Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ
(இறுதிஅத்தியாயம்  –  19)
 
ஸ்ரீயை அணைத்தபடி மறுபடி தன் காரை ஓட்டத்துவங்கியவன்,”  முதல்முதலா ஒரு பொண்ண ரொம்ப ரசிச்சது அப்பதான், உன்னோட குழந்தைதனம் எனக்கு பிடிச்சிருந்துச்சு.. அதுக்கப்பறம் ஒரு ரெண்டுமாசம் கழிச்சு உன்னை உன் காலேஜ்லதான் பார்த்தேன் உன் பிரண்ட்ஸ் உன்னை தயிர்சாதம்னு சொல்லி கேலிபண்ணிக்கிட்டு இருந்தாங்க .. நீ கோபப்படாம அவங்களோட சிரிச்சு பேசிட்டு இருந்த…
 
என் மனசு உன்னை ரசிச்சாலும் அத லவ்வுன்னு எல்லாம் சொல்ல முடியாது..நான் பார்த்த பெண்கள்ல இருந்து கொஞ்சம் வித்தியாசமா இருந்த.. அதனால் ஏதோ ஒருவகையில என்னை ஈர்த்திருக்கலாம்னு நினைக்கிறேன்..
 
 மத்த பொண்ணுகக்கிட்ட இல்லாதது அப்படி என்ன உன்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சிக்கனும் போல இருந்திச்சு.. உன்னை பார்க்கவே காலேஜ்க்கு ரெண்டு மூனுதரம் வந்தேன்.. நான் பக்கத்தில வந்தாக்கூட நீ கண்டுக்கவே மாட்ட.. நான் என்ன அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன்..!!”
 
தன் கணவனை பார்வையிட்டவளுக்கு அவனின் கம்பீரம் கலந்த ஆண்மை அவளை கொள்ளை கொள்ள ஆரம்பித்தது.. இன்னும் அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவள் அவன் கைக்குள் தன் இருகைகளையும் கோர்த்து ,”நீங்க ரொம்ப அழகாயிருக்கிங்க.. !”
 
தன் மனைவி தன்னை அழகனென்று சொன்னதில் கர்வம் கொண்டவன் இத்தனை நாள் அவள் தன்னை கவனிக்காதது எல்லாம் பின்னால் போக  ஆள்அரவமற்ற அந்த சாலையில் ஒரு ஒரமாக வண்டியை நிறுத்தி அவளை இறுக அணைத்திருந்தான்..
 
அவள் இதழோடு இதழ் சேர்த்து தன்னை அழகென்று சொன்னதற்கான பரிசை உடனேயே கொடுக்க ஆரம்பித்திருந்தான்.. அவள் ஈர இதழில் அவன் சூடான இதழ் காதல் தீயை பற்றவைக்க அவளின் ஈர உடல் அவனை அவள் வசம் இழுத்து அவளுள் புதைய சொல்லி தூண்டியது..
 
அவள் வெண்ணை போன்ற உடலில் எதை விடுவது எதை கொள்ளை கொள்வது என்று தெரியாமல் திகைத்தவனின்  உடல்சூடும் அவளுக்கு தேவையாய் இருக்க .. இருவரும் இந்த உலகத்திலேயே இல்லை..
 
எங்கோ தூரமாய் கேட்ட வாகன ஒலியில் ஸ்ரீ தன் சுயஉணர்வுக்கு வந்து தன் கணவனை பார்க்க அவன் கைகள் தன் உடலில் ஜாலத்தை காட்டத் துவங்கியிருந்தது.. சுற்றுப்புறத்தை உணர்ந்தவள் மனதே இல்லாமல் அவனிடமிருந்து சற்று விலகி அமர்ந்து அவன் கையை பிடித்து ,
போவோம்ங்க.. இதென்னமோ காடுமாதிரி  கொஞ்சம் பயமா இருக்கு..!!”
 
அவளின் விலகலில் சட்டென தன் மோகவலை அறுந்து அதிலிருந்து  வெளிவர முடியாமல் காரை விட்டு இறங்கியவன் தன் தலையை கோதி தன்னை சுயநினைவுக்கு கொண்டுவர முயற்சி செய்தான்.. தன்னை சமநிலை படுத்தி  ஒரு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் காரை ஸ்டார்ட் செய்திருந்தான்..
 
