Saththamindri Muththamidu
அத்தியாயம் பன்னிரண்டு :
நன்கு உறங்கிவிட்டவளுக்கு அர்த்த ராத்திரியில் விழிப்பு வர, விழித்து பார்த்தவளுக்கு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த திரு தான் கண்களில் பட்டான்.
வேகமாக எழுந்து அமர, “எதுக்கு இப்படி வேகமா எழற, மெதுவா பார்த்து எழணும்” என்று அதட்டினான்.
“ம்ம்” என்பது போல தலையாட்டியவள், எழுந்து வெளியே சென்று மகளை பார்த்து வந்து மீண்டும் படுக்கையில்...
அத்தியாயம் ஆறு :
காலையில் துளசி விழித்த போது அவள் மீனாட்சியின் அருகில் படுத்திருந்தாள். அவளாக இங்கே வரவில்லை. அனேகமாக களைப்பில் உறங்கியிருக்கக் கூடும் என்று அனுமானித்தவள், அவன் தூக்கி இங்கே வந்து படுக்க வைத்திருப்பான் என்பதே அவளின் காலையை வண்ணமயமாக்கியது.
நேரம் ஏழு மணியை தொட்டு இருந்தது. இவ்வளவு நேரம் அவள் உறங்குவது என்பது அரிது....
அன்று நாள் முழுவதுமே வலி விட்டு விட்டு எடுக்க, காலையில் பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப் பட்டவள் மாலை வரை அங்கேயே தான் இருந்தாள். மீரா ரத்னா மதியம் போல வந்து விட்டனர்.
அகிலாண்டேஸ்வரிக்கு துளசியை அவளின் அம்மாவிடம் ஒப்படைத்த பிறகு தான் சற்று ஆசுவாசமாகியது.
“நான் அம்மாவை பார்க்கணும்” என்று மீனாக்ஷி வேறு படுத்தி எடுக்க,
அவளை...
திரு ரூமில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தான் , முகம் தலையணையில் முழுதாய் புதைந்து இருந்தது.
துளசி மெதுவாய் அவனை தொட அவனிடம் அசைவில்லை. விழித்து தான் இருக்கிறான் என்று தெரியும்.
“எழுந்துருங்க”
“என்னை கொஞ்சம் தனியா விடு, தூரப் போ, தொந்தரவு பண்ணாதே!” என்ற குரல் மட்டும் கேட்டது , சிறிது தலையை உயர்த்தி அதனை சொன்னவன் அவளின்...
Tamil Novel
வேகமாக சட்னி ஆட்டி, தோசைகளை வார்த்து டைனிங் டேபிளில் வைக்க, மேகநாதன் வந்தவர் உண்டு முடிக்க, பின்னே திருவும் வந்தவன் உண்டு முடிக்க,
பின்பு அடுப்பை அணைத்து, “இப்போ என்னவோ செஞ்சிக்கோ” என்று துளசி நகரப் போக,
‘உங்களுக்குக்கா” என்று தனம் கேட்க, “இல்லை பசிக்கலை” என்று சொல்லி நகர்ந்தாள்.
அதுவரையிலும் தனம் துளசியின் முகத்தை தான்...
அவன் அமர்ந்த ஓரிரு நிமிடங்களுக்கு எல்லாம் அவனின் சித்தப்பாக்கள் வந்து விட, கூட அவனின் அப்பா, வெங்கடேஷ், அம்மாவும் இருந்தனர். அவர்களிடம் இடம் வாங்குவதை பற்றி கூறினான்.
ஊரின் மிக முக்கிய இடத்தில இருப்பதால் அதுவும் தொகையும் மிக அதிகம் என்பதால் “வாங்கி என்ன செய்ய போற திரு அங்கே” என்ற கேள்வி எழ,
சமைத்துக்...
அத்தியாயம் எட்டு :
திருவின் முகத்தினில் ஒரு கோபமும் ஒரு இறுக்கமும் எப்போதும் தங்கி விட்டது. துளசியுமே முகத்தை தூக்கி வைத்து சுற்ற, அவர்களின் வீடே களையிழந்துவிட்டது. மேகநாதனிற்கும் சற்று உடல் நலம் குறைய, அது இன்னும் சூழலை கணப்படுத்தியது.
எப்போதும் போல வேலைகளை துளசி பார்த்துக் கொண்டாலும், செய்து கொண்டாலும் திருவிடம் ஒரு பாராமுகத்தை காண்பிக்க...
“எதுக்கு துளசி இவ்வளவு பிடிவாதம்” என்று அகிலாண்டேஸ்வரி பேச,
“அதுதானே எப்பவும் வாங்கற பேச்சு தானே, இப்போ மட்டும் புதுசா என்ன வீராப்பு!” என்று ஷோபனா வெளியே வந்து வாயை விட்டாள்.
“நீ உள்ள போ முதல்ல” என்று அகிலாண்டேஸ்வரி பொறுக்க முடியாமல் அதட்டினர்.
ஃபோன் பேசி வந்த திருவிடம் அவனின் முகம் பார்த்தாள். அவன் கோபமாக எங்கோ...
அத்தியாயம் ஐந்து :
ஆம்! திருவை இன்னும் அது துரத்துகின்றது. அவனின் கடந்த கால காதல். இப்போது நிச்சயம் அவனுக்கு காதல் இல்லை. ஆனால் குற்ற உணர்ச்சி அதிகம் இருக்கிறது.
மேகநாதனை பார்த்து திருவிற்கு தான் பயம். அவளுக்கு இல்லை, ஷெரினா, அவளின் பெயர். அவளுடைய குடும்பத்தில் அப்பா, அவள், தம்பி மட்டுமே!
மேகநாதன் மூன்று பேரையும்...
“வெச்சிடாதடி” என்று கத்தியவன் கைகளில் இருந்தது கேலண்டர். நாளை நல்ல நாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்
“வைக்காம என்ன பண்றதாம்” என்று திருவைப் போல முறைப்பாய் பேசினாள்.
“என்ன பண்ணவா? நான் பேசறதை கேளு!”
“கேட்கற மாதிரியா பேசறீங்க” என சலிக்க,
“ஏன்? ஏன் கேட்க முடியாது?” என்று எகிறினான்.
“ரகசியம் எல்லாம் இப்படி பப்ளிக்கா பேசுவாங்களா?”
“நீயும் நானும் பேசினா அது...
பதினோரு மணிவாக்கில் திரு வீட்டிற்கு அழைத்தான். அதுவரையிலும் அவனை அவனே அவனின் அலுவலக அறையில் அமர்ந்து திட்டிக் கொண்டிருந்தான்.
“ஒரு பொண்ணை இவ்வளவு டார்ச்சர் பண்ணுவியா நீ, அவளா இருக்கவும் இருக்குறா! வேறா யாரா இருந்தாலும் உன்னோட குப்பை கொட்ட முடியாது!” என்று. உறங்குகிறாள் என்று சொல்லப் பட, அவனால் அங்கே இருக்க முடியவில்லை. என்னவோ...
அத்தியாயம் பதினான்கு :
காலையில் துளசி எழுந்த போது திரு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சில நொடிகள் பார்த்திருந்ததவள் மகளை தேடிச் சென்றாள்.
பின்பு மகளுக்கு தேவையானதை எல்லாம் கவனித்து அவளும் குளித்து வந்த போது நேரம் ஒன்பதை நெருங்கியிருந்தது.
அகிலாண்டேஸ்வரி துளசியிடம், “நான் சொன்னதை கேட்டியா?” என்றார்.
விழித்தாள், அது அவளின் ஞாபகத்திலேயே இல்லை, அவளின் முகத்தை பார்த்தே...
அத்தியாயம் பதிமூன்று :
“மா மா” என்று மீனாக்ஷி எதற்கெடுத்தாலும் அம்மாவை அழைக்க,
“என்ன மீனா, இத்தனை பேர் இருக்காங்க நான் அவங்களை கவனிக்க வேண்டாமா, நீ எதுன்னாலும் உன் அத்தைங்களை கூப்பிடு” என்று மகளை உறவோடு ஒட்டி வைக்க முயற்சி எடுத்தாள்.
திரு மில்லிற்கு சென்றவன் மதிய உணவிற்கு இன்னும் வரவில்லை. அப்படியே மாறிவிடுவான் என்று துளசிக்கு...
அத்தியாயம் பதினாறு :
திரு அவளின் கை பிடித்து சில அடிகள் நடக்க வைக்க, தெளிந்தவள் அவனிடமிருந்து கைகளை விலக்கிக் கொண்டு அவளாக நடக்க ஆரம்பிக்க, பார்வை மகளின் புறம் தானாத் திரும்பியது.
அடுத்த நிமிடம் உணர்வுக்கு வந்து விட்டாள். ஆம்! மகள் தான் அப்படி அழுது கொண்டிருந்தாளே, மகளை நோக்கி அப்படி வேகமாகச் செல்ல,
எதற்கு இப்படி...
அத்தியாயம் பதினேழு :
சீரும் சிறப்புமாய், யாரும் சீர் செய்யாமலேயே மீனாக்ஷியின் விஷேஷம் எந்த வித பிரச்சனைகளுமின்றி சௌக்கியமாய் நடந்து முடிந்தது. கணவனும் மனைவியும் அகத்தின் அழகை முகத்தினில் காண்பிக்காமல் இருப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பதால் விஷேஷம் நன்றாகவே நடந்தது.
விருந்தினர்களை உபசரிப்பதிலேயே நேரம் சென்று விட்டது. வேறு எதுவும் ஞாபகத்திலேயே இல்லை. அதுவும் ஏன் சீர்...
அத்தியாயம் பதினைந்து :
துளசி உள்ளே வந்து அவனுக்கு காஃபி கொடுக்கும் வரை கிட்ட தட்ட கால் மணிநேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.
அம்மா சொன்ன “கொஞ்சுவாங்களா” என்ற வார்த்தையை மனதிற்குள் அசை போட்டபடி, பல சமயம் தோன்றியிருந்த ஏக்கம் அவனுள் அப்போது ஞாபகம் வந்து அவனை அசைத்து இருந்தது.
அவள் வந்து காஃபி கொடுக்கவும் ஒரு முறைப்புடன்...
அமைதியாய் அமர்ந்திருந்தாள். “அதுக்காக அவளோட பேசிட்டு இருந்தேன், தொடர்புள இருந்தேன் நினைக்காதே, அப்படி எதுவுமே இல்லை. அவங்கப்பா தம்பி மூலமா அவளுக்கு உதவி செஞ்சேன் அவ்வளவு தான்!”
“நீ என்னை விட்டு போயிட்ட, அதுக்கு அப்புறம் ஒரு பத்து பதினஞ்சு நாள்ல தான் அவ இறந்து போயிட்டா. எனக்கு அதுக்கு பிறகு உன்னை வந்து கூப்பிடறதை...
அத்தியாயம் ஏழு :
சரியாக அந்த நேரம் மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் வர, இவர்களை பார்த்ததும் “வா வேலா” என்றவர், “வாம்மா” என்றார் ரத்னாவையும் பார்த்து.
அகிலாண்டேஸ்வரியும் “வாங்க” என்றார், இல்லையென்றால் மேகநாதன் தொலைத்து விடுவார், அதையும் விட துளசி பின்னே அவருக்கு எந்த வேலையும் செய்து கொடுக்க மாட்டாள்.
அவர்கள் உண்டு கொண்டிருப்பதில் இருந்து எழுந்து நின்று கொண்டிருக்க,...
அத்தியாயம் நான்கு :
திருவின் மாமா நாகேந்திரன் எந்த வேகத்தில் வந்தாரோ மேகநாதன் கிளம்பும் முன் அவரை பிடித்திருந்தார்.
“வாங்க மாப்பிள்ளை” என்ற மேகநாதனின் அழைப்புக்கு கூட செவி சாய்க்காமல் “திரு இல்லீங்களா மச்சான்” என்றார் அவசரமாக.
“இப்போ தான் கிளம்பினான்” என்று மேகநாதன் சொல்ல, அவர் தளர்வாக சோஃபாவில் அமர, எல்லோரும் அவரைத் தான் பார்த்திருந்தனர்.
ஒன்றுமே பேசாமல்...
Tamil Novel
அத்தியாயம் மூன்று :
அதுவரை வேடிக்கை பார்த்திருந்த கமலநாதன் “நீ என்ன சொல்ல வர்ற திரு, தெளிவா சொல்லு!” என்று வாய் திறக்க,
“என்ன சொல்லன்னு தெரியலை சித்தப்பா அதுதான் அவளை அடிச்சேன், நீங்க என் மேல உள்ள அக்கறைல தான் பேசறீங்க இல்லைன்னு சொல்லலை, ஆனாலும் இப்படி பேசறது சரி கிடையாது சித்தப்பா”
“இவளை எங்கப்பா...