Advertisement

இரவு ஏழு மணிக்கு அத்வைத் மற்றும் செந்தமிழினி அவர்கள் தங்க இருக்கும் உல்லாச விடுதிக்கு வந்தனர்.
சிறு சிறு குன்றுகளின் மீது ஒவ்வொரு குடிலும் மற்றவரின் தனிமையை கெடுக்காத வகையில் அமைந்து இருந்தது. இவர்களின் குடில் மற்ற குடில்களை விட சற்று உயரத்தில் வண்ணப்பூக்களின் நடுவே, அழகாக அமைந்து இருந்தது. ஓட்டுக் கூரையின் மீது வித்யாசமான சிறு சிறு ஆரஞ்சு வண்ணப் பூக்களை கொண்ட கொடி படர்ந்து இருந்தது.
அதைப் பார்த்ததும் செந்தமிழினி, லொகேஷன் செம அத்து.. ஆனா, ஒவ்வொரு முறையும் கீழே இறங்கி வரது தான், கொஞ்சம் கஷ்டம்.” என்றாள்.
அவனோ அவளது காதில், கீழ இறங்கி இறங்கி ஏற நாம என்ன ட்ரேக்கிங்கா வந்து இருக்கிறோம்.. மூனு நாளும் ஹௌஸ் அரெஸ்ட் தான்.” என்றான்.
வெட்கத்தை தன்னுள் மறைத்தவள், அவனுக்கு அழகு காட்டிவிட்டு, தங்கள் குடில் நோக்கி நகர, அவன் மென்னகையுடன் அவளுடன் சென்றான்.
இவர்கள் பெட்டிகளை தூக்கிக் கொண்டு வேகமாக முன்னால் சென்றிருந்த வேலையாள் குடிலை திறந்து பெட்டிகளை உள்ளே வைத்துவிட்டு, இவர்களுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.
இவர்கள் குடிலுக்குள் சென்றதும், வேலையாள் குடிலின் சாவியை கொடுத்தபடி, டின்னர் வெளியே போகப் போறீங்களா? இல்லை, இங்கேயே ஏதும் ஆர்டர் செய்றீங்களா, சார்? இங்கே சாப்பிடப் போறீங்கனா, இப்பவே சொன்னா தான், ரெடி செய்ய முடியும்.” என்றான்.
அத்வைத், இங்கேயே கீழ சின்னதா ரெஸ்டாரென்ட் மாதிரி   இருக்குதுனு சொன்னாங்க!” என்றான்.
ஆமா சார்.. ரூம் சர்விஸ்னா இப்பவே சொல்லணும்.. கீழே வந்து சாப்பிடுறதா இருந்தா, இப்போ ஆர்டர் கொடுக்கத் தேவை இல்லை”
சரி.. நாங்க கீழ வந்தே சாப்பிட்டுக்கிறோம்.” என்றபடி அவனுக்கு 100 ரூபாய் கொடுக்க,
அவன், இல்லை சார்.. இதெல்லாம் வேணாம்.” என்றான்.
இல்லை, பரவாயில்லை. வச்சுக்கோங்க.” என்று கூறிக் கொடுக்க,
சிறு தயக்கத்துடன் பெற்றுக் கொண்டவன் பிறகு புன்னகையுடன், தேங்க்ஸ் சார்” என்று கூறிச் சென்றான்.
வேலையாள் சென்றதும் கதவை மூடியவன் குடிலை சுற்றிப் பார்த்தான். குடில் உள்ளேயும் மிக நேர்த்தியாக இருந்தது. குடிலைத் திறந்ததும் ஐந்து அடிக்கு நடைபகுதி போல் குறுகலாக இருக்க, அதை அடுத்து விசாலமான அறை இருந்தது. அந்த குறுகலான பகுதியின் வலதுபுறம் கழிவறையுடன் கூடிய குளியல் அறை இருக்க, அதன் உள்ளே குளிதொட்டி(bath tub) இருந்தது.
இருவர் படுக்கும் அளவில் மெத்தையுடன் கட்டில், கட்டில் அருகே சுவற்றின் கீழே பொருத்தப்பட்ட விடிவிளக்கு, அலங்கார விளக்கு கொண்ட ஆளுயர கண்ணாடியுடன் ஒப்பனை மேசை, சுவற்றில் மாட்டிய தொலைக்காட்சி, கதவுடன் கூடிய மர அடுக்குகள் என்று அணைத்து வசதிகளுடன் அறை இருந்தது. அறையில் மின்விசிறியோ காற்பதனி இல்லை, ஆனால், அறை குளுமையாக இருந்தது.
