Negizhiniyil Nenjam Kondaen 1
“வரமுடியாது போடி..” என்று தானும் உறுதியாக சொன்னவன், வெளியே
கிளம்பிவிட்டான். சிறிது நேரத்திலே அவனின் மொபைல் ஒலிக்க எடுத்து
பார்த்தால் மாறன்,
“என்னப்பா..?”
“எங்கிருக்க கதிர்..?” என்ற மாறனின் குரலில் தெரிந்த கோவத்தில் யோசனையானவன்,
“நம்ம பார்ம்ல தான்ப்பா..”
“நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா கதிர்..” என,
“என்ன ஆச்சுப்பா..? ஏதாவது அவசரமா..?”
“நீ முதல்ல கிளம்பி வா கதிர்..” என்றவர் வைத்துவிட, உடனே...
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் FINAL END
கதிர் நடந்ததை எல்லாம் சொல்லி முடிக்கவும், என்ன பேசுவதென்றே தெரியாமல்..
புரியாமல் நின்றிருந்த அஞ்சலியிடம், “நான் உன்னை காதலிக்கிறேனா..?
இல்லையான்னு..? இப்போ நீதான் எனக்கு சொல்லணும்..” என்று அவளுடைய
கேள்விக்கான பதிலை அவளிடமே கேள்வியாக கேட்டான் கதிர்.
கணவன் தன்னிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மனதுக்குள் முழுதாக ஏற்றி
மறுபடியும் மறுபடியும் அவளுள் அவளே ஓட்டி...
அதை இப்போது நினைத்து பார்த்து பொங்கி கொண்டிருந்தவளுக்கு அசோக்கிடம்
இருந்து போன் வரவும் அடுத்து இவரா..? என்று சலித்தபடியே எடுத்தவள்,
“சொல்லுண்ணா..” என,
“அஞ்சலி.. உனக்கும், கதிருக்கும் ஏதாவது பிரச்சனையா..?” என்று சந்தேகமாக
கேட்டான் அசோக்,
“ஏன் கேட்கிற..?” என்று யோசித்தபடியே கேட்டாள் அஞ்சலி,
“இல்லை.. கதிர் ஏதோபோலதான் இருக்கான், அதான் கேட்டேன்”, என்றவன்,
“ஏன் அஞ்சலி..? ஒருவேளை நீ சந்தேகப்பட்ட மாதிரி உன்...
“கதிர்.. பசங்க எப்படி இருக்காங்க..?” என்று மாறன் மகனிடம் கேட்க,
“ம்ம்.. பரவாயில்லப்பா, நிறைய அடி, பாவம்”,
“என்ன செய்ய..? விடு கதிர், பாத்துக்கலாம்”,
“இல்லைப்பா, அப்படியெல்லாம் விட கூடாது, அப்போதான் இன்னொரு டைம் இப்படி
செய்ய மாட்டாங்க, இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும்,”, என்று ஆத்திரத்துடன்
சொன்னான் கதிர்,
“என்ன ஆச்சு கதிர்..? ஏன் இவ்வளவு கோவம்..?” என்று நாயகி கவலையுடன்
கேட்டவர்,...
“இதோ ஆரம்பிச்சிட்டா இல்லை..” என்று. “இதுக்கு நான் எவ்ளோ ட்ரைனிங்
கொடுத்திருக்கேன்”, என்று மகளை பெருமையாக பார்த்தான் அந்த நல்ல தந்தை,
ஆனால் எப்போது மகள் கத்தினாலும், ஓடி வரும் அம்மாவும், மனைவியும் இன்று
வராமல் போக,
“என்னடா இது..?’, என்று ஆச்சரியமாக கிட்சன் பக்கம் பார்த்த அசோக்,
திடீரன்று மகள் கத்துவதை நிறுத்தவும்,
“இவ ஏன் அதுக்குள்ள நிப்பாட்டிட்டா..?” என்று திரும்பி...
