Advertisement

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ – அத்தியாயம் –  18

 எப்போதும் பாதி இரவுக்குமேல் தான் தூங்கியபின் வரும் கணவனை இந்த நேரத்தில் எதிர்பார்க்காதவள் அதிலும் இப்படி அதிரடியாக தனக்கு முத்தமிட்டு தன் மேல் படர்ந்திருப்பவனை பே….வென விழித்து பார்த்தவளை கண்டு கொள்ளாமல் அவள் இதழில் ஆழ்ந்த முத்தமிட்டவன் , அவளுள் இன்னும் புதைய அவள் பார்வை இன்னும் மாறவே இல்லை..

 

அவள் இதழில் இருந்து பார்வையை அவள் கண்ணுக்கு செலுத்தியவன் அவளை முறைத்துக் கொண்டே அவள் ஆப்பிள் கன்னத்தை கடிக்க வலியில் ஆ..வென அலறியவள் அவனிடமிருந்து திமிறி விலக, அவளை விடாமல் மறுகன்னத்திலும் கடித்து வைத்தான்..

 

ஐயோ என்னங்க ஆச்சு உங்களுக்கு..?” அவன் வாயை மூடியபடி கத்தியவளை விட்டு விலகாமலே எட்டி அவள் எழுதிய பேப்பரை எடுத்து நீட்டியவன்,

 

என்ன இது..? என்ன வேலை பார்த்து வைச்சிருக்க..?”

தான் எழுதிய பேப்பரை பார்த்தவள்,” உண்மையைத்தானே எழுதியிருக்கேன்.. உங்களுக்கு என்னை புடிக்கலைத்தானே அதானே மூனு நாளா வீட்டுக்கே வராம இருக்கிங்க..?”

அவளை விட்டு விலகியவன்,” ஓஹோ… அப்ப மேடம் ஏன் இன்னும் போகாம இருக்கிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?”

 

எல்லாம் உங்களாலதான் அன்னைக்கு நீங்க சொன்னிங்கதானே.. எதிலயும் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாதுன்னு அதான் நான் இப்ப எங்க அம்மா வீட்டுக்கு போறது அவசரமா அவசரமில்லாத முடிவான்னு உங்ககிட்ட கேட்டுட்டு போகலாம்னு காத்திருந்தேன்..

 

என் தலையெழுத்து..” அவன் தலையில் அடித்துக் கொண்டதை கவனிக்காதவள்,

அதோட…!!”

சொல்லுங்க மேடம் அந்த கொடுமையையும் கேட்கிறேன்..

அதோட எனக்கு உங்க மேல இருந்த கோபத்தில இந்த சுடிதார எடுத்து போட்டுட்டேன்… எனக்கு நீங்க அன்னைக்கு எடுத்துக் கொடுத்த சுடிதார்தான் வேணும் அதான் அந்த டிரஸை மாத்த வந்தேன்..”

 

அவள் இருகன்னத்தையும் பிடித்து திருஷ்டி கழித்தவன்,” என் சமத்து சக்கரைக்கட்டி …!!” அவள் தலையில் நறுக்கென கொட்டி ,”அதென்னடி நான் வேணாம் நான் எடுத்துக் கொடுத்த டிரஸ் மட்டும் வேணும்..?”

 

ஸ்ரீயோ இவங்க என்ன நம்மள சமத்துன்னு சொல்றாங்க அப்புறம் மண்டையிலயும் கொட்றாங்க தலையில் கைவைத்து தடவி தன் வலித்த கன்னத்தை தடவிக் கொண்டிருக்க,

 

அவள் கையை பிடித்து கன்னத்தை பார்த்தவன் அதில் லேசாக தன் பல்தடம் தெரியவும்,” ஸாரிடி…ஸாரி கன்னத்தை நன்கு தேய்த்துவிட ஏற்கனவே சிவந்திருந்த அவள் கன்னம் இன்னும் ரோஸ்கலரில் மாறியது.. வலிக்குதாடி..?’

