Nee Ennul Yaaradaa
வள்ளி “நீங்க பேசிட்டே இருங்க.. நாங்க சாமிக்கு பட்டு எடுத்திட்டு வந்திடறோம்” என கூறி தன் கணவன் மகளோடு அங்கே சென்றார்.
பரணி தன்னவளின் அருகில் வந்து “ஹப்பா.. எவ்வளோ கம்ப்ளைன்ட்..” என்றான்.
காயத்ரி “போங்க.. நீங்க பேசாதீங்க” என்றாள்.
அவ்வளவுதான் பரணி “இல்ல இல்ல நீ கம்ப்ளைன்ட் சொல்லு.. அதெல்லாம் பிரச்சனையில்ல.. ம்.. என்ன ஆச்சுன்னா, நான்...
சக்திவேல் “இல்ல இல்ல கண்டிப்பா இப்படி பெண்பார்ப்பது போன்று.. மீண்டும் குடும்பங்கள் இரண்டும் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் கொஞ்சம் கோவங்கள் குறையும்.. நடைமுறை புரியும்” என்றார்.
அதனால் இந்த சந்திப்பு.
நல்ல நேரத்தில் பரணியின் குடும்பம்.. அவனின் சித்தப்பா குடும்பம் என பத்து நபர்கள் எளிமையாக பூ பழம் தாம்பூலத்தோடு காயத்ரியை பெண் கேட்டு வந்தனர்.
கார்த்திக்...
நீ யாரடா என்னுள்!
22
வள்ளி, இப்போதெல்லாம் மகனிடம் அதிகமாக பேசுவதில்லை. அதிலும், அன்று, சக்திவேல் வந்து உணவருந்திவிட்டு.. தன் மனையாளுக்கு இந்த திருமணத்தில் அதிக நாட்டமில்லை என சொல்லி சென்றதிலிருந்து.. மனதே கேட்கவில்லை வள்ளிக்கு. ‘ஏன் தன் மகனுக்கு இப்படி ஒரு புத்தி..’ என மனது கசந்து போனது.
சாரதாவிடம் “ஏன் உன் தம்பி இப்படி பண்றான்.....
நீ என்னுள் யாரடா!
2
சாரதா, புனே சென்று.. கணவருடன் குடித்தனம் தொடங்கினாள் பெண். திருமணம் முடிந்து ஒருமாதத்தில் சாரதாவிற்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்திருந்தான் கமல்.
சாரதாவிற்கு அத்தனை சுதந்திரம் தந்திருந்தான். ம்.. கமல் அப்படிதான் எண்ணிக் கொண்டான்.. அவள் ஜீன் போடலாம், பொன் தாலியை எப்போதும் அணிந்திருக்க வேண்டியதில்லை.. ஸ்லீவ்லெஸ்.. வெளியே போவது வருவது.. அவள்...
துளசி ஹாலுக்கு சென்று “வாங்க பெரியப்பா” என்றாள்.
கார்த்திக் எழுந்து கைகழுவி, தன் அன்னையின் அருகில் வந்தான் “கொஞ்சம் அமைதியா இரும்மா” என்றான்.
சக்திவேலும் ஹாலுக்கு வந்து சேர்ந்தார். தணிகாசலம் சக்திவேலை பார்த்ததும் “சம்பந்தி” என்றார் சங்கடமான குரலில்.
சக்திவேல் “வாங்க சம்பந்தி.. உட்காருங்க வாங்க” என இயல்பாக்கிக் கொண்ட குரலில். பிள்ளைகளின் செயலில் பாவம் அவர் என்ன...
நீ என்னுள் யாரடா!
20
பரணியும் காயத்ரியும்.. ஒரு ஹைவே ஹோட்டலில் இருந்தனர் இப்போது. காயத்ரிக்கு, இவன்தான் வேண்டும்மென வீட்டில் சொல்லி பிடிவாதம் கொண்டு எல்லாம் செய்தாலும்.. இன்னும் பரணியை தெரியாதே. அதுவும் இந்த தனிமையில் அவனோடு வருவது அவளுக்கு ஆனந்தம் என்றாலும்.. அச்சம்தான். அவனின் முறைத்த பார்வைதான் அவனின் அடையாளமே. ஆனால், இன்று, தான் அவனின்...
காயத்ரி, தன்னையே பார்த்துக் கொண்டு பாவமாய் நிற்பது தெரிந்து.. தன்னை தானே சுதாரித்துக் கொண்டு எதோ பேச சாரதா எத்தனிக்க.. இப்போது பரணி கடையின் உள்ளே வருவது தெரிந்தது சாரதாவிற்கு. இயல்பாய் ஒரு சுவாரசிய உணர்வு வந்தது சாரதாவினுள்.. ஏதும் கண்டுக் கொள்ளாதது போல.. வேலையை பார்த்தாள் சாரதா.
