என் வாசல் வருவாயா
வாசல் 14:
நதியை அவள் வீட்டில் இறக்கி விட்டுச் சென்ற குமரனுக்கு மனமெங்கும் அவள் நினைவுகள் தான். நடந்த அனைத்தும் மீண்டும் அவன் மனக்கண்ணில் வந்து சென்றிருந்தது. ஏனோ அவளின் அருகாமை அந்த உணர்வுகள் அவனுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசுவாசத்தையும் நிம்மதியையும் கொடுத்திருந்தன.
தூங்குவற்காக மாத்திரைகளை வாங்கிச் சென்றவனுக்கு தெரியவில்லை, அன்று மாத்திரை போட்டாலும் அவனுக்கு...
ஒரு வாரம் கழித்து அலுவலகம் சென்றவள், ட்ரான்ஸ்பரை ஏற்றுக் கொள்வதாய் சொல்ல, பிரியாவிற்கு தான் அதிர்ச்சி.
“என்ன நதி? போகலைன்னு சொன்ன?” என்றாள்.
“இப்ப போகணும்னு தோணுது பிரியா” என்றாள்.
“கொஞ்சம் யோசிக்கலாம் நதி. இது வாழ்க்கை விஷயம். எடுத்தோம் கவுத்தோம்னு பண்ணாதடி” என்றாள் பிரியா.
“இனி எடுக்கவோ கவுக்கவோ ஒன்னும் இல்லை பிரியா. உனக்கு ஒரு அட்வைஸ் சொல்லட்டுமா,...
வாசல் 13:
மூன்று மாத திருமண வாழ்க்கை கனவு போல் ஆகியிருந்தது நதிக்கு. ஆசை ஆசையாய் செய்து கொண்ட திருமணம், ஆசையாய் காதலித்த கணவன், அவர்களின் பந்தத்திற்கு சாட்சியாய் கிடைத்த குழந்தை என்று அனைத்தும் ஒரே நாளில் அவளை விட்டு சென்றதை போன்ற பிரம்மை அவளுக்கு.
மகளின் பார்வை ஒரே இடத்தில் வெறித்தபடி நிலைகுத்தி இருப்பதைப் பார்த்து...
“எனக்காக எதைத் தாங்குனிங்க உதய்? உங்க வீட்டுக்காகத் தாங்குனிங்க? அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நானா உங்களை சாகடிக்கிறேன். இல்லை, நீங்க எல்லாரும் சேர்ந்து தான் என்னை சாகடிக்கிறிங்க? உங்களை சாகடிக்கிறவளோட ஒன்னும் நீங்க இருக்க வேண்டாம். நான் போறேன். உங்களுக்கு எப்பவும் உங்க குடும்பம் தான் முக்கியம். என்னைப் பத்தியெல்லாம் கவலையே...
வாசல் 12:
சங்கரனைப் பார்க்க, சொந்தத்தில் இருந்து ஒரு பெண் வந்திருக்க, அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் கோதாவரி.
“அப்பறம் கோதாவரி,என்ன சொல்றா உன் சின்ன மருமக?” என்று எதார்த்தமாய் ஆரம்பிக்க, அங்கே ஆரம்பித்தது வினை.
கோதாவரி காட்டாற்று வெள்ளமாய் அவளைப் புகார் வாசித்துக் கொண்டிருக்க, அதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த நதிக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை...
விஷயத்தை கேள்விப்பட்ட, வீட்டில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி. நதியின் வீட்டில் வரதனோ குழந்தையாகவே மாறி விட்டார்.
“நமக்கு பேத்தியோ, பேரனோ வரப் போறாங்க சாரதா” என்று சொல்லி சொல்லி மாய்ந்தார். அவர்களைப் பொறுத்தவரை நதியின் குழந்தை தானே அவர்கள் வீட்டின் மூத்த பேரக் குழந்தை. அந்த மகிழ்ச்சி தான்.
உடனே கிளம்பி வந்து மகளைப் பார்த்துவிட்டு தான்...
வாசல் 11:
“என்னாச்சு குமரா? வந்ததுல இருந்து அமைதியா இருக்க? என்ன பிரச்சனை?” என்றாள் தீபா.
“நான் தனியா போய்டலாம்னு இருக்கேன் க்கா” என்றான் எடுத்த எடுப்பில்.
“என்னாச்சு குமரா? வீட்ல எதுவும் பிரச்சனையா?” என்றாள் தீபா.
