புயல் காற்றில் விளக்காகவே
“இவான் மனசு நோகும்னு யோசிக்க மாட்டீங்களா?”
அவன் பார்வையும் கவனமும் அந்த நூலின் மேலேயே இருந்தது.
“நீங்க சரியான காரணம் சொல்லலன்னா நான் உங்க முடிவை ஏத்துக்க மாட்டேன்”
இன்னும் கூர்ந்து நோக்கினான், அவனுக்கு உள்ளே இருந்த ரசிகன்.
“சொல்லுங்க”
ரசிகன் வாய் திறக்கவில்லை. உலக அதிசயத்தை பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தான்.
“நான் உங்க பதிலுக்காக காத்திட்டு இருக்கேன்”
அவனுக்கு காது கேட்கவில்லை. அவள் கண்ணின்...
அர்ஸ்லான் அலுவலகம்.
“என்ன ஆர்யன்! கிளம்பிட்டீங்களா?”
“ஆமா ரஷீத்! இவானையும் அவன் சித்தியையும் கூப்பிட போகணும்”
“ஆர்யன்! இவான் சித்திக்கு செய்தி அனுப்புன ஆளை கண்டுபிடிச்சிட்டோம்”
“அப்படியா! யார் அது?”
“உங்க சந்தேகம் சரி தான் நம்ம ஆளு தான்! சோஹைல்!
“ஹார்பர் சோஹைலா?”
“உங்க ஆச்சரியம் எனக்கும் புரியுது. சாதுவான சோஹைலா இப்படி செய்தான்னு. ஆனா நம்ம கோடவுன்ல ரெய்டு நடக்கவும் அவன்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 66
இணைந்த கைகள் இணைந்தபடி இருக்க, இருவர் மனமும் இறகாக பறக்க, இதழ்களில் மென்னகை தவழ, கண்கள் மின்மினியாய் மின்ன, அந்த இனிய தருணம் அப்படியே நீடித்தது.
ருஹானா மீண்டும் கேட்டாள். “உங்களுக்கு சம்மதம் தானே?”
ஆர்யன் கையை லேசாக அழுத்தி உடன்பட “நம்மோட இந்த சமாதான ஒப்பந்ததுக்கு எனக்கு ஒரு நிபந்தனை...
“மறுபடியும் போலீஸ் என்னை கைது செய்ய வைப்பீங்க. இல்லனா பாதாள அறையில் என்னை அடைத்து வைப்பீங்க. உங்களோட சண்டை போட்டு வாக்குவாதம் செஞ்சி நான் சோர்வாகிட்டேன்” என்ற ருஹானா உள்ளே செல்ல திரும்பினாள்.
“ஆர்யன்!” எனும் குரல் கேட்டு நின்றாள்.
“சையத் பாபா! நீங்க எப்படி இங்க?” ஆர்யனுக்கு ஆச்சர்யம்.
“மார்க்கெட் போயிட்டு வந்தேன். வழியில உங்களை பார்க்கறேன்”
“உள்ளே...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 65
ஆர்யனுக்கு எதிராக ஆதாரம் தேடும் கமிஷனர் வாசிம், ருஹானாவிடம் அறிவுறுத்தினான்.
“அவன் உங்களை மாட்டிவிட்டதுக்கான துப்பு ஏதாவது உங்ககிட்டே இருந்தா பயப்படாம என்கிட்டே சொல்லுங்க. தயங்காதீங்க. நான் இருக்கறவரை உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது”
ருஹானா ஆர்யனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சில விநாடிகள் கழித்து வாசிமிடம் சொன்னாள்.
“நீங்க ஏன்...
பின்னால் நின்று மகிழ்வுடன் பார்த்திருந்த கரீமா குரலில் மட்டும் சோகத்தை வரவழைத்து “அவர் மாத்திரை கூட எடுத்துக்கவே இல்ல. நீ போனதுல இருந்து ஒடிஞ்சி போய்ட்டார். நீ நிரந்தரமா திரும்பி வர மாட்டேன்னு பயந்திட்டார். நீ அப்படி போக மாட்டே தானே? ஆமா தானே?” என பின்னி பின்னி கேட்டும் கூட ஆர்யன்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 64
இருட்டில் தடுமாறி கீழே கிடந்த ருஹானா, தான் எழுந்து கொள்ள கைநீட்டியபடி நின்ற ஆர்யனை பார்த்தபடியே தன் நடுங்கும் கையை அவன் கைக்குள் வைத்தாள்.
அவள் விரல்களை மென்மையாக பற்றிய ஆர்யன் மெல்ல அவளை எழுப்பினான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, “உனக்கு ஒன்னும் இல்லயே?” என அவன் கேட்க...
“இன்னொரு தடவை சிங்கப்பையா!...... சலாம் சொல்லத்தான் வந்தேன். எனக்கு வேலை இருக்கு. நான் போகணும்” என ஆர்யன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் போன் அடித்தது.
“சொல்லு ரஷீத்!....... சரி!.... நான் வந்துட்டே இருக்கேன்” என சொல்லி போனை அடைத்தவன், ருஹானாவை பார்த்து “நான் ஆபீஸ் போகணும். இனிய உணவு!” என சொன்னான். அவளோ காது கேட்காதது போல...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 63
ஆர்யனை வெளியே நிறுத்தி ருஹானா கதவடைத்து உள்ளே செல்ல அவன் கோபம் அத்துமீறியது.
அவள் தெரிந்து செய்கிறாளா? கோப மிகுதியில் தன்னையறியாமல் செய்கிறாளா? அர்ஸ்லான் மாளிகையில் அவளை வெளியே நிறுத்தியதற்கு பழி வாங்குகிறாளா?
கைப்புண்ணில் இருந்து கண்ணாடியை அகற்றியவள், அவன் மனக்காயத்தை கிளறிவிட்டாள்.
ஆர்யன் கதவை தட்ட கையை ஓங்க, அவனது குற்ற...
அதற்கு நேர்மாறாக ருஹானா “உங்களுக்கு முன்னாடியே இது தெரியும்! நான் கேட்க கேட்க பதில் சொல்லாம இங்க எங்களை இழுத்துட்டு வந்திருக்கீங்க... வெரிகுட்” என இரைந்தாள்.
ஆர்யன் அவளை விசித்திரமாக பார்க்க “இவானுக்கும் எனக்கும் ஆடை எதும் எடுத்துக்கல. எங்கள பத்தி நினைக்காம நீங்க பாட்டுக்கு எப்பவும் போல உங்க இஷ்டத்துக்கு பறந்து வந்திட்டீங்க!” என...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 62
‘எனக்கு நீங்க இனி யாருமில்லை’ என ருஹானா சொன்னது ஆர்யனின் இரத்த ஓட்டத்தை நிறுத்தியது.
அவன் அசையாது நிற்க “நீங்க வெளிய போகலாம்” என்று ருஹானா, அவள் அறையை விட்டு வெளியேற சொன்ன பிறகும் கூட அவளையே பார்த்து நின்றான்.
ருஹானா திரும்பி நின்று கொண்டாள். அவள் கூறிய கடுஞ்சொற்கள் அவளையும்...
செயற்கை குளத்தில் இவான் வண்ண படகுகளை விட்டு விளையாட, ருஹானா சோகமாக இலக்கில்லாமல் வெறித்து நிற்க, ஆர்யன் அங்கே வந்து பின்னால் நின்றான்.
“ஹே! சித்தப்பா!” என இவான் கூவ, ருஹானாவின் முகம் மாறியது. திரும்பி நின்று கொண்டாள்.
பழைய ஆர்யன் என்றால் அவளுக்கு தெளிவுப்படுத்த இப்படி பின்னாடியே செல்ல நாய்க்குட்டி போல வந்திருக்க மாட்டான்.
அவள் என்ன...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 61
ருஹானா குறுஞ்செய்தியை படித்ததும் நிலைகுலைந்து போக, அவளது கலங்கிய முகம் கண்டு ஆர்யன் “என்னாச்சு? எதும் கெட்ட தகவலா?” என கேட்டான்.
அவன் குரல் கேட்டு உணர்வு வர பெற்ற ருஹானா எழுந்து நின்று “உங்களால எப்படி இப்படி செய்ய முடிந்தது? நீங்க தான் என்னை மாட்டி விட்டுருக்கீங்க? அப்படித்தானே?”...
சாக்லேட் தூள்களால் ருஹானா கேக்கை அலங்கரிக்க, பக்கத்தில் நின்ற இவான் “சித்தி! கேக் நல்லா இருக்கு. சித்தப்பாக்கு ரொம்ப பிடிக்கும் தானே” என்று கேட்க, சிரிப்புடன் ருஹானா “அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்றாள்.
அப்போது வெளியே சாரா குரல் கேட்டது.
“ஏதாவது வேணுமா ஆர்யன் சார்?”
“இவானும் அவன் சித்தியும் எங்க இருக்காங்க?”
ருஹானா கிசுகிசுப்பாக “இவான்! ஓடிப்போய் உன்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 60
ஆர்யனை புகழ்ந்து ருஹானா பேசிய வார்த்தைகள் அவனுக்கு கடினமாக இருந்தாலும், தன் குணங்களை அவள் அறிந்து வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியையும் தந்தது. அவளை இழந்து விடவே கூடாது என்னும் வைராக்கியத்தையும் தந்தது.
“நீங்க எதுவும் சொல்ல வேணாம். என் மனசுல பட்டதை நான் சொல்றேன்”
அதிகம் பேசும் இயல்பில்லாதவனை, திரும்ப திரும்ப...
சல்மா அறையினுள் வேகமாக நுழைய, பின்னால் வந்த கரீமா கதவை பூட்டினாள்.
“என்னால இனிமே தாங்கமுடியாது அக்கா. மாளிகையோட சாவி அவ கைல கொடுக்கறான்னா என்ன அர்த்தம்? ம்.. அவ ஆர்யனை முழுசா மயக்கிட்டாளா? ம்ஹீம்.. அவளுக்கு தெரியாதுல ஆர்யன் தான் அவளை ஜெயிலுக்கு போக வச்சான்னு. தெரிஞ்சா என்ன செய்வா? இந்த நன்றிக்கடனும், கருணையும்...
ஆர்யன் இவானிடம் கண் காட்ட அவன் ருஹானாவின் கையை இழுத்துக் கொண்டு படிக்கட்டில் ஏறினான்.
“ஆர்யன்! ருஹானா நிஜமாவே குணமாகிட்டாளா?” என கரீமா அடக்க முடியாமல் கேட்க, ஆர்யனும் “ஆமா! சிறிது ஓய்வெடுத்தா போதும். நீங்க எல்லாரும் உதவியா இருங்க. மேலும் கீழும் நடக்க விடாதீங்க” என்றான்.
“சரி ஆர்யன்!” என கரீமா சொல்ல “நாங்க பார்த்துக்கறோம்,...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 59
தன்வீரின் மேசையின் எதிரே இரு முக்காலிகளில் அமர்ந்து ருஹானாவும் ஆர்யனும் காத்திருந்தனர்.
தன்வீரும் அவன் உதவி அதிகாரியும் ஹுசைனிடம் வாக்குமூலம் வாங்க உள்ளே அழைத்து சென்றிருக்க, ருஹானா அமைதியற்று அங்கே எட்டி பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.
அவள் முகத்தை முகத்தை பார்த்தவாறு ஆர்யன் அவளிடம் உண்மையை சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
ஒருவாறு தைரியத்தை...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 58
“என்ன சல்மா! ஏன் இந்த ராத்திரில என்னை எழுப்புறே?”
“லாக்அப்ல ருஹானாக்கு அடிபட்டுடுச்சாம், அக்கா”
“அடிபட்டுச்சா? எப்படி?”
“எனக்கு தெரியல. நான் ஆர்யன் கூட பேசிட்டு இருந்தேன். அப்போ போன் வந்துச்சி. அவன் ஒரே ஓட்டமா ஓடிட்டான்”
“அப்படியா.. என்ன நடந்ததுன்னு தெரியலயே! சரி! உனக்கு என்ன ஆச்சு? நீ ஏன் ஒரு மாதிரி...
“நீங்க இவானை பார்த்துக்கங்க. என்னை நினைச்சி அவன் வருத்தப்படாம கவனிச்சிக்கங்க. நீங்க அவன் பக்கத்தில் இருந்தா மட்டும் தான் நான் இல்லாத குறையை அவன் உணர மாட்டான்”
ஆர்யன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க “ஒருவேளை நான் திரும்பி வர முடியாம போனா....” என ருஹானா சொல்ல “அதெல்லாம் நடக்கவே நடக்காது. நான் சொல்றேன் தானே, நான் எல்லாம்...