Nenjamellaam Kaathal
அத்தியாயம் – 8
“அத்தான்..... இந்நேரத்துல எங்க கெளம்பிட்டிய.....” இரவு உணவு முடிந்து பாலை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்த கயல்விழி, ராத்திரி பத்து மணிக்கு பேண்ட் ஷர்ட்டுடன் புறப்பட்டு நின்றிருந்த மதியழகனிடம் கேட்டாள்.
பதில் பேசாமல் சட்டையின் பட்டனைப் போட்டுக் கொண்டிருந்தவனை மீண்டும் கேட்டாள்.
“என்ன அத்தான்.... பதில் பேச மாட்டியளா.... எங்க போறீகன்னு எங்கிட்ட சொல்லக்...
குளியலறைக்குள் இருந்த மதியழகனுக்கு அவள் சிரிக்கும் சத்தம் நன்றாகவே கேட்டது.
“ஏலே.... இப்படி மானத்த பறக்க வுட்டுட்டியே மதி.... எப்படிலே அவ மூஞ்சில முழிப்பே.....” எனத் தலையில் தட்டிக் கொண்டவன், குளியலை முடித்த பின் தான் டவலை எடுக்கவில்லை என நினைவு வந்தது.
“அச்சோ... இப்போ எப்படி டவலை எடுக்குறது...... அவ இருப்பாளே....” எனத் தயக்கத்துடன் சிறிது...
அத்தியாயம் – 7
அங்கங்கே கட்டிலில் தொங்கிக் கொண்டிருந்த பூச்சரங்களின் மணமும், அழகான மெத்தை விரிப்பில் தூவி விடப்பட்டிருந்த மல்லிகை, ரோஜா மொட்டுகளின் மணமும் மேசையில் வைக்கப்படிருந்த பழம், பலகாரங்களுடன் புகைந்து மணத்துக் கொண்டிருந்த ஊதுபத்தியின் மணமும் அந்த அறையை ஒருவித மோன நிலையில் வைத்திருக்க அதையெல்லாம் ரசிக்க வேண்டிய மதியழகனோ ஏதோ தீவிர யோசனையில்...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதியழகனுக்கு, கயலை திருமணம் செய்து கொடுக்க சம்மதம் என்று சுந்தரேசனிடம் இருந்து வந்த வார்த்தையைக் கேட்டதும் அடுத்து மதியழகனின் சம்மதத்திற்கு வேண்டி காத்திருந்தார் லச்சுமி.
முத்துப்பாண்டி சுந்தரேசனுடன் டவுனுக்கு சென்றிருந்தார். போதையில் வெகுநேரம் உறங்கிக் கொண்டிருந்த மதியழகன் உறக்கம் தெளியவே எழுந்து அமர்ந்தான். அவன் எழுந்துவிட்டதை அறிந்து காப்பியை எடுத்துக் கொண்டு அவனிடம் வந்த லச்சுமி...
அத்தியாயம் – 6
“என்ன சொல்லுதிய.... அந்தக் குடிகாரப்பையன் நம்ம கயலுக்கு மாப்பிள்ளையா... பூவாட்டமா இருக்குற பொண்ணை அந்தப் பையனுக்கு எப்படிங்க கட்டி வைக்க முடியும்..... அதும் இல்லாம அவனைக் கண்டாலே இவளுக்கு ஆகாதே... அப்புறம் எப்படி கண்ணாலம் கட்டிக்க ஒத்துக்கறேன்னு சொல்லுதா.....” என்றார் ராசாத்தி அதிர்ச்சியுடன்.
“மாப்பிள்ள..... மலரு கண்ணாலம் முடிஞ்சதும் கயலை நம்ம மணிமாறனுக்கு...
“ம்ம்.... சின்னப் புள்ளையா இருக்கையில பாத்தது.... இப்பவும் கவுனு போட்டு மூக்கொழுக நிக்குற கயலு தான் என்ற கண்ணுல நிக்குது.... என்ன தாயி.... நல்லாருக்கியா....” என்றார் கயல்விழியிடம்.
“ம்ம்... நல்லாருக்கேன்.... மாமா.... நீங்க நல்லாருக்கியளா.....” என்றாள் கயல்.
“ம்ம்.... நல்லாருக்கேன் தாயி....” என்றார் முத்துப் பாண்டி.
“புள்ளைக வளர்றது நமக்கு எங்க தெரியுது.... நமக்கு எப்பவும் அவுக சின்னப்...
அத்தியாயம் – 5
“அய்யய்யோ.... சம்மந்தி வூட்டுல அப்படியா சொல்லிட்டாக.... இப்போ என்னங்க பண்ணுவோம்......” கையைப் பிசைந்தார் ராசாத்தி.
“எனக்கும் ஒண்ணும் புரியல .... கல்யாணத்துக்கு முதநாளு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னா நம்ம பொண்ணை யாரு கட்டுவாங்க......” என்று கலக்கத்துடன் கூறினார் சுந்தரேசன்.
“மாப்பிள்ள.... கலங்காதீய.... ஏதாவது பண்ணுவோம்....” என்றார் மாணிக்கம்.
“அண்ணே..... சம்மந்திம்மா என்னதேன் சொன்னாக..... கொஞ்சம்...
மாணிக்கத்திடம் வந்த ஊர்ப்பெரியவர் ஒருவர், “ஏன் தம்பி.... எல்லாரும் இப்படி இடிஞ்சு போயி உக்கார்ந்திருந்தா கண்ணாலம் எப்படி நடக்கும்.... ஏதாவது சட்டுபுட்டுன்னு யோசிச்சு ஒரு முடிவு பண்ணி அடுத்து என்ன பண்ணறதுன்னு பாக்க வேணாமா..... மாப்பிள்ள வூட்டுல விஷயத்தை சொல்லிப் பேசிப் பாக்கலாம்ல.....” என்றார்.
“ம்ம்.... சரிங்கையா..... ஏதாவது பண்ணித்தான் ஆவணும்... நான் மாப்பிள்ள கிட்ட...
அத்தியாயம் – 4
வீட்டுக்கு முன்னால் ஆட்கள் பந்தல் போட்டுக் கொண்டிருக்க வாசலில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராசாத்தி, அண்ணனும் அண்ணியும் வருவதைக் கண்டு முகம் மலர்ந்தார். “அண்ணே..... வாங்கண்ணே.... வாங்க....... மதனி......” முகமெல்லாம் புன்னகைக்க வரவேற்றார்.
“ராசாத்தி..... எப்படி இருக்கவ..... மருமகளுக எங்க.....” விசாரித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர் மணிமாறனின் தந்தை மாணிக்கமும் அன்னை...
அத்தியாயம் – 3
ஒரு ஆளுயரத்தில் நிமிர்ந்து கிழக்கில் சூரியனின் முகம் நோக்கி தலை திரிந்து நின்ற சூரியகாந்தி மொட்டுகளை ரசித்துக் கொண்டே செடிகளுக்கு நடுவில் இருந்த வழியில் நடந்தாள் கயல்விழி. அவளது உயரத்துக்கு நீண்டிருந்த செடிகள் அவளோடு நடப்பது போலவே இருந்தது.
ஆடவனைக் கண்டதும் நாணத்துடன் முகம் திருப்பிக் கொள்ளும் குமரிப்பெண்ணாய் சூரியகாந்தி மொட்டுக்கள் மலரத்...
“இந்த சின்னவ, கருவாச்சி இருக்காளே....... அவ அப்படியே அவ அம்ம குடும்பத்த போல..... எதுக்கெடுத்தாலும் என்னா பேச்சு பேசுதா...... நாளைக்கு கண்ணாலம் கட்டிப் போற எடத்துல அவள எப்படி சமாளிக்கப் போறாகளோ..... நல்ல சண்டிவீரன் கணக்கா ஒருத்தன் வந்துதேன் அவள அடக்கணும் பார்த்திகிடுங்க......” என்று சொல்லிக் கொண்டே போனவர் அவர்களின் வித்தியாசமான பார்வையை உணர்ந்து,
“இந்தக்...
இருவரும் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வருவதைக் கண்டு பெற்றோரின் மனம் நிறைந்தது.
அவளிடம் பேசிவிட்டு அடுத்த நாளே டவுனில் நகை ஆர்டர் கொடுக்க செல்ல முடிவு செய்தனர்.
அப்படியே யார் யாருக்கெல்லாம் ஜவுளி எடுக்க வேண்டும் என்ற லிஸ்டும் தயாரானது. கல்யாண வேலைகள் ஜரூராய் நடக்கத் தொடங்க, கல்யாணக் கனவுகளில் மிதக்கத் தொடங்கினாள் மலர்விழி.
தந்தை கல்யாண...
அத்தியாயம் – 2
“ஏட்டி லச்சுமி.... எதுக்குவே..... நீ இப்படி ஒப்பாரி வைக்கவ.... உம்புள்ள என்ன மொத தடவையா குடிச்சிட்டு வந்திருக்கான்...... தெனம் இப்படித்தாம்லே எங்கனாச்சும் குடிச்சிட்டு விழுந்து கெடக்கான்....” எரிச்சல் நிறைந்திருந்தது முத்துப்பாண்டியின் குரலில்.
அவரை முறைத்த லட்சுமி, “ஏன் சொல்ல மாட்டிய..... ஒண்ணே ஒண்ணு..... கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு புள்ளைய பெத்து வச்சிருக்கேன்.......
அத்தியாயம் – 1
“ஆத்தா... மகமாயி..... எல்லாரும் நல்லாருக்கோணும் தாயி.....” பூஜையறையில் விளக்கேத்தி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் ராசாத்தி.
“ஏலே.... ராசாத்தி..... கோவிலுக்கு போகோணும்னு சொல்லிப்புட்டு இன்னும் இங்கயே நிக்குதிய...... எங்க அந்தப் புள்ள கயல காணோம்......” என்றார் அவரது மாமியார் பேச்சியம்மா.
“அவ கோவிலுக்குக் கொண்டு போக பூ பறிக்குதேன்னு சொல்லிட்டுப் போனா அத்த..... எங்கேன்னு பாக்கேன்.....” என்றவர்...
“ம்ம்.... சரி... நான் வாரேன்.....”
“ஏன் கயலு...... உன் அக்காக்கு கண்ணாலம் நிச்சயம் ஆயிடுச்சு.... அடுத்து உன் ரூட்டு கிளியரு தானே...... இந்த அத்தானுக்கு ஏதாவது சான்ஸ் இருக்கா......”
“ஹூக்கும்... நெனப்பு தான் பொழப்பக் கெடுக்குமாம்..... சும்மா எதையும் மனசுல நினைச்சுக்காம சோலியப் பாருங்க..... என்ன, ஆள விடுங்க.... நான் கிளம்புதேன்....”
“ம்ம்... எப்பவும் இப்படி சிக்காமலே பதில்...