“நம்ம வீட்ல பிரச்சனை இல்லைன்னா தான் ஆச்சர்யம். அம்மாவோட நடவடிக்கை வரவர சரியில்லை. நானும் எப்பவும் ஒரே மாதிரி இருக்குறது இல்லை....
அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் சட்டென்று வாயை மூடிக் கொண்டாள் தீராநதி. கோதாவரிக்கு பதில் சொல்கிறேன் என்று அவள் பேசியிருக்க, அது குமரனின் மனதில் அப்படியே பதிந்து விட்டது.
மகனின் முகத்தில் தெரிந்த கோபத்தில் கோதாவரியும் வாயை மூடிக் கொண்டார்.
திருமணம் முடிந்த இந்த மூன்று மாதங்களில் அவனின் கோபத்தை இதுவரை கண்டதில்லை நதி. எவ்வளவு கோபம்...
வாசல் 10
அதன் பிறகு வந்த நாட்கள் , வேகமாய் சென்று முடிந்திருந்தது. கோதாவரி எப்போதும் போல் குத்தல் பேச்சுக்களைத் தொடர, நதியும் வழக்கம் போல் குமரனின் முகம் பார்த்து அனைத்தையும் கடக்கப் பழகியிருந்தாள்.
ஆனால் சில நாட்களாக அவளுக்கு அலுவலகத்திலும் வேலையில் புதிது புதிதாக பிரச்சனை ஆரம்பிக்க, அதை சரி செய்துவிட்டு ஆயிரத்தெட்டு டென்ஷனுடன் வீட்டுக்கு...
வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்திய பிறகும் நல்ல உறக்கத்தில் இருந்தவளைப் பார்த்தவனுக்கு முகம் கனிந்தது.
“நதிமா வீட்டுக்கு வந்துட்டோம்” என்று மெதுவாக அவள் கைகளைத் தட்ட, அப்போதும் அவள் எழுந்தாள் இல்லை.
வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்த கோதாவரி பார்த்தது என்னமோ இந்த காட்சியைத் தான்.
“நதி” என்று அவன் மீண்டும் எழுப்ப, அப்போது தான் உறக்கம்...
வாசல் 9:
குமரன் அவளை நேராக அவளது வீட்டிற்கு தான் அழைத்து சென்றான். தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்று அவள் மனதில் நினைத்திருந்தாள் தான். ஆனால் அதை அவனிடம் சொல்லாமலேயே புரிந்து கொண்டு அவளை அழைத்து வந்திருந்தவனின் மேல் காதல் பொங்கியது தீராநதிக்கு.
“அக்கா நீங்க சென்னை போயிருக்கிங்கன்னு சொன்னா மாமா?” என்றாள் மகதி.
“இன்னைக்கு தான்...
“பொய் சொல்லாதிங்க? உங்களுக்கு என் நினைப்பே இல்லை. நான் தான் உங்களை நினைச்சு இங்க பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கேன். நீங்க ஜாலியா டியூட்டி பார்த்துட்டு இருக்கீங்க. என் கிட்ட பேசக் கூட நேரமில்லை உங்களுக்கு” என்றாள் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன்.
“நீ சொல்றது பொய்ன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அப்பறம் ஏன்? எனக்கென்ன...
வாசல் 8:
குமரனுக்கும் நதிக்கும் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் முழுமையாக முடிந்திருந்தது. அந்த இரண்டு மாத திருமண வாழ்க்கையில் நதியின் மேல் அன்பைத் திகட்ட திகட்ட புகுத்தியிருந்தான் குமரன். கணவனின் அன்பிலும், திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாகவே இருந்தாள் நதி.
திடீரென்று அவனுக்கு வரும் முன்கோபம் தவிர்த்துப் பார்த்தால், அவன் ஒரு ஆகச் சிறந்த கணவன், காதலனும்...
நதியை அழைத்தவள்,
“டிபன் எல்லாம் இருக்கு நதி.பால் காய்ச்சி அந்த பிளாஸ்க்ல வச்சிருக்கேன். நாங்க எல்லாம் சாப்பிட்டுட்டோம். நீயும் குமரனும் சாப்பிட்டு தூங்குங்க. நான் காலையில வரேன். அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு அண்ணா வீட்ல தூங்கிப்பாங்க” என்றவள் ராணியையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
“அக்கா தேங்க்ஸ்க்கா” என்ற குமரன் தீபாவை அணைத்துக் கொள்ள,
“போடா டேய்..!” என்று சிரித்தவள்,
“இதே...