தரை முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது. அறையின் முடிவில் ஒருவர் கால் நீட்டி அமரும் அளவில் திண்டுடன் நீண்ட கண்ணாடி சாரளம் திரைச்சீலையுடன் இருக்க, அதன் எதிரே இருந்த சிறு கதவை திறந்தால் சிறு உப்பரிகை இருந்தது.
மெத்தை மீது பெட்டியை திறந்து வைத்து, தனது ஆடைகளை ஆராய்ந்து கொண்டிருந்தவள், நைட் ட்ரெஸ் வைக்கவே இல்லை!” என்று கூற,
அவனோ, நைட் ட்ரெஸ்சே தேவை இல்லைன்னு விட்டுட்டேன்” என்றபடி கண் சிமிட்டினான்.
லேசாக கண்ணை விரித்தவள், பிண்ணுறீங்க அத்து” என்று கூற,
அவளை பின்னால் இருந்து அணைத்து இதழால் அவளது கழுத்து பகுதியில் உரசியபடி, பின்னிக்கலாம்னு தான் சொல்றேன்.” என்றான் கிறக்கமான குரலில்.
அவனது நெருக்கத்திலும், தீண்டலிலும், வார்த்தை ஜாலத்திலும் மயங்கத் தொடங்கிய மனதை இழுத்துப் பிடித்து, நாள் பூரா ட்ராவல் செய்தது ஒருமாதிரி இருக்குது.. ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்.. விடுங்க” என்றபடி அவனது கையை அவள் விலக்க,
அவனோ அதற்கும், ஹ்ம்ம்.. பிரெஷ்ஷா கமகமனு தேடலை தொடங்கலாம்” என்றான்.
அவனை செல்லமாக முறைத்தவள், எது பேசினாலும் இதுலேயே வந்து முடிக்கிறீங்க.. பேச முடியலை” என்றாள்.
வாய்விட்டுச் சிரித்தவன், பேசுறதுக்கா உன்னை கடத்திட்டு இங்கே வந்தேன்!” என்றான்.
நன்றாக கண்களை விரித்தவள், ரெமோ வெர்ஷன் 2.0” என்று விட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள்.
அவள் வெளியே வந்ததும் அவளது கன்னத்தில் முத்தமிட்டு, கிளம்பி ரெடியா இரு.. நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வந்ததும், கீழே போய் சாப்பிடலாம்.” என்று விட்டு, குளியல் அறைக்குள் சென்றான்.
அவன் குளியல் அறையில் இருந்து வெளியே வந்த பொழுது, அவள் காணொளி அழைப்பின் மூலம் யாதவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
அதைக் கண்டு புன்னகைத்தவன், தலைவாரி கிளம்பிவிட்டு அவள் அருகே சென்று, ஹாய் யது கண்ணா” என்றான்.
ஹாய் டாடா.. யது சமத்தா விளையாடினே.. சாப்டேன்.” என்றான்.
சூப்பர் கண்ணா.. த்ரீ டேஸ் சமத்தா இருக்கனும்” என்று அவன் கூற,
அவளோ, யது கண்ணா அம்மாவை தேடினா போன் செய்யுங்க, அம்மா உடனே கிளம்பி வந்திருவேன்.” என்றாள்
குழந்தை, டோன்ட் வொர்ரிம்மா.. யது சமத்து.. பிக் பாய்.. எம்மு கூட இருப்பேன்.. நீ த்ரீ டேஸ் அப்புறம் வா” என்றான் பெரிய மனிதனாக.
அவளை ஓரப்பார்வை பார்த்தபடி அத்வைத், இப்படியே சமத்தா இருந்தா என்ன கிடைக்கும்னு டாடா சொன்னேன்?” என்று கேட்டான்.
யதுக்கு தங்கச்சி பாப்பா” என்று குதூகலத்துடன் யாதவ் கூற,
எஸ்” என்றான் புன்னகையுடன்.
யது கண்ணா அம்மா அப்புறம் பேசுறேன்.” என்று செந்தமிழினி கூற,
குழந்தை சமத்தாக, ஓகேமா.. பை..” என்றபடி பறக்கும் முத்தம் கொடுத்தான்.
அவளும் பறக்கும் முத்தம் கொடுத்து, பை கண்ணா” என்றாள்.
பை டாடா” என்றபடி தந்தைக்கும் பறக்கும் முத்தம் கொடுத்தான்.
அத்வைத்தும், பை கண்ணா” என்று கூறி பறக்கும் முத்தம் கொடுத்ததும் அழைப்பைத் துண்டித்தவள், கைபேசியை மெத்தை மீது போட்டு விட்டு அவனை மொத்த ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு அடிக்கும் நடுவில், என்ன வேலை பார்த்து இருக்கிறீங்க! கொஞ்சமாச்சும் எதுவும் இருக்குதா? குழந்தை கிட்ட என்ன சொல்லி வச்சிருக்கிறீங்க! போனதும் கேட்டா என்ன செய்வீங்க?” என்று விதம் விதமாகத் திட்டினாள்.
சிரித்த படி, அவளது திட்டுகளையும் அடிகளையும் வாங்கியவன், ஒரு கட்டத்தில் அவளை இறுக்கமாக அணைத்து, நான் சொன்னதில் என்ன தப்பு?” என்றான்.
அவள் அவனை முறைக்க,
அவன் உல்லாசமாகச் சிரித்தபடி, இந்த மூனு நாளும், முறைச்சிட்டு சும்மாவேவா இருக்கப் போறோம்?” என்றான்.
அதுக்காக குழந்தை கிட்ட போய்” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
யது கிட்ட சொன்னது தான் பிரச்சனையா! அப்போ உனக்கு ஓகே!” என்றபடி புன்னகையுடன் புருவம் உயர்த்தினான்.
ஓகே இல்லாம தான் இங்கே வந்தேனாக்கும்’ என்று முணுமுணுத்தவள், நான் சாப்பிடப் போறேன்” என்று கூறி, அவனை உதறித் தள்ளியபடி கதவை நோக்கிச் சென்றாள்.
விரிந்த புன்னகையுடன் அவளைத் தொடர்ந்து அவனும் சென்றான்.
 கீழே செல்லும் வழியில் அவன், ட்ரெஸ் சேஞ் செய்யலையா?” என்று கேட்டான்.
டைம் வேஸ்ட்னு விட்டுட்டேன்” என்று குறும்புடன் கூறியவள், அவன் கண்கள் ஒளிர அவளைப் பார்க்கவும், பசிக்குது.. அதான் நேரத்தை வேஸ்ட்டாக்க வேண்டாம்னு சொன்னேன்.. நீங்க என்ன நினைச்சீங்க?” என்றாள் விரிந்த சிரிப்புடன்.
கேடி இதழி எந்த அர்த்தத்தில் சொல்லி இருந்தாலும்நான் எனக்கு  வேண்டிய அர்த்தத்திலேயே எடுத்துக்கிறேன்..” என்று புன்னகையுடன் கூறியவன் அவளை சற்று நெருங்கி, எனக்கும் பசி தான்.. எந்த மாதிரி பசினு குடிலுக்குப் போனதும் காட்டுறேன்” என்று கிசுகிசுப்பான குரலில் கூறினான்.
தனது படபடப்பை மறைத்து, பசியை காட்ட முடியாது.. உணரத் தான் முடியும்” என்றாள்.
உணர்த்திட்டாப் போச்சு” என்று அவன் உல்லாச புன்னகையுடன் கூற, வெட்கத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவன் விரிந்த புன்னகையுடன் அவளது தோளில் கை போட்டபடி நடக்க, பொது இடத்தில் என்ன இது! கையை எடுங்க அத்தான்” என்றாள்.
பொது இடமா! எனக்கே எனக்கு சொந்தமான என்னோட ப்ரைவெட் இடம்” என்றான்.
நடையை நிறுத்தி அவனை முறைத்தவள், ஓவரா போயிட்டு இருக்கிறீங்க” என்றாள்.
அதுவா பொங்கி வருது.. அணை கட்டாமல் அணைத்து அணை” என்று கூறி கண் சிமிட்டினான்.
அவனை சமாளிக்க முடியாமல், அத்து” என்று அவள் சிணுங்க,
அவன் புன்னகையுடன், சரி வா சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்றான்.
உணவை முடித்துக் கொண்டு குடிலுக்குத் திரும்பினர். குடிலின் சாவியை அவளது கையில் கொடுத்து, ஓபன்” என்றான்.
ஏன் நீங்க திறந்தா என்ன?” என்றபடி கதவை திறந்து உள்ளே சென்றவள், இன்ப அதிர்ச்சியுடன் அப்படியே நின்றாள்.
தரை முழுவதும் இதய வடிவில் இருக்கும் பலூன்கள் இருக்க, மெத்தையின் நடுவே பிணைந்த நிலையில் இரு இதயங்கள் சிவப்பு ரோஜா இதழினை கொண்டு அமைக்கப் பட்டிருக்க, அதை சுற்றி மஞ்சள் வண்ண ரோஜா இதழ்கள் தூவப் பட்டிருக்க, அறை மெழுகுவர்த்திகளின் ஒளியில் ஜொலித்தது.
மூடிய கதவின் மீது ஒயிலாக சாய்ந்து நின்றபடி அவளது முகத்தில் தோன்றும் வர்ணஜாலங்களை ரசித்தவன் மெல்ல அவள் முன் வந்து ஒற்றை காலில் மண்டியிட்டு வசீகர புன்னகையுடன், லவ் யூ ஸோ மச், இதழி” என்றபடி இளஞ்சிவப்பு நிற பூங்கொத்தை நீட்டினான்.
[இவள் குளியல் அறையில் இருந்த நேரத்தில் முதலில் வந்த வேலையாளை அழைத்து இவ்வாறு அலங்கரிக்கக் கூறி இருந்தான். இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் அவனே கொண்டு வந்திருந்தான். அவற்றை வேலையாளிடம் கொடுத்து தாங்கள் உணவுண்ணச் செல்லும் நேரத்தில் அலங்கரிக்கக் கூறி இருந்தான். உணவுண்ணும் இடத்தில் அவள் கை அலம்பச்  சென்ற நேரத்தில், அறைச் சாவியை வேலையாளிடம் கொடுத்து இருந்தான். வேலையாளும் வேலையை முடித்து விட்டு, அவள் அறியாமல் சாவியை திருப்பிக் கொடுத்து இருந்தான். இப்பொழுது அவள் கதவை திறந்த நொடியில், அத்வைத் கையில் பூங்கொத்தை கொடுத்து விட்டுச் சென்றிருந்தான்.]
வார்த்தைகள் இன்றி அசந்து போய் நின்று இருந்தவள்,  பூங்கொத்தை வாங்கினாள். பூங்கொத்தின் கை பிடியில், சிறு காகிதத் துண்டு தொங்க, அதை பிரித்துப் பார்த்தாள்.
அன்பெனும் மகரந்தத்தை தூவிய
நேசப்பூவே!
உன்னை நேசிப்பதோடு சுவாசிக்கிறேன்
உயிரே!
மனம்கூடி மெய்சேரத் துடிக்கிறேனடி
கண்மணியே!”
என்ற அத்வைத்தின் கையெழுத்தைப் பார்த்தவளின் கண்கள், உணர்ச்சிப் பெருக்கில் லேசாகக் கலங்கியது.
அவளது உணர்வுகளை துல்லியமாகப் புரிந்து கொண்டவன், அவளை மென்மையாகக் கைகளில் ஏந்தினான்.
அவள் காதலுடன் அவன் முகத்தை நோக்கிய படி, அவனது கழுத்தில் கரத்தினை மாலையாகக் கோர்த்தாள்.
அவளது   நெற்றியை   முட்டிய  படி, பிடிச்சிருக்கா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.
ஹ்ம்ம்”
எது?”
எல்லாமே! இந்த இதழியோட அத்துவை, ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்குது.” என்றாள் காதலுடன்.
விரிந்த புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டவன், அவளை மெதுவாக மெத்தையில் படுக்க வைத்து, அவள் அருகில் ஒற்றைக் கையை ஊன்றிய நிலையில் படுத்தான்.
பின் ஒற்றை விரலால், அவளது முகவடிவை அளந்தபடி,
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா..” என்று காதலுடன் பாடியவன் அவளது இதழில் இதழ் பதித்தான்.
முதல் இதழ் முத்தத்தில் ஆழிபேரலை தாக்கிய உணர்வில் தத்தளித்தவளின் கரம் அவனது பின்னந்தலையினுள் நுழைந்து முடியை இறுக்கிப் பிடிக்க,
உடம்பின் அனைத்து அணுக்களும் புத்துயிர் பெற்ற நிலையில், சற்று வன்மையாக அவளது இதழை சுவைக்கத் துவங்கியவனின் கரம், அவளது அங்கம் முழுவதும் வலம் வரத் தொடங்கியது.
அவனது வேகத்தில் பெண்ணவள் அச்சம் கொள்ள, அதை புரிந்தார் போல், தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு நிதானத்திற்கு வந்தவன், இதழ் பிரித்து அவள் முகம் நோக்கினான்.
