Friday, May 3, 2024

    Mazhaichaaralaai Ennullae Nee

     அத்தியாயம்  -  16(1)  கோவிலுக்கு சென்று வந்து மூன்று நாட்கள் முடிந்துவிட்டது.. சுபா காலையில் காலேஜ்க்கு கிளம்பி கொண்டிருக்க தருண் பள்ளிக்கு சென்றிருந்தான்.. தன் கழுத்தில் இருந்த நோம்பு கயிறை கழட்டியவர்கள் மூன்று வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு புழக்கமில்லாத கிணற்றில் போடலாம் என முடிவு செய்து சுபாவிடமும் வாங்கியவள் அந்த கிணற்றை நோக்கி நடந்தாள்..   “ஸ்ரீ அக்கா இரு நானும் வரேன்..” கத்தியபடி...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ   அத்தியாயம்  -  15   இரண்டு நாட்கள் கழித்து அன்று மாலை ஹரிஷ் சுபாவையும் அவள் குடும்பத்தையும் தன் கடைக்கு வரச் சொல்லியிருந்தான்... ஆடி தள்ளுபடிக்கு நிறைய புது ரகங்கள் வந்திருப்பதாக சொல்லவும் ஸ்ரீயும் சுபாவும் தன் தம்பியோடு கிளம்பிவிட்டனர்..தாத்தாவும் அம்மாவும் வரவில்லை என்று சொன்னதால் ஹரிஷ் தன் காரில் அழைத்து வந்திருந்தான்..   ஸ்ரீ...
    ஸ்ரீயின் தாத்தாவும் அம்மாவும் உள்ளே வந்தவர்கள் சூர்யாவை பார்க்கவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவனை வரவேற்று பேச துவங்கியிருந்தனர்..   அங்கு பெங்களூரில் இருந்த கிஷோரோ எப்போது பாட்டியையும் மனைவியையும் ஏமாற்றிவிட்டு ஸ்ரீயை பார்க்க வருவோம் என நேரம் பார்த்து காத்திருந்தான்.. திருமணத்திற்கு முன்னரே அவன் பாட்டிக்கு அவன் குணம் தெரியவும்தான் நிச்சயதார்த்தம் அன்றே திருமணத்தை நடத்தியிருந்தார்..   அன்று...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ  அத்தியாயம்  -  14   சூர்யா இங்கு வருவான் என ஸ்ரீ நினைத்தே பார்க்கவில்லை. இன்று காலையில்தான் அவள் தாய் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து விட்டார், ” நீயும் உன் வீட்டுக்காரும் பேசிக்கிறிங்களா இல்லையா..? அன்பா அனுசரனையா இருக்கிங்களா இல்லை எப்பவும் சண்டைப்போட்டுக்கிட்டு இருக்கியா ..??” என ,   “இல்லம்மா ஒன்னும் பிரச்சனை இல்ல.. நல்லாத்தான் இருக்கோம் ..டெய்லியும் போன்ல பேசுறாங்க..!!”   “ஏண்டி நீ என்ன...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ   அத்தியாயம்  -  13   தன் பக்கத்தில் படுத்திருந்த சூர்யாவை பார்த்தவளுக்கு நம்பவே முடியவில்லை... அவங்க தானா..!!நம்பமுடியாமல் அவன் கையை நறுக்கென்று கிள்ள, இவள் முழிப்பதை பார்த்தவுடன்  வேண்டும் என்றே கண்ணை மூடிப்படுத்திருந்தவன், “ ஐயோ ராட்சசி என்னடி பண்ற..??”   “ஹிஹிஹி.. நீங்கதானான்னு டெஸ்ட் பண்ணிபார்த்தேன் நீங்கதான்..!!” “அடிப்பாவி கிள்ளியே அரைக்கிலோ சதையை எடுத்திட்டியே??” தன் கையை தேய்த்து விட்டவன் அவள் கால்மேல்...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ   அத்தியாயம்  -  12   நாட்கள் அதன் போக்கில் செல்ல திருமணம் நடந்து ஒன்றரை மாதம் முடிந்திருந்தது.. திடிரென திருமணம் நடந்ததால் சூர்யாவுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்க ஸ்ரீயுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை..    காலை ஐந்து மணிக்கே எழுந்து கொள்பவன் வேலைநடக்கும் எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு மதியம் பனிரெண்டு மணிக்குத்தான்...