Advertisement

 அத்தியாயம்  –  16

சாகனும்னு முடிவு பண்ணிட்டா உன்னை ஒருவழியாக்காம சாகமாட்டேன்… உன்னோட அழகு என்னை பித்து பிடிக்க வைச்சிருக்கு… ஒழுங்கா இருந்தா ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கலாம் இல்லையா உன்னை அனுபவிச்சிட்டு இந்த விசத்தை உனக்கு ஊத்திவிட்டுட்டு நான் போய்ட்டே இருப்பேன்..??”அவன் கண்கள் அவளை அப்படியே ஊடுருவியது.. அவன் முகத்தில் ஒரு குரூரத்தை கண்டவளுக்கு அடிவயிற்றில் ஒரு பயப்பந்து வந்து தொண்டையை அடைத்தது..

 

 கடவுளே இவன்கிட்ட இருந்து எப்படியாச்சும் தப்பிச்சு போயிறனும்… என்ன பண்ணலாம் அந்த அறை மூலையில் கிடந்த ஒரு கட்டையை பார்த்தவள் மெதுவாக நகர்ந்து அதனிடம் சென்று அதை எடுத்தவள் அவனை அடிக்கப் போக ,

 

அவள் கையை எட்டி பிடித்தவன், உன்னால என்னை அடிக்க முடியுமா இந்த பூபோல இருக்க கையால கட்டையெல்லாம் எடுக்காத என்னை தொடு..??” தன் மேல் அவள் கையை வைத்து தடவ,

 

ச்சீ விடுடா நாயே..” அவனிடமிருந்து திமிறியவள் அவனோடு சண்டையிட அவளிடமிருந்து ஈஸியாக விலகியவன் ஓங்கி ஒரு அறைவைத்திருக்க தூரத்தில் சென்று விழுந்திருந்தாள்…

 

பாவம் போனா போகுது ஒரு தாலியை கட்டிட்டு உன்னைத்தொடலாம்னு நினைச்சேன் .. என்னை ஏன் கெட்டவனாக்குற..??” அவளை நோக்கி வர பின்னாலே நகர்ந்து சென்றவள் தன் கையால் அவனை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா என தடவிப் பார்க்க விசபாட்டில் அவன் பையில் இருந்து நழுவி கீழே விழுந்திருந்தது..

 

அதை எடுத்தவள்,” டேய் என்னை தொடவந்தா நான் செத்தாலும் சாவேனே தவிர உனக்கு சொந்தமாவேன்னு கனவுல கூட நினைச்சு பார்க்காத..??” அதை வேகமாக திறந்து வாயில் ஊற்றியிருந்தாள்..

 

சட்டென இப்படி செய்வாள் என எதிர்பார்க்காத கிஷோர் அதை தட்டிவிட, சூர்யாவும் அந்த இடத்திற்கு வந்திருந்தான்.. வேகமாக வந்தவன் ஸ்ரீயிடம் சென்றிருந்த கிஷோரை ஓங்கி ஒரு உதைவைத்திருக்க தூரபோய் விழுந்திருந்தான்..

 

சூர்யாவோடு கிஷோரை எப்போதும் நோட்டமிடும் அந்த இருவரையும் பார்க்கவும் கிஷோர் அதிர்ச்சி அடைந்திருந்தான்.. இவங்க எல்லாரும் எப்படி…??? கிஷோரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டவன் அவன் கையை பின்னால் மடக்கி அவன் வயிற்றில் நாலைந்து குத்துவிடவும் வலி தாங்காமல் மடங்கி விழுந்திருந்தான்

 

விழுந்தவனை கீழே கிடந்த கட்டையால் நன்றாக வெளுக்க ,”உனக்கு அன்னைக்கே சொன்னேன்தானே ஸ்ரீக்கிட்ட தலைவைச்சு படுக்காதன்னு என்ன திமிரு இருந்தா அவளை கடத்தி கொண்டுவர அளவுக்கு வந்திருப்ப..??” பளார் பளாரென்று அவன் கன்னத்தில் அறைவைக்க, அவன் முகமெல்லாம் ரத்தம் சட்டையெல்லாம் கிழிந்து தொங்கியது.. வலி தாங்க முடியாதவன்,

 

 தன் அருகில் நின்றிருந்தவர்களை பார்த்து,” டேய் எங்க பாட்டிக்கிட்டதானே சம்பளம் வாங்குறிங்க அவன் என்னை அடிக்கிறான் பார்த்துட்டு சும்மா இருக்கிங்களா…??”