 

இல்லை என தலையாட்டியவளின் கன்னம் இன்னும் இன்னும் சிவக்கும் அளவுக்கு முத்தமிட்டவன் அவள் காதருகில் குனிந்து,” லவ் யூடி பேபி..”

 

மறுபடியும் தன்னை பார்த்து கண்விரித்தவளை,

இப்படியே முழிச்சு முழிச்சு பார்க்காதடி முண்டக்கன்னி..”

நீங்க சொன்னது பொய்தானே..?”

என்ன பொய்..”

இல்ல நீங்க என்னை லவ் பண்றேன்னு சொல்றது..”

அவள் முகத்தை திருப்பி தன்னை பார்க்கச் செய்தவன் அவள் கண்ணோடு தன் கண்ணை கலக்கவிட்டபடி,” என்னை பார்த்தா பொய் சொல்றவன் மாதிரி தெரியுதா..!!”

 

இல்லை என தலையாட்டியவள்,” ஆனா… மூனு நாளா.. இழுக்க

எல்லாம் சொல்றேன் பேபி.. மதியமும் சாப்பிடலை எனக்கு ரொம்ப பசிக்கிது சாப்பிட்டப்பறம் சொல்லவா..”

அவன் கண்களில் களைப்பையும் பசியையும் கண்டவள்,” நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீங்க வாங்க..” வேகமாக வெளியில் செல்ல

 குளித்து உடைமாற்றியவன் கீழே வந்திருந்தான்..தட்டை வைத்து அவனுக்கு பறிமாறியவள்.. உட்காருங்க..

 எங்க ஸ்ரீ வீட்ல யாரையும் காணோம். அம்மா எங்க? ப்ரியாவையும் காணோம்..?”

 

தாத்தா, பாட்டி, ப்ரியா எல்லாரும் சாப்பிட்டாங்க ..அத்தையும் மாமாவும் ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு போயிருக்காங்க .. நீங்க சீக்கிரம் வர்றது அத்தைக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா போயிருக்கவே மாட்டாங்க..”

நீ சாப்பிடல..”

இல்லை என தலையாட்டியவளுக்கு தன் தட்டிலிருந்து சாப்பாட்டை எடுத்து ஊட்டியவன் அவளுக்கும் தட்டை வைத்து டிபனை எடுத்து வைக்க இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டியபடி அடுத்தவர் அண்மையை ரசித்தபடி உண்ண ஆரம்பிக்க, அந்த உலகத்தில் அவர்கள் இருவர் மட்டுமே .., அந்த நிமிடத்தை அனுபவித்தபடி சாப்பிட, ஸ்ரீக்கு இந்த மூன்று நாட்களாக இருந்த மனக்குழப்பம் காற்றில் கரைந்த்து போல இருந்தது…

 

அவனுக்கு வயிறு நிறைய பார்த்து பார்த்து பரிமாறியவள் அவன் ரசித்து சாப்பிடுவதை அவள் ரசித்து அமர்ந்திருந்தாள்.. இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் டைனிங் டேபிளை ஒதுங்க வைத்தவள் பொருட்களை கிச்சனுக்கு கொண்டு செல்ல சூர்யாவும் அவளுக்கு உதவி செய்தான்..

 

அவர்கள் ஹாலுக்கு வர அவன் அம்மாவும் அப்பாவும் வந்திருந்தனர்.. தன் தந்தையை பார்க்கவும் ஏதோ தொழில் விசயமாக அவன் பேச்சை துவங்க, சுபத்ரா தன் மருமகளிடம் ரிசப்ஷனில் பார்த்தவர்களை பற்றி சொல்லியவர் பாலை காய்ச்சி பிளாஸ்கில் ஊற்றி ஸ்ரீயிடம் கொடுத்து அவர்கள் அறைக்கு கொண்டு போக சொன்னார்.. ஸ்ரீ தன் கணவனை பார்த்தவள் அவன் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கவும்  இவள் மாடியேற,

 

