Advertisement

தன்னை சுற்றி ஆண்கள் மட்டுமே இருப்பதை பார்த்தவன் கமலியை அழைத்து ஸ்ரீக்கு ஜூஸ் எதாச்சும் கொடு…? நீ போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு நான் இப்ப வர்றேன்??” அவளை மணமகள் அறைக்கு அனுப்பி வைத்தான்
 
சில வருடங்களுக்கு பிறகு பிரண்ட்ஸ்களை ஒன்றாக பார்ப்பதால் இவனுக்குள்ளும் உற்சாகம் கரை புரண்டோட அவர்களுடன் அரட்டையில் ஈடுபட்டான்… கிஷோரைக்கூட சற்று மறந்து விட்டான்…
 
ஸ்ரீக்கு ஜூஸ் கொடுக்கச் சொன்னவுடன் கமலிக்கும் சிந்தியாவுக்கும் சந்தோசம் தாங்கவில்லை… இருவரும் இதற்காகத்தான் மாலையில் இருந்து காத்திருந்தார்கள்…
வந்தவுடனேயே மயக்க மருந்தை கலந்து ஜூஸ் ஒன்றை ஸ்ரீக்காக தயார்செய்து வைத்திருக்க எப்படியாவது அவளுக்கு கொடுக்கும் நேரத்திற்காக காத்திருந்தார்கள்…
 
போட்டோ எடுக்கும் முன் சூர்யா ஜூஸ் குடிக்கச் சொல்லியும் ஸ்ரீ மறுத்து விட்டாள்… இப்போது அதை செயல் படுத்த முடிவு செய்து அவளை மணமகள் அறையில் இருந்த சோபாவில் அமரவைத்து அந்த ஜூஸை கையில் கொடுத்தார்கள்…
 
சுபத்ரா வந்து கமலியையும் சிந்தியாவையும் சாப்பிட அழைத்துச் செல்ல, இதுவும் நல்லதுக்குத்தான் என்று எண்ணி ஒன்றும் தெரியாதவர்களை போல,” நீங்க ஜூஸ குடிங்க நாங்க இப்ப வந்துருறோம்…??”
 
ஜூஸை எடுத்து வாயில் வைக்க போனவள் அறைக்குள் நுழைந்த கிஷோரை பார்த்து அப்படியே அதிர்ச்சியில் நின்றாள்…
பார்வை அவனுக்கு பின்னால் சூர்யா இருக்கிறானா என்று பார்க்க, அவன் சற்று தள்ளி தன் நண்பர்கதளோடு பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது… ஆட்கள் அங்கொருவர் இங்கொருவர் இருக்கவும் இவள் ஒன்றும் பயப்படவில்லை… கோபம்தான் வந்தது…
உன்கிட்ட ஒரு பைவ் மினிட்ஸ் பேசனும் ஸ்ரீ…??”
 
ச்சீ என் பேரக்கூட சொல்லாத…?? முதல்ல வெளியில போ ஒரு பொண்ணு தனியா இருக்க இடத்துக்கு வரக்கூடாதுன்னு தெரியாது…?? போ வெளிய…??” கோபத்தை அடக்கி கதவு பக்கம் கையை காட்டினாள்..
ஸாரி ஸ்ரீ ஒரு அஞ்சு நிமிசம் மட்டும்தான் என்னைபத்தி சொல்லிட்டு போயிருறேன் ப்ளிஸ்…??” அடுத்து அவளை பேசவிடாமல்,” உனக்கு என் மேல கோபம் இருக்கும் ஆனா அன்னைக்கு என்னால ஒன்னும் பண்ண முடியல நான் இருந்த சிச்சுவேசன் அப்படி…??’
 
வெளிய போன்னு சொன்னா கேட்காதா…?? உனக்கு என்ன சிச்சுவேசன்…?? கண்ணால பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதுதான் மெய்னு எங்க தாத்தா அடிக்கடி சொல்வாங்க… நான் அத சரியா கடைப்பிடிச்சிருந்தேன்னா நீ முதல் முறை என்னை ஏமாத்த நினைக்கும் போதே கண்டு பிடிச்சிருப்பேன்…
இல்ல ஸ்ரீ நான் உன்னை ஏமாத்தனும்னு நினைக்கலை…??”
 
இப்பதான் என்னோட பேர சொல்லாதன்னு சொன்னேன் மரியாதையா வெளிய போ..?? இல்லை நான் கத்தி உன்னை அசிங்கப்படுத்துர மாதிரி ஆயிரும்..!!!”
இல்ல ஸ்ரீ, நீ என்ன வேணும்னாலும் திட்டு!! அடிகூட அடிச்சிக்க !!! ஆனா என்னோட வந்திடு ….??”
என்ன..!!!!!” அதிர்ச்சியில் வாய்பிளந்து நின்றாள்
 
உன்னை கூட்டிட்டு போகத்தான் நான் வந்தேன் வந்திரு ஸ்ரீ …? நாம வேற எங்கயாச்சும் போயிருவோம்..!!!”
நீ என்ன லூசாடா …? அவளுக்கு அவனை பார்க்கையில் அருவருட்பாக இருந்தது.. அவனை முறைத்தபடி என்ன திட்ட வைக்காத மரியாதையா வெளிய போயிரு…??”
 
இல்ல ஸ்ரீ நான் போக மாட்டேன்..!!! இந்த சூர்யாவை போய் கல்யாணம் பண்ணியிருக்க இவன் ஆளும் மொகரையும்…ச்சீ …ச்சீ… இவன் உனக்கு வேண்டாம்…?”
பளார்…!!!’ என அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்
 
அதிர்ச்சியில் நின்றவன் அவனுக்காக என்னை அடிப்பாளா, கோபத்தில் வன்மம் எழ, மனமோ கோபத்தை குறை…!!! கிஷோர் நமக்கு இப்ப காரியம்தான் பெரிசு, அறைஞ்சாலும் பரவாயில்ல நீ வந்திரு ஸ்ரீ…!! நம்ம ரெண்டுபேருக்கும் வாழ்க்கை துணை சரியா அமையல… இப்படியே வேற எங்கயாச்சும் போயிருவோம்…??” கண்ணீர் வழிய நின்றான்
 
ஸ்ரீக்கு இவன் என்ன இப்படி பேசுறான்…!!! என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறானா, அவனுக்கும் கல்யாணம் ஆச்சுதானே அப்புறம் ஏன் இப்படி? ஒருவேளை தலையில ஏதும் அடிகிடி பட்டு லூசாயிட்டானா…?’ அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்,
 
அவன் அழுது கொண்டிருக்கவும் அவனை பார்க்கையில் இப்போது அவளுக்கு பாவமாக இருந்தது… இவனுக்கு என்னமோ பிரச்சனை இருக்கு போல…!! தன் கையில் இருந்த ஜூஸை அவனிடம் கொடுத்து குடிக்கச் சொன்னாள்…
 
சூர்யா நண்பர்களுடன் பேசி முடித்து அவர்களுக்கு பார்ட்டிக்கு பணத்தை கொடுத்து அவர்களை சாப்பிட அனுப்பி வைத்துவிட்டு ஸ்ரீயை தேடி வந்தான்…
ஸ்ரீ ஜீஸை கொடுக்கவும் சந்தோசத்துடன் வாங்கி குடித்தவன்,” நாளைக்கு காலையில உங்க வீட்டு தெரு முக்கத்தில காரை வைச்சிட்டு காத்திருக்கேன் ஸ்ரீ நீ வந்திரு…??”
 
ச்சீ…முதல்ல வாய மூடு…??” கத்தியவள் அவளுக்கு தடதடவென மேலெல்லாம் உதறியது. இவன போய் பாவம்னு நினைச்சேன் பாரு. எனக்கு இது தேவைதான். உனக்கெல்லாம் அறிவே இல்லையா. உன்னால என்னோட வாழ்க்கையே தடம் மாற இருந்துச்சு. அதுல என்னோட முட்டாள் தனமான பங்கும் இருந்ததாலதான் நான் இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தேன்..
மறுபடியும் இது மாதிரி பேசினா நான் அவங்கள இப்ப கூப்பிட வேண்டியதா இருக்கும் மரியாதையா போயிரு…??” அவளுக்கு அழுகையும் வர ஆரம்பித்தது யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க…!!!
 
அவள் அழ ஆரம்பிக்கவும் அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்த கிஷோர் அவள் கையை பிடிக்க போக, அவன் கையை பின்னால் வளைத்திருந்தான் சூர்யா… அவன் நெஞ்சில் கைவைத்து பின்னால் தள்ளிவிட்டு அவனை கோபமாக முறைத்தபடி ஸ்ரீயை பார்க்க அவள் தன் கையில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தாள்…
 
அவள் அருகில் நெருங்கியவன் அவள் முகத்தை நிமிர்த்த, ஒரு நிமிடம் கிஷோரோ என பயந்தவள் சூர்யாவை பார்க்கவும் பெருமூச்சை ஒன்றை வெளியிட்டு அவனை நெருங்கியிருந்தாள்…
 
அவள் தோளில் கையை போட்டு நெருங்கி அணைத்தவன்  இங்க உனக்கு என்ன வேலை கிஷோர்…?? மரியாதையா வெளியே போ ..?அன்னைக்கே சொன்னேன் தானே இவ என்னோட வொய்ப்ன்னு மறுபடியும் அவள நீ தனியா பார்க்க வந்திருக்கன்னா இன்னும் என்னை பத்தி உனக்கு தெரியலையா இல்ல மறந்து போச்சா… மரியாதையா வெளிய போயிரு இல்ல வந்த இடத்துல அசிங்கப்பட்டுருவ…??”
 
அதற்குள் உள்ளே சென்றிருந்த மயக்க மருந்து கிஷோருக்கு வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது… தன்னை மறந்து உளர ஆரம்பித்தான்…
 
ப்ளிஸ் ஸ்ரீ வந்திரு..?. இவனெல்லாம் உனக்கு பொருத்தமே இல்லை..!!! வா நாம ரெண்டு பேரு மட்டும் யாருமே இல்லாத இடத்துக்கு கண்காணாம போயிருவோம் வா …? இவனை விட நான் உன்னை நல்லா வைச்சுக்குவேன்.. தாங்குவேன்… இவனும் இவன் கலரும் உனக்கு கொஞ்சம்கூட பொருத்தமே இல்லை வந்துரு ஸ்ரீ…??’ கையை விரித்து நிற்க, சூர்யாவுக்கு வந்த கோபத்தில் அவனை ஓங்கி ஒரு அறை வைத்திருந்தான்…
 
தூரபோய் கீழே விழுந்து கிடந்தவனை ஒரு புழுவை போல பார்த்து ஸ்ரீயை நிமிர்ந்து கோபமாக பார்த்த போது அவளும் அழுகையோடு அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…
 
ஒன்றும் சொல்லாமல் வெளியில் சென்றவன் தன் நண்பன் ஒருவனுக்கு போன் செய்து வரச் சொல்லி கிஷோரை அவனோடு அனுப்பி வைத்தான்..
டேய் சூர்யா என்னடா ஆச்சு இவன் இப்படி தடுமாறுறான்…!!! குடிச்சிருக்கானா…??”
 
என்ன கர்மமோ…?? முதல்ல இவன கூட்டிட்டு போயிரு நான் இருக்க கோபத்துக்கு என்ன செய்வேன்னு தெரியாது…? நான் ரொம்ப பொறுமையா இருக்க முயற்சி பண்றேன்…இல்ல இங்க நடக்கிறதே வேற… ??”உள்ளம் கொதித்து கொண்டிருந்தது…
 
அப்ப இவ்வளவு நேரமும் அவளை அவன் வான்னு கூப்பிட்டுதான் இருந்தானா.. அவளை பார்வையாலே முறைத்து அவளிடம் கோபமாக பேச வாய்திறக்க ஹரிஷும் சுபாவும் வீட்டிற்கு கிளம்பி செல்வதாக சொல்ல வந்தார்கள்…அடுத்து அவள் தாத்தாவும் அம்மாவும் சொல்லி சென்றவுடன்,அடுத்து ப்ரியா அறைக்குள் நுழைந்தவள்,
 அண்ணா, அண்ணி அங்க எல்லாரும் சாப்பிட்டாங்களாம் நீங்களும் நம்ம குடும்பமும்தான் சாப்பிடலை தாத்தா உங்க ரெண்டு பேரையும் வரச் சொன்னாங்க…??” என்னண்ணி கண் கலங்கின மாதிரி இருக்கு…??”
ஒன்னுமில்ல ப்ரியா கொஞ்சம் டயர்டா இருக்கு.. வா போவோம்…??” சூர்யாவை நிமிர்ந்துகூட பார்க்காமல் ப்ரியாவோடு சென்றாள்..
 
அண்ணன் கையையும் பிடித்தவள்,” வாங்கண்ணா…??” இருவரோடும் டைனிங் ஹாலுக்கு சென்றாள்… அடுத்த அரைமணி நேரத்தில் சாப்பிட்டு அனைவரிமும் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார்கள்… சூர்யாவுக்கு இருந்த மனநிலையில் பொறுப்புகளை தன் தந்தையிடமும் தாத்தாவிடமும் கொடுத்துவிட்டு முதல் ஆளாக காருக்கு சென்றிருந்தான்…
 
அனைவரும் கிளம்பியிருந்ததால் சூர்யாவின் தாத்தாவும் அப்பாவும் வேலை பார்த்த அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தார்கள்… சுபத்ரா வந்திருந்த பரிசு பொருட்களை காரில் ஏற்ற சொல்லிகொண்டிருக்க, காமாட்சி வந்த மொய்பணப் பெட்டியோடு ஸ்ரீயை பற்றிய யோசனையில், அங்குமிங்கும் அலைந்ததால் ஏற்பட்ட கால்வலியால் ஒரு சேரில் அமர்ந்திருந்தார்…
 
இப்போது சூர்யாவோடு கமலியும் சிந்தியாவும் வர டிரைவரை தாத்தாவின் காரை ஓட்டி வரும்படி சொல்லிவிட்டு இவனே காரை ஓட்டியிருந்தான்… அவன் அருகில் ஸ்ரீயும் பின்னால் பெண்கள் மூவரும் அமர்ந்திருந்தார்கள்..
 
வந்திருந்த மனநிலைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் அனைவரும் அமைதியாக வந்தார்கள்… கமலியும் சிந்தியாவும் இவ எப்படி மயக்க மருந்து குடிச்ச ஜூஸை குடிச்சும் அப்படியே ஸ்டடியா இருக்கா…!! நாம அங்க வெறும் கிளாஸ பார்த்தோமே. அப்ப அத யாரு குடிச்சா…!!!’
 
ப்ரியாவோ அங்கு தன்னை சுற்றி சுற்றி வந்த தன் பெரிய அத்தை மகனை நினைத்துக் கொண்டிருந்தாள்..அத்தான் படிச்சு முடிச்சிட்டாங்க போல இனிமே இங்கேயே இருப்பேன்னு சொன்னாங்களே…
 
காரை நிறுத்திவிட்டு அனைவரும் வீட்டிற்குள் நுழைய ப்ரியா அண்ணியிடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றாள்… தன் அறைக்கு வந்த ஸ்ரீ தன் நகைகளையும் உடையையும் மாற்றிவிட்டு குளித்து சாதாரண சுடிதாரோடு வெளியில் வந்தாள்..
சூர்யா கட்டிலில் அதே உடையில் படுத்திருந்தவன் அவளை பார்த்து,” நீதான் அவனுக்கு போன் பண்ணி வரச்சொன்னியா… வந்து கூட்டிட்டு போகச் சொன்னியா…??”
 
கண்ணில் அடிப்பட்ட பார்வை பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் சோபாவிற்கு செல்லவும், தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் மதிக்காமல் சென்ற ஸ்ரீயை பார்க்க சூர்யாவுக்கு இன்னும் கோபம்தான் வந்தது..
 
அவள் சோபாவில் படுக்க தயாராக சூர்யாவுக்கு இன்று மண்டபத்துக்கு கிளம்பியதில் இருந்து அவளிடம் இருந்த இணக்கம், அங்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது டான்ஸ் ஆடும்போது தனக்கு இருந்த மனநிலை என அனைத்தும் நியாபகத்திற்கு வந்து, அதோடு கிஷோர் அவளை பார்த்த பார்வை கடைசியாக அவளிடம் தன்னுடன் அழைத்ததும் நியாபகத்திற்கு வந்தது..
 
நாம இவளுக்கு பொருத்தம் இல்லைன்னு அவன் சொல்றான் அதை கேட்டுட்டு இவ பேசாம இருக்கான்னா அப்ப அவன் சொல்றத ஒத்துக்கிறாளா…!!!’
 
சோபாவில் அமர்ந்தவளை தன்னை நோக்கி இழுத்தவன்,” என்ன நான் கேட்கிறது உனக்கு காதுல விழலையா…?? அப்ப அவன் கூப்பிடுறமாதிரி நீ என்னை விட்டுட்டு போயிருவியா…??”
 
தன் மனைவியை வேறொருவன் ரசிப்பதா அவளை இறுக அணைத்தவன் … எனக்கு மட்டும்தான் இவள்!! என்னால எப்போதும் எந்த சூழ்நிலையிலும் இவளை விட்டுட்டு இருக்க முடியாது, விரும்பினாலும் விரும்பாட்டாலும் என்கூடத்தான் இவ இருக்கனும்..!!!’.
அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் ,”போங்க எனக்கு உங்ககிட்ட பேசப்பிடிக்கலை..?? போங்க இங்கயிருந்து….???” மேலே என்ன சொல்லியிருப்பாளோ,
 
கோபத்தில் அவளை இன்னும் நெருங்கியவன் ,”என்னை பார்த்து வெளிய போக சொல்றியா …??நான் உனக்கு யார்ன்னு தெரியுமா அத தெரியவைக்காம இருக்கிறதாலதான் கண்டநாயும் உன் கையை பிடிக்க வருது…??”  
அவளை எலும்பு உடையும் அளவுக்கு நெருங்கியவன், அவள் இதழில் தன் இதழை புதைத்திருந்தான்…!!!கோபமாக ஆரம்பித்த அவன் செயல் சற்று நேரத்திலேயே அவனுக்கு பிடித்தமானதாக மாறிப்போக அவளுக்குள்ளேயே மூழ்கத் துவங்கினான்…
தன் முரட்டு இதழ்கள் அவன் ரோஜா இதழைபோல மென்மையாக இருந்த அந்த இதழில் தேனை குடிக்க ஆரம்பித்திருந்தது… அவளை மொத்தமாக சுருட்டி தன் இதழுக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் வேகம் அவனுக்குள் வந்திருந்தது…
 
இப்போது இதழோடு சேர்ந்து அவன் கைகளும் அவளை சோதிக்கத் துவங்க, அவனிடம் இருந்து திமிறி விலகியவள் அவன் மார்பில் கைவைத்து தள்ளவும், அவன் தடுமாறி சோபாவில் விழுந்திருந்தான்…
 
எவ்வளவு தைரியம் இருந்திருந்தா எனக்கு முத்தம் கொடுப்பிங்க…?? அதுவும் இவ்வளவு பேச்சு பேசிட்டு, என்ன சொன்னிங்க நான் அந்த லூசு பயல வரச் சொன்னேன்னா அவன நான் முதல்முதலா பார்த்ததே நம்ம கல்யாணத்துக்கு முதல்நாள் நாம ரெண்டுபேரும் சேர்ந்து போனோம் பாருங்க அன்னைக்குத்தான் போதுமா…?? நான்தான் அவன வரச் சொன்னேன்னு உங்களுக்கு தெரியுமா…??” அவனை இன்னும் நெருங்கி அவன் சட்டையை பிடித்தவள் கோபத்தில் ஸ்ரீ காளி அவதாரம் எடுத்திருந்தாள்…
                       
                                 இனி…………?????

Advertisement