Advertisement

துருவ் சிரிப்புடன், சைஸ் தான் மாறி இருக்குது.. மத்தபடி அதே பம்கின் தான்.” என்றான்.
கண்ணன், கண்ண செக் பண்ணுங்க பாஸ்.. இவளைப் போய் சூப்பர் பிகர்னு சொல்றீங்க!” என்றான்.
அவள் இப்பொழுது கண்ணனை முறைக்க, துருவ் புன்னகையுடன், நீங்க?” என்று கேட்டான்.
நீ போதும் பாஸ்.. நான் கண்ணன்.. நண்பன் என்ற பெயரில் இருக்கும் இவளோட அடிமை.” என்றான்.
கண்ணனின் தலையில் கொட்டியவள், இருடா கோடிங் ஹெல்ப் கேட்கிறப்ப கவனிச்சுக்கிறேன்.” என்றாள்.
கையெடுத்து கும்பிட்ட கண்ணன், தெய்வமே!” என்றான்.
துருவ் சிரிப்புடன், வாங்க, கேஃப்டரியா (அலுவலக உணவகம்) போய்ப் பேசலாம்.” என்றான்.
அங்கே சென்று அமர்ந்ததும் செந்தமிழினி கண்ணனைப் பார்த்து, எனக்கு வாட்டர்மெலான் ஜூஸ்.. உனக்கும் இவனுக்கும் கட்லெட் வாங்கிட்டு சூடான மசாலா டீயும் சேர்த்து வாங்கிட்டு வா.. இந்த பக்கி கட்லெட் ஒரு வாய், டீ ஒரு வாய்னு தான் சாப்பிடும்.” என்றாள்.
துருவ், தப்பா எடுத்துக்காதீங்க பாஸ்.. உங்க முன்னாடி என்னைத் திட்ட வேணாம்னு தான் உங்களை அனுப்புறா.” என்றான்.
இவளைப் பத்தித் தெரியாதா! எதுக்கும் பஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வரவா பாஸ்?” என்று கேட்டான்.
வொய்ய்ய்! வொய் திஸ் கொலைவெறி!”
வாய்விட்டுச் சிரித்த கண்ணன் அங்கிருந்து நகர்ந்தான்.
துருவ், ஓகே.. ஸ்டார்ட் மியூசிக்” என்றான்.
பன்னி.. பரதேசி..” என்று ஆரம்பித்து சில நல்ல வார்த்தைகளால் அவனை அர்ச்சித்தவள், இத்தனை வருஷம் என்ன செய்துட்டு இருந்த? இப்ப கூட நான் தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன்.. பார்த்தப்பவும் என்னை அடையாளம் தெரியலை.. சுப்.. நடுவில பேசின கொன்னுடுவேன்..” என்று இடைவெளி விடாமல் தொடர்ந்து பத்து நிமிடங்களுக்குத் திட்டி ஓய்ந்தவள் தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.
அப்பொழுது சரியாக கண்ணன் வரவும்,
துருவ், இதை வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா பாஸ்!” என்று பாவமாகக் கேட்டான்.
கண்ணன், நடுவில் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு காத்திருந்து வரேன், பாஸ்” என்றான்.
துருவ் அவனை முறைக்க, அவன், ஏன் பாஸ்! மாரியாத்தா டேக் டைவர்ஷன் எடுத்து என் மேல் பாயுறதுக்கா!” என்றான்.
செந்தமிழினி கண்ணனை முறைக்க, அவன், ஹி.. ஹி.. இந்த ஜூஸ் குடிச்சுட்டு தெம்பா கண்டினியு” என்றான்.
துருவ் அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்க்க, அவனுக்கு வாங்கியதை கொடுத்த கண்ணன், சூடா வாழைபூ வடை போடப் போறாங்களாம்.. நான் போய் அதை வாங்கிச் சாப்டுட்டு வரேன்” என்று கூறி, சிட்டாகப் பறந்து இருந்தான்.
துருவ், சாரிடி.. நான் உன்னை தேடாமலாம் இல்லை.. நீங்க வீடு மாறிட்டீங்க.. பக்கத்தில் விசாரிச்சப்ப நீங்க வேற ஊருக்குப் போனதா சொன்னாங்க.. எந்த ஊருன்னு கேட்டதுக்கு தெரியலைன்னு சொல்லிட்டாங்க” என்றான்.
பேஸ்புக்கில் தேடி இருந்தா கிடைச்சிருக்கப் போறேன்”
எனக்கு அது தோணவே இல்லை..”
நிஜமாவே தேடி இருந்தா தான், தேடுறதுக்கான எல்லா வழியும் மைண்டில் வரும்!”
அப்படி எல்லாம் இல்லைடி.. நான் நிஜமா தான் தேடினேன்.. பட் பேஸ்புக் தோணவே இல்லை.. சாரிடா” என்று வருத்ததுடன் கூறினான்.
உன்னோட பேஸ்புக் ஐடி என்ன?”
ரைஸிங் ஸ்டார்”
தூ” என்று அவள் துப்புவது போல் செய்கை செய்ய,
அவன் தனது சட்டை காலரை தூக்கிவிட்டபடி, அய்யாவோட மௌஸ் உனக்கு தெரியலை”
துடப்பக்கட்டைக்கு பட்டு குஞ்சலம் கேட்குதாக்கும்!”
அடியே!” என்று அலறியவன், மை இமேஜ்.. டோட்டல் டேமேஜ்” என்றான்.
இமேஜ் ஆ! அப்படி ஒன்னு இருக்குதா உனக்கு?”
வேணாம்.. வலிக்குது..”
துருவ்னு வச்சிருந்தா ரொம்ப முன்னாடியே உன்னை கண்டு பிடிச்சு இருப்பேன்.” என்று முறைப்புடன் கூறினாள்.
கார மிளகா அவதாரத்தில் இருந்து என்னோட செல்ல பம்கின் அவதாரத்துக்கு வாயேன்.. உன்னோட தேங்கா பாவம் இல்லையா! ப்ளீஸ்டி” என்று கெஞ்சினான்.
மாறலைனா என்ன செய்றதா இருக்கிற?”
அழுதுருவேன்.. அழுதுருவேன்!” என்று வடிவேல் போல் அழுதுவிடும் குரலில் கூறவும், அவள் லேசாக மென்னகைத்தாள்.
அப்பாடா, சிரிச்சிட்டியா! எப்படி இருக்கிற? எல்லோரும் எப்படி இருக்கிறாங்க? எங்க இருக்கிறீங்க? எப்போ சென்னை வந்தீங்க? அருள் எங்க வேலை பார்க்கிறான்.” என்று கேள்விகளை அடுக்கினான்.
எல்லோரும் நல்லா இருக்கிறாங்க.. நாங்க வேற ஊருக்குலாம் போகவே இல்லை.. சென்னையில் தான் இருக்கிறோம்.. xxxயில் இருக்கிறோம்.. அருள் பெங்களூரில் xxx கம்பெனியில் வேலை பார்க்கிறான்”
அவன் நம்பர் தா”
இவ்வளவு நேரம் ஆகியும், என்னோட நம்பரை கேட்கலை! அவன் நம்பர் வேணுமா! நீயே கண்டு பிடிச்சுக்கோ.. போடா”
ரைட்.. செம பார்ம்மில் இருக்கிறா.. எந்த பாலைப் போட்டாலும் சிக்ஸர் தான்..’ என்று நினைத்தவன், “எப்படி கண்டுபிடிச்ச?” என்று பேச்சை மாற்றினான்.
இப்போ கூட என் நம்பரைக் கேட்கலை.” என்று அவள் முறைப்புடன் கூற,
இன்னைக்கு சேதாரம் இல்லாம வீடு போய் சேருவேனா, தெரியலையே!’ என்று மனதினுள் புலம்பியவன், ஹி.. ஹி.. சொல்லுடா” என்றபடி கைபேசியை எடுத்தான்.
