளக்கேற்றுவது அம்மனுக்கு மாலை சாற்றுவது என வேண்டுதலில் இருந்தனர்.
நீல நிற சில்க் காட்டன் புடவையில், காதோர தலை முடிகளைக் கோர்த்து...
விஜய் மீண்டும் முறைக்க, “சரிடா, போனா போகுது போற போக்குல ஒரு லவ் தானே பண்ணித் தொலையேன்” என்க, பொறுக்கமுடியாமல் மேசையிலிருந்த நோட் பேடை எடுத்து அவன் முதுகில் மொத்தினான்.
“போற போக்குல அந்த நாயை ஷூன்னு விரட்டிட்டு போங்குற மாதிரி அசால்டா சொல்லுற? லவ்டா..!”
“லவ் தானே விஜய்..”
“ஏன் மச்சான் என்னைப் பத்தி தெரியாதா உனக்கு?”
“தெரியும்...
அத்தியாயம் 13
ஆராதனாவின் பிடிவாதம், உறுதியை விஜய் அறிந்திருக்கவில்லை. அவன் எண்ணத்தின் வடிவத்திற்கு எதிர் பிம்பமாய் இருந்தாள். அவளைப் பொறுத்தவரைக் கடனுக்காக அல்லாது கல்யாண வாழ்க்கை என்பது இன்பமாய் அனுபவித்து வாழ வேண்டியது. அதில் தனக்குப் பிடித்தவனே துணையாய் வேண்டும் என்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் முயன்று பார்த்துவிடும் உறுதியில் இருந்தாள்.
இதுவரையும் அவன் அவளை...
அத்தியாயம் 12
அன்று தன் தோற்றத்தில் அதிக கவனம் எடுத்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு, நடையிலொரு உற்சாகத் துள்ளலோடு காதல் பாடலொன்றை முணுமுணுத்தபடி அலுவலகம் வந்தாள் ஆராதனா.
ஏன், எப்போது, எதனால் என்றெல்லாம் தெரியாது ஆனால் அவனை பிடித்திருந்தது. நலம் நாடும் நல்லுள்ளம், ஆளுமையல்லாத ஒரு தோழமை, அரிதாரமல்லாத வசீகரம், இது தான் என்றில்லை ஏதோ ஒன்று...
“அவங்க தான் எனக்கு ட்ரைன் பண்ணுவாங்க, கம்மிங் ட்வென்டி சமிட் பண்ண வேண்டிய பிராஜக்ட் டிலே ஆகுது, நான் பண்ண கோடிங்ல தான் ஏதோ எரர். அவர் இருந்தா கிளியர் பண்ணுவாரு..”
“ஏய்..ஸ்டாப்..ஸ்டாப்..இதுக்கா அவனைப் பத்தி கேட்ட?”
அவள் தலையாட்ட, “அதை உங்க டீம்ல இருக்குற வேற யாருடையாவது ஹெல்ப் கேட்டு சால்வ் பண்ணிக்க வேண்டியது தானே!...
அத்தியாயம் 11
மிதமானதொரு மழை கொட்டி அடங்கியிருந்தது. சுபத்ரா அறைக்குள் வர, “என்ன சொன்னான் உன் தம்பி?” என்றார் ஜெய்பிரகாஷ்.
“மாமாகிட்ட சொல்லிடு அக்கான்னு சொன்னான்”
“நிஜமாவா..! மாமான்னா சொன்னான்..?” அவர் சந்தேகமாகக் கேட்க, “பின்ன என்ன மங்கா மடையனா சொல்லப்போறான்?” என்றாள்.
“நல்ல யோசிச்சிப்பாரு, இத்தனை வருஷத்துல ஒருநாளும் அவன் அப்படிச் சொன்னதில்லையே..?”
யோசித்து பார்த்தால் சுபத்ரவிற்கும் அப்படிதான் தோன்றியது,...
அதே நேரம் அத்தெருவின் திருப்பத்தில் கார் ஒன்று நுழைத்து அவர்களை நோக்கி வர, அதன் முகப்பு விளக்கு ஒளியில் கண்ணகள் கூசியது. அதையும் விட அவனை நோக்கி வருகையிலே ஆராவின் வீட்டினரோ அக்காவின் வீட்டினரோ என நினைக்கையிலே அவன் அருகில் வந்து நின்றிருந்தது அந்த கார்.
அக்காவின் வீட்டினர் ஒரு பார்வை அவனை கீழிறக்கிப் பார்த்தாலும்...
அத்தியாயம் 10
ரவியின் வீட்டு வேலைகளும் பெரும்பாலும் முடியும் நிலையை நெருங்கி இருந்தது. ஆராதனா வீட்டில் அவள் அண்ணன் அஸ்வினுக்கு பெண் பார்க்க தொடங்க, அவனோ தங்கைக்குப் பின்னே தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதாமாக உரைக்க, அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கியிருந்தனர். ஆராதனாவின் பெற்றோர் அது குறித்து சுபத்ரா, ஜெயபிரகாஷிடமும் தெரிவித்திருந்தனர்.
தர்ஷினியும் ஆராதனாவும்...
அத்தியாயம் 09
அன்று காலை அலுவலகத்தில் நுழைந்ததுமே ஆராவை தேடிய விஜயின் கண்கள் எங்கும் காணாது ஏமாற்றமடைய, தன் இருக்கையில் சென்றமர்ந்தான். பக்கத்து இருக்கையிலிருந்த அகில் புறம் திரும்பியவன், “டேய் மச்சான் அந்த அராத்து எங்கடா?” என்றான்.
அகிலோ சந்தேகப் பார்வையும் மெல்லிய சிரிப்புமாய் பார்க்க, “என்ன லுக்?” என அதட்டினான் விஜய்.
“என்னடா நடக்குது உங்களுக்குள்ள?”
“நத்திங், ஓவரா...
பார்ப்பதற்கே ரௌடி போன்று இருந்தவனிடம் சில நிமிடங்களாக யாருமின்றி வாதிட்டுக்கொண்டிருந்தாள். அது வரையிலும் உள்ளுக்குள் ஒரு பயம், விஜயின் வரவை கண்டதும் அத்தனை ஆசுவாசம், ஒரு தைரியம்!
“நீ தாமே என் வண்டியில இச்சே, எம்மா பத்திரமா பந்துஷா வச்சிருப்பேன் தெரியுமா என் வண்டியே?” என்றவன் கத்த,
“இல்லை நான் ரிவர்ஸ் வரும் போது நீங்க தான்...
அத்தியாயம் 08
அந்த வார இறுதியில் சுபத்ரா அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள். அவளை வரவேற்ற பவானி, “பேரனை கூட்டிட்டு வரலையா..?” என்க, “அவனுக்குக் காய்ச்சல் இப்போ தான் சரியாகியிருக்கும்மா, அதான் அலைச்சல் வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டேன்” என்றாள்.
மனதில் ஏக்கமிருந்த போதும் பேரனின் நலம் விசாரிக்க, பதில் உரைத்த சுபத்ரா, “பொண்ணு வீட்டுல என்னம்மா சொன்னீங்க? அவர்கிட்ட...