வாசல் 7:
தன் அலங்காரங்களைக் கலைத்து, அந்த அறையிலேயே குளித்து முடித்து, ஒரு சிம்பிளான ஜார்ஜெட் புடவையில் வெளியே வந்தவளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள் தீபா.
“கூப்பிட்டிருந்தா நான் வந்து ஹெல்ப் பண்ணியிருப்பேனே நதி” என்றாள் தீபா.
“இருக்கட்டும் அண்ணி, நீங்க கிட்சன்ல வேலையா இருந்திங்க. நானே மெதுவா எல்லாத்தையும் ரிமூவ் பண்ணிட்டேன். இந்த ஜடை அலங்காரம் ரிமூவ் பண்ணத்தான்...
மகதியும், நரேனும் அக்காவை விடாமல் நதியுடனேயே இருந்தனர். ஒருவழியாக அனைத்தும் முடிந்து நதியின் வீடு வந்தவர்கள், அங்கிருந்து குமரனின் வீட்டிற்கு கிளம்ப, நரேனும், மகதியும் ஒரே அழுகை.
அவர்கள் அழுவதைப் பார்த்தவுடன் நதிக்கும் அழுகை வர,
“அவங்க தான் சின்னப் பிள்ளைங்க அழறாங்க. நீயும் கூட சேர்ந்து அழுதா, இன்னும் பீல் பண்ண மாட்டாங்களா?” என்று குமரன்...
‘நல்லா பார்த்தாரு. ஆளைப் பார்த்தே பத்து நாள் ஆச்சு’ என்று முனங்கிக் கொண்டாள்.
சரியாக அதே நேரத்திற்கு அவனிடமிருந்து போன் வர சிரித்துக் கொண்டாள்.
“அவர் தான் கூப்பிடுறார்ப்பா. நான் பேசிட்டு வர்றேன்” என்றவள் எழுந்து அறைக்குள் சென்று விட்டாள்.
“நதி” என்றான் எடுத்த எடுப்பில்.
“சார்க்கு எங்க ஞாபகம் எல்லாம் இருக்கா?” என்றாள் முறைப்பாய்.
“மறந்தாத்தானே நினைக்கிறதுக்கு. என் நினைப்பெல்லாம்...
வாசல் 6:
திருமணத்திற்கு பத்து நாட்கள் மட்டுமே இருக்க, குமரனுக்கு இன்னமும் டிப்பார்ட்மென்ட்டில் எழுதிக் கொடுத்திருந்த லீவும் கிடைத்தபாடில்லை. மொத்த குடும்பமும் அங்கு கூடியிருந்தனர். பத்திரிக்கை அடிப்பது, கொடுப்பது என்று நாட்கள் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது.
நதியுடன் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வதோடு சரி. அந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு அவளை நேரில் சென்று...
“ஆமா இந்த கல்யாண செலவெல்லாம் யாரோடது?” என்றாள்.
“ஏன்? எல்லாம் குமரனோடது தான். அவன் தான் அப்பாகிட்ட பணத்தை கொடுத்து விட்ருக்கான்” என்றான் கல்யாண்.
“அப்போ சரி” என்றாள் ராணி.
“எதுக்கு கேட்ட?” என்றான்.
“எடுக்குற புடவையை நல்லா எடுக்கலாமேன்னு தான்” என்றவள் தீவிரமாய் புடவை அலசலில் இறங்கினாள்.
கல்யாணும், கண்ணனும் ஆண்களுக்கான உடையை பார்க்க சென்றிருந்தனர்.
“புடவை என்ன பிரைஸ்க்கு பார்க்கட்டும்...
“சாரி நதி, ஒரு வாரமா ஒரு போன் கூட பண்ண முடியலை” என்றான் குமரன்.
“வேலை அப்படி இருக்கும் போது என்ன பண்ண முடியும்?” என்றாள் நதி.
“நான் பேசலைன்னு உனக்கு வருத்தம் எல்லாம் இல்லையா?” என்றவனின் குரலில் ஏதோ ஒரு ஏமாற்றம்.
“எதுக்கு வருத்தப்படனும்? இத்தனை நாள் உங்க கூட பேசிட்டேவா இருந்தேன்” என்றாள் நதி.
“ம்ம்” என்றவன்...