“அண்ணா.. ப்ளீஸ்ண்ணா உண்மையை சொல்லிடு, நீதானே அவர்கிட்ட சொன்னே..”,
என்று ஒரு நேரத்தில் கெஞ்சி கேட்பவள்,
“எனக்கு கண்டிப்பா தெரியும் நீதான் சொல்லியிருப்ப, நீயும் அவரும் எவ்வளவு
திக் ப்ரண்ட்ஸ்ன்னு நாந்தான் பாக்கிறேனே, நீ ப்ராண்டுக்காக தங்கச்சியை
ஏமாத்திட்ட..” என்று சண்டையும் போட்டாள். போதாதற்கு லதாவிடமும்
சொல்லிவிட்டாள். லதா சொல்லவா வேண்டும்..?
“அஞ்சலி எனக்கு சந்தேகம் எல்லாம் கிடையாது, கண்டிப்பா இவர்தான்
சொல்லியிருப்பார்..” என்று...
“நீ தான் மறந்த, பின்ன நானா..?” என்று நொடித்தவர், “என் மக கல்யாணம் ஆன
பின்னாடி, அவ அப்பா வீட்ல நடக்கிற முதல் திருவிழாக்கு வந்து இன்னும்
கையை கூட நினைக்கல”,
“அதை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம, இப்படி புதுத்துணி போட்டுக்கிட்டு,
சென்ட் அடிச்சிக்கிட்டு என்னமோ நீதான் புது மாப்பிள்ளை கணக்கா
கிளம்பிட்ட, ஆனா என் மருமகன், புதுமாப்பிள்ளை இன்னும்...
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 28 { FINAL 1 }
“கதிர்.. நான் கொஞ்சநாளைக்கு நம்ம ஊட்டி கெஸ்ட் அவுசுல இருக்கலாம்ன்னு
நினைக்கிறேன்..” என்று மதிய உணவின்போது மாறன் சொல்லவும்,
“ஏன்ப்பா.. என்ன ஆச்சு..?” என்று தந்தையின் திடீர் முடிவில் கவலையுடன்
கேட்டான் கதிர்,
“ஒண்ணுமில்லைப்பா, சும்மாதான், எனக்கு இங்கேயே இருக்க எப்படியோ போல
இருக்கு..”, என்று மனைவி இழந்த முதுமை வயதின்...
“வாடி வா, இப்போ நீயே வந்தியா என்வழிக்கு..? எவ்ளோ ஸீன் ஓட்டுற, ம்ம்..
என்னமோ எனக்கு செய்றதை வேண்டாவெறுப்பா செய்றமாதிரி என்ன நடிப்பு, போடி..”
என்று மனதில் நினைத்தபடி கணவன் சிரித்து கொண்டிருக்க, ஓடிப்போன மனைவியோ,
தோட்டத்தில் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தாள்.
“கொஞ்சநேரத்துல என்ன செஞ்சிட்டார்..? இவர்கிட்ட நான் இன்னும் ரொம்ப
உஷாராதான் இருக்கணும், சரியான கேடி, சேன்ஸ்...
அப்போது கேட்டுக்கு வெளியிருந்து "அண்ணா.." என்ற சத்தம் கேட்கவும்,
"கதிர் அவங்க எல்லாம் வந்துட்டாங்க போல.." வா என்றவாறே அசோக், கதிர்
இருவரும் வெளியே வந்தவர்களில் அசோக்,
“பசங்களா.. நாம நினைச்ச மாதிரி பங்க்ஷன் எந்த பிரச்சனையும் இல்லாம
நல்லபடியா முடிஞ்சிருச்சு, இதுக்கு உங்களோட சப்போர்ட்டும் ஒரு காரணம்,
அதுக்கு ரெண்டு அண்ணன்களின் சார்பா பெரிய நன்றி..” என்று வெளியே பெரிதாக
கூடியிருந்த...