தன் மருமகளை பார்த்த சுபத்ரா தன் கணவனையும் மகனையும் முறைத்தபடி, இவனே எப்பவாச்சும்தான் சீக்கிரம் வர்றான் அப்பவும் அவனை இப்படி வேலைவேலைன்னு புடிச்சு வைச்சிக்கிட்டா நாம பேரன் பேத்தி எப்ப எடுக்கிறது.. இவங்கள..??” கோபமாக அவர்களை நோக்கிச் சென்றவர்

 

லேப்டாப்பில் ஏதோ வரைபடத்தை காட்டி தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தவனை முறைத்தபடி அதை வாங்கி மூடி வைத்தவர் ,”டேய் போடா மாடிக்கு..?” கோபமாக அவனை திட்டியவர்,

 

தன் கணவனிடம் திரும்பி,” எப்ப பார்த்தாலும் வேலைதானா விடுங்க அவன..?”

அம்மா இதுமட்டும்தான்மா…ப்ளிஸ்..!!” ஒன்றும் சொல்லாமல் அவனை முறைத்தபடி நிற்க….

இதோ போயிட்டேன்மா..” அவர் கன்னத்தில் முத்தமிட்டவன் இரண்டிரண்டு படிகளாக தாவி மாடியேற இங்கு சுபத்ரா தன் கணவர் பக்கம் திரும்பி

 

எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு திரிஞ்சா சொத்து மட்டும்தான் நம்மகிட்ட இருக்கும், அதை ஆண்டு அனுபவிக்க அவனுக்கு வாரிசு வேண்டாமா..?”

 

என்னம்மா ஆச்சு உனக்கு..?? மலையேறாத.. நானா உன்பையன அப்படி வேலை வேலைன்னு திரிய சொன்னேன்.. என்னை குற்றம் சொல்லுற..?” இருவரும் தனக்காக பேசிக் கொண்டிருப்பதை காதில் வாங்கியபடி தன் அறைக்குள் நுழைந்திருந்தான்..

 

அறைக்குள் ஸ்ரீயை காணாமல் பால்கனிக்கு செல்ல அவள் மெல்லிய குரலில்

 

சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா

 செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா

 லாளி லாளி நான் உன் தூளி தூளி

 

பாட்டை ரசித்து பாடிக்கொண்டிருக்க கதவு நிலையில் சாய்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வானத்து தேவதை ஒன்று தரையிறங்கி வந்தது போலிருந்தது.. பௌர்ணமி வெளிச்சத்தில் வெள்ளியை வார்த்தாற்போல பளபளவென ஜொலித்தவளின் பின்புறம் சென்றவன் ஊஞ்சலை லேசாக ஆட்டிவிட்டபடி அவள் அருகில் அமர,

 

தன் கணவனின் கைகளோடு தன் கைகளை கோர்த்தவள்,” காத்து செமையா வருதுங்க..”

 

அவளை இன்னும் நெருங்கியவன் அவள் பின்கழுத்தில் தன் முகத்தை பதித்து ம்கூம் நீதான் செமயா இருக்க..” அவள் தோளில் முகம் புதைத்தபடி பேச அவன் உதடும் மீசை முடிகளும் அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வை தோற்றுவித்தது..

அதற்குமேல் அவளால் அவனருகில் இருக்க முடியாமல் எழுந்து அறைக்குள் ஓடியவளை பின்னால் வந்து அணைத்தவன் பின்னால் இருந்து முத்தமிட்டபடியே முன்புறமாக வர,

 

ஏ..ஏங்க.. என்னமோ பேசனும்னு சொன்னிங்க..”

அவளை முன்புறம் திருப்பியவன்,” ப்பச் பேசாதடி இப்பநான் பேசுற மூட்ல இல்ல..” பேசும் அவளிதழுக்கு பூட்டு போட்டவன் அவளை தன் கைகளில் ஏந்தியிருந்தான்..

 

அவன் டிசர்டை பிடித்தவள் அவன் அவளை கட்டிலில் விட கூச்சத்தில் மறுபக்கம திரும்பி படுத்தவளை தன்னை நோக்கி பார்க்கச் செய்தவன்,” பேபி ஐ லவ் யூடி என்னால முடில ப்ளிஸ்… ??”ஏதேதோ அவளிடம் பிதற்ற..

 

ஐயோ என்ன பேசுறிங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது..!!” அவன் வாயில் கைவைக்க,

அதில் முத்தமிட்டவன்,” பேசலாம்.. உன்கிட்ட மட்டும் பேசலாம் எனக்கு இனி எல்லாமே நீதான்..!! நீ மட்டும்தான்..!!” அவள் வனப்பும் செழுமையும் அவனை தன்னிலை இழக்கச் செய்ய இன்றே அவளை ஆதியும் அந்தமுமாய் அறிந்து கொள்ள துடித்தான்..

 

அவனுக்கும் பெண்களை தெரியும்தான், கல்லூரி காலத்தில் அவர்களோடு அரட்டை அடிப்பான் , கைகுலுக்குவான், கட்டிக்கூட பிடித்திருக்கிறான் பெங்களூரில் அது சகஜமாயிருந்தது.. ஆனால் இங்கு தொழிலை கையில் எடுத்த பின் எந்த பெண்ணோடும் அதிகமாக பேசியதில்லை…

அவனிடம் வேலைபார்க்கும் பெண்களிடம்கூட தேவையில்லாமல் பேசமாட்டான்.. தன் இரு அத்தை மகள்களும் வீட்டிலேயே இருந்த போதுகூட அவர்கள் இவனை கவரவில்லை. ஏதோ கல்லையும் மண்ணையும் போல பார்த்து வைப்பான்..

 

இன்று தனக்கும் அவளுக்குமான உலகத்தில் ஓரே நாளில் அனைத்தையும் அறிந்து கொள்ள துடிக்க, கூட வந்தவள்தான் அவனுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திகைத்து திணறிபோயிருந்தாள்.. கெஞ்சி, கொஞ்சி அவளை வழிக்கு கொண்டுவந்தவன் அவளிலேயே மூழ்கி போனான்..

 

இரவு 11.50 அலாரத்தை செட்பண்ணியிருந்தவன் அலாரம் அடிக்கவும் எழுந்து சிறிது நேரம் கழித்து ஸ்ரீயை எழுப்ப அவளால் கண்ணை திறக்க முடியவில்லை..விடாமல் எழுப்பி கொண்டிருந்தவனிடம் கண் திறக்காமலே,

 இப்பதான் தூங்க ஆரம்பிச்சேன்.. பத்துநிமிசம்கூட ஆகல  அதுக்குள்ள எழுப்புறிங்க..?’ அவனையும் இழுத்து தன் அருகில் படுக்கச் செய்தவள் அவன் மார்பிலேயே முகத்தை பதித்து தன் விட்ட தூக்கத்தை தொடர,

 

அவள் கூந்தல் முடிகளை ஒதுக்கிவிட்டபடி அவள் காதருகில்,” ஹாப்பி பர்த்டே பேபி..” கிசுகிசுத்தவன் அவள் நெற்றியில் முத்தமிட,

டக்கென கண்விழித்தவள்,” உங்களுக்கு இன்னைக்கு என்னோட பர்த்டேன்னு தெரியுமா ..??”அவனுக்கு தெரிந்திருக்காது என்ற எண்ணத்தில் இருந்தவள் இப்போது குதூகலித்தபடி அவனை நோக்கியவள் இப்போதுதான் அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தாள்..

 

அவன் பார்வையில் ஒரு உல்லாசத்தை கண்டவளுக்கு சற்று முன் நடந்ததெதல்லாம் கண் முன்னால் வர வெட்கத்துடன் தன் முகத்தை மூடிக் கொண்டாள்..