பரணி “அக்கா.. என்ன பண்ற” என...
இனியன் இப்போது கண் திறந்திருந்தான், மணிவிழியால் காயத்ரியை பார்க்க தொடங்கினான், அவளும் “அண்ணி, பார்க்கிறான் என்னை பார்க்கிறான்.” என்றாள் குதுகலமாக.
அடுத்து காயத்ரி“அண்ணி எப்போ என்னை அத்தைன்னு கூப்பிடுவான்.” என்றாள் அடுத்த கேள்வியாக.
சாரதா “இரண்டு வயசு ஆகும் டா..” என சொல்லிக் கொண்டிருந்தாள்.
இப்போது பரணியிடம் வந்த வள்ளி “எப்போடா வந்த” என்றார். குடிப்பதற்கு ஏதாவது வேண்டுமா...
நீ என்னுள் யாரடா!
21
சக்திவேல் மேல்.. ஆதியின் வீட்டில், சங்கத்தில் புகார்.. இல்லை நியாயம் கேட்டிருந்தனர். எனவே, அதன் சார்ப்பாக நான்கு பெரியவர்கள், இரு வீட்டு மனிதர்களையும் கூப்பிடிருந்தனர். கார்த்திக் சக்திவேல் கௌசல்யா வந்திருந்தனர் மற்றும் பரணி தணிகாசலம். அந்த பக்கம் ஆதியின் பெற்றோர் ஆதியின் சித்தப்பா ஒருவர்.. மற்றும் அவனின் மாமா என வந்திருந்தனர்.
கௌசல்யா...
நீ என்னுள் யாரடா!
18
காயத்ரிக்கு, அழுகைதான் எங்காவது சென்றிடலாம் என பஸ்ஸில் அழாமல் அமர்ந்திருப்பதே பெரிய சாதனையாக இருந்தது அவளுக்கு. மனதே கேட்கவில்லை.. இப்படி வீட்டைவிட்டு, செல்லுவது. அதே சமயம், ஒரு குடும்பத்தை.. எதுமே தெரியாத ஆதியை ஏமாற்ற முடியவில்லை அவளால். எனவே, என்னவாக நடக்கட்டும் என கிளம்பிவிட்டால்தான். ஆனால், மனது தன் வீட்டில்தான் இருந்தது.
கார்த்திக்கு,...
அடுத்தடுத்த நாட்கள் சகலவிதமான பிரச்சனைகளோடும் நாட்கள் கடந்தது நத்தை வேகத்தில்.
சாரதா தம்பியிடம் அதிகமாக பேசுவதில்லை. அவன் வருத்தம் கொள்ளுவான் என மனதில் அக்காவிற்கு இருந்தாலும், ஒருபக்கம்.. இதை அவள் முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.. எப்படி என்னை தள்ளி வைத்தவனின் தங்கை மேல்.. தம்பி ஆசைபடலாம் என ஒரு சின்ன ஆற்றாமை. அவளுக்கே அது தவறு என...
நீ என்னுள் யாரடா!
19
காயத்ரி, உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள். கெளசல்யாவிற்கு ஆத்திரமாக வந்தது.. இன்னும் பெண்ணை நான்கு அடி அடிக்கும் கோவம்.. அப்படியே அறையில் தள்ளி தாழிடும் கோவம்.. இப்போதே திருமணத்தை முடித்து அவளை அந்த ஆதியோடு அனுபிவிடுகிறேன் பார் என தனக்குள் சூளுரைத்துக் கொண்டு, தன் மகளிடம் “எப்படி டி, அவனை போய்...
நீ என்னுள் யாரடா!
15
ரேசொர்டில் உண்டு முடித்து.. பிள்ளைகளோடு கேம்பயர் என சொல்லி அமர்ந்துக் கொண்டனர் பெரியவர்கள் இருவரும். ம்.. காயத்ரி பெரியவள் லிஸ்டில் இல்லை.. இனியனும் காயத்ரியின் DJ பாட்டுகளை போட போட.. ஒரே ஆட்டம்தான் கூட்டத்தில். இவர்களை போல இரண்டு குடும்பங்கள் வந்திருந்திருந்தனர்.. அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்துக் கொள்ள.. அந்த இடமே கலைகட்டியது....
