Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ
  அத்தியாயம் –  11
 
சூர்யா அந்த இரவில் சத்தமிட்டு சிரிக்கவும்,” ஐயோ இப்படி சிரிக்காதிங்க யாராச்சும் கேட்டா பயந்திடமாட்டாங்களா…??” அவன் வாயை மூட, அதை முத்தமிட்டு கொண்டே அவள் முகத்தை தன்னை நோக்கி இழுத்தான்..
 
தன் உள்ளங்கையில் அவன் முத்த சூட்டோடு அவள் மீசை முடிகளும் உறுத்த கையை படக்கென்று எடுக்கவும் தன் அருகில் தெரிந்த அவள் கன்னத்தில் தன் முத்தத்தை பதித்து விட்டான்..
 
இரண்டு கையாளும் அவன் வாயை மூடியவள்,” இதுக்குத்தான் என்னை பேசனும்னு வரச் சொன்னிங்களா..? விடுங்க எனக்கு தூக்கம் வருது…??”
 
தயிர்சாதம்…!! அப்ப உன்னை தயிர்சாதம்னு கூப்பிடுறது எனக்கு எப்படி தெரிஞ்சிச்சுன்னு தெரிஞ்சிக்க வேணாமா தயிர்சாதம்…?”
 
எதுக்கு இத்தனை தயிர்சாதம் போடுறிங்க.!!.உங்களுக்கும் அவளுகளுக்கு கொடுத்த பனிஸ்மென்ட் கொடுத்தாதான் சரியாவரும் ! இப்ப உங்களை இப்ப என்ன பண்றேன்னு பாருங்க…?” அவன் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட
 
அவன் சத்தமாக சிரித்து நெளிய ஆரம்பித்தவுடன் அவளுக்குள்ளும் உற்சாகம் குமிழிட்டது. இருவருமே கட்டாய கல்யாணம்தான் செய்திருக்கிறோம் என்பதும் டைவர்ஸ் செய்துகொள்வோம் என்று பேசியதையும் மறந்து விட்டு தங்கள் இருவருக்கான காதல் உலகில் மெதுவாக காலை வைத்திருந்தனர்..
 
சிரித்தபடியே எழுந்து அமர்ந்து அவள் இருகையையும் பிடித்து அவள் தோளில் கையை போட்டு, தன் அருகில் அமரவைத்திருந்தான்.
என்னை நீங்க முதல்லயே பார்த்திருக்கிங்களா…?”
 
ம்ம்ம் முதல்ல உங்க காலேஜ்ல புதுசா கட்டியிருக்கிற கெமிஸ்ட்ரி லாப் நான்தான் கட்டிக் கொடுத்தேன் அத பார்க்க ரெண்டு மூனுதரம் வந்த போதுதான் உன்னை சீனியர்ஸ் தயிர்சாதம்னு கூப்பிட்டுறதை பார்த்தேன்…”
 
அவளுக ஒன்னும் என்னோட சீனியர்ஸ் இல்ல எல்லா பக்கிகளும் என்னோட பிரண்ட்ஸ்தான்..!!”
 
பிரண்ட்ஸா…!!!” அவன் மீண்டும் சிரிக்க ஆரம்பிக்க அவள் திரும்பி அவனை முறைப்பது போல பார்க்கவும் சிரிப்பை அடக்கியவன் ,கையை வாயால் மூடி அமர்ந்திருக்க அவன் அமர்ந்திருந்த தோரனையை பார்த்தவள் ஒன்றும் தெரியாத அப்பாவி கைகட்டி வாய்பொத்தி அமர்ந்திருப்பதை போல இருக்க இவளுக்குமே சிரிப்பு வந்தது..
 
அவன் வாயிலிருந்து கையை மெதுவாக எடுத்து விட்டவள் நாங்க எல்லாரும் திக் பிரண்ட்ஸ்தான் !! ஆனாஅந்த பக்கிக எல்லாம் லவ் பண்ணினாள்களா! எப்ப பார்த்தாலும் போனை காதுல வைச்சுக்கிட்டு அவனுககூட கொஞ்சிட்டு இருப்பாளுக!!  பாடத்தையும் கவனிக்க மாட்டாங்களாம், எதையும் எழுத மாட்டாங்களாம் ஆனா எக்ஸாம்போது மட்டும் என்னோட நோட்டை கேட்பாளுங்களாம் அதான் நான் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு பக்கத்தில என்னோட பிரண்ட் ஒருத்தி அவ லவ்வரோட பேசிக்கிட்டு இருந்த போனை புடுங்கி,
 
டேய் அறிவு கெட்டவனே!! உனக்கெல்லாம் நேரம் காலமே இல்லையா அறிவில்ல அதான் இப்ப காலேஜ் டயம்னு தெரியும்ல அப்புறம் ஏன்டா இப்ப போன் பண்றன்னு திட்டிட்டேன்…??”
 
அதான் அந்த பக்கிக நீ தான் தயிர்சாதம் யாரையும் லவ்பண்ணவும் மாட்டே !! உன்னையும் யாரும் லவ் பண்ண மாட்டாங்க அதுக்காக லவ் பண்ற எங்களை ஏண்டி இப்படி பிரிச்சிவிடுறன்னு சண்டை போட்டு அப்பத்தில இருந்து என்னை தயிர்சாதம்னுதான் கூப்பிட ஆரம்பிச்சாளுக சந்தோசமாக ஆரம்பித்த அவள் குரல் … ஆனா…??” என்று இழுத்து குரல் கரகரத்து ஒலிக்கவும்.
 
அவளை தன்னை நோக்கி பார்க்கச் செய்தவன்,” ஏய் என்னாச்சு …?” அவள் கண்கள் கலங்கியிருந்தது..
 
அவங்க எல்லாம் அப்படி கூப்பிடவும் எனக்குள்ளயும் நாம அப்படித்தானோன்னு ஒரு சந்தேகம்!!!நம்மள யாரும் லவ் பண்ண மாட்டாங்களோ நாம அந்த அளவுக்கு ஒர்த் இல்லையோன்னு ஒரு எண்ணம் அதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாயிருச்சு அந்த கிஷோரும் என் வாழ்க்கையில விளையாட இடம் கொடுத்திருச்சு …” அவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..
 
அவளை சற்று தேற்றியவன் ,”அந்த கிஷோரை நீ பெங்களூர்லதான் பார்த்தேன்னு சொன்ன அப்ப அவன உனக்கு எப்படி தெரியும்…??”
 
அதுவா ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் காலேஜ்க்கு போகும்போது ஒரு போன் கீழ கிடந்துச்சு ..அந்த போன் அந்த கிஷோரோடது..”
 
எப்பவும் நீயும் உன் தங்கச்சியும் ஒன்னாத்தானே காலேஜ்க்கு போவிங்க அப்ப அவ உன்கூட வரலையா…??”
 
எப்படிங்க என்னை பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியுது…??”
அத நான் அப்புறமா சொல்றேன் இப்ப நீ சொல்லு..??”
அப்ப எனக்கு மட்டும் எக்ஸாம் நடந்திட்டு இருந்துச்சு சுபாவுக்கு லீவ் காலேஜ் எங்க வீட்லயிருந்து கிட்டதானே அன்னைக்கு எக்ஸாம்னு நான் கொஞ்சம் அவசரமா போயிட்டு இருந்தனா அப்பதான் அந்த போனை பார்த்தேன். நல்ல பெரிய கேமரா போன் ரொம்ப விலையாயிருக்கும் போல, நான் கிட்ட போனப்ப போன் சவுண்ட் வந்திச்சு யாரையும் பக்கத்தில காணலை பாவம் யாரோட போன் மிஸ்ஸாயிருச்சுன்னு நினைச்சு,
 
நான்தான் அந்த போனை எடுத்து அந்த காலை அட்டெண்ட் பண்ணினேன்.. அப்பதான் அது கிஷோரோட போன்னு தெரிஞ்சது அவன் அத தவற விட்டுட்டேன்னு சொல்லி அங்கேயே நில்லுங்க நான் வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னான்…”
 
நான்தான் எனக்கு எக்ஸாம்க்கு டைம்மாயிருச்சு எங்க காலேஜ் வாட்ச் மேன்கிட்ட குடுத்திருறேன் நீங்க வந்து வாங்கிக்கிங்கன்னு சொன்னேன்..
 
