Avalae En Prabhaavam
அவளே என் பிரபாவம் 25
“என்ன..? என்ன சொல்றீங்க..? இதோ கிளம்பிட்டோம்..” என்று வசந்தா பரபரப்புடன் போன் பேசி வைத்தவர், மகளின் ரூமிற்கு ஓடி வந்தார்.
“மருமகளுக்கு பிரசவ வலி வந்துடுச்சு போல, சுபா அக்கா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு இருக்காங்களாம்..” என்று மகளிடமும், கணவரிடமும் சொன்னவர்,
“நாம கிளம்பலாமா..?” என்று கணவரை கேட்க, அவர் படுக்கையில் இருந்து...
அடுத்தது திருமண இன்விடேஷன்.. வடிவேலு ஒரு மாடல் பார்க்க, ப்ரேம் அவர் முதலில் தூக்கியடித்த இன்விடேஷன்தான் வேண்டும் என்றான். அதிலும் இரு பக்கத்திற்கும் அந்த இன்விடேஷன் தான் என்று பிடிவாதமாக நின்றான்.
"என்ன மது இதெல்லாம்..? என் பொண்ணு கல்யாணத்துக்கு இன்விடேஷன் செலக்ட் பண்ற உரிமை கூட எனக்கில்லையா..?" என்று எப்போதும் போல மகளிடம் ஆரம்பிக்க, ...
அவளே என் பிரபாவம் 12
“பொண்ணை அழைச்சிட்டு வாங்க..” என்ற ஐயரின் குரலை தொடர்ந்து மதுமித்ரா பூரண மணப்பெண் அலங்காரத்தில் மலர்ந்த முகத்துடன் மணமேடையை நோக்கி வர, ப்ரேமின் பார்வை அவள் மேல் அச்சடித்து நின்றது.
ப்ரேம் அவளுக்காக பார்த்து பார்த்து நெய்ய சொல்லியிருந்த மயில் கழுத்து வண்ண காஞ்சிப்பட்டும், வடிவேலு மகளுக்காக ஓடி ஓடி வாங்கியிருந்த...
“வேண்டாம்.. வேண்டாம்.. இறக்கி விடுங்க, நானே வரேன்..” என்று மித்ரா குதித்து இறங்கியவள், அடுத்த ஐந்து நிமிடத்தில் கணவனுடன் காரில் சென்று கொண்டிருந்தாள்.
“இப்போ எதுக்கு இவ்வளவு பாஸ்ட்டா போய்ட்டு இருக்கீங்க.. பங்க்ஷன் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு..” என்று கடிந்து கொண்டவளை கண்டு கொள்ளாமல் காரை விரட்டியவன், மகளின் ஸ்கூலில் சென்று...
“என்ன சொன்ன..? அப்பா உன்னோட சந்தோஷத்துக்காகதான் இந்த முடிவை எடுத்தார்ன்னு.. அதுபடி பார்த்தா இப்போ நீ ரொம்ப சந்தோஷமா இல்லை இருக்கணும்..” என்று அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து சொல்ல, ஓர் நொடி அமைதியாயனவள்,
“ண்ணா.. அப்பா ஒரு நாள் இல்லை ஒருநாள் கண்டிப்பா புரிஞ்சுப்பார், என்னோட சந்தோஷம் எங்க.. யார்கிட்ட இருக்குன்னு..” என்று உறுதியாக...
“இது உங்க சம்மந்தி வீடு மட்டுமில்லை, உங்க தங்கச்சி வீடும் தான், காபியை குடிங்க, என் மருமகளுக்கு நாள் வேற நெருங்குது, அதுக்கு என்ன செய்யன்னு நாம பார்க்கணும் இல்லை..” என்று சண்முகத்தின் விலகலை நொடியில் உடைத்து அவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராக இணைத்து பேசிய வசந்தாவை சண்முகம் மனம் நிறைந்து பார்த்தார்.
“நீ உண்மையாவே...
அவளே என் பிரபாவம் 8
“விடியற்காலை பிளைட்ல சென்னை வந்துடுவேன்.. காரை ஏர்போர்ட் அனுப்பிவிடுங்கம்மா, ட்ரைவர்கிட்ட நான் சொன்ன பணத்தையும் கொடுத்துவிடுங்க..” என்று ரவி வசந்தாவிடம் போன் செய்து சொல்ல,
“ஏன் ரவி இவ்வளவு பணம்..? ஏதாவது பிரச்சனையா..? நீ ஏன் சென்னை வர..? மது நல்லாத்தானே இருக்கா..?” என்று தொடர்ந்து கேள்விகள் கேட்ட அம்மாவிடம்,
“ம்மா.. எந்த...
“மித்ரா.. எல்லா விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் உண்டு, அதுல எது சரிங்கிறது அவங்க யோசிக்கிற கோணத்தை பொறுத்ததுதான், உன்னை பொறுத்தவரைக்கும் நான் என்னோட தன்மானத்தை, சுய மரியாதையை ப்ரூப் செய்ய தான் அப்படி செஞ்சேன்.. சரி.. ரொம்ப சரி.. ஏன் அதிலென்ன தப்பு..?”
“ஒருத்தர் மத்தவங்களை பார்த்து இன்னாரோட உழைப்புல தான் நீன்னு சொன்னா அவங்களுக்குள்ள...
அவளே என் பிரபாவம் 22
“என்ன..? என்ன சொல்றீங்க..?” என்று திவ்யா நம்பாமல் தன் காதில் இருந்த போனை எடுத்து பார்த்துவிட்டு மறுபடியும் கேட்க,
“உங்க வீட்டுக்கு வெளியேதான் இருக்கேன், வா..” என்று ரவி அதையே திரும்ப அழுத்தமாக மனைவியிடம் சொன்னான்.
“இதோ.. இதோ வரேன்..” என்று திவ்யா பரபரப்பாக சொல்லவும்,
“ஏய்.. வேகமா எல்லாம் வராத, பொறுமையாவே வா..”...
“கிளம்பு.. வீட்டுக்கு போலாம்..” என்று ப்ரேம் மனைவியை அழைக்க, வடிவேலுவும் மகளை கிளம்பு என்பது போலே பார்த்து கொண்டிருந்தார்.
“இன்னும் ஒரு மணி நேரம் தானே.. பார்த்திட்டே போறேன்..” என்று மது பொதுவாக சொன்னவள், வசந்தாவின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொள்ள, ப்ரேம் மனைவியின் முன் சென்று நின்றான்.
“கிளம்புன்னு சொல்றேன் இல்லை..” என்று அதட்டியவன், அவள்...
அவளே என் பிரபாவம் 21
“என்ன மது இப்படி செஞ்சுட்ட..?” என்று ரவியின் காரில் மதுவுடன் வந்த வசந்தா மகளிடம் மெலிதான கோபத்துடன் கேட்டார்.
“ஏன்ம்மா..? அவ என்ன செஞ்சா..?” என்று காரை ஓட்டி கொண்டிருந்த ரவி முன் கண்ணடி வழியே அம்மாவை பார்த்து கேட்டான்.
“என்ன ரவி இப்படி கேட்கிற..? மாப்பிள்ளை இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக...
அத்தியாயம் 1
“வடிவேலு.. இப்போ நீ என்னதான் சொல்ல வர..?” என்று அவரின் நண்பர் சோமு கேட்டார்.
“ஏன் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு தெரியலையா சோமு..? இந்த சம்மந்தம் சரிப்பட்டு வராது, முடிச்சுக்கலாம்ன்னு சொல்றேன்.. அவ்வளவுதான்..” என்று முடிவாக சொன்னார் வடிவேலு.
“நீ பேசறது நியாயமா வடிவேலு..? ரெண்டு ஜோடிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்ச பின்னாடி நீ...
அவளே என் பிரபாவம் FINAL 1
“இங்க என்ன நடக்குது..?” என்ற வடிவேலுவின் சத்தத்தில் வசந்தாவும், ரவியும் பதட்டத்துடன் திரும்ப, ப்ரேம் சாதாரணமாக திரும்பி பார்த்தான்.
“உன்னை தான் கேட்கிறேன் வசந்தா..? இங்க என்ன நடக்குது..?” என்று மனைவியின் கையில் இருக்கும் பணத்தை பார்த்தே வடிவேலு அதட்டி கேட்டார்.
“அது.. மாப்பிள்ளை.. பணம்..” என்று தன் கையில் இருந்த...
“வாங்கண்ணா..” என்று ஹாலில் அமர்ந்திருந்த குமாரை வரவேற்றவளை முகம் சுளித்து பார்த்த வைஜெயந்தி,
“முதல் நாளே பொழுது சாயற வரைக்கும் தூங்கினா விளங்குனா மாதிரிதான்.. என்ன செய்ய..? நான் வாங்கி வந்த வரம் அப்படி..?” என்று சத்தமாகவே முணுமுணுத்து கொண்டே உள்ளே செல்ல, குமார் சங்கடத்துடன் மொபைலை பார்த்தபடி குனிந்து கொண்டான்.
குமாரின் முன் வைஜெயந்தி இப்படி...
அவளே என் பிரபாவம் 5
“வாங்க.. வாங்க சம்மந்தி, வாங்க தம்பி.. உள்ள வாங்க..” என்று சட்டென சுதாரித்த வசந்தா இருவரையும் வீட்டினுள் அழைக்க, வடிவேலுவும் எந்தவிதமான முக பாவமும் இல்லாமல் “உள்ள வாங்க..” என்று சாதரணமாய் வரவேற்றார்.
“ம்ம்..” என்றபடி ப்ரேம் மட்டும் வீட்டினுள் வந்தவன், தன்னுடன் வராத தன் அம்மாவையும், தங்கையையும் திரும்பி அழுத்தமாக...
அவளே என் பிரபாவம் 26
“இங்க பாருங்க.. நம்ம வீட்டுக்கும் போக மாட்டேன்னு சொல்றீங்க.. எங்க வீட்லயும் இருக்க முடியாது, வேறென்னதான் செய்ய..?” என்று மது கணவனை பார்த்து கேட்டாள்.
“அதான் நான் இப்போ தங்கிட்டிருக்கிற வீடு இருக்கில்லை, அங்க போகலாம்..” என்று ப்ரேம் சொன்னான்.
“போகலாம் தான், ஆனா அங்க எங்க அப்பா தங்கமுடியாதே..” என்று உதட்டை...
“எவ்வளவு நேரம்டி உங்க அப்பாகிட்ட பேசுவ..?" என்று மனைவியிடம் கடுப்பாக கேட்க, அவனை கண்ணை சுருக்கி பார்த்தவள்,
“நீங்க ஏதாவது வேலை செய்யும் போது, இல்லை போன் பேசும் போது இப்படித்தான் நான் எங்க அப்பாகிட்ட பேசிட்டிருக்கேன்.. அதையும் பேசக்கூடாதுன்னா அப்பறம் எனக்கு கோவம் வந்துடும் பார்த்துக்கோங்க..” என்று மது தந்தையை விட்டு கொடுக்காமல் பேசினாள்.
“க்கும்.....
ஏனெனில் இப்போதெல்லாம் ப்ரேம் சொல்வதை தான் சண்முகம் கேட்கிறார் அது சின்ன விஷயமாக இருந்தாலும் சரி பெரிய விஷயமாக இருந்தாலும் சரி.
அவருக்கு மகன் அன்று பேசி சென்றது வெகுவாக மனதை பாதித்திருக்க, இனி வரும் நாட்களிலாவது மகனுக்கு ஏற்ற தந்தையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே அவரை மகனிடம் நெருங்க வைத்திருந்தது.
அப்படி இதுவும் கண்டிப்பாக...
“என் பொண்ணு என்ன இவங்க வீட்டு வேலைக்காரியா..?” என்று ப்ரேமை எரித்து பார்க்க, அவனோ முகம் சிவக்க அமர்ந்திருந்தான். அவனுக்கும் வைஜெயந்தி இப்படி செய்வது மிகுந்த ஆத்திரத்தை கொடுத்ததோடு வடிவேலுவின் பார்வை வேறு அவனை மேலும் சீண்டியது.
“ப்பா..” என்று ரவி ஏதோ கேட்டதற்கு கூட பதில் சொல்லாமல் மதுவையும், ப்ரேமையும் வைஜெயந்தியையுமே விடாமல் பார்த்து...
சோமு மூலம் விஷயம் கேள்விப்பட்டு வடிவேலுவே நேரே வந்துவிட்டார். அவரின் வரவை எதிர்பார்க்காமல் திகைத்தாலும் மரியாதையுடனே வரவேற்று உபசரித்தனர்.
“முதல்ல என்னை மன்னிச்சுடுங்க.. நான் என் பொண்ணை தரமாட்டேன்னு சொல்றது ரொம்ப தப்பு.. ஆனா என் நிலையையும் நீங்க புரிஞ்சுக்கணும், என் பொண்ணுன்னா எனக்கு உயிரு.. அவதான் எனக்கு எல்லாமே..”
“அதிர்ந்து கூட பேசமாட்டா, ரொம்ப அமைதி.....