பிள்ளைகள் இரண்டுக்கும் சிறகு முளைத்தது போல.. அங்கும் இங்கும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தது, இப்போது.
இனியன் “அம்மா, என் கிரிகெட் பேட் எங்க.. வைட் கேப் காணோம்..” என சாரதாவிடம் இடுப்பில் கை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.
சாரதா “அந்த கதவுக்கு பின்னாடி இருக்கு பாருடா” என சொல்லி.. ஒருநாளிற்கு தேவையான துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
உமேஷ்.....
தணிகாசலத்திற்கும் சக்திவேலுக்கும்.. அதிர்ச்சி. பரணி போன் செய்து எல்லோரிடமும் சொல்லி சண்டை போட்ட போது கூட.. யாரும் அப்படி கமல் பெண்ணை வீட்டுக்கு கூட்டி வருவானா என எண்ணிதான் இருந்தனர். ஆனால், வந்ததும் கண்ட காட்சி.. வாயடைத்து போகிற்று எல்லோருக்கும்.
சாரதா.. மேலே உள்ளே அறையில் போய் முடங்கிக் கொண்டிருந்தாள். என்ன யோசிப்பது எனகூட தெரியவில்லை.
சக்திவேல்...
பரணிக்கு, இரவு முழுவதும் உறக்கம் சரியாக வரவில்லை.. தான் சொல்லுவது அவளுக்கு என்னவாக புரிந்திருக்கும் என கணிக்க முடியவில்லை.. தன்போல சரளமாக அவளை சட்டென கேள்வி கேட்டுவிட்டேன்.. அவளுக்கு என்நிலை என்ன புரியும் என யோசனையோடுதான் கடந்தான், அந்த இரவை.விடியலை தன் விழிப்பால் நகர்த்தினான் என கூட சொல்லலாம்.
காலையில் நேரமாக அலுவலகம் செல்லும் போதே,...
இதனிடையே இரண்டாம்முறை கருத்தரித்தாள் சாரதா. வீடே இப்போது சாரதாவை, இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. அப்போதாவது கமல் மனையாளை புள்ளைகளை தேடுவான்.. என பெரியோர்களின் எண்ணம். அதனால், இனியனை காரணம் காட்டி, கூட்டிக் கொண்டு வந்துவிட்டனர் சாரதாவை.
ஆனால், கமல் நிம்மதியாக இருந்தான். யாரும் அவனை காசு கேட்க்கவில்லை.. குடிக்காத, விழாவிற்கு வா என யாரும்...
கார்த்திக் விசாரித்தான் பரணியை, பரணி ஒன்னும் பிரச்சனையில்லை. நாங்கள் அவரை பார்க்கவேயில்லை.. உமேஷ்ஷை பார்க்க கூட வரவில்லை என்றுவிட்டான்.
கௌசல்யா ‘அதான் நீங்க அவனை பார்க்கவே விருப்படபலையே.. அப்புறம் எப்படி வருவான்’ என்றார்.
என்ன சொல்லுவான் பரணி.. அமைதியாகிவிட்டான். உண்மைதான் நாங்கள் பார்க்க விருப்படவில்லை. அதே போலதானே அவரும் என சொல்ல வாய் வந்தது. ஆனாலும் பரணி...
நீ என்னுள் யாரடா!
5
பரணிக்கு, கமல் சொல்லிய ‘அவள் கல்யாணம் செய்துக்கட்டும். பிள்ளைகள் என்கூட இருக்கட்டும் என்ற வார்த்தைகளை கேட்கவே கோவமாக வந்தது.. நீ உன் வேலையை பார்த்துட்டு போடா..’ என கத்த வேண்டும் போல இருந்தது. அங்கேயே நின்று இந்த பெரியவர்களின் பேச்சை கேட்க்க முடியாமல்.. டிக்கெட் புக் செய்ய.. தனது லாப் எடுத்துக்...
பெரியவருக்கு, விழுந்ததில் சிராய்த்திருந்தது.. அதை காட்டினார். பெரிய அடியில்லை. ஆனாலும் அவர் வயதை கணக்கில் கொண்டு பரணி பேசினான்.
பரணி “வாங்க முதலில் ஹாஸ்ப்பிடல் போகலாம்” என்றான்.
பெரியவர் சைக்கிளை பார்த்தார்.. அவர் அதைவிட்டு நகருவார் போலில்லை. பரணி “வாங்க, அதை நான் பார்த்து தரேன்” என்றான்.
பெரியவர் “இது சின்ன காய்ம்தானுங்க” என சொல்லி, அவனை ஆராய்ந்தார்.
பரணிக்கு...