VK
“அதுக்கில்லை சார்... இப்போ தான் நீங்களே மாற்றலாகி இங்கே வந்திருக்கீங்க, வந்தவுடனேயே சிக்கலில் மாட்டுறீங்களே…”
“சிக்கலுக்கும் பிரச்சனைகளுக்கும் பயந்தா இந்த வேலையில் இருப்பதற்கே தகுதியில்லை. அவனுங்க தனியா ஒரு App உருவாக்கி அதில் முன்பதிவு செய்து பண்டமாற்று முறையைப் போல தங்களுடைய காதலியையோ மனைவியையோ மாற்றிக்கிட்டு(swap) செஞ்சு உல்லாசமா இருக்கானுங்க. அந்த பெண்களும் எல்லாத்தையும் தெரிஞ்சி...
“அந்த ஆள் லேசுப்பட்டவன் மாதிரி தெரியல. இதை இப்படியே விடமாட்டானு நினைக்கிறன். ஏதாவது செய்யணும். இந்த விஷயத்துக்காகவே நான் கார்த்திக் சாரை போய் பார்க்கலாம்னு இருக்கேன். அவரும் நல்லமனிதரா தெரியுறார். இந்த வாய்ப்பை கெட்டியா பிடிச்சிகனும். நாளைக்கே நான் அவரை போய் பார்க்குறேன். இந்த மாதிரி நேரத்தில் நமக்கும் பெரிய பதவியில் இருக்குறவங்க ஆதரவு...
“இல்லை… நான் தைரியமானவ இல்லை… எனக்குத் தெரியும்… எனக்கு… என்னால இது முடியாது. இது சரியா வராது…” என்று இருவரையும் சுட்டிக்காட்டியவள் கேவலுடன் முகத்தை மூடிக்கொண்டு விம்ம, காரத்திக் எப்போதோ அவளை தன்னுடன் அணைத்திருந்தான்.
“எல்லாமே நல்லாத்தான் போயிட்டிருக்கு… நீ என்னை எவ்வளவு அழகா புரிஞ்சிக்கிற… எல்லாமே சரியா வரும்…” என்று அவன் சமாதானம் சொல்வதை...
*12*
“ராகவா இது எல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். இப்போ நீ போய் கதவை தட்டுறீயா இல்லை நானே போவா?” பார்வை மூடியிருக்கும் மீரா அறையின் புறம் பதிந்திருக்க, முகத்தில் அப்பட்டமான அதிருப்தி வெளிப்பட்டது.
“அப்பா… இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்போமே… தூங்குறாங்களோ என்னவோ!.” என்று ராகவ் சங்கடமாய் நெளிந்தான். அவனும் வந்ததிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்,...
*2*
“எப்போதும் செய்ற மாதிரி தான். இந்த விஷயம் தம்பிக்கு தெரியாமல் பார்த்துக்கணும். யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விடக்கூடாது. அதோட இ.சி.ஆரில் இருக்கும் நம் பங்களாக்களில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் ஒரு பங்களாவை சுத்தம் செய்யச்சொல். கொஞ்ச நாள் என்னோட கட்டுப்பாட்டில் அந்த பங்காளவில் இருக்கட்டும் பிறகு அவளை எங்கு அனுப்பனுமோ...
*14*
மீராவின் சீண்டல் பேச்சில் கொதித்தெழுந்து கண்ணாடி மேசையை சுக்கு நூறாக்கியவர் மேல்மூச்சு வாங்கி ரெளத்திரமாய் வெறியேறி நிற்க, மீரா நிற்கவில்லை.
“பார்த்தாருன்னு சொன்னதுக்கே இப்பிடின்னா அப்போ… மீதியை சொன்னா… உயிரை விட்டிருவீங்களோ!” என்று எள்ளல் கூடி எலக்காரமும் சேர்ந்து கொள்ள, சூறாவலியாய் பிரளயம் உண்டாக்க கிளம்பியிருப்பவளை நிறுத்த எவரும் முனையவில்லை.
“என்ன திண்ணக்கம் இருந்தா என்கிட்டேயே இப்படி...
விக்கிறதுக்கு இவ என்ன பொருளா? இவளும் உங்களை பெத்து வளர்த்த உங்கம்மா மாதிரி, உங்க கூட வாழ்ந்த என் அம்மா மாதிரி ஒரு பொண்ணு தானே. அது ஏன் உங்களுக்கு புரியல? ஒருவேலை நான் பையனா பிறந்ததாலதான் இவ்வளவு ஆணவம் பிடிச்சு ஆடுறீங்களா? உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படியெல்லாம் செய்வீங்களா…” உணர்ச்சி வேகத்தில்...
அவளின் உயர்ந்த குரலுக்கு போட்டியாய், “ஆமாம் வந்து தான் ஆகணும்.” என்று ஒலித்த கணீர் குரல் ராகவின் வருகையை தெரியப்படுத்தியது.
“டோன்ட் ட்ரை டூ பிளேக்மைல் மீ.” என்று முன்னெச்சரிக்கையாக மீண்டும் வீம்புப்பிடித்து வாதாடினாள் மீரா.
“ஐ கேன்.” என்றான் அவனும் திட்டவட்டமாய்.
“என்னதான் வேணும் உங்களுக்கு? என்னை ஏன் என் விருப்பப்படி இருக்கவிட மாட்டேங்குறீங்க?” என்று அவனுக்கு...
*13*
“என்ன சொன்னாங்க? வீட்டுல இருக்காரா இல்லையா?”
அலைபேசியில் பேசி முடித்துவிட்டு யோசனையுடன் புருவம் சுருக்கி நிற்பவனை நெருங்கியவள் அவன் தோள் தட்டி கேள்வி எழுப்ப,
“வெளியூர் போயிருக்காராம்… வர ஒருவாரம் ஆகுமாம்…” என்றான் நெற்றி சுருக்கி. இரவு வெகுநேரம் பேசிவிட்டு தாமதமாய் தூங்கியதன் விளைவாய் காலையும் தாமதமாய் எழுந்து குளித்து காலை உணவை மட்டுமே முடித்திருந்தனர். முடித்த...
“சரி நானே முதல்ல சொல்றேன்… இப்போ நான் சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல… இது உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம்… பட், இது என்னோடவே மடிஞ்சி போற விஷயமா இருக்கக்கூடாது. எனக்கு நியாயம் கிடைக்குதோ இல்லையோ நான் சொல்லப்போற விஷயத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறவங்க தப்பிக்க கூடாது. நான் என்னோட அனுமானத்தை சொல்றேன், நீங்க...
அதை வியப்புடன் கண்ட சுஜா, நமட்டு சிரிப்புடன், “அவங்க சாப்பிடல,”
அவள் சொல்வது புரியாமல் கண்களை சுருக்கியவள், “என்ன சொல்றீங்க அண்ணி?”
“வெளிய சாப்பிடுறதுக்கு முன்னாடி நீ கேட்ட கேள்விக்கான பதில்.” என்று புதிரிட்டுவிட்டு நகர்ந்துவிட, மீராவுக்கு சட்டென சுஜா என்ன சொல்லிவிட்டுச் சென்றால் என்று புரிந்தது.
மனம் கேளாமல் உடனேயே கட்டிலில் கிடத்தியிருந்த புது அலைபேசியை உயிர்ப்பித்தவள்...
“கார்த்தி கையை கீழிறக்கு முதல்ல... நீ எதுக்கு இந்த ஒன்னுமில்லாதவ முன்னாடி கைகூப்பி நிக்குற…” வஞ்சம் வெளிப்பட வரதனின் குணம் மெல்ல எட்டிப் பார்த்தது.
“என்ன ஒண்ணுமில்லாதவளா... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? இவ்வளவு பெரிய பையன் இருக்கான், அவனுக்கு கல்யாணம் பண்ணுகிற வயசில் நீ செய்யுற காரியம் தான் அநாகரீகமானது.” மகளை மட்டம் தட்டவும்...
மூன்றே அடிகளில் அவள் நின்றுகொண்டிருக்கும் இடத்தை அடைந்தவன் அவள் வழி விடுவாளா என்பது போல் பார்த்து நிற்க,
“என்ன?” என்று நெற்றி சுருக்கினாள் பெண்.
“நீ தானே என் துணி எல்லாம் எடுக்க சொன்ன. நீ நகர்ந்தால் தான் நான் உள்ளே போக முடியும்.” என்று அவன் கூற, சட்டென்று நகர்ந்து கொண்டாள் மீரா.
அவள் வழி விட்டதும்...
*4*
“வேலைபளு அதிகமா இருக்கும் போது வந்து தொந்தரவு செய்துட்டனா சார்?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தான் ராகவ்.
அவனை இன்முகத்தோடு வரவேற்ற கார்த்திக் கையில் இருந்த கோப்புகளை ஒதுங்க வைத்துவிட்டு, இருக்கையை சுட்டிக்காட்டி, “முதல்ல உட்காருங்க. எங்க துறையில் எப்போ எந்த வேலை வரும்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் பிரச்னைகள் வந்த...
*15*
குடி மூழ்கிப் போனது போன்று கன்னத்தில் கைவைத்து பாவமாய் அமர்ந்திருப்பவனை கடைக்கண் பார்வையால் நோட்டமிட்டபடி இதழுக்குள் விரியும் புன்னகையை முழுங்கிவிட்டு ஊறுகாய் மற்றும் பொடி வகைகள் என வரிசையாய் சில டப்பாக்களை பையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் மீரா.
“நாளைக்கு காலையில கிரேவி மாதிரி திக்கா வத்தகுழம்பு வச்சித்தரேன்னு அத்தை சொன்னாங்க. மறக்காம அதையும் பையில்...
விழியை மேலுயர்த்தி பின் தாழ்த்திய மீரா ஆசுவாசமாய் பெருமூச்சிழுத்து, “இப்படி கேட்டா எனக்கு பதில் சொல்லத் தெரியலை அண்ணி.”
“எனக்கும் உன்கிட்ட வேற எப்படி கேக்குறதுன்னு தெரியலை மீரா.”
வரதனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி திருமணம் செய்து கொண்டிருப்பவள் மனதில் கார்த்திக் என்ற தனிமனிதன் மேல் விருப்பு உடனே வரவில்லையென்றாலும் வெறுப்பு இல்லாமல் இருக்கிறதா என்று போட்டுவாங்கவே...
*11*
கண்ணுக்கெட்டிய திசையெங்கும் துரோகத்தால் சூழ்ந்து கரை இருக்கும் திசையறியா ஆழத்தில் மூழ்கி உயிரை தக்கவைத்துக் கொள்ள தத்தளிப்பவனாய் மீராவை பற்றிக்கொண்டவன் அவளை நகரவிடவே இல்லை. முயன்று மிரட்டி அவனை மெத்தையில் அமரச் சொன்னவள் அவன் மறுக்க மறுக்க கேட்காது தட்டில் பிரியாணி எடுத்துவந்து அவனிடம் நீட்டினாள்.
வார்த்தையின்றி இடவலமாய் தலையசைத்து மறுப்பு தெரிவித்தவன் வீடுவந்து சேர்ந்துவிட்ட...
மீராவோ அந்த வரதனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதை பற்றி சரமாரி கேள்வியெழுப்பி வசவுகளை வீசுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க ராகவ் கேட்ட கேள்வியில் சற்று நிதானித்து எந்தவித உணர்ச்சியும் காட்டாது சிலையென நிற்க, ராகவ் அவள் எதிரே வந்து அவள் முகத்தில் ஏதும் உணர்ச்சி தென்படுகிறதா என்று ஆராய்ந்தான்.
“வீட்டை விட்டு வெளியே போய் வெளியுலகோடு பழகணுங்கிற...
*7*
என்றும் இல்லாத பதட்டம் அவன் மனதை ஆட்டுவித்து ஆக்கிரமித்திருக்க, ஒரு இடத்தில் அமர முடியாமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தான் கார்த்திக். தன்னால் எதுவும் முடியும். தன்னால் குற்றம் செய்தவரையும் பாதிக்கப்பட்டவரையும் புரிந்து கொள்ள முடியம் என்ற அதீத நம்பிக்கை சுக்குநூறாகியிருந்தது மீராவின் உளைச்சலை நேராய் கண்டவுடன். அவள் கேட்டவுடனேயே அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்க...
“என்னடி அம்மு இது? அந்தாளு என்ன லூசா? அவர் மேல எப்படி அவரே புகார் கொடுக்க முடியும்?”
“அதுதானே… அவருக்கு என்ன இந்த அந்நியன் அம்பி மாதிரி மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்சார்டரா?” என்று சுஜாவும் புருவம் சுருக்க,
“அவர லூசுன்னு சொல்ற நம்மளத் தான் லூசாக்க இப்படி பண்ணியிருக்காரு… பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு....