Advertisement

ன்று இரவு அத்வைத் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பொழுது, வீட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்த நேகாவைப் பார்த்ததும் மனதினுள் சிறிது ஆயாசமாக உணர்ந்தாலும், வெளியே அதை சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை.
நேகா புன்னகையுடன், ஹாய் அத்தான்” என்றாள்.
மெல்லிய உதட்டோர மென்னகையுடன் தலை அசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்து விட்டு, தனது அறை நோக்கிச் சென்றான்.
நேகா அருகே அமர்ந்திருந்த யாதவ், டாடா நானும்.” என்றபடி எழ,
நேகாவோ, டாடி டிரஸ் சேஞ்ச் செய்துட்டு வரட்டும் கண்ணா.” என்றாள்.
அதைக் கேட்ட அத்வைத் அறை வாயிலில் நின்ற படி, யது” என்று அழைத்தான்.
ஹே!” என்று குதித்தபடி நேகாவிற்கு அழகு காட்டிய யாதவ், கண்ணா சொல்லாத.. அப்பா மட்டும் தான் கண்ணா” என்றான்.
நேகா புன்னகையுடன், சரிடா பெரிய மனுஷா.. இனி உன்னைக் குட்டிமானு சொல்றேன்.” என்றாள்.
ஓகே” என்றவன் தந்தை அறைக்கு ஓடினான்.
அப்பொழுது வேலை முடிந்து துருவ் வரவும், நேகா மென்னகையுடன், ஹாய் துருவ்” என்றாள்.
அவனோ, இந்தக் கூனி அண்ணனை நிம்மதியாவே இருக்க விடாது போலவே!’ என்று மனதினுள் நினைத்தபடி அவளிடம், போன முறையே சொன்னேன்.. பெயர் சொல்லிக் கூப்பிடாதனு” என்றான்.
நானும் போன முறையே சொன்னேன்.. அப்படித் தான் கூப்பிடுவேன்னு”
இம்சை.. இப்போ எத்தனை நாள் டேரா?”
போடா இம்சை அரசா”
அடிங்க.. ‘டா’ சொல்ற!” என்றபடி அவன் அடிக்க வர, அவள் எழுந்து ஓடினாள்.
இரவு உணவின் போது, நேகா அத்வைதைப் பார்த்து, என்ன அத்தான், போன முறை நான் வரேன்னதும் பெங்களூர் ஓடிட்டீங்க போல!” என்றாள்.
அத்வைத் அலட்டிக் கொள்ளாமல், நான் பெங்களூர் போன நேரத்தில், நீ வந்த.” என்றான்.
அப்போ, இப்போ பெங்களூர் போற வேலை இல்லை?”
அத்வைத் தோள் குலுக்கலை மட்டும் பதிலாகத் தர,
துருவ், யாராவது எலிக்குப் பயந்து வீட்டை மாத்துவாங்களா? எலியைத் தான துரத்தி விடுவாங்க.” என்றான்.
நேகா துருவை முறைக்க, மங்களம், என்னடா பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்குது?” என்றார் காரமான குரலில்.
நீ இருக்கிற இடத்தில், எல்லாப் பேச்சும் ஒரு தினுசா தான் இருக்கும் கிழவி” என்று துருவ் கூற,
அத்வைத், துருவ்” என்று அழைத்து, தம்பியை அடக்கினான்.
மங்களம் துருவை முறைத்தபடி, இவன் கிடக்கிறான்.. இவன் பேசுறதை எல்லாம் கணக்கில் எடுத்துக்காத தங்கம்.” என்று நேகாவிடம் கூறினார்.
பின், அம்மாவைக் கூட்டிட்டு வரச் சொன்னேனே தங்கம்!” என்று கேட்கவும், அனைவரின் பார்வையும் ஒரு நொடி அத்வைதிடம் சென்று மீண்டது.
அவனோ காரியமே கண்ணாக, மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.
நேகா, அம்மா கொஞ்ச நாள் கழிச்சு வரேன்னு சொன்னாங்க, ஆச்சி” என்றாள்.
மங்களம், ஹ்ம்ம்.. என் மகள(மகளை) கண்ணால கண்டே பல மாசம் ஆகுது.” என்று புலம்பும் குரலில் கூற,
துருவ், எல்லோரும் கண்ணால தான் பார்ப்பாங்க” என்றான் நக்கலாக.
மங்களம் அவனை முறைக்க, என்ன?’ என்று புருவம் உயர்த்தினான்.
மங்களம், “வாயை மூடிட்டு சாப்பிடுடா” என்று கூற,
வாயை மூடிட்டு எப்படி சாப்பிட முடியும்? எங்க! திறமைசாலியான நீ தான் எனக்கு செஞ்சு காமியேன்” என்றான்.
நேகா, அதர பழசான டயலாக்.. புதுசா ஏதாவது முயற்சி செய் துருவ்.” என்றாள்.
துருவ், ஒருமையில் பேசின பல்லை உடைப்பேன், ராஸ்கல்.” என்று சிறு கோபத்துடன் கூற,
நேகா, அவனது கோபத்தில் சிறிது மிரண்டாள்.
மங்களம், அவ அப்படி தான்டா பேசுவா, ஏன்னா அவ தான்..” என்று ஆரம்பித்தவர், சட்டென்று சுதாரித்து பாதியில் நிறுத்த,
துருவ் நக்கலாக, என்ன சொல்ல வந்த? சொல்லி முடியேன்!” என்றான்.
அவர் ‘அவ தான் உன் அண்ணி’ என்று சொல்ல வந்தார் என்பதை அறிந்தே அவன் அவ்வாறு நக்கல் செய்தான்.
மங்களம் அவனை முறைக்க, அவன் மாறாத புன்னகையுடன் உணவை உண்ண ஆரம்பித்தான். நேகாவும் அவனை முறைத்தபடி உண்ண ஆரம்பித்தாள்.
எப்பொழுதும் போல் சரோஜினி அமைதியாக உணவைப் பரிமாற, ஆறுமுகமும் அமைதியாக உண்டார். அத்வைதோ எதையும் கண்டு கொள்ளாமல் மகனிற்கு ஊட்டியபடி தானும் உண்டு முடித்து, மகனுடன் அறைக்குச் சென்று கதவடைத்தான்.
சிறிது நேரத்தில் கதவை யாரோ தட்டவும், எழுந்து சென்று திறந்தான்.
வெளியே நின்ற நேகா, என்ன அத்தான்! அதுக்குள்ள தூங்கப் போறீங்களா?” என்று வினவ,
என்ன வேணும்?” என்று சிறிதும் இலக்கமின்றி கேட்டான்.
நேகாவின் முகம் அரை நொடி சுருங்கினாலும், சமாளித்துக் கொண்டு, தூங்கலைனா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்.” என்றாள்.
இது எனக்கும்என்  மகனுக்கும் மட்டுமான நேரம்.” என்று கூர் அம்பை போன்ற அவனது பதிலில்,
என்ன முயற்சித்தும் அவளது முகம் வெளிப்படையாகவே சுருங்கியது.
அத்வைத் அவளது சுணக்கத்தைப் பொருட் படுத்தாமல், ‘இன்னும் என்ன?’ என்பது போல் பார்க்கவும்,
ஓகே அத்தான்.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்.” என்று விட்டுச் சென்றாள்.
அப்பொழுது, டாடா.. யது போயிட்டா.” என்று யாதவ் கழிவறையில் இருந்து குரல் கொடுக்கவும்.
இதோ வந்துட்டேன், கண்ணா” என்று கூறிய படி அத்வைத் அறைக் கதவை மூடி விட்டுச் சென்றான்.
நேகாவை ஓரப்பார்வை பார்த்த படி துருவ், தொப்பி.. தொப்பி” என்று கூறி வாய் விட்டுச் சிரிக்கவும்,
அவள் அவனை முறைத்துவிட்டு மங்களத்தின் அறைக்குச் சென்றாள்.
அத்வைத் மகனை சுத்தம் செய்து லேசாக குளிப்பாட்டி கூட்டி வந்தான். சிறுவனை மெத்தை மீது நிற்க வைத்து, ஈரத்தை துடைத்தபடி, யது கண்ணா இன்னைக்கு என்னலாம் செஞ்சாங்க?” என்று கேட்டான்.
தாம் அண்ட் தெரி பார்த்த.. பேய் ஆச்சி கதை சொன்னா..” என்று மழலையில் பேசிய குழந்தையின் பேச்சை இடையிட்ட அத்வைத்,
பெரிய ஆச்சி சொல்லணும்.. அப்புறம், சொன்னாங்க சொல்லணும்”
சொன்னாங்க ஓகே.. ஆனா, சித்தா பேய் ஆச்சி சொல்லி தந்தா”
அது தப்பு.. இனி சித்தப்பா அப்படி சொல்லிக் கொடுத்தா, நோ நோ சொல்லிடு..
டாடா பெரிய ஆச்சி தான் சொல்லணும் ஸ்ட்ரிக்ட்டா சொன்னேன்னு சொல்லிடு”
ஹ்ம்ம்.. ஓகே.. பெரிய ஆச்சி கதை சொன்னா..” என்றவன் அத்வைதின் பார்வையில் மெல்லிய சிரிப்புடன், சொன்னாங்க” என்று மாற்றி தொடர்ந்தான்,
அப்தம்(அப்புறம்) ஜுஸ் குடிச்சிட்டு டாய்ஸ் விளையாதினே.. அப்தம் ஆச்சி பப்பு மம்மம் தந்தா..”
பருப்பு மம்மம் தந்தாங்க.”
மறுப்பாக தலை ஆட்டிய குழந்தை, பப்பு மம்மம் தந்தா.. ஆச்சி ‘ங்க’ நோ சொன்னா.”
சரி ஓகே.. அப்புறம் என்ன செஞ்சீங்க?”
ஆச்சிட சாமி கதை கேட்டு தூங்கினே.. அப்தம்..”
அப்புறம் சொல்லுங்க”
அப்புதம்”
ம்ஹூம்.. அப்..பு..ற..ம்..”
அப்..பு..ற..ம்”
குட்.. இப்போ சேர்த்து சொல்லுங்க”
அப்புதம்”
மெலிதாக சிரித்த அத்வைத், “அப்புறம்” என்று அழுத்திக் கூற,
அப்புறம்” என்று சரியாக கூறிய குழந்தை மகிழ்ச்சியுடன் கை தட்டி குதித்தபடி, ஹே! யது சரியா சொல்லிடேன்” என்றான்.
ஆமாடா கண்ணா” என்ற அத்வைத் புன்னகையுடன் மகனை அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டான்.
அதன் பின் மெத்தையில் அமர்ந்த அத்வைத், மகனை மடியில் அமர்த்தி அணைத்த படி, அப்புறம் என்ன செஞ்சீங்க?”
அப்பு..றம்.. சித்தி வந்தா.. சாக்கி தந்தா.. டைனோ ஸ்டோரி சொன்னா.. ஓடி பிடிச்சு விளையாதினா.. யது ஹாப்பி”
ஓ.. சூப்பர்.. யது கண்ணாக்கு நேகா சித்தியை பிடிச்சு இருக்கா?”
வேகமாக ஆம் என்பது போல் தலையை ஆட்டிய குழந்தை புன்னகையுடன், ஹ்ம்ம்.. பிடிக்குமே.” என்றான்.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement