Sunday, May 5, 2024

    Poovai Nenjam 21

    Poovai Nenjam 8

    Poovai Nenjam 15

    Poovai Nenjam 3

    Poovai Nenjam 11

    Poovai Nenjam

    Poovai Nenjam 13

    அத்தியாயம் பதிமூன்று: ராம் அப்போது தான் காஞ்சிபுரத்திற்கு வந்து வீட்டில் கால் வைத்தான் வைதேகி அவனுக்கு போன் அடித்தாள். அவள் போன் செய்ததும் பதட்டமாக எடுத்து, “என்ன? என்ன?”, என்றான். இப்போ தானே வந்தோம் என்று நினைத்துக்கொண்டே.  அவனின் பதட்டமான குரலை கேட்டவள். “பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லை”, என்றாள். “பின்ன”, என்றான் ஆசுவாசப்பெருமூச்சு விட்டு. “அது.”, என்று இழுத்தவள். “அப்பா விஷயம்...

    Poovai Nenjam 4

    அத்தியாயம் நான்கு: “நான் அந்த மாதிரி எல்லாம் நினைச்சதே இல்லை அண்ணா”, என்றார் சுவாமிநாதன். “இதுவரை நினைக்கலைன்னா என்ன இனிமே நினைக்கலாமே”, என்றார் சுந்தரேசன். அவரை ஆச்சர்யமாக பார்த்தார் சுவாமிநாதன். வாய் விட்டு கேட்க கூட செய்தார். “இத்தனை நாளா அந்த பசங்களை கவனிக்காம இருந்தீங்க. இப்போ வந்து பொண்ணு தரச் சொல்றிங்க. எனக்கு ஒண்ணும் புரியலையே அண்ணா”,...

    Poovai Nenjam 12

    அத்தியாயம் பன்னிரெண்டு: கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த உடனேயே ராமிடம் மாலதியை அழைத்துக் கொண்டு வந்தாள் வைதேகி. “மாலதி கிட்ட டிரெஸ் எதுவுமே நல்லா இல்லை, அவளுக்கு கொஞ்சம் டிரெஸ் எடுத்தா பரவாயில்லை”, என்றாள் ஒரு முறைப்போடு. “அதுக்கு ஏண்டா இவ நம்மளை பார்த்து முறைக்கிறா”, என்றிருந்தது ராமிற்கு. எதையும் காட்டிகொள்லாமல் , “என்ன பண்ணனும்”, என்றான். “கடைக்கு போயி...

    Poovai Nenjam 3

      அத்தியாயம் மூன்று: தன் தாய்மாமாவின் வீட்டிற்கு சென்று வந்தவுடனே சுவாமிநாதனிடம் தொலைபேசியில் நடந்ததனைத்தும் கூறினான். அவர் சுவாமிநாதனை திட்டியதை மட்டும் கூறவில்லை. அதை விடுத்து வேறு எல்லாவற்றையும் கூறியவன் நாளை மறுநாள் பெண் பார்க்க போவதை கூறினான். அதுவும் ஒரு வகையில்,”சரி”, என்று சுந்தரேசனை ஒட்டியே பேசினார் சுவாமிநாதன். “நான் இதை யோசிக்காம விட்டுடேன். கல்யாணம் நடக்கணும்............

    Poovai Nenjam 1

    அத்தியாயம் ஒன்று: இனிய காலைப் பொழுது........ ஆனால் எல்லோருக்கும் இனிய காலைப்பொழுதா............ சந்தேகமே. அவரவர் எண்ணங்கள் பொழுதை இனிமையாக மாற்றும் வல்லமை உடையது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எதிர்கொள்வோம் சமாளிப்போம் என்று நினைப்பவர்கள் சமாளிக்கத்தான் செய்வார்கள். என்னால் முடியாது என்று நினைப்பவர்கள் முடியாது என்றே திணறுவார்கள். நான் சமாளிப்பேன் என்று நினைத்தவாறே எழுந்தாள் வைதேகி. “கடவுளே எனக்கு...

    Poovai Nenjam 19

    அத்தியாயம் பத்தொன்பது: ராம் அப்போது தான் தான் வைதேகியிடம் அதிகமாக பேசிவிட்டோம். அந்த பேச்சு முறையான பேச்சும் அல்ல. அது கட்டாயம் அவளை நோக வைத்திருக்கும் என்று அவன் வருந்திக்கொண்டு இருந்தான். அவளிடம் எந்த எதிர்பார்ப்பும் வைக்காதே என்று எத்தனை முறை உனக்கு சொல்வது என்று அவனின் மனது அவனை குற்றம் சாட்டியது. அவள் வேலைக்கு செலக்ட்...

