Advertisement

பீரோவில் ஏதோ எடுத்துக் கொண்டிருந்தவன் முதுகுபுறம் சென்று பின்புறம் அணைத்து கையை முன்புறமாக கொண்டு சென்றவள் ,”இந்தாங்க இத சாப்பிட்டு பாருங்களேன் லட்டு நான்தான் புடிச்சேன்.. லட்டை எடுத்து அவன் எதிர்பார்க்காத போது அவன் வாயில்வைத்து தினித்துவிட்டாள்..இவள் அறைக்குள் வந்தத்தை கவனிக்காதவன் திடிரென தன் முதுகில் அவனின் மென்மை தன்னை தாக்க ஒருநிமிடம் அப்படியே நின்றுவிட்டான்..

 

அவளோ இன்னும் அழுத்தமாக அவன் முதுகில் சாய்ந்து இன்னொரு லட்டையும் அவன் வாயில் தினித்தவள் அவன் முகம்போன போக்கை பார்த்து கலகலவென சிரிக்க அவளை முறைத்தபடி ஒருகையால் அவளை முன்புறமாக இழுத்தவன் அவள் வெற்றிடையில் ஒரு கையை அழுத்தமாக வைத்து தன் அருகில் இழுத்துமறுகையை அவள் பின் தலையில் வைத்து நெருங்கி அவளை நோக்கி குனிந்திருந்தான்..

மெதுவாக அவள் இதழை தன் விரலால் வருடியவன் அவள் தேகம் கூசி சிலிர்ப்பதை பார்த்தபடியே அந்த விரல் செய்த வேலையை தன் இதழால் செய்யத் துவங்கினான்..

 

ஸ்ரீயும் தன் காதல் கணவனின் அருகாமையை ரசித்தபடி ஒரு கையால் முதுகையும் மறுகையால் அவன் பின்தலைமுடிக்குள் வைத்திருக்க இருவருக்குமே விலகும் எண்ணமே இல்லை.. சற்றுநேரம் கழித்து விலகியவன் வாயிலிருந்த பாதிலட்டு அவள் வாயிற்குள் இருந்தது..

 

லட்டு சூப்பரா இருக்குதானேங்க..!!” அவள் அந்த லட்டை ரசித்து சுவைக்க அவன் அவள் இதழைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. என்னங்க ஒன்னுமே சொல்லாம இருக்கிங்க..

 

அவள் கீழ் உதட்டை தன் இருவிரலால் பிடித்தவன்,” லட்டா எங்க கொடுத்த அதத்தான் பாதிய நீயே வாங்கிகிட்டியே.. மீண்டும் அவள் இதழை நோக்கி குனிந்தவன் நிமிர்ந்த போது அவள் வாயிலிருந்த லட்டின் சில துகள்கள் அவன் வாயில் இருந்தது.. வேற ஸ்வீட் என்ன கொண்டு வந்த..?”  கேட்டபடியே அவள் முகத்தில் ஊத,

 

 அவனின் சூடான மூச்சுக்காற்றில் உடல் சிலிர்த்தவள்,” ஹப்பா பேசிட்டிங்களா என் மேல கோபம் போயிருச்சா..?” அவன் தோளை பிடித்து தொங்கியவளை,

 

சேர்த்தணைத்து தன் உயரத்திற்கு தூக்கியவன் ,”அதெப்படி போகும் இப்பல்லாம் போகாது… நான் சொல்றபடி கேளு அப்ப போகுதான்னு பார்ப்போம்..” தன் முகத்திற்கு நேராக அவள் சேலை விலகி அவள் வெற்றிடையும் வயிறு தெரிய அதில் தன் இதழை புதைத்திருந்தான்..

 

அவன் இதழ் அவளுக்கு ஒரு குறுகுறுப்பை மூட்டவும் அவனிடமிருந்து சிரித்தபடி விலகியவள் அவனை விட்டு பால்கனிக்கு ஓடப்போக அவளை எட்டி பிடித்தவன் இறுக அணைத்திருந்தான்..இறுக்கமாக மிக இறுக்கமாக எலும்பு உடையும் அளவிற்கு அணைத்திருந்தாலும் இவளும் அந்த அணைப்பில் லயித்திருந்தாள்..

 

அவன் சட்டையிலிருந்து போன்மணி ஒலிக்கவும்  அவளை விலக்காமல் அதை ஆன்செய்து காதில் வைத்து,” இன்னும் அஞ்சு நிமிசத்துல சைட்ல இருப்பேன் நீங்க வந்திருங்க..”

 

எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்புறேன். மதியம் சாப்பிடவரமாட்டேன்.. அம்மாட்ட சொல்லிரு..” அவள் கன்னத்தை தட்டியவன்  அவளை இறுக அணைத்து விலகி வேகமாக கிளம்பியிருந்தான்..