 

அவளை கைகளில் ஏந்தியவன் அங்கு சேரில் வைக்கப்பட்டிருந்த கேக்கின் அருகே கொண்டு சென்று இறக்கிவிட்டு அவள் கையோடு தன் கைவைத்து அந்த கேக்கை வெட்டியவன் முதல் துண்டை எடுத்து மனைவிக்கு கொடுக்க,

 

அவள் சாப்பிட்டு முடிப்பதற்குள் அதனையே தானும் அவள் இதழில் இருந்து தனக்கும் வாங்கி கொண்டான்.. அவள் வெட்கத்துடன் கேக்கை எடுத்து அவன் கன்னத்தில் அப்பிவிட இவனும் அதையே செய்ய போக என அங்கொரு காதல் விளையாட்டு ஆரம்பமாகியது..

 

அழகான காலை பொழுதுமலர மெதுவாக கண்விழித்தவள் தன் அருகில் உறங்கும் கணவனை காணவும், இன்னும் வெளியில போகாம தூங்கிறாங்க அவன் கலைந்திருந்த தலையை கோதியவள் அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள்.. அவன் அசந்து தூங்கவும் தூக்கம் கலையாதவாறு குளித்து கீழே வந்திருந்தவள் நேராக சாமி அறைக்கு சென்று கடவுளை வணங்கிவிட்டு கிச்சனுக்கு செல்ல சுபத்ரா காப்பியோடு தயாராக இருந்தார்..

 

அவரிடம் காப்பியோடு பிறந்தநாள் வாழ்த்தையும் பெற்றுகொண்டவள் வீட்டினர் ஒவ்வொருவரிடமும் வாழ்த்தையும் பரிசையும் பெற்றுக் கொண்டாள்.. தன் மருமகள் முகத்தில் தெரிந்த வெட்கத்தையும் மலர்ச்சியையும் கண்டவர் மகிழ்ச்சியுடன் தன் மகனுக்கு காப்பியை அவளிடம் கொடுத்தனுப்பினார்..

 

அவன் இன்னும் உறக்கத்தில் இருக்க அவனை எழுப்பாமல் டேபிளில் காப்பியை வைத்து திரும்புவதற்குள் அவள் பின்னிருந்து அணைத்திருந்தான்.. நீங்க முழிச்சிட்டிங்களா அப்ப சும்மாதான் கண்ணை மூடி படுத்திருந்திங்களா ..?”ஒன்றும் சொல்லாமல் அவளை முத்தமிட போனவனை பாத்ரூமிற்குள் தள்ளிவிட்டு கதவை வெளிப்பக்கமாக சாத்தி,” பிரஷ் பண்ணிட்டு வாங்க காப்பி ஆறுது..??”

 

அவள் தன் பறவைகளோடு பால்கனியில் அமர்ந்திருக்க ப்ரஷாகி வெளியில் வந்தவன் காப்பி கப்போடு அவளருகில் அமர்ந்தான்..

இன்னைக்கு வேலை இல்லையாங்க..

பத்து நாள் லீவ் புதுபுடவை எடுத்து வைச்சிருக்கேன்.. அத கட்டிட்டு சீக்கிரமா கிளம்பு, நாம கோவிலுக்கு போய்ட்டு உங்க அம்மா வீட்ல தலையை காட்டிட்டு அப்படியே ஊட்டிக்கு போறோம்.. வர பத்து நாளாகும்..”

 

சூப்பர்ங்க..!! ஊட்டிக்கா செம..!! எழுந்தவள் இருங்க ப்ரியாக்கிட்ட போய் சொல்லிட்டு அத்தை மாமாக்கிட்டயும் சொல்லிட்டு வர்றேன்… அவங்களும் தானே வர்றாங்க..??”

 

அவளை தன் புறம் இழுத்தவன்,” அப்படியே உங்க அம்மா வீட்லயும்., தங்கச்சி வீட்லயும் சொல்லிரு வேனை புடிச்சிட்டு எல்லாரும் அப்படியே கோவில் கோவிலா போவோம்..”

 

ஏங்க ஊட்டிக்கு போயிட்டு அப்புறமா கோவிலுக்கு போவோம்ங்க ப்ளிஸ் ப்ளிஸ்..” அவள் மண்டையில் நறுக்கென கொட்டியவன்,

 ஹனிமூனுக்கு எல்லாருமா போவாங்க.. நாம மட்டும்தான் போறோம்..”

 

தன் தலையை தடவிவிட்டவள்…. அதென்னங்க மண்டையிலேயே எப்ப பார்த்தாலும் கொட்டுறிங்க..? இல்லை கன்னத்தை கடிக்கிறிங்க..? போங்க நானே ரொம்ப குள்ளம் நீங்க இப்படியே கொட்டுனா நான் இன்னும் குள்ளமா போயிருவேன்.??”.சினுங்கியபடி அவனை விட்டு தள்ளி அமர்ந்தவளை,

 

அவள் சிறுபிள்ளை தனத்தில் தன்னை இழந்தவன் அவளை இழுத்து கொண்டு அறைக்குள் நுழைந்து அவள் தலையை தடவிவிட்டபடி அவள் ஈரமுடியில் முகம் புதைத்து..” கொல்றடி..” இன்னும் அவளில் மூழ்க போனவன் தன் சுயநினைவு வந்து பெருமூச்சுவிட்டு,” நேரமாச்சு நான் குளிச்சிட்டு வர்றேன்  நீ இந்த சேலையை மாத்து ..”

 

புடவையை தடவி பார்த்தவள் எல்லாத்தையும் எப்படி இவங்களால ரசனையா எடுக்க முடியுது.. அந்த புடவையை மார்போடு அணைத்தவள் அவன் வருவதற்குள் சேலையை மாற்றி தலைசீவிக் கொண்டிருக்க,

 

குளித்து இடுப்பில் துண்டோடு வெளியில வந்தவன் கண்ணாடி அருகில் சென்று தன் தலையை உதற அவள் தலையில் இருந்த நீர்துளிகள் அவள் மேலெங்கும் சிதறியது..

 

ச்சூ குளிருதுங்க..” சிலிர்த்தவளை தூக்கி நிறுத்தி புடவையை ரசித்தபடி பீரோவில் இருந்த நகை பெட்டியை எடுத்து அவளிடம் கொடுக்க.. இதெல்லாம் எப்பங்க வாங்கினிங்க.. அதை திறந்து பார்த்தவள் வைர நெக்லஸ்  செட்டாக இருந்தது வளையல், தோடு, மோதிரம் என அவ்வளவு அழகாக பளிச்சிட்டது

 

நல்லாயிருக்கா ..?”

சூப்பரா இருக்குங்க நீங்க மட்டும் எப்படி அழகா செலக்ட் பண்றிங்க..

அப்படியா சொல்ற..!!” அந்த நெக்லஸை எடுத்து அவள் கழுத்தில் போட்டுவிட்டவன் அனைத்தையும் போட்டு அழகு பார்க்க புடவைக்கும், நகைக்கும் பொருத்தமாக இருந்தது.. மனதிற்குள் சுபாவிற்கு நன்றி சொன்னவன் அவ போன்ல சொல்லாட்டா நமக்கு இன்னைக்கு பர்த்டேன்னே தெரிஞ்சிருக்காது..

 

அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் கிளம்பி கோவிலுக்கும் அவள் அம்மாவீட்டிற்கும் சென்றுவிட்டு ஊட்டியை நோக்கி காரை திருப்ப லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது..

 

மழைச்சற்று வலுக்கவும் அவன் மெதுவாக காரை செலுத்த அப்போதுதான் பார்த்தாள் ஒரு குட்டிநாயொன்று மழையில் நனைந்து கொண்டிருப்பதை.. வண்டியை ஓரமாக நிறுத்த சொன்னவள் காரைவிட்டிறங்கி அந்த நாயை நோக்கி ஓடியவள் அதை தூக்கி சுற்றிலும் பார்த்து அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மழை தண்ணீர் படாத இடத்தில்  விட்டாள்..