 

 அவன் பேசிய வாயில் ஒரு குத்துவைக்க வாயிலிருந்து  ரத்தம் வழிய ஆரம்பித்திருந்தது.. ஆமாடா நீ மட்டும் அந்த வாட்ச்மேனுக்கு காசு கொடுத்து என் பொண்டாட்டி எங்க போறா எங்க வர்றான்னு தெரிஞ்சுக்குவ நான் செய்யக்கூடாதா.. அவன் சட்டையை பிடித்து தூக்கியவன்   நீயெல்லாம் என் பிரண்டாடா ச்சி உன்னை அப்படி சொல்லவே எனக்கு வெட்கமா இருக்கு..

 

நீ ஒரு துரோகிடா நான் முதல்முதலா ஸ்ரீயை பார்க்காதன்னு சொன்னதுக்காகத்தானே நீ அவள என்னை கூட்டிட்டு வரச் சொன்ன என்ன மாதிரி புத்தி உனக்கு ச்சி..ச்சி..”

 

அந்த நிலையிலும் சூர்யாவை பார்த்து சிரித்தவன் ,”டேய் நீ முதல் முதலா பார்க்கும் போது என்ன சொன்ன அவள பார்க்காதன்னுதானே… ஆனா உன் கண்ணுலயும் அவ மேல காதல் தெரிஞ்சத நான் பார்த்தேன் அதான் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னேன்..”

 

அவன் முகத்தில் மீண்டும் ஒரு குத்துவிட்டவன் ,”அதுக்கு உனக்கு தண்டனையாத்தான் ஸ்ரீயை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… கெடுதல் நீ எனக்கு நினைக்கனும்னு நினைச்ச ஆனா எனக்கு அவளே வொய்ப்பா கிடைச்சிட்டாடா ராஸ்கல்..??”

 

கிஷோர் சூர்யாவை பார்த்தவன் ,”அதான்டா எனக்கு புரியலை உன்னை விட நான் எதுல கொறைச்சல் உனக்குமட்டும் ஏண்டா எல்லாமே நல்லதா கிடைச்சது …. ஸ்ரீயை காட்டியவன் இந்தா இவ திடிருன்னுதான் உன்னை கல்யாணம் பண்ணினா ஆனா மூச்சுக்கு முன்னூறுதரம் வீட்டுக்காரன் வீட்டுக்காரன்னு உன்னை பத்தி சொல்லுறா..??”

 

ஆனா… ஆனா..ஹா..ஹா..ஹா.. என சிரித்தவன் இப்ப உன் ஸ்ரீ நம்ம ரெண்டுபேருக்குமே கிடைக்காம போகப்போறா…!!”

 

அதிர்ச்சியானவன் டேய் என்ன சொல்ற…?” அவனை தன்னை நோக்கி இழுத்தவனை,

 

என்ன சொல்றேன் உன் பொண்டாட்டி சாகப்போறான்னு சொல்றேன்.. நான் தொடக்கூடாதுன்னு அவ சாக முடிவெடுத்து… நான் குடிக்க வைச்சிருந்த விசத்தை குடிச்சிட்டா…ஹா..ஹா..ஹா..!!!” பைத்தியம் பிடித்தவனை போல சிரித்தவன் கன்னத்தில  பளார் என அறைச்சத்தம் விழ அதை காதில் வாங்காமல் ஸ்ரீயிடம் ஓடியிருந்தான் சூர்யா..