 

மதியம் வராதவன் இரவும் லேட்டாக பதினொன்றரைக்குமேல்தான் வந்தான்..ஹாலில் சுபத்ரா மடியில் ஸ்ரீ தூங்கி கொண்டிருக்க அவள் தலையை கோதியபடி அமர்ந்திருந்தார்..

 

இருவரையும் பார்த்தவன்,” என்னமா மகாராணி ரூம்ல தூங்காம இங்க உங்க மடியில ஒய்யாரமா தூங்குறா..”

 

இது உனக்கே நல்லாயிருக்கா சூர்யா.. பாவம்பா இவ.!! நீ வருவ வருவன்னு இவ்வளவு நேரம் முழிச்சிட்டிருந்திட்டு இப்பதான் தூங்கினா… இன்னைக்குதானே  ஸ்ரீ வந்திருக்கா இன்னைக்காச்சும் சீக்கிரம் வரக்கூடாதா.. இரு நாளைக்கு மறுபடியும் அவ அம்மா வீட்டுக்கு போச் சொல்றேன்.. அப்ப வந்து அம்மா ஏன் இப்படின்னு கெஞ்சு அப்ப இருக்கு..”

 

அம்மா… ஏன்மா ஏன் இத்தனை நாள் கழிச்சு இன்னைக்குத்தான் வீட்டுக்கு வந்திருக்கா அவள பேக் பண்ணி அனுப்பி வைச்சிருவீங்க போலவே..நான் ரொம்ப ரொம்ப பாவம்மா முகத்தை பாவமாக வைத்தவன் இன்னும் மூனே மூனுநாள பொறுத்துக்கோங்க  வேலை முக்கால்வாசி முடிஞ்சிருச்சு அப்புறம் பத்துநாளைக்கு ப்ரிதான் ஊட்டிக்கு போகலாம்னு முடிவு பண்ணிருக்கேன்… இப்ப ரொம்ப பசிக்கிதும்மா சாப்பாடு வைங்க..

 

சோபாவில் அமர்ந்து தன் தாயின் மடியிலிருந்த ஸ்ரீயின் தலையை தன் மடியில் தாங்கியிருக்க தட்டில் சாப்பாட்டை வைத்துகொண்டு வந்தவரிடம்,” இருங்கம்மா கைவாஷ் பண்ணிட்டு வந்திற்றேன்..”

 

பரவால்லடா அம்மா ஊட்டிவிடுறேன்.. தன் மகனுக்கு ஊட்ட ஆரம்பித்தார்… அம்மா நீங்க சாப்பிடலை..”

 

சாப்பிட்டேன்பா… நான் சாப்பிட்டாத்தான் ஸ்ரீயும் சாப்பிடுவேன்னு ஒரே அடம் அதான் சாப்பிட்டுட்டேன்..

ஸ்ரீயின் தலையை தடவிக் கொண்டிருந்தவன்,” பரவாயில்லம்மா உங்ககிட்டயும் அடம் பண்ண ஒரு பொண்ணு வந்திட்டா..?”

 

உண்மையிலே சொல்றேன் சூர்யா ஸ்ரீயை தவிர வேற எந்த பொண்ணு வந்திருந்தாலும் நம்ம குடும்பத்தில இந்த அளவுக்கு பாசம் வைச்சிருப்பாளான்னு தெரியலைடா.. ரொம்ப அருமையான பொண்ணு இவ ஒரு பொக்கிஷம்டா இவள பத்திரமா பாத்துக்கிறது உன்னோட பொறுப்பு..

 உங்க அப்பத்தாவே இத்தனை வருசமா இருந்த பிடிவாதத்தை விட்டுட்டு ஸ்ரீயை உன் மனைவியா ஏத்துக்கிட்டாங்க.. என்கிட்டயும் நல்லா பேசி பழக ஆரம்பிச்சிட்டாங்க எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சூர்யா.. உங்க தாத்தா நல்ல முடிவெடுத்திருக்காங்க..” அவள் தூங்கும் அழகையே ரசித்துக் கொண்டிருந்தவனிடம்,

 இன்னொரு இட்லி கொண்டுவரவாப்பா..”

 

தண்ணீர் அருந்தியவன் ,”வேணாம்மா… வயிறு புல்லாயிருச்சு… வாயை தன் சேலை முந்தானையால் துடைத்துவிட்ட தாயின் கன்னத்தில் முத்தமிட்டவன் ,” லவ் யு ம்மா..”

 

அவன் தலையை கோதிவிட்டவர்,” அதை உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லு. நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருந்தா போதும் எனக்கு அதுதான்டா சந்தோசம்.. ஸ்ரீய எழுப்பு ..”

 

இல்லம்மா தூங்கட்டும்..” அவளை தன்கைளில் ஏந்தியபடி தன் அறைக்கு தூக்கிச் செல்ல மகனின் மலர்ந்த முகத்தை பார்த்தபடி சுபத்ரா கிச்சனுக்குள் சென்றார்..

 

தன் மனைவியை கட்டிலில் படுக்க வைத்து ஏசியை போட்டுவிட்டவன் தானும்  உடையை மாற்றி வந்து அவள் அருகில் படுக்க இத்தனை நாள் படுக்கும் போது இருந்த வெறுமை மாறி மனம் நிறைந்திருந்தது.. அவளை அணைத்து தன் கைவளைவிற்குள் கொண்டுவந்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட அவளாகவே அவன் நெஞ்சில் தன் முகத்தை பதித்திருந்தாள்..

 

அவள் தூக்கம கலைந்துவிட்டதோ என பார்க்க அவள் விட்ட தூக்கத்தை தன் நெஞ்சில் தொடரவும் புன்னகையுடன் அவளை இறுக அணைத்து கண்மூடினான்…

 

அடுத்து வந்த மூன்று நாட்களும் சூர்யாவை பார்க்க முடியாமல் ஸ்ரீ மனம் வெதும்ப அவளுக்கு அழுகையே வந்திருந்தது… அவங்களுக்கு இன்னும் கோபம் போகலையோ, நம்ம அம்மா சொன்ன மாதிரி நாம ஒழுங்கான பொண்டாட்டியா நடக்கலையோ என ஏதேதோ நினைத்து அவள் தன்னை தானே குழப்பிக் கொள்ள போன் செய்தாலும் வீட்ல வந்து பேசிக்குவோம் என இருவார்த்தையில் வைத்து விடுகிறான் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் முழித்தவளுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்திருந்தது..

 

நம்ம பிரண்ட்ஸ் சொன்ன மாதிரி யாருமே லவ் பண்ணமுடியாத தயிர்சாதமோ என அன்று முழுவதும் யோசித்தவள் தானே புத்திசாலிதனமாக ஒரு முடிவை எடுத்திருந்தாள்…

 

சுபா போன் செய்து,” அக்கா உனக்கு நாளைக்கு பிறந்தநாள்தானே என்ன பிளான் போட்டிருக்கிங்க…உற்சாகமாக கேட்டவளிடம்,

 

தெரியலைடி அத்தான் வந்தவுடனதான் தெரியும்..” அவளிடம் வேறு ஏதேதோ பேசி பேச்சை மாற்றியவள் தான் செய்ய நினைத்ததை செயல்படுத்த ஆரம்பித்தாள்..

 

அன்று இரவு எட்டு மணிக்கே தன் வேலைகளை முடித்துக் கொண்டு தன் மனைவியை காணவேகமாக வந்தவனை கட்டிலில் இருந்த ஒரு பேப்பர்தான் வரவேற்றது… அறையில் தன் மனைவியை தேடியவன் அந்த பேப்பரை படிக்க ஸ்ரீதான் எழுதியிருந்தாள்..

 

எதையும் சொல்லி ஆரம்பிக்காமல்,” ஸாரிங்க அன்னைக்கு நான் விசம் குடிச்சது தப்புதான் … அதுக்காக நீங்க என்னை மன்னிக்கவே இல்லையா..  உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.. அதான் எங்க வீட்டுக்கு போறேன்.. நீங்க எனக்கு டைவர்ஸ் கொடுக்கிறேன்னு சொன்னிங்கதானே .. ஆனா எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு..ரொம்ப ரொம்ப ரொம்ப ஆனா நான் தயிர்சாதமா இருக்கிறனோ அதான் உங்களுக்கு என்னை பிடிக்கலை போல நீங்க நல்ல பொண்ணா பார்த்துக் கட்டிக்கோங்க… நான் போறேன்..

 

அதை படித்து பார்த்தவனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை… பெருமூச்சு விட்டவன் நாம என்ன நினைச்சு வந்தோம் இங்க நடக்கிறது என்ன..!!! இவகிட்ட எத்தனை தரம் சொல்றது அவசரப்பட்டு ஒரு முடிவு எடுக்கக்கூடாதுன்னு அப்ப அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாளா கடுப்பானவன் அவளை..!! இன்னைக்கு வேகமாக ரூமைவிட்டு வெளியில் வர அப்போதுதான் ரூமிற்குள் வந்த ஸ்ரீ அவன் மேல் மோதியிருந்தாள்..

 

அவளை விழாமல் தாங்கியபடி ஒருநிமிடம் ஸ்ரீதானா என கண்விரித்து பார்த்தவன் அவளை தன் கைகளில் ஏந்தியபடி மீண்டும் அறைக்குள் நுழைந்து தன் காலால் கதவடைத்திருந்தான்.. அவள் தன் கண்ணை விரித்து தன்னிடம் ஏதோ கேட்க முயல்வதை காதில் வாங்காமல் கட்டிலில் படுக்க வைத்தவன் அவளை பேசவிடாமல் செய்திருந்தான்.

 

                                              இனி…………………??????..

Advertisement