Sunday, April 28, 2024

    Nishaptha Paashaigal

    “ந..நந்து... நீ என்ன சொல்லற... நமக்குள்ள பிரேக் அப்பா... உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணமா... என்ன கதை விடற... இதெல்லாம் நான் நம்ப மாட்டேன்... நீ வேற ஏதோ ஒரு காரணத்தை மனசுல வச்சுக்கிட்டு தான் என்கிட்டே இப்படிப் பேசற... உண்மையை சொல்லு...” அவன் அவள் தோளைப் பிடித்து உலுக்க கையைத் தட்டிவிட்டாள். “ஆமா... நான்...
    அத்தியாயம் – 21 நாட்கள் நகர்ந்திருக்க அன்று வெள்ளிக் கிழமை. தினமும் ஆதித்யன் நந்தினியை அலுவலகத்தில் கண்டாலும், இரண்டு நாளாய் அவளிடம் ஒரு விலகல் தெரிந்தது. அதை கவனித்த ஆதி மாலையில் அவளுடன் பேசுவதற்காய் அலுவலகம் முடிந்து காத்திருந்தான். HR டிபார்ட்மென்டில் பணிபுரியும் பாஸ்கர் இவனைக் கண்டதும் நின்றான். “ஹலோ பாஸ்... கிளம்பலயா, ஓ... நந்தினிக்கு வெயிட்டிங்கா இருக்கும்...”...

    Nishaptha Baashaigal 20

    அத்தியாயம் – 20 “ஹூம், நான் பெங்களூரு வந்து ரெண்டு நாளாச்சு... என்னோடவே ஊருக்கு கிளம்பின நந்தினி திரும்பி வராம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்காளோ...” யோசித்துக் கொண்டே காபியைக் கலந்து ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான் ஆதித்யன். சனிக்கிழமை அவனது அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான். நந்தினி இல்லாததால் அலுவலகம் செல்லவே...

    Nishaptha Baashaigal 19

    அத்தியாயம் – 19 “அம்மா, அண்ணா ஊருக்கு கிளம்பிட்டு இருக்கு...” குந்தவை அன்னையிடம் சொல்லிக் கொண்டே அருகில் அமர்ந்தாள். “ம்ம்... இங்க ஒரு பூகம்பத்தையே கிளப்பி விட்டுட்டு அவன் பாட்டுக்குக் கிளம்பறான்... உன் அப்பாவை நான் எப்படி சமாளிக்கப் போறேன் தெரியலை... இவங்க ரெண்டு பேர் பிடிவாதத்துக்கும் நடுவுல மாட்டிட்டு எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போலருக்கு...” புலம்பிக்...

    Nishaptha Paashaigal 18 1

    அத்தியாயம் – 18 “அண்ணா, இன்னைக்கு நீங்க என்னை ஸ்கூல்ல விடறீங்களா...” குந்தவை ஆவலுடன் ஆதித்யனிடம் கேட்க லாப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்தான். இரட்டைப் பின்னலுடன் யூனிபார்மில் குழந்தை முகம் மாறாமல் நின்ற தங்கையைக் கண்டவன், “ஓகே...” என்று லாப்டாப்பை மூடி வைக்க சகுந்தலா மகளிடம் கேட்டார். “அவனை எதுக்குடி டிஸ்டர்ப் பண்ணற... பாவம் என் புள்ள......

    Nishaptha Paashaigal 18 2

    “அம்மா, உங்களுக்கு என்னைப் பத்தி தெரியாதா... என் வாழ்க்கைல நடக்கற எதுவும் என் சுய விருப்பத்தோட நானே எடுக்கிற முடிவா இருக்கணும்னு நினைக்கறவன்... என் நம்பிக்கை இது வரைக்கும் எந்த விஷயத்திலும் பொய்த்துப் போனதில்லை... இந்தப் பொண்ணைத் தேர்வு பண்ண விஷயமும் அப்படித்தான்... அப்பாவோட வறட்டு பிடிவாதத்துக்கும், வீண் உருட்டல் மிரட்டலுக்கும் எல்லாம் அருள்...

    Nishaptha Paasahaigal 17 1

    அத்தியாயம் – 17 தியேட்டரே அமைதியாய் திரையில் தெரிந்த காட்சியில் கண்ணை விலக்காமல் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க வானதியால் மட்டும் நிம்மதியாய் அதில் கவனம் வைக்க முடியவில்லை. அவளுக்கு எதுவும் இடைஞ்சலாய் தோணக் கூடாதென்று அருளும் ஒதுக்கமாய் கைகளை வைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்திருந்தான். அவளது அருகாமையே அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. தேவையில்லாத ஆசை எதுவும் அவள்...

    Nishaptha Paasahaigal 17 2

    “இல்லமா, எனக்கு அதுல விருப்பமில்ல... MBA முடிச்சிட்டு ஒரு பெரிய கம்பெனில பெரிய போஸ்ட்ல வேலைக்கு சேரணும்னு தான் என்னோட லட்சியமே... தயவுசெய்து என்னை என் வழில போக விடுங்க...” பிடிவாதமாய் சொன்ன மகனை என்ன சொல்லி மாற்றுவது என்று அவருக்குப் புரியவில்லை. ஆதித்யா எப்போதும் அப்படித்தான்... அவனது விருப்பங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத சுபாவம்......

    Nishaptha Paashaigal 16 2

    “இல்லண்ணே... யாரையோ பார்க்கணும்னு வெளிய போயிருக்கான்... ஜூஸ் கொண்டு வரட்டுமா...” எனக் கேட்க, “இல்லம்மா, இப்பதானே சாப்பிட்டு வந்தேன்... கொஞ்சம் கழிச்சு தண்ணி மட்டும் போதும்...” என்றார். “ம்ம்... பிள்ளைகளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிருச்சு... சகுந்தலாவைக் கூட ஒரு கல்யாண பங்க்ஷன்ல பார்த்தது... அவங்களையும் அப்பப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்ல...” என்ற தேவிகாவிடம், “எங்கேம்மா...

    Nishaptha Paashaigal 16 1

    அத்தியாயம் – 16 அருளுக்கு சாயந்திரம் ஆனபோது காய்ச்சல் நன்றாகவே விட்டிருந்தது. ஹாலில் அமர்ந்திருந்தவனின் பார்வை வானதியைத் தேட அவள் கண்ணிலேயே சிக்கவில்லை. உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைந்த குந்தவை, “அண்ணா, வானதி கொடுத்த மருந்துல உன் பீவர் பயந்து ஓடிடுச்சா... ரெஸ்ட் எடுக்காம இங்க உக்கார்ந்திருக்க...” என்று கேட்க, “ம்ம்... போயிடுச்சு மா... எவ்ளோ நேரம் தான் படுக்கறது......

    Nishaptha Paashaigal 15 2

    “நான் இங்கே வந்த காரணம் என்ன... இப்ப சந்தோஷப்படற விஷயம் என்ன... இந்த சில நாள்ல எதுவும் மாறலியே... என் குடும்ப கஷ்டம் எல்லாம் அப்படியே தானே இருக்கு... ஆனா என் மனசுல எப்படி இந்த மாற்றம் வந்துச்சு... வேலைக்கு வந்த இடத்துல காதலைப் பத்தி யோசிக்க எனக்கு எப்படி தைரியம் வந்துச்சு... அதுவும்...

    Nishaptha Paashaigal 15

    அத்தியாயம் – 15 “அண்ணா, இன்னைக்கு ஆபீஸ்க்கு டொக்காவா... சரி... நல்லா ரெஸ்ட் எடு...” அருளிடம் சொல்லிவிட்டு கீழே வந்த  குந்தவை அன்னை எல்லாரின் ஜாதகத்தையும் வைக்கும் மஞ்சள் பையுடன் அறையிலிருந்து வெளியே வரவும் யோசனையாய் பார்த்தாள். “என்னம்மா, யாருக்கு ஜாதகம் பார்க்கப் போறிங்க... உன் முகத்தையே பார்த்து போரடிக்குதுன்னு மிஸ்டர் சுந்தரம் வேற பொண்ணு எதுவும்...

    Nishaptha Paashaigal 14 2

    வாசலிலேயே பரிதவிப்புடன் காத்திருந்த சகுந்தலா, அவளைக் கண்டதும், “அம்மாடி, வந்துட்டியா... எத்தனை தடவ உன் மொபைலுக்கு கூப்பிட்டேன்... சுவிட்ச் ஆப் னு வந்துச்சு... மழைல எப்படிமா வந்த... முதல்ல தலையைத் துவட்டு...” என்று டவலை நீட்டினார். அந்த அன்னையின் உண்மையான நேசத்தில் மனம் கலங்கியது அவளுக்கு. “மொபைல் சார்ஜ் இல்லாதே ஆப் ஆகி ஆன்ட்டி... ஆட்டோவில்...

    Nishaptha Paashaigal 14 1

    அத்தியாயம் – 14 கிளினிக் முன்னில் இருந்த டீக்கடையில் பைக்கை நிறுத்திய அருள் மொபைலை நோண்டியபடி வானதி வருகிறாளா எனப் பார்த்துக் கொண்டிருக்க முழுதாய் பத்து நிமிடம் கரைந்தபின் அவளது உருவம் பிரசன்னமானது. கைகடிகாரத்தைப் பார்த்தவள் பரபரப்புடன் தோளில் மாட்டிய பாகுடன் வேகமாய் சாலைக்கு வந்தாள். பருவநிலை மாற்றத்தால் மழையும், காற்றும் வெப்பநிலையை குளிர்மையாய் வைத்திருக்க நிலாவைத்...

    Nishaptha Paashaigal 13

    அத்தியாயம் – 13 வானதியின் உடல் முழுதும் அருள் மேல் அழுத்திக் கொண்டிருந்தாலும் கொஞ்சம் கூட பாரம் தோன்றாமல் பூ மூட்டையைத் தாங்குவது போல் சுகமாய் உணர்ந்த அருளின் உடலில் உணர்வு நரம்புகள் சிலிர்த்துக் கொள்ள ஆவலுடன் அவளை நோக்கினான். அவள் கண்ணிலோ இப்படி விழுந்துவிட்ட பதட்டம் தெரிந்தது. “ச..சோரி...” என்றபடி எழுந்து கொள்ள முயன்றவள் ஈரமுள்ள...

    Nishaptha Paashaigal 12 2

    “ஓ... ரியல்லி... கேள்க்கவே ரெம்ப சந்தோஷமாயிட்டுண்டு ஆன்ட்டி... நானும் சீக்கிரம் தமிழ் கத்த போறேன்...” அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தவர், “கத்தறது இல்ல, கத்துக்கப் போறேன்னு சொல்லு...” என்று திருத்தினார். “ஹாஹா... ம்ம்... கத்துக்க போறேன்...” என்றாள் நிதானமாக. “உங்களுக்கு தமிழ் ரொம்ப இஷ்டமா ஆன்ட்டி...” “பின்னே... நான் தமிழ்ல எம்ஏ ஆக்கும்... அவ்ளோ விருப்பமா தமிழைப் படிப்பேன்......

    Nishaptha Paashaigal 12 1

    அத்தியாயம் – 12 காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், பணிக்கு செல்வோரையும் வயிற்றில் அள்ளித் திணித்துக் கொண்டு சுமக்க முடியாமல் ஒருபக்கம் சரிந்தபடி நகர்ந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. கூட்டத்தில் நிற்கவே முடியாமல் மேலிருந்த கம்பியைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவஸ்தையுடன் நின்று கொண்டிருந்தாள் குந்தவை. தந்தையும் அண்ணனும் ஏதோ மீட்டிங் என்று நேரமாய்...

    Nishaptha Paashaigal 11

    அத்தியாயம் – 11 ஒருநாள் முழுமையான ஓய்விலும், வானதியின் சரியான கவனிப்பிலும் சகுந்தலாவின் உடல்நிலை சரியாகிவிட்டது. “அம்மா, என்னோட ஆதார் கார்டு காலேஜ்ல கேட்டாங்க… எடுத்து வைங்க, நாளைக்கு கொண்டு போறேன்…” மதிய உணவு முடிந்து ஓய்வில் இருக்கையில் மகள் சொன்னது நினைவு வரவே அதை வைத்திருந்த அலமாரியைத் திறந்தார் சகுந்தலா. சுந்தரம் அலைபேசியில் நோண்டிக் கொண்டு...

    Nishaptha Paashaigal 10 2

    எதற்கும் தந்தையை எதிர்த்துப் பேசாதவள், “என்னப்பா, வானதியை இப்படி சொல்லறீங்க... நம்ம மேல உள்ள அன்புல தான் அம்மாக்கு முடியலைன்னு அவ எல்லா வேலையும் செய்யுறா... அதுக்கு விலை சொல்லி அவளை அசிங்கப் படுத்தாதீங்க...” என்ற மகளை திகைப்புடன் நோக்கியவர், “ஓ... அப்ப எக்ஸ்ட்ரா மணி கொடுக்க வேண்டாம்னு சொல்லறியா... எனக்கு லாபம்தான்...” என்றபடி...

    Nishaptha Paashaigal 10 1

    அத்தியாயம் – 10 “பகவானே... நான் எந்தா காணுந்தது... இவன் குடிச்சிட்டு வந்திரிக்குனோ... ஆன்ட்டி கண்டால் எத்தர பீல் செய்யும்... நல்ல காலம் எல்லாரும் நேரத்தே உறங்கி...” வானதி யோசித்துக் கொண்டே தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி தோசையை ஊற்றினாள். குளித்து வேறு உடையில் வந்த அருள், அடுக்களை வாசலில் நின்று தொண்டையை செரும அவளுக்குத்...
    error: Content is protected !!