Monday, April 29, 2024

    Geethamaagumo Pallavi

    நம்ப முடியாமல் ஸ்வரனைப் பார்க்க.. அவனோ அழகாய் கண் சிமிட்டி புன்னகைத்தான்.  பின் பல்லவி சரணையே பார்க்க, அவனோ அவளைக் கண்ட மாத்திரம் நாற்புறமும் கயிற்றால் கட்டி இழுக்கப்பட இளஞ்சிறுத்தை போல் எந்தப் பக்கம் பாய்வதென்று தெரியாது சீறிக் கொண்டு நின்றிருந்தான். “சரண்..! நீ உள்ள போ ப்பா” என்று சுந்தரேஸ்வரன் கூற, பல்லவியை முறைத்துக் கொண்டே...

    Geethamaagumo Pallavi 3 1

    ஓம் இளம் பூரணனே போற்றி!! 3 தூக்கம்.. அதிலும் அதிகாலை வேளை தூக்கம் அள்ளித் தெளிக்கும் சுகமே அலாதி தான். ஆனால் அப்போது தான் அலாரம் கரடி வேலையைக் கரெக்ட்டாக பார்த்து வைக்கும். அப்படியில்லையெனில் யாராவது வந்து கதவைத் தட்டி கரடி வேலை பார்த்து வைப்பர். அனுவிற்கும் அப்படித்தான் யாரோ கரடி வேலை பார்த்தனர். “ச்சே.. யார்டா அது காலங்காத்தால தூங்க...
    ஓம் கொற்றவா போற்றி!! 20 மருத்துவமனை வளாகம்..! இதயத்துடிப்பு நொடிக்கு நொடி அதிகரிக்க.. அதன் ஆதீத அளவை அவன் இதயமே அவனிடம் இயம்பியது.  இதுவரை அவன் கண்டிறாத அளவில் பயமும் பதற்றமும் சூழ, சுழலில் சிக்கித் தவித்திருந்தான் ஆதீஸ்வரன். அச்சப் பேரலைகளில் இருந்து தன் அகத்தை அமைதிப்படுத்த முயன்று, பெரிதாய் தோற்றான்.  இதுநாள் வரை அவனை இன்புற வைத்தவள் தான் இப்போது...

    Geethamaagumo Pallavi 7 1

    ஓம் எழில் குமரனே போற்றி!! 7 பரபரப்பான காலை வேளை.. பல்லவிக்கு அல்ல, ஸ்வரனிற்கு. காலை டிஃபன், மதியத்திற்கான லன்ச் என அனைத்தையும் முடித்து அவளை அலுவலகம் கிளப்பி வைப்பதற்காக அவனைத் தொற்றிக் கொண்ட பரபரப்பு அது. அலுவலகத்திற்கு தயாராகி வந்தவளிடம் தட்டை நீட்டி, அவளை சாப்பிட அமர்த்தியவன், லன்ச்சை பாக்ஸில் உணவை அடைத்து விட்டு, தண்ணீரையும் பாட்டிலில் நிரப்பி...
    ஓம் ஓங்காரனே போற்றி!! 11 ஒன்பது மணி பத்து மணித்துளிகள்..!   கடிகாரம் காட்டிய நேரத்தில் குற்றவுணர்வு ஓங்க, ஒடுங்கிப்போய் நின்றிருந்தனர் ஸ்வரனும் பல்லவியும்.  சுந்தரேஸ்வரனை வீடு முழுக்கத் தேடிவிட்டனர். எங்கு சென்றார் என்று இதுவரையில் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. “என்னால தான் தாத்தா எங்கயோ போயிட்டாரு” என்று புலம்பிய பல்லவியிடம், “அனு..! நீ கொஞ்ச நேரம் பேசாம இரு. போதும் இவ்வளவு நேரம் பேசுனதே”...
    ஓம் கூடல் குமரா போற்றி!! 18 ஆதீஸ்வரனின் இல்லக்கதவுகள் இரண்டும் ஆளுக்கொருபுறம் விலகி நின்று உற்சாக வரவேற்பளித்தது..! அம்பிகா வலப்புறமும், சிவகாமி இடப்புறமுமாய் உள்ளே அடியெடுத்து வைக்க.. அதற்கு காரணமானவளோ இருவருக்கும் இடையில் இன்முகமாய் நின்றிருந்தாள். “வாங்க சிவகாமி..” என புன்னகை தவறாது தன் சிநேகிதியை வரவேற்ற சுந்தரேஸ்வரன், தன் மருமகளையும் வரவேற்கத் தவறவில்லை. அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வீட்டினுள்...

    Geethamaagumo Pallavi 8 2

    “ஆதி..! நான் எதாவது தப்பு பண்ணிருந்தா அயம் சாரி. எதுவா இருந்தாலும் என்கிட்டே டைரெக்டா சொல்லிருக்கலாம் தானே. அதுக்கு ஏன் சரியா பேசாம இருக்கீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்போவும் போல பேசுங்க ஆதி” எனத் திரும்ப லேசாய் அதிர்ந்தாள். அவன் எப்போது அங்கிருந்து சென்றான் எனத் தெரியவில்லை. தற்போது அவன் அங்கு இல்லை....
    இப்போதும் மனது வலிக்க நின்றிருந்தவரின் அருகே வந்த பல்லவி, “அத்தை நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க.. கொஞ்சம் நாள் போகட்டும் அவரே வந்து உங்ககிட்ட பேசுவாரு பாருங்க” என்று தேற்றினாள். “அவன் பேசலைனாலும் பரவாயில்ல மா. அவன் கூட இருந்து அவனை பார்த்துட்டு இருக்குறதே போதும் எனக்கு” என்றுவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.   அவர் கூறியதை தன்...
    ஓம் ஔவைக்கு அருளினோய் போற்றி!! 12 கூடத்தில் இருந்து அறுசுவை உணவின் மணம் கமழ்ந்து வந்தது..!  விரிக்கப்பட்டிருந்த தலை வாழை இலையின் ஒரு ஓரத்தில், உப்பும் நார்த்தங்காய் ஊறுகாயும் இடம்பெற்றிருக்க.. இனிப்பு வகையில் பல்லவி கைப்பட தயாரித்த கருப்பட்டி லட்டோடு, சிவகாமி வைத்த காய்கறி அவியலோடு, சுந்தரேஸ்வரனின் சாம்பார் மணந்து கொண்டிருக்க, உளுந்து வடையும் பாசிப்பருப்பு பாயசமும் ஸ்வரன்...
    “முழு பலத்தையும் உபயோகிங்க மா” “என் பலமே என் புருஷன் தான் டாக்டர் அவரை உள்ள விடுங்க ப்ளீஸ்” “அப்படி எல்லாம் அலோவ் பண்ண முடியாது மா” “ஏன் அன்னிக்கு எனக்கு ஊசி போடும் போது மட்டும் அலோவ் பண்ணுனீங்க” என்றதில் டாக்டர் ஒருநொடி அவள் முகத்தை உற்று நோக்க, “மா கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணுங்க” என்று செவிலிப்பெண் குரலை...

    Geethamagumo Pallavi 6 1

    ஓம் ஊழிநாயகனே போற்றி!! 6   பாவையவளின் பாதங்களிரண்டும் பாதையில் படிந்து போய்கிடந்த பாசத்தின் மீது பாசம் கொள்ள.. அடுத்த கணம் தரையில் விழுந்து கிடந்தாள் ஸ்வரனின் பல்லவி.  இடையில் தாங்கி வந்த பானையையும் போட்டு உடைத்திருந்தாள்.  “அனு..!!!” அவள் விழுந்த அடுத்த கணம் அவள் முன்பு வந்து நின்றவன் இமைப்பொழுதில் அவளை எழுப்பி நிறுத்தவும் செய்தான்.  இடையில் வாங்கிய அடியில் வந்த...
    ஓம் கதிர்காமனே போற்றி!! 13 இரண்டு வாரம் கடந்திருக்க, சரண் சிவகாமியோடு இயல்பாய் பேசிப் பழக ஆரம்பித்திருந்தான். தன் பாட்டி தன் குடும்பம் என தன் மனதில் ஆழமாய் பதியவைத்தவன், இனி அவரைப் பார்த்துக்கொள்வதும் தன் பொறுப்பு என்று எண்ணினான். பார்க்கிறானே அவனும், அவன் இரவெல்லாம் கண்விழித்துப் படிக்கும்போது துணைக்கு அவனருகில் தூங்காது விழித்திருக்கிறார் சிவகாமி. அதிகாலையில் அவன்...
    ஓம் கார்த்திகேயா போற்றி!! 14 அந்தி வான வண்ணப் பட்டுடுத்தி, அங்கத்தில் அழகிய ஆபரணங்கள் பூட்டி, அளவான ஒப்பனைகளோடு அலங்காரப் பூஷிதையாய் காட்சிகொடுத்தாள் சுரேகா. கல்யாணப் பெண்ணிற்கே உரிய கலையான முகத்தோடு, இன்னும் சற்று நேரத்தில் தன் சகலமும் ஆகப் போகிறவனின் கைப்பற்றி திருமணச் சடங்குகளில் ஈடுபட்டிருந்தாள்.  மணமக்கள் இருவரும் அன்யோன்யமாய் சடங்குகளில் ஈடுபட்டு, இனிமையாய் பேசி சிரித்து, அவர்களது...

    Geethamaagumo Pallavi 4 2

    மந்திரத்திற்கு உட்பட்டவள் போல் தலையை ஆட்டியபடி நகரச் சென்றவளை கைப்பிடித்து தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் காதோரக் கூந்தலை விலக்கி, தன் அதரங்களை அருகில் கொண்டுபோய்  “நாளைல இருந்து நானே உனக்கு எல்லாம் சொல்லித்தர்றேன் அனும்மா. நீ என் கிட்டேயே கத்துக்கோ சரியா.. யூட்யூப்ல கண்ட கண்ட விடியோஸ் எல்லாம் பார்த்து கெட்டுப் போயிடாத அனு....

    Geethamaagumo Pallavi 1

    உ ஓம் அமரர் பிரானே போற்றி!! தேவதைகள் வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் உஷத் காலமான பிரம்ம முகூர்த்த வேளை அது. விடியல் தொடா வானமும், மேனி தொடும் குளிர் காற்றும், இசைக்கப் படாத வானம்பாடிகளின் சங்கீதமும், ஆள் அரவம் அற்ற வீதிகளும் அது அதிகாலை நான்கு மணி முப்பது மணித்துளிகள் என்று அமைதியாய் அறிவித்தது.  தேனுபுரீஸ்வரர் ஆலயம்..!! பழமையும் புதுமையும்...

    Geethamaagumo Pallavi 17

    ஓம் குருபரனே போற்றி!! 17 அனுவிடம் வந்து சேர்ந்த அலைகள் செய்தியை மட்டும் அவளிடம் சேர்த்துச் செல்லவில்லை, அதிர்வையும் தான் சேர்த்துச் சென்றன.   பின் சுயம் சுற்றம் உணர்ந்து அவள் உடையவனை தேடி ஓடி வந்து சேர, பாவையின் பதற்றம் கணத்தில் கணவனிடத்தில் பற்றிப் படர்ந்தது.  “என்னாச்சு அனும்மா?”  வார்த்தை வரவில்லை வஞ்சியவளுக்கு. “ஹா.. ஹாஸ்பிடல் போகணும்..!!” அவள் தன் நிலை உரைக்காமலே இவனால்...

    Geethamaagumo Pallavi 8 1

    ஓம் ஏறு மயிலூர்ந்தாய் போற்றி!! 8 எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருக்க.. பல்லவிக்கு ஸ்வரனின் நினைவெல்லாம் இல்லவே இல்லை. அவளுக்காக காத்திருக்கும் கணவனின் நினைவு கூட தன் நெஞ்சில் நிலவிய கனத்தினால் வரவில்லை. அவளை சுமந்து வந்த பேருந்தில் அகத்தினில் கூடிய சுமையோடு தான் அவளது பயணம் தொடர்ந்தது. அப்பேருந்தின் ஓட்டுனரோ தன்னருகில் நின்றிருந்த பெண்ணை நொடிக்கு ஒருமுறை காண்பதும்...

    Geethamaagumo Pallavi 5 1

    ஓம் உமைபாலா போற்றி!! 5 அதிகாலையில் விழிப்பு வந்த ஸ்வரன் மெல்ல கண்விழித்துப் பார்த்தபோது அவனுக்கு வெகு அருகில் இருந்தது பல்லவியின் முகம்.  டெட்டி பியரைக் கட்டிப் பிடித்துத் தூங்குவதுபோல் அவனைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவனது அனுவின் செயலால் ஆனந்த அதிர்ச்சி கொண்டவனின் அதரங்கள் அழகாய் விரிய.. அவளிடம் அசைவு தெரிய.. உறங்குவதுபோல் அப்படியே அசையாது படுத்துக் கொண்டான்.  சிறிது...
    அடுத்த நாளே என்னை சிவகாமி அம்மா வீட்டுல விட்டுட்டு போய்ட்டாங்க. அதுதான் அவங்களை நான் கடைசியா பார்த்தது ஆதி. அடுத்தநாள் அம்மா இந்த உலகத்துல இல்லை. சூசைட் பண்ணிக்கிட்டாங்க. இன்னிக்கு தான் அது. இந்த நாள் வராம இருந்திருக்கலாம் எங்க வாழ்க்கைல” என்றதும் தான் கலையில் இருந்து அவள் ஒதுமாதிரி இருந்தது நினைவில் வந்தது. கேட்கும்...
    “இதெல்லாம் தெரிஞ்சதும் உடனே நான் உன்னை தேடி வந்தேன் சரண்” என்ற பல்லவியின் வார்த்தைகளில் அவள் புறம் திரும்பினான். “நீ டென்த் ஸ்டாண்டர்ட்ல இருந்த. இவ்வளவு பெரிய தம்பியான்னு ஆச்சர்யம் ஒருபுறம், உன்கூட சேர்ந்து ஓடி விளையாண்டு சண்டை போட்டு வளர முடியாம போனதை நினச்சு வருத்தம் ஒருபுறம். மறஞ்சிருந்து உன்னவே பார்த்துட்டு இருந்தேன். ஓடி...
    error: Content is protected !!