தன் தாலியை சுமந்து நிற்கும் மனைவியின் சோர்ந்த அழகில் ரசனையாக பார்த்து
கொண்டிருந்த கதிரின் கண்களுக்கு, அவளின் கைகளின் வழவழப்பு பளிச்சென
தெரிய, அவளை நன்றாக ஊன்றி கவனித்தவனின் கண்கள் நொடியில் ரசனையிலுருந்து
கோவத்திற்கு மாறியது.
அவளின் இரவு கவுன் போன்ற உடை ஸ்லீவ்லஸ் மட்டுமில்லாமல் அதன் நீளமும்
முட்டிவரை மட்டுமே இருக்க, அதிலும் அவசரத்தில் அந்த ஸ்லீவ் உடைக்கு மேல்
கோட்...
அங்கு அஞ்சலி அவன் சாப்பிட உணவை எடுத்துவைக்க, “இதுகெல்லாம் டைம்
இல்லை, கிளம்பு போலாம், அங்கேயே பாத்துக்கலாம்..”, என்று அவசரப்படுத்த,
“ம்ஹூம்.. மனைவி அசந்தால் தானே..!!”
“ம்ப்ச்.. படுத்ததாடி, டைம் ஆச்சு எல்லாரும் வந்துருவாங்க கிளம்பு..”
என்று அதட்ட, அப்போதும் அசையாமல் நின்ற மனைவியை முறைத்த தம்பியை பார்த்த
நாயகி, சிரிப்புடன்,
“இந்நேரத்துக்கு சாப்பிட்டிருக்காலம் தம்பி.. நீயும் காலையிலிருந்து
சாப்பிடாம தானே ஓடிட்டிருக்க, சாப்பிடு..”...
“ஏன் இப்படி செஞ்சீங்க..? பாவம் அண்ணா..” என்று அஞ்சலி, கதிரிடம் சீற,
“ம்ம்.. என் பர்ஸ்ட் நைட்டை கெடுத்தார் இல்லை, அதுக்கு மச்சான் சார்பா
கிப்ட் வேண்டாமா..? அதான்” என்று கிண்டலாக சொன்னவன், எலிப்பொறியில்
சிக்கிய எலிபோல், அம்மாவிடமும், மனைவியிடமும் மாட்டிக்கொண்டிருந்த
அசோக்கை சிரிப்புடன் பார்த்தான்,
“எனக்கு வேண்டும்டா, உன்கூட ப்ரண்ட்ஷிப் வச்சிருக்கிற எனக்கு இன்னும்
வேணும்டா, மனுஷனா நீ, உனக்கு கொஞ்சம்...
“அஞ்சலி.. தம்பிக்கும் உனக்கும் டீ எடுத்துட்டு வா..” என்று நாயகி
சொல்லவும், வேறுவழி இல்லாமல், உள்ளே சென்று கொண்டு வந்தவள், கணவனுக்கு
கொடுக்க,
அவனோ.. “எனக்கு வேண்டாம்” என்றுவிட்டான், அவன் பார்த்தபோது தராததால்,
மறுக்கிறான் என்று புரிந்து கொண்ட அஞ்சலிக்கு, அவனின் தலையில் நறுக்கென
கொட்டினாள் என்ன என்றே ஆத்திரம் கிளம்பியது.
"நான் ரூமுக்கு போறேன்.." என்று மனைவியை முறைத்துவிட்டு மேலே சென்றவன்,
“அஞ்சலி..”...
“நீங்க எனக்கு எதுக்கு தாலி கட்டினீங்கன்னு மறந்து போச்சா..? எங்க
அப்பாவை பழிவாங்கதானே தாலி கட்டுனீங்க, அப்பறம் எந்த அர்த்தத்துல நீங்க
என்கிட்ட இதெல்லாம் எதிர்பாக்குறேங்க..?” என்று தானும் கோவம் கொண்டு
பேசியவளை பார்த்த கதிர்,
“ஓஹ்.. அப்போ நான் பழிவாங்கதான் உனக்கு தாலி கட்டி உன்னை என்
பொண்டாட்டியாகிட்டேன் நீ உறுதியா நம்புறேன் அப்படிதானே..?” என்று சட்டென
தோன்றிய வெறுமையுடன் கேட்டான்...