ரெண்டு நிமிஷம் முன்னாடி ஒரு மிஸ்டு கால் வந்து இருக்கும்.. அது தான் என்னோட நம்பர்”
எப்போ எப்படி கொடுத்த? சத்தமே கேட்கலை? என் நம்பர் எப்படி தெரியும்?”
நீயெல்லாம் கடைசி வரை முரட்டு சிங்கிள் தான்டா”
அவன் முறைக்கவும், இந்த காளிங் லுக்-கு கண்டிப்பா முரட்டு சிங்கிள் தான்” என்றாள்.
காளிங் லூக்கா?”
மேட்டுக்குடி படத்தில் கௌண்டமணி பேர் என்ன?”
அடிப்பாவி! அவ்ளோ கேவலமாவா இருக்குது என்னோட லுக்?”
அதில் என்ன சந்தேகம்!”
ஏழு வருஷத்துக்குச் சேர்த்து இன்னைக்கு ஒரே நாளில் வச்சு செய்றியே! கொஞ்சம் கேப் விடேன்.”
அவள் உதட்டைச் சுளிக்கவும், என்னை எப்படி கண்டு பிடிச்ச?” என்று மீண்டும் கேட்டான்.
விசுவாமித்திரர் வேலை பார்க்கிற கம்பனியில் தான், நானும் வேலை பார்க்கிறேன்..”
விசுவாமித்திரர்! ஓ அத்வைத்தை சொல்றியா! அவனை துர்வாசர்னு தானே சொல்லுவ!”
உன்னோட அத்தை பொண்ணு மேனகாவை கல்யாணம் செய்ததும் விசுவாமித்திரர்னு பெயரை மாத்திட்டேன்.”
ஒரு நொடி இறுகிய அவன் முகம்,   பின் இயல்பாகி, அவனோட பேஸ்புக் ஐடி அத்வைத் தானே!” என்றான்.
அவர் என் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அக்செப்ட் செய்யாததோடு என்னை ப்ளாக் செய்துட்டார்”
என்ன!” என்று அதிர்ந்தவன், எப்போ?” என்று கேட்டான்.
அது நடந்து பல வருஷம் ஆச்சு.. நீங்களும் வீடு மாறிட்டீங்க.. அருளும் உங்களைத் தேட இன்ட்ரெஸ்ட் காட்டலை.. நாம பிரிஞ்சு ஆறு மாசத்தில் உங்களை கண்டு பிடிக்கனே எஃப்.பி ஐடி கிரியேட் செய்து தேடினேன்.. பட் நோ யூஸ்..”
அதான் இப்போ சேர்ந்துட்டோமே! விடு”
இத்தனை வருஷம் வேஸ்ட்டாப் போச்சே!” என்றவள், “சரி விடு.. இனி நடப்பதை பார்ப்போம்.” என்றாள்.
அத்வைத் என்ன சொன்னான்?”
அவருக்கு என்னை அடையாளமே தெரியலை”
எனக்கே தெரியலை..” என்றவன் பின் பேச்சை நிறுத்தி நாக்கை கடித்துக்கொள்ள, அவன் எதிர்பார்த்தது போல், அவள் காளி அவதாரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தாள்.
அவள் கோபத்துடன், அவர் கூட இன்னைக்கு சந்தேகமா இதுக்கு முன்னாடி மீட் செய்து இருக்கிறோமானு கேட்டார்.. ஆனா நீ” என்று அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
ஹே! ஹே.. இது என்னோட ஆபீஸ்டி.. அதை கொஞ்சம் ஞாபகத்தில் வச்சிக்கோ”
நீ ஞாபகத்தில் வச்சிக்கிட்டியா பன்னி..” என்று மீண்டும் அவள் திட்ட ஆரம்பிக்க,
நோ.. நோ.. இதுக்கு மேல சத்தியமா தாங்க மாட்டேன்” என்று அவன் அலறினான்.
அவள் சற்று இயல்பிற்குத் திரும்பி, மை சரோ டார்லிங் எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள்.
அப்படியே தான் இருக்கிறாங்க”
அந்த கிழவி கொஞ்சம் கூட மாறலையா?”
அதுவா மாறும்! அதுக்கு மங்களம் பாட தான் நிறைய பேர் வெயிட்ங்.. நீ தான் அதுக்கு சரியான ஆள்”
நீ அதை சரியா டீல் செய்வியே!”
என்னை அடக்க தான் ஸ்பீட் பிரேக்கர் இருக்குதே!”
விசுவாமித்திரரை சொல்றியா?”
அவனே தான்.. அவன் வாழ்க்கை இப்படி ஆனதே, அந்தக் கூனிக் கிழவியால தான்”
என்னாச்சு?”
அது பெரிய கதை.. இன்னொரு நாள் நிதானமாச் சொல்றேன்.. உன் ஃப்ரெண்ட்டைக் கூப்பிடு.. பாவம்”
நாம எந்திரிச்சா வந்திருவான்” என்றபடி அவள் எழ, அடுத்த நொடி கண்ணன் வந்து நின்றான்.
துருவ், எப்படிடா இப்படி! எள்ளுனா, எண்ணையா இருக்கிற!”
அவ்ளோ பெர்பெக்ட் ட்ரைனிங் பாஸ்”
அடுத்த ஸ்டார்ட் மியூஸ்க் உனக்குத் தான்”
நானெல்லாம் உங்களை மாதிரி இல்லை..”
அப்படியா!”
ஆமா.. உடனே காலில் விழுந்துருவேன்ல”
துருவ் அவனை ஒருமாதிரி பார்க்க, கண்ணன், என்ன பாஸ் இப்படி பார்க்கிறீங்க! நீங்களும் இப்பவே பழகிக்கோங்க.. பின்னாடி உங்க வைஃப் காலில் விழ ஈஸியா இருக்கும்” என்றதும் மூவரும் மென்னகைத்தனர்.
துருவ், ஒருமையிலேயே பேசு.. தமிழோட ஃப்ரெண்ட் எனக்கும் ஃப்ரெண்ட் தான்”
ஓகே” என்று கட்டை விரலை தூக்கிக் காட்டினான்.
உன்னோட பேர் என்ன?”
கண்ணன் சொன்னேனே!”
அதைக் கேட்கலை.. இவ ஒரு கேவலமான பேரை வச்சு இருப்பாளே!”
கண்ணன் புன்னகையுடன், பாடிசோடா” என்று கூற, செந்தமிழினி துருவிற்கு ஒரு அடி கொடுத்தாள்.
நிறைய பேசணும்.. ஒரு நாள் வீட்டுக்கு வாயேன்.” என்ற துருவ், இப்போவே வரியா?” என்று கேட்டான்.
அவள் யோசிக்கவும், துருவ், கிழவி வீட்டில் இல்லை.. ஒரு கல்யாணத்துக்கு ஊருக்குப் போயிருக்குது.” என்றான்.
அது கிட்ட எனக்கு என்ன பயம்? அம்மாவை சமாளிக்கனுமேனு யோசிச்சேன்” என்றவள் பின் ஒரு முடிவுடன்,சரி வரேன்.. எனக்கு தேனுமாவை பார்க்கணும்.” என்றாள்.
எப்படி வந்த? கண்ணன் கூடவா?”
என்னோட வண்டியில் தான் வந்தேன்”
கண்ணன், ஓகே தமிழ் நாளைக்கு பார்க்கலாம்” என்று கூறி கிளம்ப ஆயுத்தமானான்.
ஓகேடா.. பை” என்ற செந்தமிழினி, நாளைக்கு நைட் டின்னர் ட்ரீட் தரேன்” என்றாள்.
புன்னகையுடன் கட்டைவிரலை தூக்கி காட்டிய கண்ணன் துருவைப் பார்த்து, ஓகே துருவ்.. பை”
துருவ், பை” என்று கை ஆட்டி கூறினான்.
கண்ணன் கிளம்பியதும் செந்தமிழினியும் துருவ்வும் அத்வைத் வீடு நோக்கிக் கிளம்பினர்.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement