VK
*2*
“எப்போதும் செய்ற மாதிரி தான். இந்த விஷயம் தம்பிக்கு தெரியாமல் பார்த்துக்கணும். யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விடக்கூடாது. அதோட இ.சி.ஆரில் இருக்கும் நம் பங்களாக்களில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் ஒரு பங்களாவை சுத்தம் செய்யச்சொல். கொஞ்ச நாள் என்னோட கட்டுப்பாட்டில் அந்த பங்காளவில் இருக்கட்டும் பிறகு அவளை எங்கு அனுப்பனுமோ...
*3*
“அம்மு..”
பதட்டத்துடன் மூச்சிரைக்க ஓடிவந்து நின்ற ராகவ் கார்த்திக் பிடியில் இருந்த மீராவை தன் மேல் சாய்த்துக் கொண்டு அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப, அவளோ சுயநினைவில் இருப்பதைவிட மயக்கத்தில் இருப்பதே மேல் என்று நினைத்தால்போலும் இமைகளை பிரிக்க மறுத்தாள்.
தன் படபடப்பில் கார்த்திக்கை துளியும் கண்டுகொள்ளாமல் அம்மு அம்முவென்று மீராவின் கன்னங்களை மீண்டும் மீண்டும் ராகவ்...
“பொய். எல்லாம் பொய். இன்னைக்கு நான் எந்த மறுப்பும் சொல்லக்கூடாதுன்னு இப்படி சொல்ற. எங்க உன் மனசை தொட்டு சொல்லு, நான் அழகா? நான் அழகா? இப்படி ஒருத்தியை நீ உன் பையனுக்கு பார்த்து கட்டிவைப்பீயா?” என்று மீரா சட்டென்று பிறந்த ஆவேசத்தில் எகிற, அம்புஜம் தன் முந்தியால் வாயை மூடி வெடித்து கிளம்பும்...
“அந்த ஆள் லேசுப்பட்டவன் மாதிரி தெரியல. இதை இப்படியே விடமாட்டானு நினைக்கிறன். ஏதாவது செய்யணும். இந்த விஷயத்துக்காகவே நான் கார்த்திக் சாரை போய் பார்க்கலாம்னு இருக்கேன். அவரும் நல்லமனிதரா தெரியுறார். இந்த வாய்ப்பை கெட்டியா பிடிச்சிகனும். நாளைக்கே நான் அவரை போய் பார்க்குறேன். இந்த மாதிரி நேரத்தில் நமக்கும் பெரிய பதவியில் இருக்குறவங்க ஆதரவு...
அழைப்புமணி ஒலிக்க, அம்புஜம் சென்று கதவை திறப்பாரா இல்லை தான் போக வேண்டுமா என்பது போல் சுஜா இரண்டு நொடிகள் காத்திருந்தவள், அம்புஜம் அடுப்பறையை விட்டு நகருவதாய் இல்லை என்று தெரிந்ததும் அவளே போய் கதவை திறக்க, ஒரு பெரிய அட்டைப்பெட்டியுடன் நின்றிருந்தவன் கதவு திறக்கப்படவும் அனுமதியின்றி உள்ளே நுழைந்து பெட்டியை நடு ஹாலில்...
*9*
“அம்மு சாப்பிட வா… சீக்கிரம் மாத்திரை போட்டுட்டு தூங்கனும்.” என்று அம்புஜம் வாயிலில் கணவன் விடைபெற்று சென்ற தடத்தையே பார்த்து நின்ற மகளை கூப்பிட, உள்ளே நுழையாமல் தலையை மட்டும் திருப்பியளோ கேள்வியாய், “அவங்க சாப்பிட்டாங்களா?”
மகள் யாரைக் கேட்கிறாள் என்று புரியாமல், “இங்கே தானே எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்காங்க, நீ யாரை கேட்குற?”...
“சரி நானே முதல்ல சொல்றேன்… இப்போ நான் சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல… இது உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம்… பட், இது என்னோடவே மடிஞ்சி போற விஷயமா இருக்கக்கூடாது. எனக்கு நியாயம் கிடைக்குதோ இல்லையோ நான் சொல்லப்போற விஷயத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறவங்க தப்பிக்க கூடாது. நான் என்னோட அனுமானத்தை சொல்றேன், நீங்க...
“கார்த்தி கையை கீழிறக்கு முதல்ல... நீ எதுக்கு இந்த ஒன்னுமில்லாதவ முன்னாடி கைகூப்பி நிக்குற…” வஞ்சம் வெளிப்பட வரதனின் குணம் மெல்ல எட்டிப் பார்த்தது.
“என்ன ஒண்ணுமில்லாதவளா... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? இவ்வளவு பெரிய பையன் இருக்கான், அவனுக்கு கல்யாணம் பண்ணுகிற வயசில் நீ செய்யுற காரியம் தான் அநாகரீகமானது.” மகளை மட்டம் தட்டவும்...
“டேக் கேர்.” என்று கார்த்திக்கின் வாய்மொழி ராகவிடம் உரையாட, விழி மீராவின் மீது இருந்தது. அவள் நிமிர்வாளா என்று பார்க்க மீரா அசைவதாய் இல்லை.
அதிருப்தி பெருமூச்சுடன் ராகவிடம் தலையாட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான் கார்த்திக்.
அந்த அறையை விட்டு வெளியேறியதும் அவன் அலைபேசி ரீங்காரமிட, எடுத்துப்பார்த்தால் அவன் தந்தை தான் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க அப்பா...”
“எங்க இருக்க கார்த்தி? நான்...
“என்னடி அம்மு இது? அந்தாளு என்ன லூசா? அவர் மேல எப்படி அவரே புகார் கொடுக்க முடியும்?”
“அதுதானே… அவருக்கு என்ன இந்த அந்நியன் அம்பி மாதிரி மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்சார்டரா?” என்று சுஜாவும் புருவம் சுருக்க,
“அவர லூசுன்னு சொல்ற நம்மளத் தான் லூசாக்க இப்படி பண்ணியிருக்காரு… பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு....
*4*
“வேலைபளு அதிகமா இருக்கும் போது வந்து தொந்தரவு செய்துட்டனா சார்?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தான் ராகவ்.
அவனை இன்முகத்தோடு வரவேற்ற கார்த்திக் கையில் இருந்த கோப்புகளை ஒதுங்க வைத்துவிட்டு, இருக்கையை சுட்டிக்காட்டி, “முதல்ல உட்காருங்க. எங்க துறையில் எப்போ எந்த வேலை வரும்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் பிரச்னைகள் வந்த...
“அவங்க ஒய்வு எடுக்கட்டும். நான் அப்புறம் வரேன். ராகவ் வந்ததும் எனக்கு போன் செய்யச் சொல்லுங்க.” என்று கார்த்திக் பொதுவாய் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்று நகர, விழிகள் மீராவிடமே நிலை பெற்றிருந்தது.
மனமே இல்லாமல் கிளம்பியவன் ஷூ மாட்டும் போது சுஜா வேகமாக அவனிடம் வந்தாள்.
“உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” என்று தயங்கி அவன் முகம் பார்க்க,
அவளின்...
“அர்ச்.. அர்ச்சனா என்ன பண்றான்னு தெரியுமா? என்… என்கூட ப்ராஜெக்ட் பண்ணாலே அவ…”
இதுக்குத்தான் இவ்வளவு பதட்டமா என்பது போல நிதானமாய் பார்த்த நீலிமா, “அவளுக்கு மும்பைல ஏதோவொரு டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை கிடைச்சு ஆள் எஸ்கேப். அங்கேயே செட்டில் ஆகிட்டான்னு நினைக்குறேன், உனக்குத்தான் தெரியுமே நம்ம பீல்டில் வெளிப்படையா எதையும் ஷேர் பண்ண முடியாதுன்னு,...
“இல்லை… நான் தைரியமானவ இல்லை… எனக்குத் தெரியும்… எனக்கு… என்னால இது முடியாது. இது சரியா வராது…” என்று இருவரையும் சுட்டிக்காட்டியவள் கேவலுடன் முகத்தை மூடிக்கொண்டு விம்ம, காரத்திக் எப்போதோ அவளை தன்னுடன் அணைத்திருந்தான்.
“எல்லாமே நல்லாத்தான் போயிட்டிருக்கு… நீ என்னை எவ்வளவு அழகா புரிஞ்சிக்கிற… எல்லாமே சரியா வரும்…” என்று அவன் சமாதானம் சொல்வதை...
“குறிப்பிட்டு இல்லாம பொதுவா எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை அந்தந்த வயதினருக்கு ஏற்றார் போல கொடுக்கணும் மேம். அது அவங்களோட பாதுகாப்பு சம்மந்தமாக இருந்தால் இன்னும் சிறப்பு. இக்கட்டு வரும் நேரத்தில் சமுதாயத்திற்கு பயந்து ஒடுங்கி தன் மேல் நடக்கும் வன்முறையை ஏற்றுக்கொள்ளாமல் அதை எப்படி சாமர்த்தியமாய் முறியடித்து நிமிர்ந்து வரவேண்டும்,...
*14*
மீராவின் சீண்டல் பேச்சில் கொதித்தெழுந்து கண்ணாடி மேசையை சுக்கு நூறாக்கியவர் மேல்மூச்சு வாங்கி ரெளத்திரமாய் வெறியேறி நிற்க, மீரா நிற்கவில்லை.
“பார்த்தாருன்னு சொன்னதுக்கே இப்பிடின்னா அப்போ… மீதியை சொன்னா… உயிரை விட்டிருவீங்களோ!” என்று எள்ளல் கூடி எலக்காரமும் சேர்ந்து கொள்ள, சூறாவலியாய் பிரளயம் உண்டாக்க கிளம்பியிருப்பவளை நிறுத்த எவரும் முனையவில்லை.
“என்ன திண்ணக்கம் இருந்தா என்கிட்டேயே இப்படி...
விழியை மேலுயர்த்தி பின் தாழ்த்திய மீரா ஆசுவாசமாய் பெருமூச்சிழுத்து, “இப்படி கேட்டா எனக்கு பதில் சொல்லத் தெரியலை அண்ணி.”
“எனக்கும் உன்கிட்ட வேற எப்படி கேக்குறதுன்னு தெரியலை மீரா.”
வரதனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி திருமணம் செய்து கொண்டிருப்பவள் மனதில் கார்த்திக் என்ற தனிமனிதன் மேல் விருப்பு உடனே வரவில்லையென்றாலும் வெறுப்பு இல்லாமல் இருக்கிறதா என்று போட்டுவாங்கவே...
“இருக்கு. ஆனால் நான் யூஸ் பண்ண மாட்டேன். மெஷினில் போட்டால் துணி எல்லாம் சீக்கிரம் கிழிஞ்சிடும். டிசைன்ஸ் போயிடும்.” என்று திரும்பாமல் ஏதோ சாக்கு சொன்னாள் அவனிடம்.
“ஆமாமா உன் டிரெஸ்ல தான் எவ்வளவு டிசைன்ஸ் இருக்கு…” என்று கேலியாய் அவள் உடுத்தியிருக்கும் ப்லைன் உடையையும் காய வைக்கும் உடையையும் சுட்டிக்காட்டி பேச, முறைப்பதை தவிர...
*13*
“என்ன சொன்னாங்க? வீட்டுல இருக்காரா இல்லையா?”
அலைபேசியில் பேசி முடித்துவிட்டு யோசனையுடன் புருவம் சுருக்கி நிற்பவனை நெருங்கியவள் அவன் தோள் தட்டி கேள்வி எழுப்ப,
“வெளியூர் போயிருக்காராம்… வர ஒருவாரம் ஆகுமாம்…” என்றான் நெற்றி சுருக்கி. இரவு வெகுநேரம் பேசிவிட்டு தாமதமாய் தூங்கியதன் விளைவாய் காலையும் தாமதமாய் எழுந்து குளித்து காலை உணவை மட்டுமே முடித்திருந்தனர். முடித்த...
அவர் செல்வதையே பார்த்த மீரா தோள்களை குலுக்கி விட்டு பார்வையை திசையெட்டுக்கும் விரட்டினாள். அவள் கண்ணில் மலை தீபத்தை எதிர்பார்த்தபடி பார்வையை உயர்த்தி கம்பீரமாய் நிற்கும் மலை மீது பதித்து காத்திருக்கும் பல தரப்பட்ட மக்கள் கூட்டம் தென்பட, மனம் நிர்மலமாய் இருந்தது.
“மேடம்… நாங்க இங்க லோக்கல் சேனல்லேந்து வர்றோம்… பேசலாமா?” என்று ஒரு...