“கதிர்.. நீ அவங்க பொண்ணை தூக்கினதால அவங்க பாதிக்கபட்டிருக்காங்க, அதை
இல்லன்னு நீ சொல்லவே முடியாது, அதுக்கு உன்னோட பதில் என்ன..?” என்று
தலைமை கண்டிப்புடன் கேட்க,
“அவங்க செஞ்சதால நான் பாதிக்கப்படலயா..?, என்னோட கல்யாணம் நின்னது
இல்லாமல், என் உசுருக்கு உசுரான என் அம்மாவையும் பறிகொடுத்துட்டு நான்
இப்பவரைக்கும் கஷ்டப்பட்டுட்டு இருக்கேனே, அதுக்கு உங்களோட பதில்
என்ன..?, என்று கண்களில் வலியோடு...
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் FINAL 2
கதிரின் திருமணத்திற்கு முன் தின இரவு… “ம்மா.. உங்ககிட்ட கொஞ்சம்
பேசணும்.." என்று நலங்கு முடிந்த கையோடு கசங்கிய முகத்தோடு வந்து நின்ற
கதிரை முன்னமே எதிர்பார்த்திருந்த லட்சுமி அம்மாள்,
“முதல்ல என் பக்கத்துல உட்காரு, பேசலாம்..” என்று சைகை காட்ட,
பக்கத்தில் உட்கார்ந்த மகனின் கையை இதமாக வருடியவருக்கு சிறிது
நாட்களாகவே மகன்...
“விடுங்கப்பா.. கவலைப்படாதீங்க, பாத்துக்கலாம்”,
“இல்லை அசோக் அவ இப்போ கல்யாணம் வேணாம் சொன்னா பிரச்னையில்லை, ஆனா
எப்பவுமே வேணாம்ன்னு இல்லை சொல்றா, அதான்” என்று யோசனையாகவும்
கவலையாகவும் இழுத்தார்.
“கொஞ்சநாளைக்கு அவகிட்ட கல்யாணத்தை பத்தி பேசாம விட்டு பிடிக்கலாம்ப்பா”,
“அதுக்கு டைம் இல்லை அசோக், ராஜேஷ் இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவார்,
வந்தவுடனே உறுதி செஞ்சிட்டு அடுத்த முகூர்த்தத்துல கண்டிப்பா கல்யாணத்தை
முடிச்சிடனும்”,
“ஏன்ப்பா இவ்வளவு...
அதிலும் சுந்தரனோ, விஷயம் கேள்வி பட்டதில் இருந்து, நெஞ்சை பிடித்து கொண்டு அமைதியாக அமர்ந்தவர் தான், அதற்கு பிறகு எதுவும் பேசவே இல்லை, அவரை பார்த்து, மகளின் நிலைய நினைத்து அழுது.. அழுது.. மிகவும் சோர்ந்து போயிருந்த மீனாட்சியின் அருகிலே அமர்ந்திருந்த லதா, அடிக்கடி அசோக்கிடம் "அஞ்சலி கிடைத்தாளா..?" என்று விசாரித்து கொண்டிருக்க, வீடே...
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் PREFINAL 2
“கதிர் தம்பி என் பெரிய மகனை போலீசில் புடிச்சு கொடுக்கிறதுக்கு
முன்னாடி, என்கிட்டத்தான் முதல்ல கேட்டார், நானும் ஒரு பொம்பளை புள்ளைய
பெத்திருக்கேன், என் மகன் செஞ்சதும் தப்புக்கு தண்டனை கிடைக்கணும்ன்னு
நானும் ஒத்துக்கிட்ட பின்னாடிதான் தம்பி போலீசுக்கே போச்சு”,
“அதுக்கு அப்பறம் நானும் தம்பியும் எப்போ பார்த்தாலும் பேசிக்குவோம்,
அப்படிதான் அவரோட கல்யாணத்துக்கு முன்னாடி...