    Poovai Nenjam 20

    அத்தியாயம் இருபது: ராமின் வேண்டுதல் வீண் போகவில்லை, சமையபுரம் மாரியம்மனுக்கு அவனை கைவிடும் எண்ணம் எல்லாம் இல்லை.வைதேகி பிரிய வேண்டும், அது, இது, என்று பேசினாலும் டைவர்ஸ் என்ற வார்த்தை அவளின் வாயில் இருந்து வரவில்லை. உண்மையை சொல்லவேண்டும் வைதேகிக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றவேயில்லை. அவளுக்கு தற்போதைக்கு இருக்கும் எண்ணம் அவனை விட்டு பிரிய...

    Poovai Nenjam 24 (1)

    அத்தியாயம் இருபத்தி நான்கு (1): அவர்கள் ஒட்டிக்கொண்டு சுற்றியது திருமணம் வரையுமே தொடர்ந்தது......... நலுங்கு வைக்கும்போது பேசியவர்கள் அத்தனை பேர் வாயும் அடைப்பட்டு விட்டன. ராமும் வைதேகியும் புதிதாக திருமணமானவர்கள் போல ஒருவரை ஒருவர் பிரியவேயில்லை..... சின்ன சின்ன தொடுகைகள், சந்தோஷங்கள், பேச்சுக்கள் என்று நாட்கள் வேகமாக சென்றது. ஆனால் அதற்கு மேல் ராம் முன்னேறவில்லை. அவனுக்கு அவனுடைய...

    Poovai Nenjam 15

    அத்தியாயம் பதினைந்து:  வைதேகியின் கையை பிடித்துக்கொண்டிருந்தவன் விடவேயில்லை. எப்படியாவது தான் செய்த மாபெரும் தப்பை நியாப்படுத்தி விடவேண்டும் என்று தணியாத ஆர்வம் அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்தது. நடந்து முடிந்த நிகழ்வு ஆரம்பத்தில் ஒரு பரவச நிலையை கொடுத்தாலும் இப்போது பெரும் குற்றமாக தெரிந்தது. அதிலிருந்து விடுபடுவதற்கான வழி  வைதேகி சமாதானமாகி தன்னுடன் இயல்பாக நடந்து கொள்வதே...

    Poovai Nenjam 17

    அத்தியாயம் பதினேழு: சொன்ன மாதிரி திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ராம் வைதேகியை அழைத்து செல்ல வந்துவிட்டான். அப்போது பார்த்து சுவாமிநாதனுக்கு சற்று உடம்பு வேறு சரியில்லாமல் இருந்தது. வைதேகிக்கு விட்டு செல்ல மனமில்லை. ராமும் கூட இந்த நிலையில் வைதேகியை கூட்டிச் செல்வதா என்று யோசித்தான். சுவாமிநாதன் தான் பிடிவாதம் பிடித்து, “நான் எப்படியும் கல்யாணத்துக்கு...

    Poovai Nenjam 8

    அத்தியாயம் எட்டு: விட்டத்தை வெறித்து படுத்திருந்த ராமிற்கு தூக்கம் வருவேனா என்றது. “என்னடா முதலிரவு நம்மை போல எவனும் கொண்டாடியிருக்க மாட்டான்”, என்று தோன்றியது. திரும்பி மனைவியை பார்த்தான் அவள் அசையாமல் அவனுக்கு முதுகை காட்டி படுத்திருந்தாள். ஒரு பெண்ணின் அருகாமை அவனுக்கு புதிய உணர்வுகளை கொடுத்தது. இத்தனை நாட்களாக எந்த பெண்ணையும் அதிகமாக சைட் அடித்தது...

    Poovai Nenjam 16

    அத்தியாயம் பதினாறு: ராம் ஹாஸ்பிடலில் இருந்து வர இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இருந்த இரண்டு நாட்களும் அவன் பார்வைகள் அவளையே தொடர்ந்தன. தொடர்ந்து யாசித்தன. மன்னிப்பையா அவளின் அன்பையா. அவனுக்கே தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை. வைதேகிக்கு அவன் பார்வைகள் புரிந்தும் புரியாமல் இருந்தது. ராமை பார்த்தால் சற்று பாவமாக தான் இருந்தது. இருந்தாலும் மனது இளகுவேனா என்றது. வேண்டிய...

    Poovai Nenjam 11

    அத்தியாயம் பதினொன்று: வைதேகியின் தந்தை அவளிடம் தெளிவாக சொல்லிவிட்டார். அவர்கள் வரும்போது அவர்களின் உபச்சாரத்தில் எந்த குறையும் இருக்க கூடாது என்று. “அன்னைக்கு மாதிரி உன் ரூமுக்குள்ள போய் உட்கார்ந்துக்க கூடாது வைதேகி. ராம் மட்டும்ன்னா நான் ஏதாவது பேசி கூட சமாளிப்பேன். ஆனா மாலதியும் மனோகரும் கூட வர்றாங்க. நல்லா அவங்களை கவனிச்சு பார்த்துக்கோ”, என்றார். “சரிப்பா”,...

    Poovai Nenjam 23

    அத்தியாயம் இருபத்தி மூன்று: திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே வைதேகியும் மாலதியும் காஞ்சிபுரம் வந்துவிட்டனர்....... வைதேகி மிகவும் சிரமப்பட்டு லீவ் வாங்கியிருந்தாள், அதனால் மனோகர் லீவ் எடுக்கவில்லை......... திருமணத்திற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அவன் வருவது என்று முடிவாகிற்று. இவர்கள் வந்ததற்கு அடுத்த நாள் மாலதிக்கு தாய்மாமன் முறை செய்வது என்று நாள் குறித்து இருந்தது. மாப்பிள்ளை...

    Poovai Nenjam 21

    அத்தியாயம் இருபத்தி ஒன்று: வைதேகியுடனான தொலைபேசி உரையாடலுக்கு பிறகு ராம் சற்று குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்தான். இப்போது தான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது பிரிய வேண்டும் என்று அவள் சொல்லி தன்னை விலக்கி வைத்தபிறகு மனதில் அவனுக்கு நிம்மதி என்பதே இல்லாமல் இருந்தது. அவளுடன் சேர்ந்து வாழ்வோமா இல்லையா என்று இருந்தது. இப்போது...

    Poovai Nenjam 18

    அத்தியாயம் பதினெட்டு: “ராமை தனக்கு பிடிக்காதே. இப்போது மட்டும் என்ன”, என்று யோசிக்க தெரிந்த வைதேகிக்கு. அப்போதும் அவனை தனக்கு பிடிக்கிறதா என்று யோசிக்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் அவன் தன்னை பாதிக்கிறான் என்ற முடிவிற்கு வந்தாள். வைதேகி அவளின் யோசனைகளிலேயே இருக்க. அவளின் யோசனைகளின் நாயகன் அவளை பற்றி சிறிதும் கவலைப்படுபவனாக அவளுக்கு தெரியவில்லை. ராம்...

    Poovai Nenjam 7

    அத்தியாயம் ஏழு: காலையில் முகூர்த்தம் களைகட்டியது. பெண்ணிடமும் மாப்பிள்ளையிடமும் உற்சாகம் கம்மியாக காணப்பட மற்ற எல்லோரும் அதிக உற்சாகத்துடன் காணப்பட்டனர். மாலதி கூட நேற்று வைதேகி நடந்து கொண்டதை மறந்து அதிக உற்சாகத்துடன் காணப்பட்டாள். மோகன் அவளை பார்த்தும் பார்க்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனை நாட்களாக பக்கத்து வீட்டில் இருந்தாலும் புதிதாக முளைத்த சொந்தம் அவனை மாலதியை சைட்...

    Poovai Nenjam 9

    அத்தியாயம் ஒன்பது: வைதேகியின் வீடு வந்த போது ராமின் மனம் உல்லாசமாக இருந்தது. பின்னே அவனின் மனைவி காஞ்சிபுரத்தில் ஆரம்பித்து சென்னை வரையிலும் அவனின் இடுப்பை கட்டிக்கொண்டே வந்தாளே. அவன் மனம் மட்டுமே உல்லாசத்தில் மிதந்தது. அதற்கு நேர் மாறாக வைதேகி ஏக கடுப்பில் இருந்தாள். அவன்  இடுப்பை கட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு கொஞ்சமும் ரசிக்கவில்லை. மிகுந்த...
    error: Content is protected !!