Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ

    அத்தியாயம்  –  17

 

சூர்யாவின் கார் தெருமுக்கு திரும்பும்வரை தன் இடத்தில் அசையாமல் நின்று அவன் செல்வதை பார்த்தவள்  தன்னை மீறி வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்தபடி வீட்டிற்குள் நுழைய அவள் தாய் வேகமாக அவளிடம் வந்தவர்,

 

ஏண்டி அறிவு கெட்டவளே கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போக மாட்டியா.. நானும் தாத்தாவும் உன்னை காணாம என்ன பண்றதுன்னு தெரியாம துடிச்சு போயிட்டோம்…  ஆமா கையில என்ன மாப்பிள்ள எங்க..? என்னடி நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டு இருக்கேன் பதிலே சொல்லாம இருக்க ..”

 

ம்மா எனக்கு கொஞ்சம் படுக்கனும்மா ப்ளிஸ்..!! அவங்களுக்கு வேலையிருக்காம் அதான் அவசரமா போயிட்டாங்க..” தன் கையிலிருந்த பழங்களை அவரிடம் கொடுத்தவள் தன் மாத்திரை மருந்தோடு தன் அறைக்குள் நுழைந்திருந்தாள்..

 

கட்டிலில் படுத்தவளுக்கு கிஷோர் தன்னை கடத்தி சென்ற வேதனையைவிட சூர்யா தன்னிடம பேசாமல் சென்றதுதான் மிகப்பெரிய வேதனையாக இருந்தது.. இன்று ஒரே நாளில் எத்தனை நிகழ்வுகள் ஆனால் சூர்யா திட்டியதில் அவளுக்கு வருத்தம் கொஞ்சம்கூட இல்லை..

 

அவன் கூறியதில் இருந்த உண்மையை உணர்ந்து கொண்டவள் அவங்க சொன்ன மாதிரி நான் மட்டும் கூறு கெட்டதனமா ஒரு ஆளா பெங்களூர் போயிருந்தா என் நிலைமை என்னாயிருக்கும் அவளுக்கு உடலே ஒரு மாதிரி சிலிர்த்தது

 

அப்படியே அசதியில் தூங்கியவள் சூர்யாவின் அழைப்பிற்காக காத்திருக்க அவன் போனே பண்ணவில்லை.. அடுத்து அவள் தாய் வீட்டில் இருந்த  பத்து நாட்களிலும் சூர்யா அவளிற்கு போன் செய்யவே இல்லை..

 

அவள் தாத்தாவிற்கு போனில் பேசுவான் போல, அவர் அவனை பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்..சூர்யா அதை சொன்னான் , இதை சொன்னான் என்று இவள் போன் போட்டாலும் எடுப்பதில்லை..மெசேஜிற்கும் ரிப்ளை இல்லை.. சுபா அவள்  கணவனோடு போனில் பேசும்போது மண்டையில் ரெண்டு கொட்டு வைக்கலாமா என்ற அளவிற்கு கோபம் வந்திருந்தது..

 

நாட்கள் கடகடவென ஓடி ஆடி முடிந்து ஆவணியும் பிறக்க அன்றுதான் ஸ்ரீயும் சுபாவும் தங்கள் வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது.. அன்று ஞாயிற்றுகிழமையாய் இருந்ததால் தருண் வீட்டிலிருக்க ஒன்பது மணிபோல ஹரிஷும் அவன் தம்பியும் வர அடுத்த பத்து நிமிடத்தில் சூர்யா வந்திருந்தான்..

 

வீட்டிற்குள் வந்தவனை பார்த்த ஸ்ரீக்கு அப்படியே மூச்சடைத்தது.. இத்தனை நாள் பார்க்காமல் இன்று பார்க்கும் போது இன்றுதான் முதல் முதலாய் அவனை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருக்க அவள் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறந்தது.. தன் கணவனை காதலனாக பார்க்க அவனோ அவர்கள் தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

தன் கணவனின் கம்பீரத்தில் மயங்கியவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க மஞ்சளில் ஊதா கட்டம் போட்ட சட்டை, கருப்பு பேன்ட் ஆறடி உயரம்  அதற்கேற்ற உடல்வாகு தன் கையால் தலையை கோதியபடி மெதுவாக பார்வையை சுழல விட்டவன் தன்னையே சிமிட்டாமல் பார்க்கும் மனைவியை பார்க்கவும் ஒரு நிமிடம் அவள் அழகில் கிறங்கினாலும் கண்டு கொள்ளாமல் பார்வையை திருப்பி கொண்டான்.

 

ஹரிஷ் சுபாவோடு அவர்கள் அறையில் இருக்க தருணும் அஜயும் வெளியில் சென்றிருந்தார்கள். ஸ்ரீயும் சூர்யாவோடு ஒருவார்த்தையாவது பேசலாம் என காத்திருக்க இவனோ அவளை கண்டு கொள்ளவே இல்லை..

 

ஸ்ரீ தம்பிக்கு டிபன் எடுத்து வைம்மா..”

பரவால்ல தாத்தா கொஞ்சநேரம் ஆகட்டும்..”

அப்ப உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போம்மா..”

அவள் அறைக்கு வந்தவன் ஒன்றும் பேசமால் கட்டிலில் உட்கார அருகில் அமர்ந்தவள்,” ஏங்க ஸாரிங்க தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. அந்த லூசு என்னை தொட வரவும் நான் என்ன செய்றதுன்னு தெரியாம பண்ணிட்டேன் ப்ளிஸ்…??” அவனிடம் மன்னிப்பு கேட்டவளை கண்டு கொள்ளாமல்  இருந்தவன் முகத்தை தன்னை நோக்கி பார்க்க செய்தவள் அவனை நெருங்கியிருந்தாள்..

 

வந்ததிலிருந்து  தன்னிடம பேசமுடியாமல் தவிப்பதை ரசித்தவன் முகத்தை மட்டும் விரைப்பாக வைத்துக் கொண்டான்.. பட்டுச்சேலைகட்டி தலைநிறைய பூவைத்து தன் முட்டை கண்ணால் அவனையே விழுங்கி விடுவதை போல பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டவனுக்கு தானும் அவளும் மட்டும் இருக்கும் ஒரு தனி இடத்திற்கு போக மாட்டோமா என்றிருக்க,

 

அவன் முகத்தை நெருக்கத்தில் பார்க்கவும் அவளுக்கு தான் பேசவந்ததே மறந்துவிட்டது.. இந்த பத்து நாளில் ஒன்றை உணர்ந்திருந்தாள் தன் கணவனை தான் அதிகம் விரும்புவதை ,தன் உயிருக்கும் மேலாக நேசிப்பதை, அந்த கிஷோர் தொடவந்ததற்கே விசத்தை சாப்பிட்டமே அவங்க டைவர்ஸ் தர்றேன்னு சொல்லிட்டு எத்தனை தரம் கிஸ் கொடுத்திருக்காங்க அப்பல்லாம் ஒன்னும் தோனலையே..

 

 அவனுமே அவளை பற்றிய யோசனையில்தான் இருந்தான்.. அன்னைக்கு மட்டும் நாம நேரத்துக்கு போகாம இருந்திருந்தா இவளை இன்னைக்கு இப்படி பார்த்திருக்க முடியுமா தன் உடல் தன்னை மீறி சிலிர்க்க அவள் கண்ணோடு தன் கண்களை கலக்கவிட்டவன் ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

 

முன்பெல்லாம் தான் அருகில் போனாலே அணைத்து முத்தமிடுபவன் இப்போது பேசாமல் அமர்ந்திருப்பதை பார்த்தவளுக்கு, இவங்க என்ன ரொம்ப பண்ணுறாங்க .. பேசவும் மாட்டேங்கிறாங்க.. கண்டுக்கவும் மாட்டேங்கறாங்க இப்ப என்ன பண்ண ..!!

 

அவங்க முத்தம் கொடுக்காட்டா என்ன நாம கொடுப்பமா என் யோசித்து இன்னும் நெருங்கியவள் மூச்சுக் காற்று அவன் மேல் படும் அளவுக்கு நெருங்கியிருந்தாள்..

 

சூர்யாவுக்குத்தான் பெரும் அவஸ்தையாயிருந்தது.. அடிப்பாவி நான் கோபமா இருக்கேன்னு வேணும்னே பண்றாளா அவள் கண்ணிற்கே மயங்கி போயிருப்பவன்

 

இவ்வளவு அருகில் அவள் முகத்தை பார்க்கவும் எங்கே தன்னை அறியாமல் அவளை முத்தமிட போகிறோமா என நினைக்கும் நேரத்தில் அவன் நெற்றியில் முத்தமிட்டிருந்தாள்..

 

அவள் ஈர உதடுகள் தன் நெற்றியில் படவும் கண்ணை மூடி அதை அனுபவித்தவன், அப்போதும் பேசாமல் இருக்க அவன் சட்டை காலரை பிடித்தவள் இன்னும் அவனை நெருங்கி அவனை முத்தமிட போக அவள் தம்பி தன் மாமாவை தேடி கதவை தட்டியிருந்தான்..

 

கதவு தட்டும் சத்தத்தில் அவளை விட்டு விலக்போனவனை விடாமல் பிடித்திழுத்தவள் அவனை பார்த்துக் கொண்டே அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு ஓடிச் சென்று கதவை திறந்திருந்தாள்..

 

இப்போது சூர்யா சிறகில்லாமல் வானில் பறந்தான்.. அவளை இப்போதே தன்னவளாக்கி கொள்ள மனமும் உடலும் பரபரத்தது… தருண் வேகமாக தன் மாமாவிடம் வந்தவன்,” மாமா..” என கட்டி அணைக்க ஒருநிமிடம் ஸ்ரீயோ என கற்பனையில் மிதந்தவனை விடாமல் உலுக்கி கொண்டிருந்த அஜயை பார்க்கவும்தான் சுயநினைவுக்கு வந்தான்..

 

இருவர் தோளிலும் கையை போட்டவன் அவர்களுடன் அரட்டை அடித்தபடி வெளியில் வர அவனுக்காக அனைவரும் டிபன் சாப்பிடாமல் காத்திருந்தனர்.. அனைவரும் சந்தோசமாக பேசி சிரித்து சாப்பிட்டு முடிக்கவே அரைமணி நேரத்திற்கு மேலானது..

 

இரு ஜோடிகளுக்கும் தாத்தா ஆடி முறைகளான  பட்டுப்புடவை, பட்டு வேட்டி சட்டை அரிசி தேங்காய், பழங்கள் ,பலகாரங்கள் முறுக்கு ,அதிரசம், மைசூர்பாகு, ரவாலட்டு, மாவுருண்டை ,சீப்புசீடை, மிச்சர் என ஏழுவகை பலகாரங்கள் பெரிய பெரிய சம்பட்டங்களில் இருவருக்கும் தனித்தனியாக எடுத்து வைக்கப்பட்டிருக்க சூர்யாவும் ஹரிஷும் இதை பார்க்கவுமே இவ்வளவா என திகைத்து போயினர்..

 

ஹரிஷ் சுபா இவ்வளவு ஸ்வீட் எதுக்குடி..? எதாவது ஒன்னு ரெண்டு போதும்.. இவ்வளவு வேண்டாம்னு சொல்லு.. அப்படியே ஸ்வீட் கொடுக்கிறதா இருந்தா நீதான் இருக்கியே ஒரு ஸ்வீட் ஸ்டால் அவள் இதழையே பார்த்தவன் எனக்கு எப்பப்போ தேவையோ அப்பப்ப நானே எடுத்துக்கிறேன்..

 

அவள் உதட்டை சுழித்தவள்,” போங்க போங்க, அம்மா மூனு நாளா ரெண்டு ஆளுவிட்டு இந்த பலகாரம் எல்லாம் செஞ்சு வைச்சிருக்காங்க.. வேண்டாம்னு சொன்னா ரொம்ப வருத்தப்படுவாங்க… ப்ளிஸ்ங்க வேண்டாம்னு சொல்லாதிங்க..

ஏன்டி இவ்வளவு ஆர்வமா இருக்க..?”

அவன் சட்டை பட்டனை திருகியவள் வெட்கப்பட்டு கொண்டே ,”அம்மா எனக்கு பிடிச்ச பலகாரமாத்தான் பண்ணினாங்க..

 

அவள் தோளில் கைப்போட்டு தன்னிடம் இழுத்தவன்,” கேடி இனி உனக்கு என்ன வேணுமோ என்னை கேளு மாமா வாங்கி தாறேன்.. அத்தைய தொல்லை பண்ணாதடி சரியா..”

 

தன் தலையை போட்டு அவள் உருட்டவும் அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டியவன்,” லவ் யூ டி பேபி.. எப்படா நம்ம வீட்டுக்கு போவோம்னு இருக்கு..” அவள் கையை அழுத்தியவன் தன் தம்பியை அழைத்துக் கொண்டு மனைவியோடு தன் வீட்டிற்கு கிளம்ப சூர்யாவும் ஸ்ரீயும் தங்கள் காரில் கிளம்பினார்கள்..

 

காரில் ஏறியதிலிருந்து சூர்யா ஏதாவது பேசுவான்  என அவன் முகத்தை முகத்தை பார்க்க அவன் பேசும் வழியை காணோம்… ரொம்ப பண்றாங்களே மனதிற்குள் அவனை திட்டியவள் இதுக்கு எதுக்கு இவங்க வரணும் அத்தையும் ப்ரியாவுமே வந்திருக்கலாம்…  அங்கிருந்த மியூசிக் ப்ளேயரை ஆன் செய்ய அதிலிருந்து,

         

“ கண்ண காட்டு போதும்
     நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
    குறையாம நானும் தாரேன்

 நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
     ஒட்டுறியே உசுர நீ நீ ..
 நிச்சயமாகலா சம்பந்தம் போடல
     அப்பவுமே என் உசுரு நீ நீ

  அன்புல வேத வேதச்சி
     என்ன நீ பறிச்சாயே ..

    

விஜய்சேதுபதி லஷ்மிமேனனுடன் காதல் பாட்டு பாடிக் கொண்டிருக்க அதேபோல சூர்யாவோடு காதல் செய்ய விரும்பியவள் அவனை ஓரக்கண்ணால் பார்க்க அப்போதுதான் ரொம்ப சின்சியராக காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..

 

அன்று ஞாயிற்றுகிழமை டிராபிக்கே இல்லை வெறிச்சோடியிருந்த சாலையை பார்த்தவள்.. தன் உதட்டை சுழித்து,” என்னமோ நூறுவண்டிக்கு நடுவுல வண்டி ஒட்டுறமாதிரி பில்டப்..” சத்தமாக முனங்கியவளை கண்டு வாய்க்குள் சிரித்தவன் தன் வேலையை தொடர இவள் என்ன செய்து அவனை வழிக்கு கொண்டு வருவது என யோசனையில் இறங்கினாள்..

 

வீட்டிற்கு திரும்பியவர்கள் குடும்பமே ஹாலில் இருக்கவும் அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்தவள் ப்ரியாவை காணவும் சூர்யாவை மறந்து அவளோடு அரட்டையில் இறங்கிவிட்டாள்..சுபத்ராவுக்கும் இப்போதுதான் மகிழ்ச்சியாக இருந்தது..  அப்பத்தாவை நலம் விசாரித்தவன் அவர் கையை பிடித்தபடி பேசிக் கொண்டிருக்க அவருக்கே இவள் பாசத்தில் மனம் நிறைந்திருந்தது..

 

தன் தாயிடம் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி வெளியில் கிளம்பியவன் ஸ்ரீயிடம் ஒருவார்த்தைகூட சொல்லாமல் வெளியில் செல்ல அவள் முகம் அப்படியே வாடிப்போனது..  அனைவரும் எழுந்து செல்ல ஸ்ரீ தன் அறைக்குச் செல்லாமல் அங்கிருந்த சோபாவில் தலையை குனிந்தபடி அமர்ந்தருந்தாள்..

 

காரில் ஏறிய சூர்யாவிற்கு வண்டியை கிளப்ப மனதில்லை.. தான் வாசலுக்கு வரும்போது தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம் சொல்லாமல் எப்படி செல்வது திரும்பி வீட்டிற்குள் வர சோபாவில் அமர்ந்திருப்பவளை பார்த்தவனுக்கு அவளின் மனநிலை புரிய ஒன்றும் பேசாமல் சோபாவில் அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தான்..

 

தன் அருகில் யாரோ அமரவும் நிமிர்ந்து பார்த்தவள் சூர்யாவை பார்க்கவும் பளிச்சென முகம் மலர்ந்தது…சுபத்ரா கிச்சனிலிருந்து ஸ்ரீயை அழைக்க அவனை பார்த்து கண்ணடித்துவிட்டு எழுந்து சென்றவள்,” இருங்க இதோ வந்துற்றேன்..??”

 

இந்த முண்டக்கண்ணி இன்னைக்கெல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கா.. கிச்சனில் சுபத்ரா ஸ்ரீ கொண்டுவந்த பலகாரங்களை எடுத்து பிளேட்டில் வைத்துக் கொண்டிருந்தவர் சூர்யாவிற்கு  கொடுக்கச் சொல்லி ஸ்ரீயிடம் கொடுத்துவிட அவள் வரும்போது அவன் போன் பேசிக் கொண்டே மாடியேறிக் கொண்டிருந்தான்..

 

 பலகாரங்களை அவர்கள் அறைக்கு கொண்டு சென்றவள் பாத்ரூமில் சத்தம் கேட்கவும் அதை அங்கிருந்த சேரில் வைத்துவிட்டு ஒரு மாதத்திற்கு பிறகு அவளுக்கு பிடித்த லவ்பேர்ட்ஸை காண சென்றுவிட்டாள்.. அவைகளோடு சற்று நேரம் செலவிட்டவள் சூர்யா உள்ளே வரவும் வேகமாக அறைக்குள் நுழைந்திருந்தாள்..

 

Advertisement