மூடிய விழிகளுக்குள் வேகமாக அசைந்த கருவிழிகளின் அசைவில் இருந்தே, அவளது நிலை உணர்ந்தவன், அவளது காதின் அருகே குனிந்து மெல்லியக் குரலில்,
அச்சப்பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு
மென்மையே” என்று பாடினான்.
சட்டென்று கண்களை திறந்து அவனை அவள் பார்க்க, வசீகரப் புன்னகையுடன் அவளை நோக்கியவன், மிக மென்மையாக அணைத்தபடி அவளது விழிகளை நோக்கி,
முத்தத்திலே பல வகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு” என்று பாடி கண்சிமிட்டான்.
அவள் வெட்கத்துடன் திரும்பிப் படுத்து,  அவனது நெஞ்சில் முகம் புதைத்தாள்.
அவளது தோள்பட்டையில் இருந்து ஒற்றை விரலால் மெதுவாகக் கோடிழுத்தவன் இடையை நெருங்கியதும், ஐவிரல்கள் கொண்டு வெற்று இடையில் பட்டும் படாமல் கோலம் வரைந்தான்.
கண்களை இறுக்கமாக மூடியபடி, அவள் அவனது சட்டை காலரை இறுக்கமாகப் பற்ற, அவனது கரம் ரகசியமாக,  அவளது புடவையினுள் ஊடுருவியது.
அத்து” என்று முணங்கியபடி அவனது சட்டை காலரை இன்னும் இறுக்கமாக அவள் பற்ற,
இதழி” என்று தாபத்துடன் அழைத்த படி, அவளது செவ்விதழை மென்மையாக சுவைக்க ஆரம்பித்தவன், அழகான தேடலை துவங்கினான்.
முத்தத்தாலயே அவளது தயக்கங்களை தகர்த்தியவன் அணு அணுவாக ரசித்தபடி பெண்ணவளை மென்மையாகக் கையாண்டான்.
அத்து.. ப்ளீஸ்’ என்ற அவளது திணறலான கெஞ்சல்கள்,
இதழிமா.. ப்ளீஸ்டா’ என்ற அவனது தாப கெஞ்சலில் காணாமல் போக,
அவளது அச்சங்கள் அவனது இதழின் மென்தீண்டல்களில் மறைந்து போனது.
ஆணவனின் தேடல் நீண்டு கொண்டே போக, பெண்ணவள் துவண்டு தான் போனாள்.
அடுத்த நாள் காலையில் தாமதமாக விழித்தவள் வெட்கத்துடன் அவனது நெற்றியில் முத்தமிட்டு எழுந்து கொள்ளப் போக,
அந்தக் கள்வனோ ரகசிய புன்னகையுடன் கண்கள் மூடிய நிலையிலேயே அவளது கையை பிடித்து இழுத்து, அவளை தன் மீது போட்டுக் கொண்டு அணைத்தான்.
கேடி அத்து” என்று மென்னகையுடன் அழைத்தவள், பிரஷ் செய்துட்டு வரேன்.. காபி சொல்லுங்க” என்றபடி எழப் பார்க்க,
அவளை அணைத்தபடியே புரண்டு படுத்தவன் அவளது முகத்தைப் பார்த்து,
காபி இருக்கட்டும்.. நேத்து கொடுத்த இன்பத்துப்பால் எப்படி இருந்தது?” என்று கண்சிமிட்டி கேட்டபடி ஒற்றை விரலால் அவளது இதழை வருடினான்.
அவனது வாய் மீது அடி போட்டவள், பேச்சை பார்! பிச்சு பிச்சு” என்றாள்.
வாய்விட்டுச் சிரித்தவன், பிச்சுக்கோ.. அதுக்கு தானே வெயிட்ங்” என்று சரசமாகக் கூறினான்.
அவள் செல்லமாக முறைக்க,
அவனோ, டர்ட்டி கிஸ்” என்றபடி அவளது இதழை சிறை செய்து இருந்தான்.
நீண்ட முத்தத்திற்குப் பிறகு இதழை மட்டும் விலக்கியவன், அவளை அணைத்தபடியே தான் படுத்து இருந்தான்.
மணியை பார்த்தீங்களா!” என்ற அவளது சிணுங்கல் அவனுக்கு அழைப்பாகவே தெரிய,
அதைப் பார்த்து என்ன செய்யப் போறேன்! உன்னைப் பார்க்கிறேன்.” என்றபடி தனது தேடலைத் தொடங்கினான்.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement