Advertisement

அவளே என் பிரபாவம் 14
“என்ன நக்கலா..?”  என்று ‘ஹனிமூன் வந்தது  ப்ரீயா சண்டை போடவும், கவுந்து படுத்து தூங்கவும் தானா..?’ என்று மது கேட்டதை நக்கலாகவே நினைத்த ப்ரேம் அவளை அதட்ட,  உதட்டை சுழித்து பார்த்தவள், 
“நக்கலா..? சரிதான், இனி உங்ககிட்ட பேசி சல்லி காசுக்கு பிரயோஜனமில்லை.. நான் உண்மையாவே தூங்கபோறேன்..” என்று கடுப்பாக சொல்லி  படுத்துவிட, திகைத்து நின்றுவிட்ட ப்ரேம், 
“ஏய் என்னடி தூங்கற..? எனக்கு பசிக்குது..” என்றான் பாவமாக. ஒரு நாள் முழுவதும் சாப்பிடாத பசி அவனின் சோர்வான முகத்தில் நன்றாகவே  தெரிந்தது.
“பசிச்சா போய் சாப்பிடுங்க..  என்னை ஏன் கேட்கிறீங்க..?” என்று  திரும்பி படுத்திருந்தவள் அவனை பார்க்க திரும்பும் பொழுது அவளின் நுனிக்கால் சேலை மேலேறிவிட, 
“உன்னை  கேட்காம  வேற யாரை கேட்க..? நீதானே என் பொண்டாட்டி..” என்ற  ப்ரேமின் கண்களுக்கு பளீரென தெரிந்தது அவளின் பாதங்கள். 
 குளிர் என்பதால் கோட் அணிந்து உடல் முழுவதும் போர்த்தியிருந்தவளின் வெள்ளை பாதங்கள் மட்டும் பளீரென தெரிய, அதுவரை இருந்த மனநிலை மாறி முதல் முறையாக ஒரு ரசனை. 
“க்கும்.. நான் உங்க பொன்டாட்டிங்கிறது இப்போதான் உங்க கண்ணுக்கு தெரியுதா..? இவ்வளவு நேரம் என்ன சண்டை..? எவ்வளவு கோவம்..? எத்தனை பேச்சு..?” என்று அவனின் பக்கம் நன்றாக திரும்பி படுத்து நொடிக்க, ப்ரேமின் கண்களும் மனமும் நன்றாக விலகிவிட்ட அவளின் இரு முயல் குட்டி பாதத்தின் மேல் சிக்கி தவித்தது. 
“என்னடி வாய் ரொம்ப நீளுது..?” என்று  அதட்டலாக வந்து விழ வேண்டிய வார்த்தைகள்  மனைவியின் பாத அழகில் கிறங்கி  மயக்கத்தை தாங்கி ஒலித்தது. 
“பின்ன..?  முதல்ல தான் நான் மிஸ்டர் வடிவேலு மகள், அடக்க ஒடுக்கமா இருந்தேன், இப்போ நான் மிஸ்ஸர்ஸ் ப்ரேமாக்கும், அப்படித்தான் வாய் நீளும்.. உங்க பொண்டாட்டியாச்சே, உங்களை மாதிரி இருக்க வேணாமா..?” என்று சொல்ல, ப்ரேமிற்குள் கோவமும் மகிழ்ச்சியும் சரிபாதியாக  உண்டானது. 
“இப்போ எதுக்குடி அந்த மனுஷன் பேரை சொல்ற..? நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா ஆகாதே உனக்கு..?”  என்று எரிச்சலாக சொன்னவன், 
“முதல்ல  வந்து  சாப்பாடு போடு வா..”  என்று உரிமையாக.. மிக உரிமையாக  அவளின் கையை பற்றி இழுத்து செல்ல, மதுவும் கணவனின் பசி உணர்ந்து எழுந்து வந்தவள், ஹாட் பாக்சில் அவனுக்காக வாங்கி வைத்திருந்த உணவை டேபிளில் வைத்து  பரிமாற, ப்ரேமும் சாப்பிட அமர்ந்தவன்,  
“நீ சாப்பிட்டியா..?” என்று கேட்க, அவனை  நன்றாகவே முறைத்தவள், 
“ஒரு நாள் முழுசும் நல்லா கவுந்து படுத்து தூங்கிட்டு இப்போ வந்து ரொம்பத்தான் அக்கறை..” என்றாள் கடுப்புடன்.  
“ஏய் உண்மையாவே முடியலடி, செம தூக்கம், இந்த ரெண்டு நாளா ஜெட் லேக், டைம் டிஃப்ரண்ஸ் சுத்தமா தூங்க முடியல, அதுக்கு முன்னாடியும் ப்ராஜெக்ட் முடிச்சு கொடுக்கணுங்கிற  டென்க்ஷன்ல  ஒழுங்காவே தூங்கல..” என, மதுவிற்கும் அது தெரிந்திருந்ததால், 
“சரி.. சாப்பிடுங்க..” என்று பக்கத்திலே நின்றுகொண்டு அவனுக்கு தேவையானதை பார்த்து பரிமாற, ப்ரேமின் மனமோ அவளின் லேசான உரசலிலும், தன் கால்களை வருடும் அவளின் புடவை ஸ்பரிசத்திலும்  சிக்கி தவித்தது. 
“இருங்க..  ஹாட் வாட்டர் கொண்டு வரேன்..” என்று அங்கிருக்கும் கிச்சனுக்குள் சென்றவளின் பாத அழகையே  வெறித்தவனுக்கு, “இதை விட ஹாட்டா வேறென்ன இருக்க முடியும்..?” என்றே மனது உளறியது.
ரெட் கார்பெட்டில் வந்து கொண்டிருந்த அவளின் வெள்ளை பாதம்  இரண்டும் அசரடிக்கும் அழகை கொடுக்க, இரவு விளக்கின் வெளிச்சம் அவன் அணிவித்திருந்த  மெட்டியை ஜொலிக்க வைத்து அவனை சூடேற்றி கொண்டிருந்தது.
“ஹப்பா.. என்ன அழகு.. முடியலடி..” என்று மனதில் புலம்பியவனின் கண்கள் அவளின் பாத அழகை ஆழ்ந்து ரசிக்க, கைகள் அதை பற்ற தவிக்க, உதடுகள் அதை முழுவதும் உரச துடித்தது. 
மனைவியோ கணவனின் தவிப்பை புரிந்து கொள்ளாமல் கண்ணும் கருத்துமாக பரிமாறி கொண்டிருந்தவள், 
“மாமாக்கு பேசினேன், உங்களுக்கு கால் பண்ணயிருந்தார் போல, உங்க போன் ஸ்விட்ச் ஆப்ல இருக்குன்னு சொன்னார். எடுத்து சார்ஜ் போட்டிருக்கேன்..” என்றவாறே  எட்டி ப்ரேமின் பக்கத்தில் இருக்கும் சட்னியை  எடுக்க, ப்ரேமின் சுவாசம் சற்றே நின்று சுவாசித்தது. 
புது மணப்பெண்ணுக்கே உரித்தான மஞ்சள் கலந்த பூ வாசனையும், லேசான ஸ்பரிசமும்,  ப்ரேமிற்கு கிறக்கத்தை கொடுத்தது. 
“என்ன நிறுத்திட்டீங்க..? போதுமா..?” என்று சாப்பிடாமல் கையை எடுத்து விட்டிருந்தவனை பார்த்து மது கேட்க, 
“போதும்..” என்றவன், எழவும், அவனின் பாதம், அவளின் சில்லென்ற பாதத்தை உரசிவிட, ப்ரேமிற்குள் ஏதோ ஒன்று  பொங்கி அவனை நடுங்கவைத்தது. 
“டீ.. குடிக்கிறீங்களா..?” என்று கேட்ட மனைவிக்கு பதில் சொல்ல முடியாமல் நன்றாக மூச்சை இழுத்து விட்டவன், “சரி” எனும் விதமாக தலையாட்ட, அவள் கிச்சனுக்குள் சென்றாள். 
“ஓஹ் காட்.. எனக்கு என்ன பண்ணுது..? இவ என்ன என்னை இப்படி உயிரோட கொல்றா..? அந்த பாதம்..!! ஸ்ஸ்.. ரொம்ப படுத்தது.. இன்னொரு முறை என் கண் முன்னாடி வரட்டும் பிடிச்சு கடிச்சு வச்சிடுறேன்..” என்று செல்ல மோகத்தில் கடிந்தவன், தாளமுடியாமல் மனைவியின் பின்னே  கிச்சனுக்குள் சென்றான். 
“இதோ ஆச்சு..” என்று தன்னை பார்த்து சொன்னவளை  பார்த்தபடி மேடை மேல் சாய்ந்து நின்றவன், மனைவியை ஆழ்ந்து பார்க்க, இவனை பார்த்து மெலிதாக சிரித்தவள், 
“என்ன தூங்கி எழுந்து ரொம்ப பிரெஷா இருக்கீங்க போல..?” என்று ஒளிர்ந்த அவனின் முகத்தை பார்த்து கேட்டாள். 
“அப்படியா..?” என்றவனின் கைகள் அதற்கு  மேலும் தன்னால் முடியாது என்று மனைவியை இழுத்து தன் கைகளுக்குள் கொண்டு வர, மது கண்களை விரித்து கணவனை பார்த்தாள். 
“என்ன இப்படி ஒரு பார்வை..?” என்று கேட்டவாறே அவளை தூக்கி மேடை  மீது சாய்த்து உட்காரவைத்தவன், முதலில் பிடித்தது தன்னை பாடாய்படுத்திய அவளின் பாதத்தை தான். 
“என்ன..? என்ன பண்றீங்க..? விடுங்க..” என்று மது கூச்சத்தோடு தன் பாதத்தை இழுக்க, இன்னும் வலுவாக பிடித்தவன், அவளின் பாதம் முழுவதும் தன் கையால  வருடி அளந்தான். 
“ஸ்ஸ்.. என்ன இது..? விடுங்க.. அச்சோ கூசுது விடுங்க..” என்று அவனின் இதமான வருடலில் உண்டான கூச்சத்தில் துடித்த மனைவியை கண்டு கொள்ளாமல் அவளின்  பாதத்தை எடுத்து தன் நெஞ்சின்  மீது வைத்து தன் இதழை அவளின் நடு பாதத்தில் அழுத்தி பதித்தவன், மனைவியை தாபத்தோடு பார்த்து, 
“மித்ரா.. இது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதுடி.. முடியல.. கடிச்சு வச்சிரவா..?” என்று எல்லையில்லா பொங்கும் உணர்வினை அடக்க வழியில்லாது மனைவியிடமே கேட்க, மதுவின் கண்கள் மேலும் விரிந்தது. 
இது போன்ற ப்ரேமின் செயல்கள், பேச்சுக்கள் எல்லாம் புதிது. இதுவரை காதலனாக இருந்தவன், இன்று கணவனாக மாறியிருப்பது  புரிய, மதுவின் முகம் தானாகவே சிவந்துவிட, ப்ரேமிற்கு மேலும் கிறக்கம்.
“என்ன கடிச்சிடவா..?” என்றவனின் இதழ்கள் அவளின் ஒவ்வொரு பாத விரலில் உரசி கொண்டிருக்க மதுவின் உடலில் வெளிப்படையான நடுக்கம். 
மனைவியின் நடுக்கத்தை உணர்ந்து பாதத்தை ஓர் இதமான அழுத்து அழுத்தி விட்டவன், அவனை நெருங்கி மிக.. நெருங்கி நின்றான். 
“டீ.. டீ..” என்று பொங்கிய டீயை காட்டி திக்கிய மனைவியை, நெற்றி முட்டி நின்றவனின் கை பொங்கிய டீ அடுப்பை அணைத்துவிட்டாலும், அவர்களுக்குள் பொங்கும் உணர்வுகளின் தாக்கத்தை அணைக்க முடியாமல் தடுமாறித்தான் கொண்டிருந்தனர். 
தான் ஒட்டி நின்றதும் மனைவியின் உடலில் தெரிந்த அதிகமான நடுக்கத்தில் அவளின் கை  விரல்களோடு தன் கை விரல்களை இறுக்கி பிணைந்து அவளின் நடுக்கத்தை குறைக்க முயன்றான். 
ஆனால் அந்த பிணைப்பு நடுக்கத்தை குறைக்காமல்  மேலும்தான் உணர்ச்சிகளை கொந்தளிக்க வைக்க, இருவரின் சூடான மூச்சு காற்றும் மற்றவரை சுட்டு சென்றது. 
மனைவியின் நெற்றி முட்டி நின்ற ப்ரேமின் இதழ்கள் அவளின் நெற்றியில் அழுத்தி பதிய, மதுவின் கண்கள் தானாகவே மூடி கொண்டது. அடுத்து அவளின் மூடிய கண் இமைகளின் மேல் இதமாக இதழ் ஒற்றி எடுத்தவன், அவளின் கன்னத்தில் அதற்கும் சேர்த்து அழுத்தி புதைந்தான். 
அடுத்து மூக்கின் நுனியை முன் பற்களால் லேசாக கடித்தவன், “ஸ்ஸ்..” என்ற மனைவியின் உதட்டசைவை நிறுத்தும் பொருட்டு அவளின் சிவந்த நிற உதடுகளை  தன் உதடுகளால் முழுவதுமாக கவ்வி தனக்குள்ளே மறைத்து   தின்று, கடித்து முழுங்க முயற்சித்து கொண்டிருந்தான். 
நீண்ட நேரம் நீடித்த அவனின் முயற்சி தோல்வியை தழுவ, ஏற்று கொள்ள முடியாமல்,  மூச்சு வாங்க அமர்ந்திருந்த மனைவியை எழுப்பி அவளின்  குளிர் கால கோட்டை கழட்டி எறிய,  சேலை அணிந்திருந்தவளை குளிர் சட்டென தாக்க, உடல் குறுக்கியவள், கைகளை கட்டி கொள்ள முனைந்தாள். 
அதில் கணவனாக கோவம் கொண்டவன்,  “நான் எதுக்குடி இருக்கேன்..?”  என்று மோகத்தோடு அதட்டி அவளை இழுத்து தன் கை வளைவில் கொண்டு வந்து இறுக்கி அணைத்து கொண்டவனின் இதழ்கள் அவளின் கழுத்து வளைவில் சூடாக பதிந்தது. 
கணவனின் முரட்டு தனத்தில் இல்லற அச்சம் கொண்ட மது ஆதரவிற்கு அவனையே அணைத்து கொள்ள, மனைவியின் அணைப்பில் மேலும் வெடித்து சிதறியவன்,
அவளை ஒரு கையால அணைத்து கொண்டு மற்றொரு கையால் அவளின் முதுகு புறத்தில் தொங்கி கொண்டிருந்த நாட்டை இழுத்து அவிழ்த்தவனின் கை விரல்கள் அவளின் பின் வெற்றிடையில் ஊர்ந்து முன் வயிற்றில் வந்து அழுத்த,  மது நிற்கமுடியாமல் நடுக்கத்துடன் சாய, மனைவியை கைகளில் அள்ளிக்கொண்டு கட்டிலுக்கு சென்றான்.
“மித்ரா..” என்று அளவில்லா கிறக்கத்தில் தவித்தவாறே, அவனின் கோட்டையும் வேகமாக கழட்டி எறிந்தவன், அவள் மேலே முழுவதுமாக படுத்துவிட, மதுவால் மூச்சே விட முடியவில்லை. 
“ம்ஹா..” என்று மூச்சை இழுத்து விட்டவளின் நிலை உணர்ந்து அப்படியே அவளை தூக்கி தான் கீழே படுத்து அவளை தன் மேல் முழுவதுமாக போட்டு கொண்டவனின் மோக துடிப்பு, அவனின் கைகளின் அழுத்தமான தீண்டலிலும், இதழ்களின் தொடர் உரசலிலும் தெரிய, மதுவுக்குள்ளும் உணர்வுகள் பொங்கி அவளையும் அடித்து சென்றது. 
அவனின் தேடல்கள் மதுவின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இருக்க, அவளால் அவனை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அவள் மறுத்தாலே மேலும் பிடிவாதத்துடன் முரட்டு தனமாக தனக்கு வேண்டியதை எடுத்து கொள்ளும் கணவனின்  தாம்பத்திய போராட்டத்தை வெற்றி கொள்ள முடியமால் தோல்வியை தழுவியவள், கணவனை தன் நகத்தாலும், பற்களாலும் தண்டித்தாள். 
அவளின் தண்டனைகள்  கணவனை வலிக்க வைக்காமல் மேலும் தான் மோக கடலில் ஆவேசமாக தள்ளி எரிக்க, தாங்க முடியாமல் தன்னுள்ளே வெடித்து  சிதறும் மோக தீயில் மனைவியையும்  இழுத்து கொண்டான். 
ப்ரேமின் மோகதாகம் தீரவே தீராதா எனுமளவு மதுவை அணுவணுவாக தேடியவன், இறுதியில் தன்னாலே முடியாது எனும் நிலையில் தான் வெடித்து விழுந்தான் மனைவி மேலே..!! 
“ஸ்ஸ்..” என்று தன் நெஞ்சின்  மேல் படுத்து முனங்கிய மனைவியின் முனங்களில் அவளை தூக்கி  தன் முகம் அருகில் கொண்டு வந்தவன், 
“என்னடி ஆச்சு..?” என்று கேட்க, மது அவனை கொன்று விடும் கோவத்தோடு முறைத்தாள். 
“என்ன ஆச்சா..? எல்லாம் தான் ஆச்சு..? எங்கெங்க வலிக்குதுன்னு தெரியாம எல்லா இடமும் வலிக்குது..”, என்று சொல்ல, ப்ரேமின் முகத்தில் சங்கடம். 
“சாரிடி.. உண்மையாவே என்னை என்னால கண்ட்ரோல் பண்ணவே, முடியல, ரொம்ப வலிக்குதா.. நான் வேணும்னா தடவி விடவா..?” என்று அக்கறையாக கேட்டாலும், அவனின் கள்ளத்தனம் அவனின் கண்களிலே தெரிய, உஷரானவள், 
“தொட்ட கொன்னுடுவேன், இன்னும் ஒரு வாரத்துக்கு  என்கிட்டேயே வரக்கூடாது சொல்லிட்டேன்..” என்று மிரட்டியவள், வேகமாக கணவன் மீதிருந்த எழமுயல, எப்படி முடியும்..? அவன்தான் அவளை தன்னுள் முழுவதுமாக புதைத்திருந்தானே எப்படி நகர முடியும்..?”
“ம்ஹூம்.. வாய்ப்பே இல்லைடி.. நீ என்னை கொல்றதா இருந்தாலும் இப்படியே கொல்லு,  ஆனா என்னை விட்டு ஓட மட்டும் முடியாது..” என்று தீவிரமாக சொன்னவனை கண்ணை சுருக்கி பார்த்தவள்,
“இப்படியே எப்படி கொல்லமுடியும்..?” என்று  கோவத்தோடு நொடித்தாள். 
“அதான் உன் நகம் இருக்கு, இந்த பல் இருக்கு.. எங்க வேணும்னாலும் கீறிக்கோ, கடிச்சுக்கோ.. இது என்னை கொல்ற மாதிரி வேறந்த ஆயுதமும் என்னை கொல்ல முடியாது..” என்று மயக்கத்தோடு சொன்னவனின் கை விரல்கள் எங்கெங்கோ பயணித்து, மறுபடியும் அவளின் தண்டனைகளை பெற தயாரானான்.
உடலெது உடையெது தேடும் நிலையிது 
காதல் கடனிது அடையாது..!! 
இரவெது பகலெது  தேங்கும் சுகமிது 
சாகும் வரையிலும் முடியாது..!!
கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது 
காமப்பசி வரை அடங்காது..!! 
வலமெது இடமெது வாட்டும் கதையிது 
தீண்டும் வரையிலும் அடங்காது..!! 
நடுங்காலம் குளிர்வாடையில் 
அடங்கலாம் ஒரு ஆடையில்..!!
தயங்காலம் இடைவெளியில் 
உறங்கலாம் அதிகாலையில் 
கூடலில் ஊடலில்..!!! 
காணுகின்ற காதல் என்னிடம்..!! 
தேடுகின்ற யாவும் என்னிடம்..!!

Advertisement