அவன் சரின்னு சொல்லிட்டு என்னோட போன் நம்பரை கேட்டான்…
சூர்யா நீயென்ன லூசா யார் போன் நம்பரை கேட்டாலும் குடுத்திருவியா…??”
 
அதுதான்ங்க நான் பண்ணின தப்பு!! ஆனா அவன் அன்னைக்கு அவனோட பாட்டிக்கு ரொம்ப உடம்பு சரியில்லை, அதனால உடனே ஊருக்கு போகனும். நீங்க போன் நம்பரை கொடுங்க? நான் போனை வாங்கிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்னு  சொன்னான் ஆமா அதுவும் விலை அதிகமான போனா இருந்துச்சா அதான் என்னோட நம்பரை கொடுத்தேன்.??”
 
நானும் என்னோட பிரண்ட்ஸ்ம் எக்ஸாம் எழுதிட்டு வெளிய வரும்போது கரெக்டா அவனும் போன் பண்ணினான்.. அவன் சாதாரணமாத்தான் பேசினான் அவன் போன் பேசி முடிக்கவும் என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் நான் பேசினத கேட்டுட்டு இருந்துட்டு பரவாயில்லடி உனக்கும் ஒருத்தன் போன் பேசுறான்னு சொல்லி என்னை ஏத்திவிட்டாங்க…”
 
அப்ப ஆரம்பிச்சது இந்த தலைவலி அவனும் அடிக்கடி போன் பண்ண ஆரம்பிச்சான் சும்மா பிரண்டாத்தான் பேசுறேன்னு சொன்னான் …!!! என்னோட பிரண்ட்ஸ் நான் போன் பேசினதையே ஒரு மாதிரி ஆச்சர்யமா பார்க்கவும் அவளுகளுக்கு கெத்து காட்டுறேன்னு புத்தி கெட்ட தனமா இவன்கிட்ட பேசி மாட்டிக்கிட்டேன்…!!”
 
அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்தவன் கோபமாக,” இதென்னடி வேலைபார்த்து வைச்சிருக்க.. ?உங்க வீட்டுக்கு இது தெரியாதா.. எப்ப பார்த்தாலும் நீயும் உன் தங்கச்சியும் ஒன்னாத்தானே சுத்துவிங்க!! அவகிட்டக்கூட இதை சொல்லலையா…??”
 
தன் தலையை தடவிக் கொண்டவள் தன் கண்கள் கலங்கியபடி ,”அவன் நான் வீட்ல இருக்கும் போதெல்லாம் போனே பேசமாட்டான்.. கரெக்டா என் பிரண்ஸோட இருக்கும் போதுதான் போன் பண்ணுவான் எடுக்காட்டாலும் எடுக்கிறவரை அடிச்சிக்கிட்டே இருப்பான்
 
போனை எடுத்து பேசாட்டா என் பிரண்ட்ஸ் எல்லாம் என்னடி லவ்வர்ஸ் ரெண்டுபேர்க்கும் சண்டையான்னு கேட்க ஆரம்பிச்சுருவாளுக, அதான் நான் போனை அட்டெண் பண்ணுவேன் ஆமா அவனுக்கெப்படிங்க நான் என்னோட பிரண்ட்ஸோட இருக்கிறது தெரியும்…??”
 
அவளையே பார்த்தவன் அந்த கிஷோர் எப்படியெல்லாம் வேலை பார்த்திருக்கான். அப்ப என்கிட்ட ஊருக்கு போறேன்னு சொன்னவன் போகாம இவள வாட்ச் பண்ணி எல்லா வேலையும் பார்த்திருக்கான்.. ஒருவகையில நானும் இவ பிரச்சனைக்கு காரணம்தானே !!
 
அதான் கடவுள் நம்மளையே ஊருக்கு கூட்டிட்டு போறபடி பண்ணினானோ!!” அவன் முகத்தை நீ பார்த்திருக்கியா..??”
 
