புயல் காற்றில் விளக்காகவே
“என்னோட வாழ்க்கையில உன்னை தவிர என்னை குணமாக்கறது வேற எதுவும் இல்ல. நீ தான் என்னோட சிறந்த மருந்து. உன்னோட இடம் என் அருகில் தான், வா!”
அவனை நெருங்கி படுத்த ருஹானா “ஆனா எல்லா மருந்துக்கும் ஒரு பக்கவிளைவு இருக்குமே?” என புருவம் உயர்த்தி கேட்டாள்.
“உண்மை! உன்னோட பக்கவிளைவு, மயக்கம்.” அவளின் சிவந்த கன்னத்தை...
தொலைக்காட்சியில் பரபரப்பு செய்தியாக ஆர்யன் சுடப்பட்டு விழுந்து கிடக்கும் படம் காட்டப்பட, என்ன நடந்தது எனும் சரியான விவரம் தெரியாமல் வதந்திகள் பரவத் துவங்கியது.
மலையுச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டும் மரணத்தை தழுவாமல் பெரிய புதையலின் மீது சொகுசாக விழுந்த பரவச நிலை தான் கரீமாவிற்கு. எதிர்பாராமல் கிடைத்த இந்த அதிர்ஷ்டத்தை எண்ணி எண்ணி குதூகலித்தாள்.
அவளது அடியாளை...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 142
எதிர்கொள்ளப் போகும் மனைவியின் பிரிவை நினைத்து வருந்திக் கொண்டிருந்த அம்ஜத்தை ருஹானா தேற்றினாள். “அம்ஜத் அண்ணா! உங்களை பார்த்துக்க நாங்க இருக்கோமே, நீங்க ஏன் கவலைப்படறீங்க?”
“கரீமா தான் எனக்கு மருந்து தருவா. நான் என்ன சாப்பிடணும், எந்த உடை போடணும், எப்போ தூங்கணும்.. எல்லாம் அவ தான்...
ஓரமாக ஒரு மரத்தின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ஆர்யன் அருகே சென்ற ருஹானா அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் கையை பிடித்துக்கொண்டாள்.
“என்னோட குடும்பத்தை பாதுகாக்க என்னலாம் செஞ்சேன் நான்? அவங்கள என் குடும்பமா தானே நினைச்சிருந்தேன்? குடும்பத்துல ஒருத்தரே துரோகம் செய்யும்போது அதிகமா வலிக்குது.”
“சல்மா போல இல்ல, நெருக்கமா இருந்தாங்க, அண்ணனை சரிப்படுத்தினாங்க.. இப்போ...
போன் பேசி முடித்த ஆர்யன் உள்ளறையில் ருஹானாவின் ஊன்றுகோலின் சத்தம் கேட்க, எழுந்து உள்ளே சென்றான். அங்கே அவள் ஓய்வெடுக்காமல் துணிகளை அடுக்கி கொண்டிருப்பதை பார்த்து அவளை கடிந்து கொண்டான்.
ஊன்றுகோலை வாங்கி அவளுக்கு எட்டாத தூரம் வைத்த ஆர்யன், அவளை கட்டிலில் அமர வைத்தான். கண்மூடி உறங்கும்படி கண்டிப்புடன் அவளிடம் சொல்லிவிட்டு வெளியே வந்த...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 141
பிசியோதெரபிஸ்ட் மரியானா மேல் சந்தேகம் கொண்டு அவளை பற்றிய முன்தகவல்களை விசாரிக்கும்படி ரஷீத்திடம் அறிவுறுத்திய ஆர்யன் மனைவியை கவனிக்க அறைக்குள் வந்தான்.
படுக்கையில் படுத்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்த ருஹானா அவன் வாங்கி வந்திருந்த புதுசெருப்பை கொண்டு வந்து தருமாறு அவனிடம் கேட்க, ஆர்யன் அவளை கோபமாக பார்த்தான்.
“உடனே முறைக்காதீங்க!...
“ஜாஃபர்! பொறியாளர்களை வர சொல்லுங்க. உடனே ஒரு லிஃப்ட் அமைக்கணும். மாளிகை பூராவும் சக்கர நாற்காலி போறது போல மாத்தணும். ரொம்ப வேகமாக வேலைகள் நடக்கணும்” என்று ஆர்யன் கடகடவென உத்தரவுகள் பிறப்பிக்க, ஜாஃபர் குறித்துக்கொண்டான்.
ஜாஃபர் பணிந்து அகலவும், அங்கே வந்த கரீமா “எதுக்காக ஆர்யன் டியர்?” என்று வினவ, “ருஹானாவுக்காக!” என ஒற்றை...
“இந்த இடம் உனக்கு நினைவு இருக்கா?” மலையுச்சிக்கு அவளை கூட்டிவந்த ஆர்யன் கேட்க, கீழே தெரிந்த கடலை பார்த்த ருஹானா ஆமென தலை அசைத்தாள். மேலே நீலவானத்தில் நட்சத்திரங்கள் இன்னமும் தெரிய, கீழே கடல் அலைகள் மலையடிவாரத்தில் மோத, நடுவில் மரங்கள் செறிந்த மலை மீது இருவரும் நெருங்கி அமர்ந்திருக்க, அந்த சூழல் ரம்மியமாக...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 140
ரோம் நகரத்துக்கு தேனிலவுக்கு கிளம்பும்நேரம் ருஹானாவால் அடியெடுத்து வைக்கமுடியாமல் மடங்கி சரிய, அவளை பிடித்துக்கொண்ட ஆர்யன் பதறினான். “என்ன.. என்ன.. உனக்கு அடிபடலயே? உன்னால நடக்கமுடியலயா?”
“என்னால முடியல. எனக்கு நிற்கக்கூட முடியல. என் கால்ல உணர்வு இல்ல” என்று அழும் ருஹானாவை தூக்கி கட்டிலில் அமர வைத்த...
ஆர்யன் அவளின் முகம் வருடி நெற்றியில் முத்தமிட, அவளுக்கு அவளின் கேள்வியும் மறந்து போனது. முன்பெல்லாம் இவானை சாக்கு சொல்லி தப்பியோடும் ருஹானா இப்போது அவள் நினைத்தபடி நகரமுடியாமல் மாட்டிக்கொள்ள ஆர்யனுக்கு கொண்டாட்டமாகிப் போனது.
கெட்டதிலும் ஒரு நல்லதாக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டான். அவளை தழுவிக்கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் அவளின் வெட்கம் விலக்கி, அவளின்...
“போங்க, இந்த ராட்சசன் என் கனவுல வந்து என்னை பயமுறுத்துவான்” என்று அவள் பயப்பட, “உனக்காக எந்த ராட்சசனுக்கு எதிராவும் நான் சண்டை போட்டு உன்னை பாதுகாக்க மாட்டேனா?” என்று ஆர்யன் காதலாக கேட்க, ருஹானாவின் முகம் தெளிந்தது.
“உனக்காக என் கூடவே நான் போராடி வெற்றி பெற்றேனே!” என்று அவன் ஆழமாய் அவள் கண்களுக்குள்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 139
ருஹானா விரைவில் எழுந்து நடக்க ஊக்கம் தந்து ஆர்யன் ரகசிய திட்டம் ஒன்றை பற்றி கோடி காட்டினான். “நீங்க என்னன்னு சொன்னா நான் வேகமாக எழுந்து நடப்பேன் தானே?” என ருஹானா கெஞ்சி கேட்டும் சொல்ல மறுத்துவிட்டான்.
“நீ எல்லா பயிற்சிகளையும் சரியா செய். அப்புறம் சொல்றேன்.”
“ஒரு குறிப்பு...
“சித்தி! உங்களுக்கு அடிபட்டுடுச்சா?” என்று இவான் ருஹானாவை வேகமாக கட்டிப்பிடிக்க “மெதுவா, சிங்கப்பையா!” என்று ஆர்யன் அவனை பிடித்தான்.
“உங்களுக்கு வலிக்குதா?” என்று இவான் முத்தமிட, அவனுக்கு முத்தமிட்ட ருஹானா “நீ முத்தம் கொடுத்ததும் எல்லாம் சரியா போச்சி” என்று சொல்ல, ஆர்யனின் கண் அசைவில் நஸ்ரியா இவானை அழைத்துப்போக, ஜாஃபர் அம்ஜத்தை புது தொட்டிகள்...
“ஹேய்! சித்தப்பா கண்டுபிடிச்சிட்டாங்க” என்று சிரித்த இவான் “இப்போ நீங்க வாசனை பார்த்து என்னன்னு கண்டுபிடிக்கணும். தொடக்கூடாது. கண்ணை மூடுங்க” என்று மறுபடியும் ஆர்யனை கண்ணை மூடவைத்து ருஹானாவை அவன் அருகே இழுத்துவிட்டான்.
அவளை நெருங்கி வாசம் பிடித்த ஆர்யன் “எனக்கு சரியா தெரியலயே?” என்று சொல்ல, ருஹானாவின் கண்கள் கோபத்தால் பெரிதாகின.
ருஹானாவை ஆர்யன்புறம் தள்ளிய...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 138
நாளை இரவு தேனிலவு என்று சொல்லிவிட்டு ஆர்யன் ஆனந்தமாக உறங்கிவிட, ருஹானா தான் இம்முறை அவனை பார்த்தபடி நெடுநேரம் விழித்து கிடந்தாள்.
காலையிலும் இன்பக்கனவு கண்டு திடுக்கிட்டு துயில் களைந்தவள் தூங்கும் ஆர்யனை பார்த்துக்கொண்டே நுனிக்காலில் நடந்து சென்று மாற்றுடையை எடுக்க, அந்த சத்தத்தில் விழித்துக்கொண்ட ஆர்யன் அசையாமல்...
புத்தக அறையை சுத்தம் செய்துக்கொண்டிருந்த ஜாஃபரிடம் சென்ற ருஹானா ஆர்யனுக்கு பிடித்த இனிப்பு வகை ஏதாவது இருக்கிறதா என கேட்டாள்.
“பொதுவா ஆர்யன் சாருக்கு இனிப்புக்கள் பிடிக்காது. ஆனா அன்னைக்கு சாரா செய்த ஸ்ட்ராபெர்ரி கேக்கை மீதம் வைக்காம சாப்பிட்டு இருந்தார்” என அவன் சொல்லவும், அவள் நன்றி சொல்லி சமையலறைக்கு வந்தாள்.
மறுபடியும் ருஹானாவின் மீது...
“ஹல்லோ! காருக்கு கீழே பாம்பை நசுக்கிட்டே தானே?”
“கரீமா மேம்! என்னை நம்புங்க. என்னோட தவறு இல்ல. கடைசி வினாடில ஒரு கார் குறுக்க வந்துடுச்சி. நான் சந்துல காரை திருப்பிட்டேன் என்னால முடியல.”
“அடச்சே! சூனியக்கார பிசாசு தப்பிச்சிட்டாளா?”
----------
அர்ஸ்லான் மாளிகைக்குள் காரை நிறுத்தி இறங்கிய ஆர்யன், “உனக்கு நேரம் இருக்கா? நீ வீட்ல இல்லன்னு உன்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 137
படம் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ஆர்யனால் அப்படி இருக்க முடியுமா? புன்னகையுடன் படத்தில் ஆழ்ந்திருந்த ருஹானாவை பார்த்தான். அந்தோ பரிதாபம்! அவள் இவன் பக்கம் பார்வையை திருப்பவில்லை.
எட்டி அவளுக்கு பிடித்த வால்நட் சாக்லேட்டை எடுத்தான். அதை பிரித்து பாதி உறையை மடித்து அவளிடம் நீட்டினான். “சாக்லேட் உருகிடப்போகுது!”...
“எல்லா நிகழ்ச்சியும் ரத்து செய், ரஷீத்! அதைவிட அதிக முக்கியமான வேலை எனக்கு இருக்கு. ஆனால்லாம் இல்ல. ஒரு வாரம் எல்லாத்தையும் தள்ளிப் போடு” என்று சொல்லி அவன் போனை அடைக்க, அதை கேட்டுக்கொண்டே போர்வையை மடித்துக்கொண்டு இருந்த ருஹானா புன்னகைத்தாள்.
“அப்போ இன்னைக்கும் நீங்க ரெண்டுபேரும் வெளிய போறீங்களா?” அவள் சந்தேகமாக கேட்கவும் அவனுக்கு...
அப்போது அங்கே வந்த ஜாஃபர் ஒரு இனிப்பு பலகாரத்தை இருவர் முன்னும் வைத்துவிட்டு “சார்! நீங்க சொன்னபடி” என்று சொல்லி சென்றான்.
“சாப்பிட்டு பாரு!”
ஒரு கரண்டி வாயில் வைத்தவள் கண்களை மூடி அனுபவித்தாள். “அதே சுவை! எங்க அப்பா கூட போய் சாப்பிட்டது நினைவு வருது. ரொம்ப சந்தோசமா இருக்கு.”
“இனிய உணவு!”
“என்னோட அம்மா இதை சாப்பிட்டதும்...