தன் காரின் வேகத்தை அதிகப்படுத்த  தன்னையே ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.. ஏண்டி அப்ப நான் வந்தப்பயெல்லாம் என்னை கண்டுக்காம இருந்திட்டு இப்ப புருசனா பக்கத்தில உட்கார்ந்திருக்கேன்.. என்னை நேராவே பார்க்கிற உரிமை உனக்கிருக்கு ஆனா இப்ப ஓரக்கண்ணால் சைட் அடிக்கிற..?”
 
அவனை நோக்கி திரும்பியவள் தன்கண்களை விரித்து,” நான் பார்க்கிறது உங்களுக்கு எப்படி தெரிஞ்சிச்சு..”
 
முண்டக்கன்னி இப்படியே பார்த்து பார்த்துதான் நம்மள கவுக்குறா.. ஸ்டடி சூர்யா ஸ்டடி ஊட்டிக்கு போறவரைக்கும் ஸ்டடியா இருக்கப்பாரு முடிஞ்ச அளவு அவ கண்ணப்பார்க்காத.!!. பேசாமல் காரை இன்னும் வேகப்படுத்தியவனிடம்
 நீங்க என்னை இத்தனதரம பார்த்திருக்கிங்க எனக்குதான் உங்கள பார்த்த நியாபகமே இல்லை..?”
 
அதுக்கு நீ  தயிர்சாதமா இருக்கக்கூடாது..?”
அவன் தோள்பட்டையில் தன் கைகளால் குத்தியவள் ,”ச்சு போங்க. என்னை தயிர்சாதம்னா சொன்னிங்க என்கிட்ட வாங்க..!! அப்புறம் இருக்கு உங்களுக்கு… நீங்க வேற யாராவது பிரியாணியா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க..”  அவன் மேல் கோபம்கொண்டு மறுபுறம் திருப்பி கண்ணாடியை பார்த்தபடி அமர்ந்தவளிடம்.,
 
சிரித்தபடி,” எனக்கு இந்த பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்… வேற எதுவும் வேணாம்.. இந்த தயிர்சாதமே என் ஆயுளுக்கும் போதும்டி ..!! ஒன்னு சொல்லவா நீ மட்டும் இல்ல உன் தங்கச்சியும் தயிர்சாதம்னு நினைக்கிறேன்… அவள் தன்னை முறைப்பதை கண்டவன் அவளை பார்த்து கண்ணடித்து,
 ஒருவாரமா நீங்க வர்ற பாதையில நான் நின்னு உங்கள வாட்ச் பண்ணுவேன் ரெண்டுபேரும் என்னை திரும்பிகூட பார்த்ததில்லை..”
ஏங்க நான் பார்க்கலை சரி..!! எதுக்கு என் தங்கச்சியும் பார்க்கனும்..”
ஏய் லூசு நான் சொல்லவர்றத புரிஞ்சிக்க.. ஒரு அழகான ஆம்பள நிற்குறேன் ரெண்டு பொண்ணும் திரும்பி பார்க்காம ஒரு கல்ல மண்ணப் போல பார்த்தா என்ன அர்த்தம்..எனக்கும் வருத்தமா இருக்காதா!!”
 
ஸ்ரீ தன் நினைவலையில் தேடிப்பார்த்தவளுக்கு அவனை பார்த்த நியாபகமே இல்லை..
அதுமட்டும் இல்லை உன்னை அதுக்கப்பறம் ரெண்டுமூனு கல்யாண வீட்டிலகூட பார்த்தேன்.. உங்க பழைய வீட்டை  இடிச்சதுகூட நான்தான்.. நீயும் உன் தம்பி தங்கச்சியும் அன்னைக்கு அழுதுக்கிட்டு இருந்திங்க பாரு நான் பக்கத்தில வந்து ஆறுதல் சொல்லலாம்னு நினைச்சேன்.. அப்பதான் முதல்முதலா கிஷோரும் உன்னை பார்த்தான்..
 
கிஷோர் என்ற பெ யரை கேட்டதும் முகம் சுழித்தவளின் கைகளை ஆதரவாக பிடித்தவன்.. வந்ததிலயிருந்து நொடிக்கொருதரம் அவனோட பார்வை உன்னைத்தான் சுத்தி சுத்தி வந்திச்சு.. அதோட உன்னை பத்தி என்கிட்டயே கேட்டான்.. எனக்கு செம கோபம் அதான் உங்க தாத்தாகிட்ட சொல்லி உங்கள வீட்டுக்கு போக சொன்னேன்.. உன்னை அவன் பார்த்தது எனக்கு பிடிக்கவே இல்லை..
 
எனக்கு உன்மேல ஏதோ ஒரு உணர்வு.. அது லவ்வுன்னு இப்ப தெரியுது ஆனா அப்ப அது எனக்கு தெரியல.. எங்க தாத்தாக்கிட்ட நான் உன்னைப்பத்தியும் உங்க குடும்பத்தை பத்தியும் விசாரிச்சேன்.. அப்பதான் உங்க தாத்தா செஞ்ச உதவி உங்க குடும்பத்தோட அந்தஸ்து எல்லாம் தெரிஞ்சிச்சு.. இப்ப நீங்க பணங்காசுல கொஞ்சம் குறைவானவங்களா இருந்தாலும் உங்க குடும்ப பாரம்பரியத்தோட எங்க குடும்பத்தால நெருங்க முடியாதுன்னு தெரிஞ்சிச்சு..
 
அப்புறம் ஒரு முக்கியமான காரியம் எந்த காரணத்தாலும் உங்க தாத்தா கஷ்டப்படுறத நான் விரும்பல..அதனாலதான் நான் உங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சதுக்கப்பறம் உன்னைப்பத்திய யோசனையை தள்ளி வைச்சிட்டு என் வேலையில மட்டும் கவனத்தை செலுத்த ஆரம்பிச்சேன்..
 ஆனா நானே எதிர்பார்க்காதது அந்த கிஷோர் உன்னோட வாழ்க்கைக்குள்ள வந்தது.. அதுவும் அவனுக்காக நீ இந்த ஊரைவிட்டே போற அளவுக்கு வந்திட்டியேன்னு ஒரு வருத்தம்..
 
ச்சை  கரும்ம் நான் எப்ப அவன விரும்பினேன்.. அவன் சாகாம இருக்கத்தானே அங்க போனேன்..
 
அது எனக்கு இப்பத்தானே தெரியும் அப்ப என்னோட மனநிலையை சொன்னேன்.. அதுவும் பெங்களூருக்கு போகும்போது நானும் எவ்வளவோ உன்கிட்ட பேச முயற்சி பண்ணினேன் … நீ எதுக்குமே பதில் சொல்லல ஒரு மாதிரி டென்சன்லயே இருந்த..!!”
 
அது நான் எப்படி காலையிலக்குள்ள திரும்ப வீட்டுக்கு வர்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..
 
ஆனா அப்ப எனக்கு பார்க்கும் போது நீ எப்படா கிஷோரை பார்ப்போம்ங்கிற டென்சன்ல இருந்தமாதிரி தோனுச்சு .. அதுக்கப்பறம் அங்க போய் கிஷோர் கல்யாணம் முடிஞ்சவுடன உன் முகத்தில் அதிர்ச்சி , ஏமாற்றம் எல்லாத்தையும் பார்த்தேன்… வரும்போது நீ அழுதுகிட்டேதானே வந்த அதான் அவன மறக்க முடியாம   அழறியோன்னு எனக்கு தோனுச்சு..
 
ஏங்க எல்லாத்தையும் இப்படி தப்பு தப்பா புரிஞ்சு வைச்சிருக்கிங்க… நானே நம்மள அந்த லூசுபய இப்படி ஏமாத்திட்டானே தாத்தா முகத்திலயும் அம்மா முகத்திலயும் எப்படி முழிக்கிறதுன்னு யோசிச்சு பார்த்தேன் அழுகையா வந்துச்சு..” அந்த நினைவில் இப்போதும் அவள் முகம் அழுகைக்கு தயாராக ஊட்டிக்குள் கார் நுழைந்தது…
 
ஏய் லூசு அழாத.. இதெல்லாம் என்னோட அன்னைய நினைப்புதான்.. இப்பதான் எனக்கும் எல்லாம் தெரிஞ்சிருச்சே..” அவள் கண்களை துடைத்துவிட்டான்.. அவளுக்கு குளிரில் வெடவெடக்க ஆரம்பிக்க ஏற்கனவே ஈரமாக இருந்த உடையால் குளிரெடுக்க ஆரம்பித்தது..
 அதுக்குத்தான் அங்கயே ஒரு ஹோட்டல்ல போய் டிரஸ்ஸ மாத்திட்டு போகலாம்னு சொன்னேன் கேட்டியா பரவாயில்ல காஞ்சிரும்னு சொன்ன..! பிடிவாதகாரிடி நீ என்ன ரொம்ப குளிருதா…
 
குளிரால் பற்கள் தந்தி அடிக்க ,”சீக்கிரமா போங்க ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கிங்களா..”
 
ம்கூம் நமக்கு இங்க ஒரு கெஸ்ட் அவுஸ் இருக்கு..” வேகத்தை கூட்டியவன் ஹாரனை அடித்தபடியே செல்ல கேட்டை திறந்துவிட்ட ஒரு ஐம்பது வயதுடையவர் சூர்யாவை பார்த்து சிரித்தபடி,
 தம்பி நல்லாயிருக்கிங்களா வாங்கம்மா ..”ஸ்ரீயையும் வரவேற்க அவர் மனைவி என்று சொல்லி ஒரு நடுத்தர வயது பெண்ணும் வந்து வரவேற்றார்..
 
நல்லாயிருக்கேன் வேலப்பண்ணே.. நீங்க எப்படி இருக்கிங்க முத்தக்கா நல்லாயிருக்கிங்களா..?”
 
உங்க தயவால நல்லாயிருக்கோம் ராசா..”,
 அவர்களை ஸ்ரீக்கு அறிமுப்படுத்தியவன்,” இவங்க ரெண்டுபேரும் இங்கதான் தங்கி வீட்ட பார்த்திக்கிறாங்க..” வீட்டிற்குள் சென்றவர்களுக்கு சூடான சூப்பை கொண்டு வந்து கொடுக்க அவர்களின் குளிருக்கு இதமாக இருந்தது..
 
தம்பி சாப்பாடு எல்லாம் சூடா இருக்கு சாப்பிடுறிங்களா..?”
கொஞ்சம் நேரம் ஆகட்டும்க்கா.. நீங்க டேபிள்ல வைச்சிருங்க நாங்க போட்டு சாப்பிட்டுக்கிறோம்..
 
அவர்களின் உடைமைகளை அறையில் வைத்துவிட்டு,” ஹீட்டர் போட்டு விட்டுருக்கேன்மா குளிச்சிட்டு வாங்க.. ஸ்ரீயை பார்த்து ரொம்ப அழகா இருக்க தாயி.. எங்க ராசாவுக்கு ஏத்த ராணி மாதிரி..!!” ஸ்ரீயின் கன்னத்தை பிடித்து திருஷ்டி கழித்தவர் சூர்யா அறைக்குள் வரவும் வெளியில் வந்திருந்தார்..
 
பாத்ரூமிற்குள் நுழைந்து குளிக்க தயாரானவளை வெளியில் இருந்து சூர்யா கதவை தட்டி அழைத்துக் கொண்டிருக்க ,”ஏங்க ப்ளிஸ் குளிச்சிட்டு வந்திருறேன்..” விடாமல் கதவை தட்டியவன் மேல் கடுப்பானவள் லேசாக கதவை திறந்து முறைத்தவளை தள்ளிக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து தாழ்பாள் போட்டிருந்தான்..
 
ப்ளிஸ் வெளியில போங்க நான் அஞ்சு நிமிசத்துல குளிச்சிட்டு வந்திருறேன்.” ஒரு பெரிய டவல் மட்டும் கட்டி தன் முன்நின்றவளை,  
 
ஹனிமூனுக்கு வந்திட்டு தனியா குளிச்சா சாமி குத்தாமாகிடும்டி..!!!” அவளை தன் கைகளில் ஏந்தியவன் அவள் திமிறலை ரசித்தபடி ஷவருக்கருகில் கொண்டு சென்று தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தான்..
 

Advertisement