UTMI
மெல்லிசை - 20
"லட்சுமி பதறிப்போய் கத்தினாள். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
ரகுராம் தனது அண்ணனை தூக்கி கட்டிலில் படுக்க வைக்க சொன்னார். ஜெய் மெதுவாக பிடித்து தூக்கி கட்டிலில் படுக்க வைத்து தண்ணீரை முகத்தில் தெளித்தான்.
கதிரேசன் மெதுவாக கண் விழித்து பார்த்தார்.
"அண்ணன் வெய்யில்ல வேலை செஞ்சது மயக்கம் வந்து இருக்கும்" என ரகுராம் சமாளித்து அக்கம் பக்கத்து...
மெல்லிசை - 19
"அதை பார்த்த மித்ரா சித்தப்பா சித்தி ஓடுறாங்க. பாருங்க" என்று கூற.
இதை சற்றும் எதிர்பாராத ஆதி, 'எங்க போனாலும் நமக்கு ஏழரையாவே வருதே. உண்மையை சொன்னாலும் தப்பு. பொய் சொன்னாலும் தப்பு' என நினைத்துக் கொண்டு, "இசை.. இசை.. நில்லுடீ" என சொல்லிக் கொண்டே அவளை தடுத்து நிறுத்த ஓடினான்.
"ஏய்! நான்...
மெல்லிசை - 18
என்னில் துளிர்விட்ட காதலை
உன்னிடம் சொல்லிவிட
ஆயிரம் முறை ஒத்திகை
பார்த்தேனடா என் காதலனே
உன் ஒற்றை பார்வையில்
உதடுகள் உச்சரிக்க
முயன்றும் தோற்றதடா...
என இசையின் இதயத்தில் வார்த்தைகள் கவிதையாய் உருவெடுக்க. உதடுகள் மட்டும் உச்சரிக்க முடியாமல் ஏனோ தோல்வியடைந்து நின்றது.
"பிளாக்கிங் என்ன சிந்தனையிலேயே நிக்கிற" என கேட்க.
"ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்களே. இப்ப மட்டும் எப்படி வர தோணுச்சுனு...
மெல்லிசை - 17
அன்பே உன் இதயத்தை
தென்றலாய் தீண்டிட
என்னவனின் வரவிற்காக
இதயத்தில் அன்பையும்
விழிகளில் காதலையும்
தேக்கிவைத்து காத்திருக்கிறேன்..!
மாமனவன் வரவிற்காக
இதோ அந்த நொடிகள்
வந்துவிடும் தருணம்
நேரில் பார்த்து காதலை
உதடுகள் காதலை உச்சரிக்குமா?
நாணத்தால் வார்த்தைகள் ஊமையாகுமா?.. மாமா..!
என இசையின் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது
இசையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட வருணின் மனமோ
உந்தன் விழியினில்
என் இதய துடிப்பும்
உறைந்து போனதடி..!
உனக்காக காத்திருந்தேன்
உன்னில் நான் மொத்தமாய்
தொலைந்தது தெரியாமலே
என் காதலை...
மெல்லிசை - 16
நிஜமாவே நீங்க என்னைய லவ் பண்றீங்களா? இல்ல டைம்பாஸ்க்கு தானா?
அது..வந்து. அப்படி எல்லாம் இல்ல.
"இதுக்கு மேல எந்தக் காரணமும் எனக்குத் தேவையில்லடா. நீ உண்மையாவே லவ் பண்ற நல்லவன் தானா இன்னைக்கு ஈவினிங் அஞ்சு மணிக்கு நாம மீட் பண்றோம். அவ்வளவுதான். வேற எந்த ரீசனும் எனக்கு தேவை இல்ல" என்றாள்.
"அப்படி எல்லாம்...
மெல்லிசை - 15
யாதவ் கொடுத்த இந்த அடியை எதிர்பார்க்காத ஆதி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ச்சியோடு விழிகள் விலகாமல் அவனைப் பார்த்தான்.
என்னடா ரொம்ப அதிர்ச்சியா இருக்கா? தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்க. நானும் மனுஷன் தான். எத்தனை நாளைக்கு பொறுத்துக்க முடியும். நல்லத நாய் சொன்னா கூட கேட்டுக்கணும்னு சொல்லுவாங்க. இதுவே முதலும் கடைசியுமா...
ஒரு பாத்திரத்தில் சட்னிக்கு தேவையான அனைத்தையும் போட்டு இந்தாம்மா சட்னி அரைச்சுடு. அந்தா பாரு ஆட்டுக்கல் இருக்கு. நான் ஆட்டுக்கல்ல இப்ப தான் கழுவிட்டு வந்தேன்.
'நானா வாய கொடுத்து மாட்டிக்கிட்டனே. வேற வழியே இல்ல' நினைத்துக் கொண்டு ஒரு சொம்பில் தண்ணீரையும் சட்னி அரைக்க வைத்திருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள்.
மிக்ஸியிலேயே அரைத்து பழக்கப்பட்டவள்...
மல்லிகைப் பந்தல் கிராமத்தில் ஊரே அமைதியாக கொண்டிருந்த வேளையில் ஜெய் தனது குடும்பத்தோடு வண்டியில் வந்து இறங்கினான்.
மகனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த லட்சுமி வண்டி சத்தம் கேட்டதும் எழுந்து வந்து கதவை திறந்தாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு மற்றவர்களும் எழுந்து வெளியில் வந்தனர்.
ஜெய் மனைவி குழந்தைகளுடன் வந்திருப்பதைப் பார்த்து அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
லட்சுமி தன்...
இதற்கு மேலும் அவனிடம் பேசிப் பயனில்லை என்று தெரிந்து கொண்டு அமைதியாக யாதவ் அவனுடன் கிளம்பினான்.
ரகசியா ஒவ்வொரு நிமிடமும் செல்லச் செல்ல மனதில் பதட்டத்தோடு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
"காதலை விட்டு தரவும் முடியாமல், தனது தந்தையை எதிர்த்து பேசவும் முடியாமல் மனதுக்குள் ஒரு போராட்டமே நடத்தினாள். எப்படியும் ஆதி வருவான்" என்ற நம்பிக்கையோடு...
அதிகாலை பொழுது புலர்ந்தது கூட தெரியாமல் ஆதி போர்வைக்குள் தன்னை மறைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
"யாதவ் எழுந்து சாதம் வைத்துவிட்டு வந்து ஆதியை டீ குடிக்கும் போகலாம்" என்று ஆதியை எழுப்ப முயன்ற தோற்றுப் போய் அருகில் அமர்ந்து இருந்தான்.
அப்போது ஆதியின் செல்போன் ஒலிக்கத் தொடங்கியது.
அரைத்தூக்கத்தில் கண்களை முழித்தும் முழிக்க முடியாமலும் செல்போனின் சத்தத்தைக்...
"இந்தா இசை இன்னும் ரெண்டு துண்டு மீன் போட்டு நல்லா சாப்பிடு. வளர்ற புள்ள" என மஞ்சு இன்னும் இரண்டு துண்டு மீன்களை அவள் தட்டில் வைக்க.
மஞ்சுவின் பாசத்தை பார்த்த மல்லிகா, 'ரெண்டு பேருமே இப்படி பாசத்தை கொட்றாங்களே. இதுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேனோ?' என மனதிற்குள் நினைத்த அதேசமயம் வருணைப் பார்த்தவள், ...
சம்யுக்தா மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெய் சமையல் காட்டிற்குச் சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து முகத்தில் தெளித்தான்.
"ஹேய்! சம்யு.. சாரிடி.. சாரிடி.. கண்ணை முழிச்சு பாரு" என அவளைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கன்னத்தை தட்டி எழுப்பினான்.
"பிள்ளைகள் இருவரும் பயந்து போய் அம்மா" என அழ ஆரம்பித்தனர்.
"சம்யுக்தா ...
எப்படிடா இவ்வளவு அழுத்தமா சொல்ற.
டேய்! நானென்ன நேரிலயா பாக்க போறேன். நாங்க எல்லாம் ரொம்ப தெளிவா இருப்போம். நீ வேலைய பாருடா. ஷாப்பிங் போறது சின்ன சின்ன சந்தோஷம் அதையெல்லாம் இல்லன்னு சொல்ல கூடாது.
"சரி டா மச்சி நீ சந்தோசமா போயிட்டு வா. என்ன ஃப்ராடு தனம் வேணாலும் பண்ணு. இதுக்கு அனுபவிப்படா" என்றான்.
சரி...
"பிளாக்கி என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கியா?" என ஆதி இசைக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்.
கோபப்பட்ட இசை, உடனே ஆதிக்கு கால் பண்ணினாள்.
'மெசேஜ் அனுப்புனா லூசு கால் பண்ணது பாரு' என நினைத்துக் கொண்டு, பிளாக்கி எதுக்கு கால் பண்ற" என கேட்க.
"என்னைய அப்படி கூப்பிடாதீங்கனு பல முறை சொல்லி இருக்கேன். கருப்புனா உங்களுக்கு என்ன...
நீ இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஜெய். உனக்கு மரியாதை கொடுக்கக் கூட தோணல.
"சாரி சார். இந்த ஒரு முறை மட்டும்" என ஜெய் பேச முடியாமல் விக்கித்து நின்றான்.
குடும்ப சூழ்நிலை சார். உங்ககிட்ட கேக்க முடியல. ஏதோ ஒரு வேகத்துல தப்பு பண்ணிட்டேன் சார். இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க.
மன்னிக்கிற...
பெங்களூர் நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
"ஜெய் ஆர்டர் போட்ட உணவை முழுங்க முடியாமல் கஷ்டப்பட்டு தண்ணீரை குடித்து முழுங்கி விட்டு, நான் கிளம்புறேன் சம்யு" என்றான்.
"என்ன முடிவெடுத்து இருக்கீங்க" என சம்யுக்தா கேட்டாள்.
கிளம்பும்போதே ஆரம்பிக்காத. எல்லாம் உன்னால தான். வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன். என் பேச்சை கேட்காம ஆத்தூரில அத்தைவீடு இருக்கு. எங்கப்பா பாத்துப்பாங்க....
என்ன மாமா நான் பேசிகிட்டு இருக்கேன். நீங்க ஏதோ பகல் கனவு கண்டுட்டு இருக்கீங்க.
'என்னுடைய காதல வெளிப்படுத்த முடியாத பகல் கனவாகவே போய்விடுமோ?' என மனதில் நினைத்து கொண்டான்.
"மாமா.. ஹலோ" என அவன் முகத்தின் முன் கைகளை ஆட்ட.
"என்ன இசை" என தடுமாற்றத்துடன் கேட்டான்.
அத்தை வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல. நான்...
அம்மா யோசிச்சு தான் பேசறீங்களா? அவசரப்படாதீங்கம்மா.
நல்லா யோசிச்சு தான் பண்றேன் டா.
"இது என்னோட வாழ்க்கைம்மா. உங்க இஷ்டத்துக்கு என்னைய கேட்காம முடிவு பண்ணுவீங்களா?" என மூச்சுவிடாமல் பேசினான்.
அவனது வார்த்தையில் இருந்த கோபம் பதிலிலேயே தெரிந்தது.
ஆதி உங்க அத்தை, உங்க அப்பா, இசை எல்லாரும் பக்கத்துல தான் இருக்காங்க.
"இருந்துட்டு போகட்டும் எனக்கென" என்றான்.
"நாங்க ஏற்கனவே சின்ன...
சந்தோசமான விஷயத்தை விட இவ்வளவு மெதுவா சொல்ற. நம்ம புள்ளைங்க ஊருக்கு வந்தா நமக்கு சந்தோஷம்தான். பிள்ளைங்க தான் வரமாட்டேனு முரண்டு பிடிக்கறதுங்களாம்.
டவுன்லயே வளந்த புள்ளைவ. பட்டிக்காட்டுக்கு வர பிடிக்காது தான்.
"என்னங்க செய்ய.ஆனாலும் பிள்ளைங்க ரெண்டும் கண்ணுக்குள்ளேயே நிக்குதுங்க. இப்படியாச்சம் வரமாட்டாங்களானு மனசு காத்துக் கிடக்கு..."
"லட்சுமி புலம்பாத. வராம எங்க போவாங்க. இத்தனை நாள்...
மெல்லிசை - 03
கிழக்கு வானம் மெல்ல மெல்ல சிவக்க தொடங்கியது. அழகான அதிகாலை வேளையில் பச்சைப் புல்லின் நுனியில் இதழ் பதித்துக் கொண்டிருந்த பனித்துளிகள் பகலவனின் வரவை எண்ணி உருகிய பின்னும் உதிராமல் தவமிருந்தது.
விடியலை அறிவிக்க செஞ்சி சேவல் ஒன்று அந்தப் பழமையான தொட்டி கட்டு வீட்டின் உச்சியில் ஒய்யாரமாக நின்று பொழுது புலர போவதை...