நான் அவனோட போனை எடுத்தேன் பாருங்க ,அந்த போனை ஆன் பண்ணினா அவனோட போட்டோ வர்ற மாதிரிதான் வைச்சிருந்தான் அப்பதான் பார்த்தேன்.. எனக்கு எக்ஸாம் முடியவும் வீட்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் முடிவு பண்ணினதை சொல்லி இனிமே எக்காரணத்தை கொண்டும் எனக்கு போன் பண்ணவேண்டாம்னு சொன்னேன் பாருங்க அப்பதில இருந்துதான் பிரச்சனையே அதுவரை பிரண்ட்ஸா இருக்கிறேன்னு சொன்னவன் லவ் பண்றேன்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டான்…”
 
நானும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்டவே இல்லை.. அவன் என்னை பார்த்ததே இல்லைதானே அதான் நான் ரொம்ப அசிங்கமா இருப்பேன், படிக்காத மக்குன்னு ,என்னன்னமோ சொன்னேன் அவன் கேட்கவே இல்லை நான் எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்றேன்னு சொல்லி அழ ஆரம்பிச்சிட்டான்..
 
நான் அந்த சிம்மை தூக்கி போட்டுட்டு வேற சிம்மை மாத்திட்டேன் ஆனா அதுவும் அவனுக்கு தெரிஞ்சிருச்சு …. ரொம்ப லவ் பண்றேன்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டான்.. எனக்கு வீட்ல சொல்ல கொஞ்சம் பயம் தாத்தா ரொம்ப திட்டிருவாங்களோன்னு அதான் கல்யாணம் முடிஞ்ச உடனே அந்த போனையும் தூக்கி வீசிருவோம் இனி போனே வேண்டாம்னு நினைச்சேன்..”
 
கல்யாணத்துக்கு முதல்நாள் சாயங்காலம் என்னை ஒரே ஒரு தரம்மட்டும் நேரா பார்த்து பேசினா போதும் அப்புறம் தொந்தரவே பண்ண மாட்டேன் அப்படி வராட்டா செத்து போயிருவேன்னு ஒரே அழுகை கேக்கவே ரொம்ப பாவமா இருந்திச்சா….
 
அதான்என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்… அப்ப அவன்தான் நீ உன்னோட வீட்டுக்கு தெரியாம வா ஒருதரம் மட்டும் பார்த்து பேசிட்டு விடியற்காலைக்குள்ள வீட்ல கொண்டுபோய் விடச் சொல்றேன்னு சொன்னான்…
 
அப்புறமாத்தான் உங்களோட வந்தேன்.. அதுக்கப்பறம் நடந்தது எல்லாம்தான் உங்களுக்கே தெரியுமே…!!!  நான் என்னோட போன் நம்பரை கொடுத்ததுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் ஆயிருச்சுங்க.. நான் அவன சொன்னேன்ல முட்டாள் ,லூசுன்னு ஆனா நான்தான் முட்டாள், லூசு,கிறுக்கு…!!” தன்னை தானே திட்டிக் கொண்டவள்,
 
தானே தன் தலையில் அடித்துக் கொண்டு ,”எனக்கு என்னால ஒரு உயிர் போகக்கூடாதுன்னு மட்டும்தான் தெரிஞ்சதே தவிர அவன் பொய் சொல்றான், ஏமாத்துறான்னு தெரியலை .அதோட இங்க கல்யாணத்தை வைச்சிட்டு பொண்ணு வெளியில போன என்ன மாதிரி பிரச்சனை வரும்னு யோசிக்க மறந்துட்டேன்.
 
எங்க தாத்தாவும் அம்மாவும் எவ்வளவு அவமானப்பட்டிருப்பாங்க அதெல்லாம் நான் யோசிக்க மறந்திட்டேன்.. ஒரு பெண்ணாலதான் அந்த குடும்பத்தோட ஒழுக்கமே பேசப்படுதுன்னு எனக்கு மண்டபத்துக்கு வந்த அப்புறமாத்தான் தெரிஞ்சது.. நல்ல வேளை சுபா ஹரிஷை கல்யாணம் பண்ணிக்கிட்டா இல்லைன்னா இன்னும் பிரச்சனை அதிகமா ஆயிருக்கும்..??” அவள் பேச பேச கண்ணில் நீர் நிற்கவே இல்லை.. அவன் ஏதோ பேசவர அதை தடுத்தவள் எழுந்து ,” எனக்கு மனசு சரியில்லைங்க நான் உள்ள போகவா..??” அவனை பாவமாக பார்த்தவள்,
 
அவனின் பதிலைகூட எதிர்பார்க்காமல் உள்ளே வந்துவிட்டாள்… சூர்யா ஐந்து நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தவன், பெருமூச்சை விட்டு ஒரே நாளுல எல்லாப்பிரச்சனையும் பேச முடியாது வானில் நட்சத்திரங்களையே பார்வையிட்டு கொண்டிருந்தவன் ஏதேதோ யோசித்தபடி நேரத்தை பார்க்க மணி ஒன்று.. உள்ளே அறைக்குள் நுழைய தேம்பல் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது..
 
இன்னுமா அழறா பதறியபடி சோபாவை நோக்கி வந்தவன் இரவு விடிவிளக்கில் ஸ்ரீயை பார்க்க கண்ணீர் கோடாய் இறங்கியிருந்தது.. தூங்கி கொண்டிருந்தாலும் சிறு குழந்தை போல தேம்பல் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது…
 
தங்களுடைய திருமணத்திற்கு யார் காரணம் என்று இவனுக்கு புரியவில்லை.. கிஷோர் அவ வாழ்க்கையில என்னமா விளையாடியிருக்கான்.. அன்னைக்கு முதல் முதலா பார்க்கும் போதே அவன் பார்வை சரியில்லைன்னு தானே அவங்க தாத்தாக்கிட்ட சொல்லி ஸ்ரீயை உடனே வீட்டுக்கு அனுப்பச் சொன்னேன்…
 
ஆனா இவன் அத மனசில வைச்சிட்டுத்தான் நம்மள ஸ்ரீயை கூட்டிட்டு வரச் சொன்னானா..!!
 
சற்று நேரம் அவளையே பார்வையிட்டு கொண்டிருந்தவன் அவள் நெற்றி முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு போர்வையை நன்றாக போர்த்திவிட்டு தன் கட்டிலுக்குச் சென்றான்..
 
லவ்பேர்ட்ஸ்களின் ஒலிகள் ஒரு கீதமாக ஒலிக்க மெல்ல கண் விழித்தவள், சோம்பலுடன் எழுந்தமர்ந்து கட்டிலை பார்க்க சூர்யாவை காணவில்லை.. இரவு நடந்ததை நினைத்து பார்த்தவளுக்கு சூர்யாவிடம்  மனம் விட்டு அனைத்தையும் சொன்னது ஏதோ பாரத்தை இறக்கி வைத்தாற்போல இருந்தது..
 
லவ்பேர்ட்ஸை சற்று நேரம் கொஞ்சி கொண்டிருந்தவள் குளித்து கீழே சுபத்ராவிடம் சென்று காப்பி வாங்கி குடித்துவிட்டு மெல்ல சூர்யாவை பற்றி விசாரிக்க,
 
தன் கையால் நெருக்க கட்டியிருந்த மல்லிகை பூவை மருமகள் தலையில் வைத்தபடி ,”சூர்யா எப்பவுமே எழுந்ததும் சைட்டுக்கு போயிருவான்மா.. பதினோரு மணிக்குதான் வருவான்.. வந்ததும் சாப்பிட்டுட்டு அவங்க அப்பா தாத்தாவோட வெளியில போனா அப்புறம் நைட்தான் திரும்பி வருவான்..
 
ஸ்ரீக்குள் சிறு ஏமாற்றம் பரவுவதை தடுக்க முடியவில்லை.. இனிமே காலையில கொஞ்சம் சீக்கிரமா எழுந்துக்கனும் அப்பதான் அவங்களோட ரெண்டுவார்த்தை பேச முடியும்..!!
 
ப்ரியா எங்க அத்தை..??”
தோட்டத்தில இருக்காடா அவளுக்கு அதுதான் ரொம்ப பிடிச்ச இடம் காலையில எழுந்தா ஒவ்வொரு செடிக்கிட்டயும் பேசாம வரமாட்டா நீயும் போ..” அவர் கிச்சனுக்குள் செல்ல,
 
சூர்யா அங்கு சைட்டுக்கு செல்லாமல் கிஷோரை பார்க்க ஹோட்டலுக்கு சென்றிருந்தான்.. இரவு ஸ்ரீ அழுதது அவன் மனதை பாடாய் படுத்தியிருந்தது . ஒன்னும் தெரியாத பொண்ண இவன் என்ன பாடுபடுத்தியிருக்கான்.. நான் இருக்கும்போதே ஸ்ரீக்கிட்ட வான்னு தைரியமா கூப்பிட்டானே கூப்பிட்ட அவன் வாயை உடைச்சிருக்கனும்..!! பேசாம விட்டது தப்பு ..!!
 
ஹோட்டலுக்குள் நுழைந்தவன் கிஷோருக்கு போனில் அழைக்க போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது..
 
மறுபடி மறுபடி தொடர்பு கொண்டவன் முடியாமல் இரவு கிஷோரை அழைத்துச் சென்ற நண்பனுக்கு போன் செய்ய அவன் தன் ரூம் நம்பரை சொல்லி அவனை ரூமுக்கு வரவழைத்திருந்தான்..
 
அறைக்குள் நுழைந்தவன் கிஷோரை பற்றி விசாரிக்க ,”டேய் நைட்டு அவன் என்ன சரக்கு அடிச்சான்னே தெரியலை ஒரே புலம்பல் அவ எனக்குத்தான் எனக்குதான்னு!! எனக்கு ஒன்னுமே புரியலை விடியற்காலை ஒரு நாலு மணி இருக்கும்டா அவனுக்கு போன் வந்திச்சு,
 
இவன் பயந்துபோய் கதவை திறக்கிறான்…!! அங்க ரெண்டு லேடிஸ் பாகுபலி படத்தில வர்ற ராஜமாதா, தேவசேனா மாதிரி அவன் பாட்டியும், மனைவியும்..! அவங்க பாட்டி விட்டாங்க பாரு ஒரு அறை எனக்கே பொறி கலங்கிருச்சுடா..!!
 
பார்க்கத்தான் வயசானவங்க மாதிரி இருக்காங்க அதைவிட அவனோட வொய்ப் பார்க்க அவ்வளவு கம்பீரமா ஒரு மகாராணி தோரனையோட பார்வையாலே ஒரு முறை முறைச்சாங்க பாரு எனக்கே நெஞ்சு திக் திக்குன்னு அடிச்சிருச்சு.. அடுத்த ரெண்டு நிமிசத்தில அவன கூட்டிட்டு போயிட்டாங்க என்னடா காரணமா இருக்கும் ஒருவேளை சொல்லாம வந்திட்டானோ வந்தாலும் பிரண்டோட ரிசப்ஷனுக்குத்தானே வந்தான் இதுல என்ன தப்பு…??”
 
டேய் உன்கூடத்தான் தங்கி இருந்தான் உனக்கே தெரியலை எனக்கு மட்டும் எப்படிடா தெரியும் நானும் நைட் அவன் நல்ல போதையில இருந்தானே அதான் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்..??” சற்று நேரம் மற்ற கதைகளை பேசிக் கொண்டிருந்துவிட்டு  கிளம்பிவிட்டான்
 
எல்லா வேலையையும் பார்வையிட்டவன் வீட்டிற்கு திரும்பும்போது மணி பகல் பனிரெண்டிருக்கும்..தன் வீட்டிற்கு வந்தவன் தாத்தாவோடும் தந்தையோடும் பேசிக் கொண்டிருந்துவிட்டு தன் அறைக்குச் செல்ல ஸ்ரீ கட்டிலில் படுத்து சுகமான உறக்கத்தில் இருந்தாள்…
 
இரவு வெகுநேரம் விழித்திருந்ததால் அவளுக்கு தூக்கம் கண்ணை சுழற்றியிருந்தது… சூர்யாதான் இல்லையே என்று நினைத்து கட்டிலில் சாதாரணமாக படுத்திருக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் உறக்கத்தில் இருந்தாள்
 
அறைக்குள் நுழைந்தவன் தன் கட்டிலில் ஒரு தேவதையை போல உறங்கி கொண்டிருக்கும் ஸ்ரீயை பார்த்து அவள் அழகில் ஒரு நிமிடம் அசந்துவிட்டான்…
 
நேற்று போல எந்த அலங்காரமும் இல்லை… சிவப்பு நிற சேலை கட்டியிருந்தாள் அதற்கு மேட்ச்சாக பிளவுஸ் நெற்றியில் சிறிய மெரூன் நிற பொட்டு நெற்றி வகிட்டில் குங்குமம்… கழுத்தில் அவன் கட்டியிருந்த மஞ்சள் தாலி கயிறோடு ஒரே ஒரு செயின் மட்டும் அணிந்திருந்தாள்..தலையை விரித்துவிட்டு உச்சியில் மட்டும் கிளிப் குத்தி மல்லிகை தலைநிறைய வைத்திருக்க அந்த பூவோடு சேர்த்து அவளையும் சேர்த்தணைக்க அவனுள் ஆசை எழுந்தது…
 
பேன் காற்றில் ஆடிக் கொண்டிருந்த முந்தானை அவள் இடுப்பை அவனுக்கு காட்டி கொடுத்திருந்தது… தன்னை பார்த்தவன் தன் மேல் வியர்வை போல தெரிய அவளையே பார்வையிட்டபடி சற்றுநேரம் நின்றுவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் குளித்து வெளியில் வந்திருந்தான்…
 
அவன் மேலிருந்த வந்த சோப்பின் மனம் ஸ்ரீயின் நாசிக்குள்ளும் நுழைந்து அவளை தட்டி எழுப்பியிருந்தது… கண் விழித்தவள் பார்த்தது இடுப்பில் துண்டோடு கண்ணாடி முன்னால் நின்றிருந்த சூர்யாவைத்தான்…!!
 
நல்ல ஆறடி உயரம் அதற்கேற்றாப்போல உடல்வாகு இப்போதுதான் குளித்திருந்ததால் உடலெங்கும் திட்டுதிட்டாய் தண்ணீர் துளிகள் தலையை நன்றாக துவட்டாமல் மூடி கலைந்து போயிருந்தது அளவான மீசை ரொம்ப சிரிக்க மாட்டாங்களோ..! சிரிச்சா நல்லா இருக்காங்க…!!
 
ஒரு ஆண் அறைகுறை ஆடையோடு நிற்கிறான் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றவில்லை… தன் தாத்தா தம்பி வீட்டில் எப்படி இருப்பார்களோ அவர்களை போல நினைத்துக் கொண்டாள்… 
 
கண்ணாடி வழியே ஸ்ரீ தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் ,”என்னடி என்னை சைட் அடிக்கிறியா…??”
 
நீங்க மட்டும் என்னை கேட்காமல் முத்தம் கொடுக்கலாம், கட்டிப்பிடிக்கலாம் நான் உங்களை கேட்டுத்தான் சைட் அடிக்கனுமா…??”
 
அப்படியா மேடம் நல்லா சைட் அடிச்சிக்கோங்க இன்னும் வேணா கிட்ட வர்றேன்..!!” அவள் அருகில் வந்தவன் தன் தலையில் இருந்த தண்ணீர் துளிகளை அவளே மேல் சிலுப்பிவிட,
 
தண்ணீர் துளிகள் தன் மேல் படவும் படக்கென்று எழுந்தவள் ,உங்களை இப்ப என்ன பண்றேன் பாருங்க…??”அவனை விரட்ட அந்த பெரிய அறைக்குள் அவள் வேகத்திற்கு ஏற்றாற்போல ஓடியவன் சில நிமிடங்களில் அவள் கைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ள, அவன் முதுகில் இரண்டடி வைத்தவளை பின்னால் இருந்து அணைத்தவன்,
 
அவனது வார்ட்ரோப்பிற்கு நேராக கூட்டிவந்து,” என்னை அடிச்சதுக்கு தண்டனையா எனக்கு இப்ப போட டிரஸ் எடுத்து கொடு..??” அவளை மிரட்டியபடி நின்றான்..
அவள் அங்கிருந்ததில் தன் கணவனுக்கு ஏற்ற உடையை செலக்ட் செய்து கொண்டிருக்க அவன் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.. இருவரும் கணவன் மனைவியாக ஒருவரை ஒருவர் தங்களை அறியாமல் ஏற்றுக் கொள்ள துவங்கியிருந்தனர்…!!
 
                                           இனி…………..??????

Advertisement