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ   அத்தியாயம் -  11   சூர்யா அந்த இரவில் சத்தமிட்டு சிரிக்கவும்,” ஐயோ இப்படி சிரிக்காதிங்க யாராச்சும் கேட்டா பயந்திடமாட்டாங்களா…??” அவன் வாயை மூட, அதை முத்தமிட்டு கொண்டே அவள் முகத்தை தன்னை நோக்கி இழுத்தான்..   தன் உள்ளங்கையில் அவன் முத்த சூட்டோடு அவள் மீசை முடிகளும் உறுத்த கையை படக்கென்று எடுக்கவும் தன் அருகில் தெரிந்த...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ   அத்தியாயம்  -  10   ஸ்ரீ தன் சட்டையை பிடித்து உலுக்கவுமே அதுவரை ஸ்ரீயோடு ஒன்றி வேறு உலகில் இருந்தவன் தன் சுயநினைவுக்கு வந்துவிட்டான்…  இப்போதுதான் தான் சொன்ன வார்த்தையின் தவறை உணர்ந்தவன், ஸ்ரீ அவனை ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன் அதுவும் தன்னோடு சென்ற போதுதான் என்ற சொன்னவுடனேயே தவறு ஒரு சதவீதம்கூட ஸ்ரீமேல் இல்லை...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ             அத்தியாயம்   -  9   கிஷோர் முதல்நாளே ஊருக்கு வந்திருந்தவன் பெரிய ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிவிட்டு, மறுநாள் பகல் பொழுதை நெட்டி தள்ளிவிட்டு மாலை ஐந்துமணிக்கே மண்டபத்துக்கு வந்துவிட்டான்.. தான்தான் மிகப்பெரிய பணக்காரன் என நினைத்திருந்த கிஷோருக்கு இங்கு வந்த பிறகுதான் சூர்யாவும் இவ்வளவு பெரிய வசதியுள்ளவன் என்பது தெரிந்தது..   தன்னுடன் படிக்கும் காலத்தில் இருந்து...
    தன்னை சுற்றி ஆண்கள் மட்டுமே இருப்பதை பார்த்தவன் கமலியை அழைத்து “ஸ்ரீக்கு ஜூஸ் எதாச்சும் கொடு…? நீ போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு நான் இப்ப வர்றேன்??” அவளை மணமகள் அறைக்கு அனுப்பி வைத்தான்   சில வருடங்களுக்கு பிறகு பிரண்ட்ஸ்களை ஒன்றாக பார்ப்பதால் இவனுக்குள்ளும் உற்சாகம் கரை புரண்டோட அவர்களுடன் அரட்டையில் ஈடுபட்டான்... கிஷோரைக்கூட சற்று மறந்து விட்டான்...   ஸ்ரீக்கு ஜூஸ் கொடுக்கச் சொன்னவுடன்...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம்  -  8   சூர்யா தன் கையில் முத்தமிடுவான் என ஸ்ரீ எதிர்பார்க்கவே இல்லை…...தன் கையில் மருதாணி டிசைனைதான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நினைத்திருந்தவள் பச் என்ற சத்தத்தில் சூடான அவன் இதழ்களோடு மீசையும் குறுகுறுப்பு மூட்ட  சட்டென அவனிடமிருந்து கையை பறித்தவள் கண்கள் சாசர்போல விரிய அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்... கையை பறிக்கவும் சூர்யாக்குள் ஏமாற்றம்...
    சூர்யா தனக்கு ரிசப்சனுக்கு போடுவதற்கென கோர்ட்டை செலக்ட் செய்து கொண்டே அவளை பார்வையிட அவளும் அடுத்தடுத்து அவர்கள் எடுத்துப் போட்டதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்... அதில் ஒன்று அவளுக்கு மிகவும்பிடித்து போக அதையே எடுக்க சொல்வோமா என நினைத்து அவள் சூர்யாவை பார்க்க அவன் வேறொன்றை கையில் வைத்திருக்கவும் எதுவும் சொல்லாமல் கீழே வைத்து விட்டாள்...தான்...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ       அத்தியாயம்   -  7   ஸ்ரீ கையெழுத்து போட்டிருந்த டைவர்ஸ் பேப்பரை பார்க்கவும் சூர்யாவுக்கு ச்சே.... என்றானது.. இது இவ கைக்கு எப்படி போச்சு...போனா அவ கையெழுத்து போடலாமா..... அவனுக்கு புஸ்புஸ்ஸென்று கோபம் பெருக அவன் ஒரு மனமோ டேய் நீ வக்கில்கிட்ட பேசி டைவர்ஸ் பேப்பர ரெடி பண்ணினது தப்பு இல்லை......