 

 திரும்ப காருக்கு வந்து சூர்யாவிடமிருந்து பணத்தை வாங்கி பக்கத்திலிருந்த கடையிலிருந்து பிஸ்கெட் வாங்கி அதற்கு போட்டவள் பக்கத்து டீக்கடையில் பால்வாங்கி ஒரு கொட்டாங்குச்சியில் அதை ஊற்றி அதனிடம் வைக்கவும்தான் தான் நனைந்ததே அவளுக்கு தெரிந்தது..

 

ஓட்டமாக காரை நோக்கி ஓடி வந்தவளிடம் தண்ணீரை கொடுத்து கைகழுவ சொன்னவன் டவலை எடுத்து அவளிடம் கொடுக்க தன் முகத்தை துடைத்தபடி அவனருகில் அமர்ந்தவளின் கையை பிடித்து அவள் நெஞ்சோடு அணைத்தவன் உன்னை முதல்முதலா பார்க்கும்போதும் இப்படித்தான் ஒரு நாய்குட்டியோட பார்த்தேன்..

அவனை ஆச்சர்யமாக பார்த்தபடி, எப்பங்க..??”

அதிருக்கும் ஒரு வருசத்துக்கு முன்னாடி அன்னைக்கும் இதே மாதிரி மழைதான் நீ காலேஜ்ல இருந்து நனைஞ்சிட்டே ஓடுவந்த.. வரும்போது அங்க ஒரு குட்டி நாயை ஒரு பெரிய நாய் ஒன்னு கடிக்க வரவும் அதை தூக்கிக்கிட்டு ஓடிவந்த….

 

அவளுக்கு அந்த நிகழ்வு நியாபகத்தில் வந்தது.. அந்த நாயும் உன்னை விரட்ட ஆரம்பிச்சிச்சு.. நீ அதை விரட்டாம பயந்துபோய் பக்கதில கொஞ்சம் குட்டையா இருந்த காம்பவுண்ட் மேல ஏறிநின்னுட்ட…

 

ஆமாங்க அந்த நாய் போகவே இல்லை… அரைமணி நேரம் நானும் மழையிலே நனைச்சிட்டு அந்த நாய் போகவும் வீட்டுக்கு தூக்கிட்டு வந்தேன்.. இப்பக்கூட எங்கவீட்ல இருக்கு பாருங்க அந்த பப்பி குட்டி .. ஆனா அன்னைக்கு அம்மாதான் செமதிட்டு தெருவுல போற தெருநாய், சொறிநாயெல்லாம் வீட்டுக்கு தூக்கிட்டு வந்திட்டாளேன்னு ..கொண்டு போய் வெளியில விடுன்னு அரைமணி நேரம் விடவே இல்லை.. அப்புறமா தாத்தாதான் போனா போகுது இருந்துட்டு போகட்டும்னு சொன்னாங்க.. ஆமா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்..??”

 

நான் அங்கதானே காருல உட்கார்ந்திருந்தேன்..??”

என்னை வேடிக்கை பார்த்ததுக்கு பதிலா அந்த நாயை கொஞ்சம் விரட்டியிருக்கலாம் தானே..”

 

என்ன தேவைக்கு..?? அன்னைக்குத்தான் உன்னை முதல்முதலா பார்த்தேன்.. அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கனும் போல இருந்திச்சு.. நீ அந்த நாய்க்கிட்ட கெஞ்சுனது, அதோட டீல் பேசினது எல்லாத்தையும் ரசிச்சுக்கிட்டுதான் இருந்தேன்.. நானே அந்த நாய் இன்னும் கொஞ்சநேரம் அங்க இருந்திருக்ககூடாதான்னு யோசிச்சுட்டு இருந்தேன்..

 

அவனை திரும்பி முறைத்தவள் இடுப்பில் கைவைத்து,” உங்கள.. !!”அவனை அடிக்கவர அவள் கைகளை பிடித்தவன் தன்னை நோக்கி இழுத்திருந்தான்..

 

                                                         இனி……………………??????

Advertisement