 

அங்கு ஸ்ரீ அறைமயக்கத்தில் கிடக்க அவளை மார்போடு அணைத்தவனுக்கு உலகமே ஒருநிமிடம் தட்டாமாலை சுற்றியது.. ஸ்ரீ என்னை விட்டு போயிருவாளா ..??? அவள் மயங்கியிருக்க கன்னத்தில் பலமாக தட்டியவன் அவளை தூக்கிக் கொண்டு தன் காருக்கு ஓட கிஷோரை பற்றி கவலையே படவில்லை…

 

ஏனென்றால் அங்கு அவனை அறைந்திருந்தது அவனது மனைவி.. அவன் இங்கு கிளம்பி வருவதாக தகவல் கிடைக்கவுமே இந்த முறை சூர்யா கிஷோரின் மனைவியிடம் எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லியிருந்தான்…

 

அவன் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தவள் , அவன் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்திருந்தாள்.. உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என் வயித்துல ஒரு குழந்தையை கொடுத்திட்டு இப்ப இந்த மாதிரி ஒரு வேலை பார்க்க வந்திருப்ப.. என்னை என்னன்னு நினைச்ச நீ விட்டுட்டு போனவுடன மூலையில உட்கார்ந்து அழுது கரையிறவன்னா ..!!!

 

நீ எந்த மூலைக்கு போனாலும் தேடி வந்து கொல்லுவேன்.. யாருக்கிட்ட உன் வேலையை காட்டுற. இனி பத்துரூபாய் வேணும்னாலும் அதநான்டா தரணும்..பணம் இருக்கிற திமிருலதானே இந்த மாதிரி ஆடுற வாடா உன்னை ஒரு வழியாக்குறேன்.. சொத்துல ஒரு பைசாக்கூட இப்ப உன்பேர்ல இல்லை. உன்னோட பொருக்கி குணம் தெரிஞ்சு பாட்டி எல்லாத்தையும் என் பேர்ல எழுதி வைச்சிட்டாங்க வாடா பொறுக்கி

 

இனி இப்படி செய்யனும்னு நீ மனசில நினைச்சாக்கூட நான் கொன்னு தூக்கி வீசிட்டு போயிட்டே இருப்பேன்.. எனக்கு சொத்துக்கு சொத்தும் ஆச்சு அப்புறம் என் அந்தஸ்துக்கு ஏத்த ஒரு ஆளா கல்யாணம் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்..

 

மறுகன்னத்திலும் அறைந்தவள் அவனை சட்டையோடு சேர்த்து தூக்கியிருந்தவள் தரதரவென ஒரு நாயை இழுப்பது போல தன் காரை நோக்கி இழுத்துச் சென்றாள்..

 

சூர்யா அடுத்த கால்மணி நேரத்தில் ஸ்ரீயை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றவன் அவளை ஐசியுவில் சேர்க்க, அவன் இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கே கேட்டது.. அப்படியே தொய்ந்து போய் அங்கிருந்த சேரில் அமர ஒரு பத்து நிமிடம் கழித்து வெளியில் வந்திருந்த டாக்டர்கள்,

 ஒன்னும் பிரச்சனை இல்லை ஸார் பேஷனட் நல்லா இருக்காங்க.. அவங்க கண் முழிச்சிட்டாங்க நீங்க போய் பார்க்கலாம்.. அவங்க குடிச்சது வீரியம் இல்லாத மருந்துதான்.. இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை.. அவங்க தெம்பில்லாம இருக்காங்க டிரிப்ஸ் போட்டிருக்கோம்.. மதியம் வரைக்கும் எங்க அப்சர்வேசன்ல இருக்கட்டும் மதியத்துக்கு பிறகு டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க..

 

உள்ளே நுழைந்தவன் வாடிய பயிர் போல கிடந்தவளை பார்த்தபடி அங்கிருந்த சேரில் அமர கண்விழித்து பார்த்தவள், மாமா…” அவன் கையை தொடப்போனவளை தட்டிவிட்டவன்,

 

என்னை தொடாத..!!! எல்லாத்திலயும் உனக்கு அவசரம்தானா அவனெல்லாம் ஒரு புள்ளப்பூச்சி அவன நாலுசாத்து சாத்துரத விட்டுட்டு அவனுக்கு பயந்துபோய் விசத்தை குடிச்சிருக்க..

 

இது என்ன பழக்கம் சட்டுசட்டுன்னு முடிவெடுக்கிறது.. அடுத்து என்ன வரும்னு யோசிக்கவே மாட்டியா ஒவ்வொரு பொண்ணப்போய் பாரு எவ்வளவு தைரியமா இருக்காங்க நீயெல்லாம் படிச்சு என்ன பண்ண உன்னை விட குறைவா படிச்ச பெண்கள் எவ்வளவு சாதிச்சிருக்காங்க தெரியுமா..?

 

அன்னைக்கே அவன் போன் பண்ணி மிரட்டும் போது நீ தைரியமா பேசியிருந்தா இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது.. உன்னால முடியலைன்னா வீட்ல உள்ள பெரியவங்கிட்ட பிரச்சனையை கொண்டு போயிருக்கனும்.. அதுவும் செய்யலை,

அன்னைக்கு பெங்களூருக்கு நான்கூட்டிட்டு போகாம இருந்திருந்த இப்ப உன்னோட நிலைமை.. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு என்னல்லாம் பிரச்சனை வருதுன்னு நீ பார்த்துட்டுதானே இருக்க அப்ப நீங்க எவ்வளவு கவனமா இருக்கனும்.. எவனாச்சும் போன் பண்ணுனா நம்பரையோ நம்மள பத்தின விபரத்தையோ கொடுக்க கூடாதுன்னு தெரியாது.. எல்லாத்திலயும் ஒரு அவசரம்

 

இன்னைக்கு விசத்தை குடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு நிமிசம் என்னை நினைச்சு பார்த்தியா… இல்லதானே.., என்னோட அன்பு தெரியலை, பாசம் தெரியலை, காதல் தெரிலை..!!! நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் அத உனக்கு தெரிஞ்சுச்சா..!! என்னைவிடு உங்க அப்பா இல்லாம உன்னை கஷ்டப்பட்டு வளர்த்த உங்க அம்மாவையும் தாத்தாவையும் நினைச்சு பார்த்தியா

 நம்மளால முடிஞ்ச அளவுக்கு போராடனும்னு கூடவா தெரியாது, போடி..!!!” கோபமாக அங்கிருந்த சேரில் அமர்ந்தவன் அதன் பிறகு அவளிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை..

 

அவள் தன்னையே பாவமாக பார்ப்பது தெரிந்தாலும் அவளின் தேவைகளை மட்டும் பார்த்துக் கொண்டவன் அவளிடம் பேச முயலவில்லை..

 

மதியத்திற்கு மேல் வீட்டிற்கு கூட்டி வந்தவன் வாசலில் இறக்கிவிட்டு ,” வீட்ல நடந்தத பத்தி ஒன்னும் சொல்ல வேணாம்..நீ கோவிலுக்கு போயிருந்த உன்னை கோவில்ல இருந்து நான்தான் வெளியில கூட்டிட்டு போயிருக்கேன்னு சொன்னேன் அதையே நீயும் சொல்லிரு..? தன் காரில் இருந்து நிறைய பழங்களையும் ஹார்லிக்ஸையும் எடுத்துக் கொடுத்தான்,

 

மருந்து மாத்திரைகளை எடுத்து கொடுத்து,” இத உங்க வீட்டுக்கு தெரியாம வைச்சிக்க இன்னும் ரெண்டு நாளைக்கு மாத்திரை இருக்கு போட்டுக்க பால் நிறைய குடி ,காரம் ரொம்ப சேர்த்துக்காத..??” தன்னை ஒரு முறையாவது அணைத்து சமாதானப்படுத்த மாட்டானா என தன்னையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு கொள்ளாமல் தன் காரை எடுத்து கொண்டு வேகமாக சென்றிருந்தான்..

 

                                                       இனி……………..??????

Advertisement