Kannil Theriyuthoru Thotram
தோற்றம் – 16
பொன்னிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. முதலில் என்ன இப்படி பேசுகிறான் என்றுதான் தோன்றியது. புகழேந்தி மனதில் இப்படியொரு எண்ணம் இருக்கும் என்றும் அவள் நினைக்கவில்லை.. அசோக் இங்கே வராது போனதில் அவனுக்கு ஒரு வருத்தம் இருப்பது தெரியும்..
ஆனாலும் அசோக்கின் உணர்வுகள் அவனுக்கு புரிந்திருக்கும் என்றே நினைத்தாள். ஏறக்குறைய...
தோற்றம் – 15
“என்ன சொன்ன???!!!” என்று கண்களை இடுக்கி, வேகமாய் சத்யாவின் புறம் நெருங்கியவளின் தோற்றமே சத்யாவிற்கு பயம்கொள்ள செய்தது..
புதிதாய் வந்தவள் தானே, பதில் கொடுக்கமாட்டாள் என்றே எண்ணியிருந்தனர் பரஞ்சோதியும் சத்யாவும்.. ஆனால் பொன்னியை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்..??
பொன்னியோ சத்யாவைப் பார்த்த பார்வையிலேயே எரித்துவிடுவாள் போல் இருக்க, மகராசி தான்...
தோற்றம் – 14
புகழேந்தி சென்னை சென்றும் நான்கு நாட்கள் ஆகியிருந்தது.. முதல் இரண்டு நாட்கள் பொன்னிக்கு கொஞ்சம் ஒருமாதிரி இருந்தாலும், பின் அவளே அவளை அந்த வீட்டின் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொண்டாள்..
அவன் கிளம்புகையில் சொல்லிவிட்டே போனான்..
“கண்ணு... மிஞ்சி போனா டென் டேஸ் தான்.. நான் வந்து உன்னை கூட்டிட்டு போயிடுவேன்.. சோ இங்க...
தோற்றம் – 13
பொன்னியும் புகழேந்தியும், கிளம்பி செல்லும் போதே அசோக் ஊருக்கு செல்ல, கிளம்பி வெளியே வந்திருந்தான்.. அவனை வழியனுப்ப என்று மங்கையும் வந்து வாசலில் நின்றிருந்தார்... இவர்கள் இருவரும் வருவர் என்று அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை போல.. இருவரையும் பார்த்ததும் அசோக் மங்கை இருவருக்குமே ஒரு சந்தோஷ அதிர்ச்சி..
“வாங்க வாங்க...” என்று...
தோற்றம் – 12
‘இருக்காது இல்ல.. இருக்க கூடாது.. அவ்வளோதான்..’ என்று பொன்னி பிடிவதமாக சொல்லவும், புகழேந்தி படுத்திருந்தவன் வேகமாய் எழுந்து அமர்ந்துவிட்டான்..
‘ஏன் என்னாச்சு???’ என்பதுபோல் பார்த்தவள், அவளும் எழுந்து அமர, அவனோ பொன்னியை தான் பார்த்திருந்தான்..
“என்னங்க???!!” என்றாள் புரியாமல்..
“இல்ல.. புரியலை.. நீ ஏன் இப்படி பேசின இப்போ??” என்றான் புருவத்தை சுருக்கி..
“ஏன்.. நான் என்ன...
தோற்றம் – 11
புகழேந்தி, பொன்னியின் வீடு சென்று பேசிவிட்டு வருகையில் அவனை ஒரு முறைப்போடு எதிர்கொண்டது அவனின் அன்னையே.. மகராசி அவனைப் பார்த்த பார்வையே பலகதைகள் சொன்னது அவனுக்கு.. இருந்தும் அதனை கண்டுகொள்ளாது அப்படியே அறைக்குள் நுழைய நினைத்தவனை,
“புகழு.. எங்க போயிட்டு வர இப்போ.. நான் சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு...
தோற்றம் – 10
“இங்க பாரு பொன்னி கல்யாணம் பண்ணிக்கிறது பெரிய விசயமில்லை. ஆனா அடுத்து வாழ்ற வாழ்க்கை தான் முக்கியம்.. எடுத்தோம் கவுத்தோம்னு இனியும் எதையும் பட்டுன்னு பேசாம, இனிமே கொஞ்சமாது பொறுமையா போக பாரு..
என்னவொரு முடிவு எடுக்கிற முன்ன மாப்பிள்ளைக்கிட்ட கலந்து பேசி முடிவு எடு... நல்ல பொண்ணுன்னு பேரு வாங்கி...
தோற்றம் – 9
“பொன்னி இந்தா மாப்பிள்ளைக்கு இந்த துண்டை குடு..” என்று மங்கை ஒரு புதிய துண்டினை நீட்ட, பொன்னியோ மங்கையை ஏகத்திற்கும் முறைத்து நின்றாள்..
“ஏய் என்னடி முறைக்கிற.. போ.. போய் குடு.. மாப்பிள்ள குளிக்க போனார்ல போய் குடுத்துட்டு வா...” என்று மங்கை விரட்ட,
“ம்மா இதெல்லாம் கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர்.. அவர்...
தோற்றம் – 8
“இங்க பாரு கண்ணு இதுக்கு நீ சம்மதிக்கவே கூடாது.. அவ்வளோதான்.. நீ மட்டும் கோவில்ல வந்து சரின்னு சொன்ன.. பாத்துக்கோ...” என்று மிரட்டாத குறையாய் கெஞ்சிக்கொண்டு இருந்தான் புகழேந்தி..
அது மிரட்டலா.. இல்லை கெஞ்சலா என்பது பொன்னிக்கும் புரியவில்லை.. புகழேந்திக்கும் புரியவில்லை..
அவன் முகத்திலும் கண்களிலும் இருந்த தீவிரம், அவளோடு பேசும் போது...
தோற்றம் – 7
பொன்னிக்கு என்னவோ மனது இன்னமும் ஆறவில்லை.. உள்ளேயே ஒரு கோபம் இருந்துகொண்டே தான் இருந்தது.. செய்வது எல்லாம் செய்துவிட்டு, அன்று சொல்ல சொல்ல கேட்காது அசோக்கை எப்படி அடித்தார்கள், தன்னை பார்க்கும் போதெல்லாம் புகழ் வீட்டு பெண்கள் என்ன பேச்சு பேசினர், இப்போது வந்து மன்னிப்பு என்று நின்றால் உடனே...
தோற்றம் – 6
பத்து நாட்கள் கடந்திருந்தது...
அமுதா வீட்டிற்கு வந்தும் ஒருவாரம் சென்றிருந்தது.. புகழேந்தி அவனது விடுமுறையை ஒருமாதம் என நீட்டியிருந்ததான்.. வீட்டில் இருந்து வேலை செய்தான்.. மீண்டும் திருவள்ளூருக்கே ட்ரான்ஸ்பர் கேட்டிருந்தான்..
என்னவோ ஒரு எண்ணம்.. நினைத்தால் வந்து போகும் தூரத்தில் இருக்க வேண்டுமென்று.. வேலை சம்பளம் எல்லாம் ஒருப்பக்கம் இருந்தாலும் வீடும் ஊரும்...
தோற்றம் – 5
சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் மருத்துவமனை..
அமுதா அங்கே தான் அனுமதிக்கப் பட்டிருந்தாள்.. தனியறை ஒன்றில், கையில் ட்ரிப்ஸ் ஏறி கண்களை மூடிப் படுத்திருக்க, அவளின் அருகே அன்பரசியும், மகராசியும் இருக்க, அறைக்கு வெளியே மற்றவர்கள் அனைவரும் இருந்தனர்..
பொழுது விடிந்து பல நேரமாகியிருக்க ஆனால் யாரின் முகத்திலும் எவ்வித தெளிவும் இல்லை.....
தோற்றம் – 4
“ஏதாவது பண்ணு புகழ்.. ஏதாவது செய்...” என்று அவனின் மனம் கூப்பாடு போட, காரை அப்படியே நிறுத்தியிருந்தியவன், பொன்னி அருகே வருவதற்காக காத்திருக்க, ஸ்டியரிங்கில் விரல்கள் தட்டியபடி இருக்க, அவனது பார்வையோ எதிரே வருபவளை பார்த்துகொண்டு இருந்தது.
‘அப்படியே தட்டி தூக்கிருடா புகழ்...’ என்று ஒரு எண்ணம் எழுந்தாலும் அதற்கும் அவன் மனம்...
தோற்றம் – 3
“ண்ணா.. நீதான் இப்படியிருக்க.. அவங்க எல்லாம் நல்ல கல்லு மாதிரிதான் இருக்காங்க.. அடுத்த வாரம் ஊருக்கு வா.. என்ன நடக்குதுன்னு பாப்போம்..” என்று பொன்னி அசோக்கிடம் சொல்ல,
அவனோ, “அதெல்லாம் வேணாம் பொன்னி.. தேவையில்லாத பிரச்சனை வரும். அப்புறம் அம்மா வருத்தப்படும்....” என, அவனையே ஒரு பார்வை ஆழமாய் பார்த்தவள்,
“ஏன்டா...
தோற்றம் – 2
எதிரே நின்றவளும் அவனைப் பார்க்க, அவனும் பார்க்க, பொன்னியின் கரங்களைப் பிடித்து நின்றிருந்த குட்டிகளோ, ‘மாமா...’ ‘சித்தப்பா..’ என்று மழலையாய் ஆளுக்கு ஒன்றாய் சொல்ல, அவர்களைப் பார்த்து சிரித்தவன், திரும்பவும் அவளைப் பார்த்து நின்றான்..
‘இவன் எங்க இங்க...’ என்று பொன்னி நினைக்கும் போதே, “குட்டீஸ கூட்டிட்டு போக வந்தேன்..” என்றான்.....
தோற்றம் – 1
புலர்ந்தும் புலராத அதிகாலை பொழுது.. சூரியன் இப்போதுதான் துயில் எழுகிறான் என்பதற்கிணங்க வானம் ஒரு பக்கத்தில் வர்ணஜாலங்கள் காட்ட, மறுபக்கத்தில் சாம்பல் நிறமாகவும், கரிய நிறமாகவும் பல வர்ண மாற்றங்களை காட்டிக்கொண்டு இருந்தது..
சாலையின் இருபுறமும் இருந்த வயல் வெளிகள் இன்னமும் தன் பச்சை நிறத்தை காட்டாது, கதிரவனின் வெளிச்சத்தை எதிர்நோக்கிக் காத்திருக்க,...