    அங்கு மாடிக்கு சென்ற ஸ்ரீ அறைக்குள் நுழைய போக ப்ரியா” இந்தாங்க அண்ணி இத அண்ணா பீரோவுல வைங்க...??”கையில் இருந்த பைலை கொடுக்கவும்... அதை வாங்கி சென்றவள் கட்டிலில் வைத்துவிட்டு பாத்ரூம் சென்றுவிட்டு திரும்ப பேப்பர் சில சிதறி கிடக்கவும்   “ அடச்சே காத்துல பறந்திருச்சா??” என்றபடி கீழே குனிந்து அந்த பேப்பர்களை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க... ஒரு பேப்பர்...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ      அத்தியாயம்  -  6     சுபாவும் தருணும் வாயால் சண்டைப்போட்டவர்கள்... கொஞ்சநேரத்தில் அந்த சண்டை அடிதடியாக மாறியது... தலகாணியை எடுத்து இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்ள அந்த கூட்டணியோடு இப்போது ஸ்ரீயும் சேர்ந்து கொண்டாள்.. ஹரிஷோ அவள் சண்டை போடும்போதெல்லாம் அவன் முகத்தில் படிந்து படிந்து மீண்ட அவள் வயிற்றன் மென்மையை உணர்ந்தபடி...
     ஸ்ரீயையும் சுபாவையும் ஒரு பார்வை பார்த்தவர்..”.இவங்களுக்கு கைகழுவ தண்ணியெடுத்து கொடுங்க... சாப்பாடு எடுத்து வைங்க..??” உத்தரவிட...ஸ்ரீக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை...தாத்தா நம்மகிட்ட பேசிட்டாரா....உற்சாகமாக சூர்யாவை அழைத்துக் கொண்டு கிணற்றடிக்கு செல்ல...   ஹரிஷோ தன் மனைவியின் ஒரு அணைப்புக்காக அவளை உள் அறைக்குள் கூட்டிச் சென்றான்... இருவரும்  சேலை அணிந்து தலை நிறைய மல்லிகை பூ வைத்திருந்தனர்.. .ஹரிஷ்க்கு தன்...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் -  5   ப்ரியா ஸ்ரீயை சுற்றி “அண்ணி அவுட்ட்ட்.....????” என்று சத்தமிட்டதில் குடும்பமே வெளியில் வந்திருந்தது ..தாத்தாவை மட்டும் காணவில்லை.. ஸ்ரீயின் தங்கை சுபஸ்ரீ... அவள் கணவன் ஹரிஷ்... ஸ்ரீயின் தம்பி தருண் ... இன்னொரு பையனும் நிற்க ஸ்ரீயின் தாய் சூர்யாவை வரவேற்றார்… சூர்யாவும் இவர்கள் அனைவரையும் பார்த்தவன் ஸ்ரீயிடம் கேட்ட கேள்விக்கு...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ   அத்தியாயம்  -   4        சூர்யாவும் ஸ்ரீயும் மாடியிலிருந்து கீழே இறங்கி வரும்போதே அவன் அப்பத்தாவின் கோபக்குரல் சத்தமாக கேட்டது... ஸ்ரீயின் தாத்தாவும் அம்மாவும் அவருக்கு எதிரில் நின்று கொண்டிருக்க சுபத்ரா ஒரு ஓரமாக கையை பிசைந்துகொண்டிருந்தார்.. அப்பத்தாவோ அவர்களோடு சண்டைப்போட்டு கொண்டிருக்கவும் அதை பார்த்த  ஸ்ரீக்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது.....தன்னால்தான் அவர்கள்...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ - அத்தியாயம்  -   3   பால்கனியில் இருந்து போன் பேசி முடித்துவிட்டு சூர்யா தன் அறைக்குள் வர அங்கு ஸ்ரீநிதி நல்ல உறக்கத்தில் இருந்தாள்... அவளை அருகில் சென்று பார்க்க அவள் குழந்தை முகம் அவனை வசிகரீத்தது.... சித்து முகம்……தன் இரு கைகளையும் கழுத்துக்குள் வைத்தபடி தூங்கி கொண்டிருந்தாள்.. நேற்றிலிருந்து அவளிடம்தான் கோபப்பட்டதை...
    மழைச்சாரலாய் என்னுள்ளே நீ - அத்தியாயம்   -   2                                                       ஸ்ரீநிதியை தன் அறைக்கு அழைத்து சென்ற ப்ரியா தன்னிடம் இருந்த சுடிதாரை கொடுத்து மாற்றச் சொல்ல அவள் அப்படியே குனிந்தபடி தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள்...   “என்னாச்சு அண்ணி... திடிருன்னு கல்யாணம் நடந்ததால அண்ணாவ நினைச்சு பயப்படுறிங்களா... அவங்க ரொம்ப நல்லவங்க அண்ணி...??”அவள் கையை பிடித்தபடி பேச ஆரம்பித்தாள்...   இந்த...
    error: Content is protected !!